அரசின் விருப்ப உரிமை அடிப்படையில், "அப்பழுக்கற்ற' அரசு ஊழியர் என்ற பிரிவில் வீடு, மனைகளை ஒதுக்கீடு செய்வதில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உருவாக்கும் புதிய குடியிருப்புகள் மற்றும் மனைப் பிரிவுகளில் 10 சதவீதம் அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இதில் சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற பிரிவில் சாதனை படைத்தவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள், பொது நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் என 2003-ல் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட இந்த பட்டியல் நடைமுறைக்கு வந்த பின்னர் பெரும்பாலும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களே அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்று கூறி அதிக ஒதுக்கீடுகளை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
திருமணமாகாத, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கூறப்பட்ட காரணம் கேள்விக்குறியாகியுள்ளது.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்ற பிரிவின் கீழ் வீடு, மனை பெற்றவர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதும் சிலர் தண்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று தமிழக அரசு முகப்பேர் ஏரித் திட்டத்தில் மனை ஒதுக்கீடு செய்த (அரசாணை எண்: 216. 13-3-2008) சுமதி ரவிச்சந்திரன் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகளால் சில மாதங்கள் முன்னர் கைது செய்யப்பட்டார்.
யார் சான்றளித்தது?
சுமதி ரவிச்சந்திரன் எப்போது, யாரால் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என சான்றளிக்கப்பட்டார் என்று விசாரித்தபோது, தங்கள் துறையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என யாரையும் சான்றளிக்கவில்லை என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறையும், பாஸ்போர்ட் வழங்கல் பிரிவு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் மேற்கூறிய பதில்களை (கடித எண்: எம்ஏஎஸ்.ஆர்டிஐ.206.09. 13-07-09) அளித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் எதன் அடிப்படையில் சுமதி ரவிச்சந்திரன் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று கண்டறியப்பட்டு அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டில் மனை ஒதுக்கீடு பெற்றார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இவர் மட்டுமல்ல அரசு அதிகாரத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் பலரும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்களாக வீடு, மனை ஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று வீட்டுவசதி வாரியத்தின் முகப்பேர் கோட்ட அலுவலகத்தில், "பேக்ட்' அமைப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அண்மையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்றுக் கூறி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கோப்புகளில் உரிய ஆவணங்கள் இல்லாதது இந்த ஆய்வின்போது தெரியவந்துள்ளது.
மத்திய அரசிலும், தமிழக அரசிலும் எந்தத் துறையிலும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என அறிவிக்கப்படுவது, சான்றளிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
குழப்பத்தில் அதிகாரிகள்:
""அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளின் அடிப்படையிலேயே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலிடத்தில் இருந்து வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் கேட்டு கெடுபிடி செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்'' என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் யார்? என்பது குறித்த உரிய வரைமுறைகள் இல்லாததால் மனை ஒதுக்கீட்டு பிரிவு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வியாழன், 20 ஆகஸ்ட், 2009
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
நாட்டிலேயே முதல் முறையாக மாநில தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் ஆய்வு
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விளைவாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் 3 பேர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.மாநில தகவல் ஆணையத்தை பொது மக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் சிலர் ஆய்வு செய்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை 2005-ம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பல்வேறு நடைமுறைகள் குறித்த விவரங்களை எழுத்துமூலமாக கேட்டறிய மக்களுக்கு உரிமை கிடைத்துள்ளது.
இந்த சட்டத்தின்படி தகவலை கேட்டு பெறுவது மட்டுமல்லாது அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், முக்கிய கோப்புகள், ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இருந்து விளக்கம் பெறுவதுடன் அல்லாமல் தங்களுக்குத் தேவைப்படும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெறுவதற்கும் மக்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு சில அரசு அலுவலகங்களில் மட்டுமே அதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோப்புகளை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சமூக ஆர்வலர்கள்:
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மனித உரிமைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நா. மதியழகன், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ரமேஷ் ஆகியோர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமலாக்கும் அதிகார அமைப்பான தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய அலுவலகத்தை ஆய்வு செய்ய மனு செய்திருந்தனர்.
முதலில் தயங்கி தாமதம் செய்த தகவல் ஆணையம் இவர்களின் பகீரத முயற்சிக்குப் பின் அண்மையில் இதற்கான அனுமதியை அளித்தது. இதன்படி, ஆகஸ்ட் 10, 11 ஆகிய நாள்களில் இவர்கள் இருவரும் தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் உறுப்பினர் கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து மாநில தகவல் ஆணையத்தை ஆய்வு செய்தனர்.
""ஆய்வுக்கு அனுமதி அளித்ததுடன், ஆய்வு செய்தமைக்கான சான்றிதழையும் மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் தங்களுக்கு வழங்கினர்'' என்றார் வழக்கறிஞர் ரமேஷ்.
""இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து அரசு அலுவலகங்களையும் பொது மக்கள் நேரடியாக ஆய்வு செய்து அங்கு நடைபெறும் நிர்வாக நடைமுறை விவரங்களை தெரிந்து கொள்ள வழிகாட்டும் விதமாக இந்த ஆய்வு அமைந்திருந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.
தகவல் தர மறுத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட பொது தகவல் அதிகாரிகள் பட்டியல், அவர்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என இந்த ஆய்வில் தெரிய வந்தது என்றார் மதியழகன்.
14 பதவிகள் காலி:
ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரது பணி விவரங்கள், அதிகாரங்கள், செயல்பாடுகள், ஊதியங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
மாநில தகவல் ஆணையர் பதவி உள்பட மொத்தம் 14 பதவியிடங்கள் ஆணையத்தில் காலியாக இருப்பது தங்களது ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
""தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கத்தை மேலும் விரைவுப்படுத்துவதில் இந்த ஆய்வு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது'' என்றார் ஆய்வின் போது உடன் இருந்த கல்யாணசுந்தரம்.
சனி, 8 ஆகஸ்ட், 2009
சென்னை மாவட்ட ஆட்சியர் மீது ஆதிதிராவிடர் தேசிய ஆணையம் புகார்
சென்னை புரசைவாக்கம் - பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய பதில் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் மீது ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய ஆணையத்தின் தமிழக இயக்குநர் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பி. கல்யாணசுந்தரம் (67). லஞ்சம் கொடாதோர் இயக்க உறுப்பினரான இவர் தனது பேரன் கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதிச் சான்றிதழ் கோரி புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 6-3-2008-ல் விண்ணப்பித்தார்.
தனது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கல்யாணசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார். ஆனால், இதற்கும் வட்டாட்சியர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லையாம்.
இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை ஆணையர், செயலர், முதல்வர் என அனைத்து தரப்பிலும் கல்யாணசுந்தரம் முறையிட்டார்.
இந்த முறையீடுகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன், புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியருக்கு பல முறை கடிதம் அனுப்பினார்.
இதன் பின்பும் சம்பந்தப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து மனுதாரரையும், வட்டாட்சியரையும் மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் விசாரணைக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி அழைத்திருந்தார்.
இந்த விசாரணையில் ஆஜரான மனுதாரர், ""புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போர் அங்குள்ள அதிகாரிகளால் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்; லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்'' என்றும் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார்.
ஆனால், இந்த விசாரணையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியரோ, அவரது தரப்பினரோ ஆஜராகவில்லை.
இந்த நிலையில், மனுதாரர் கல்யாணசுந்தரம் இது குறித்து ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் (என்.சி.எஸ்.சி.) முறையிட்டார்.
இதன் அடிப்படையில் கல்யாணசுந்தரத்தின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு என்.சி.எஸ்.சி.யின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன் கடிதம் எழுதினார்.
ஜூன் மாதம் 4-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியராக வி. ஷோபனா பொறுப்பேற்றது முதல் இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி கடிதம் (எண்: 2/15/2008 ரெப்.) அனுப்பினார்.
""கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதி சான்றிதழ் கோரும் மனு தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எவ்விதப் பதிலோ அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கையோ வரவில்லை.
கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்த வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இந்த பிரச்னையில் ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் உரிமையியல் நீதித்துறை அதிகாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என இ. தசரதன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பதில்:
இந்த பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வி. ஷோபனா கூறியது:
""இப் பிரச்னை தனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. எனினும், இதில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்'' என்றார்.
இது தொடர்பாக தேசிய ஆணையத்தின் தமிழக இயக்குநர் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பி. கல்யாணசுந்தரம் (67). லஞ்சம் கொடாதோர் இயக்க உறுப்பினரான இவர் தனது பேரன் கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதிச் சான்றிதழ் கோரி புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 6-3-2008-ல் விண்ணப்பித்தார்.
தனது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கல்யாணசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார். ஆனால், இதற்கும் வட்டாட்சியர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லையாம்.
இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை ஆணையர், செயலர், முதல்வர் என அனைத்து தரப்பிலும் கல்யாணசுந்தரம் முறையிட்டார்.
இந்த முறையீடுகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன், புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியருக்கு பல முறை கடிதம் அனுப்பினார்.
இதன் பின்பும் சம்பந்தப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து மனுதாரரையும், வட்டாட்சியரையும் மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் விசாரணைக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி அழைத்திருந்தார்.
இந்த விசாரணையில் ஆஜரான மனுதாரர், ""புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போர் அங்குள்ள அதிகாரிகளால் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்; லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்'' என்றும் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார்.
ஆனால், இந்த விசாரணையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியரோ, அவரது தரப்பினரோ ஆஜராகவில்லை.
இந்த நிலையில், மனுதாரர் கல்யாணசுந்தரம் இது குறித்து ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் (என்.சி.எஸ்.சி.) முறையிட்டார்.
இதன் அடிப்படையில் கல்யாணசுந்தரத்தின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு என்.சி.எஸ்.சி.யின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன் கடிதம் எழுதினார்.
ஜூன் மாதம் 4-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியராக வி. ஷோபனா பொறுப்பேற்றது முதல் இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி கடிதம் (எண்: 2/15/2008 ரெப்.) அனுப்பினார்.
""கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதி சான்றிதழ் கோரும் மனு தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எவ்விதப் பதிலோ அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கையோ வரவில்லை.
கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்த வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இந்த பிரச்னையில் ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் உரிமையியல் நீதித்துறை அதிகாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என இ. தசரதன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பதில்:
இந்த பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வி. ஷோபனா கூறியது:
""இப் பிரச்னை தனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. எனினும், இதில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்'' என்றார்.
அதிகரிக்கும் சுற்றுச்சுவர் விதி மீறல்கள்!
சென்னையில் குடியிருப்பு வளாகங்களில் சுற்றுச் சுவர் உயரம் தொடர்பான விதி மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விதி மீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மற்றவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எதிர்வீட்டு சுற்றுச்சுவரின் உயரம் உங்கள் வீட்டு வெப்ப நிலையைப் பாதிக்கும் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாக தெரியாது.
ஆனால், கே.கே. நகர் பொப்பிலி ராஜா 91, 92 ஆகிய தெருக்களைச் சேர்ந்த மக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது.
இங்குள்ள ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச் சுவரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பி வலை வேலி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது கம்பி வேலி அகற்றப்பட்டு இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
5 அடி உயரச் சுவர் மீது, 2 அடி உயரத்துக்கு இரும்புத் தட்டி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு இத்தகைய இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
உச்சி வெயில் நேரத்தில் வெப்பக் கதிர்கள் தட்டிகள் மீது பட்டு பிரதிபலிப்பதால் சுற்றுப்புறத்தில் வெப்ப நிலை அதிகரிக்கிறது.
பெரிய சமதள பரப்பின் குறுக்கே சராசரிக்கும் அதிக உயரத்தில் இருக்கும் இந்தத் தட்டிகள் காற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளதும் வெப்பம் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று "எக்ஸ்னோரா' உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவும் விதி மீறலே...:
தனி வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் 2 மீட்டர் உயரம் வரை மட்டுமே சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்ட வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் (டி.சி.ஆர்.) குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள வளாகங்கள் தவிர வேறு வளாகங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் அனுமதியின்றி செயற்கையான இரும்புத் தட்டிகள் அமைப்பது விதிமீறல்தான் என்கின்றனர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.
எதிர்வீட்டு சுற்றுச்சுவரின் உயரம் உங்கள் வீட்டு வெப்ப நிலையைப் பாதிக்கும் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாக தெரியாது.
ஆனால், கே.கே. நகர் பொப்பிலி ராஜா 91, 92 ஆகிய தெருக்களைச் சேர்ந்த மக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது.
இங்குள்ள ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச் சுவரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பி வலை வேலி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது கம்பி வேலி அகற்றப்பட்டு இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
5 அடி உயரச் சுவர் மீது, 2 அடி உயரத்துக்கு இரும்புத் தட்டி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு இத்தகைய இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
உச்சி வெயில் நேரத்தில் வெப்பக் கதிர்கள் தட்டிகள் மீது பட்டு பிரதிபலிப்பதால் சுற்றுப்புறத்தில் வெப்ப நிலை அதிகரிக்கிறது.
பெரிய சமதள பரப்பின் குறுக்கே சராசரிக்கும் அதிக உயரத்தில் இருக்கும் இந்தத் தட்டிகள் காற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளதும் வெப்பம் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று "எக்ஸ்னோரா' உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவும் விதி மீறலே...:
தனி வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் 2 மீட்டர் உயரம் வரை மட்டுமே சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்ட வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் (டி.சி.ஆர்.) குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள வளாகங்கள் தவிர வேறு வளாகங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் அனுமதியின்றி செயற்கையான இரும்புத் தட்டிகள் அமைப்பது விதிமீறல்தான் என்கின்றனர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.
புதன், 5 ஆகஸ்ட், 2009
மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் பராந்தகச் சோழன் சிலை அமைப்பதில் சர்ச்சை

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் முதலாம் பராந்தகச் சோழனின் சிலை அமைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வடபழனியில் ஒரு வாடகைக் கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் எதிரில் நிலம் ஒதுக்கப்பட்டு புதிய வளாகம் ரூ. 2.17 கோடியில் கட்டப்பட்டது.
இந்தப் புதிய வளாகத்தைத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிதி அமைச்சர் க. அன்பழகன் கடந்த ஜூன் 19-ம் தேதி திறந்து வைத்தார்.
அதிமுக ஆட்சியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம் அமைக்க ஒதுக்கப்பட்ட இந்த இடம் திமுக ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சொந்தக் கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தும் இப்போதைய நடைமுறைக்கு முன்னோடியாக உள்ள குடவோலை முறை குறித்தச் செய்திகள் முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
எனவே புதிய வளாக நுழைவாயிலில், முதலாம் பராந்தகச் சோழன் மற்றும் குடவோலை முறை குறித்த சிற்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் அவ்விதம் சிலை அமைப்பதற்கு முன்னதாகவே புதிய வளாகத்துக்கான திறப்பு விழா நடைபெற்றது. இருப்பினும், புதிய வளாகத்தின் சுற்றுச்சுவரில் சிலை வைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்காக தமிழக அரசு ரூ. 6 லட்சத்தை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியது.
உருவ மாதிரி கிடைக்கவில்லை
இந்தச் சிலை வைப்பதற்காக முதலாம் பராந்தகச் சோழனின் உருவ மாதிரியைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேடினர். அரசு ஆவணக் காப்பகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதற்கான தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், முதலாம் பராந்தகச் சோழனின் உருவ மாதிரி எங்கும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜராஜ சோழன் உள்ளிட்ட சில சோழ மன்னர்களின் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாம் பராந்தகச் சோழனின் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சிலரின் மூலம் இந்தச் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
விலை அதிகம்
""மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் அடிப்படையில், அங்கு வைக்கப்படுவதற்காக உருவாக்கப்படும் சிலைக்கு மொத்தச் செலவு அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்தைத் தாண்டாது'' என இது போன்ற சிற்பங்களை உருவாக்குவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், அரசு இதற்கு ஒதுக்கியுள்ள ரூ. 6 லட்சம் சிலைக்காக முழுமையாக செலவிடப்பட்டதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஆணையருக்கும் சில உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக சிலர் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் ஆணைய ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
வரலாற்று ஆசிரியர்கள்
முதலாம் பராந்தகச் சோழன் கி.பி. 907-ம் ஆண்டு முதல் கி.பி. 953-ம் ஆண்டு வரை ஆட்சிப் புரிந்தார். களபிரரை முறியடித்து கி.பி. 575-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசை கி.பி. 915-ல் முறியடித்து மதுரையை வென்றவர் முதலாம் பராந்தகச் சோழன்.
உத்தரமேரூர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள குடவோலை முறையில் அதிகாரிகளே (வாரியத் தலைவர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் இது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறை அல்ல எனவும் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இது தொடர்பாக, இந்தியத் தொல்லியல் துறையின் 1904-05 ஆண்டு அறிக்கையில், (பக்கம் 136, 138) குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
இத்தகைய சூழலில், உருவ மாதிரி குறித்த உறுதியான ஆவணங்களின் அடிப்படை இல்லாமல் பராந்தகச் சோழன் என்று கூறி ஒரு சிலையை உருவாக்கி முக்கியமான ஒரு இடத்தில் வைப்பதன் மூலம் மக்களிடம் தவறான தகவல் பரவ வழிவகுத்துவிடக்கூடாது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009
ஜரிகை எரிப்புப் புகையால் தி. நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு: மாசுகட்டுப்பாடு வாரியம் பாராமுகம் ஏன்?
சென்னை தியாகராய நகரில் ஜரிகைகளை எரிக்கும் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் புகையால் துரைசாமி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தியாகராய நகரில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பெரும்பாலானவற்றில் பழைய பட்டுச் சேலைகளை வாங்கிக் கொண்டு புதிய சேலைகளை தள்ளுபடி விலையில் அளிக்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பழைய பட்டுச் சேலைகளில் இருக்கும் ஜரிகைகளை வாங்கி அவற்றை எரித்து, இதில் இருந்து செம்பு, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்கும் பணியை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய பணிகளை செய்வது தொழில் ரீதியான செயல்பாடு. இவை தொழிற்சாலைகள் உள்ள பகுதியில் மட்டும் நடைபெறவேண்டும். அதுவும் மாசுக்கட்டுப்பாடு வாரித்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
ஆனால், தியாகராய நகரில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் வணிகப் பகுதிகளுக்கு அருகில் சிலர் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஜரிகை எரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், துர்நாற்றத்துடன் வெளியாகும் புகையால் அருகில் உள்ள வணிகப் பகுதிகளில் வந்து செல்வோரும், அங்கு பணி புரிவோரும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக துரைசாமி சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் ஜரிகை எரிப்புப் பணியால் வெளியாகும் புகையால் இந்த சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் பகல் நேரங்களில் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இவ்வாறு வெளியாகும் புகையால் இப் பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வந்து செல்வோரும், பணி புரிவோருக்கு உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாய சூழல் நிலவுவதாக இங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றின் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
மாநகராட்சி நிர்வாகமும், மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதிக்கு வந்து செல்லும் மக்களின் கோரிக்கை.
தியாகராய நகரில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பெரும்பாலானவற்றில் பழைய பட்டுச் சேலைகளை வாங்கிக் கொண்டு புதிய சேலைகளை தள்ளுபடி விலையில் அளிக்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பழைய பட்டுச் சேலைகளில் இருக்கும் ஜரிகைகளை வாங்கி அவற்றை எரித்து, இதில் இருந்து செம்பு, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்கும் பணியை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய பணிகளை செய்வது தொழில் ரீதியான செயல்பாடு. இவை தொழிற்சாலைகள் உள்ள பகுதியில் மட்டும் நடைபெறவேண்டும். அதுவும் மாசுக்கட்டுப்பாடு வாரித்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
ஆனால், தியாகராய நகரில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் வணிகப் பகுதிகளுக்கு அருகில் சிலர் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஜரிகை எரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், துர்நாற்றத்துடன் வெளியாகும் புகையால் அருகில் உள்ள வணிகப் பகுதிகளில் வந்து செல்வோரும், அங்கு பணி புரிவோரும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக துரைசாமி சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் ஜரிகை எரிப்புப் பணியால் வெளியாகும் புகையால் இந்த சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் பகல் நேரங்களில் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இவ்வாறு வெளியாகும் புகையால் இப் பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வந்து செல்வோரும், பணி புரிவோருக்கு உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாய சூழல் நிலவுவதாக இங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றின் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
மாநகராட்சி நிர்வாகமும், மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதிக்கு வந்து செல்லும் மக்களின் கோரிக்கை.
ரூ. 1.6 கோடியில் பொலிவு பெறுகிறது கீழ்க்கட்டளை ஏரி
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள கீழ்க்கட்டளை ஏரி ரூ. 1.6 கோடியில் புதுப் பொலிவு பெற உள்ளது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மடிப்பாக்கம் சந்திப்புக்கு முன்னர் அமைந்துள்ளது கீழ்க்கட்டளை ஏரி.
பல்லாவரம் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை உள்வாங்கி சேமித்து அதன் பிறகு உபரியாகும் நீர் பள்ளிக்கரனைக்கு செல்லும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
ரூ. 1.6 கோடி...:
இந்த நிலையில், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (என்.எல்.சி.பி.) கீழ் தமிழகத்தில் கீழ்க்கட்டளை ஏரி உள்பட 3 ஏரிகளை சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதற்கான திட்டத்தை ரூ. 1.6 கோடி மதிப்பீட்டில் தயாரித்துள்ளது. இதன்படி திட்டத்தின் மொத்த மதிப்பில் 70 சதவீதத் தொகை மத்திய அரசிடம் இருந்தும், 20 சதவீதம் மாநில அரசிடம் இருந்தும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்தும் பெறப்படும்.
முள்கம்பி வேலி...:
இந்த திட்டத்தின்படி 56 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும். வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் கண்டறியப்பட்டு முள்கம்பி வேலி போடப்படும்.
இதனால் ஏரிக்குள் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து மாசுப்படுத்துவது, ஆக்கிரமிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். மேலும், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியின் நடுவில் சிறிய அளவிலான தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சிக்கான படகு போக்குவரத்து தொடங்கப்படும்.
கழிவுநீரை சுத்தப்படுத்த...:
எரிமலைகளில் இருந்து வெளியாகும் ஒருவகை தாதுவை மண்ணுடன் கலந்து ஏரிக்குள் நீர் வரும் பகுதியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஏரிக்குள் வரும் போதே கழிவுநீரை சுத்தப்படுத்த முடியும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதற்கான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை முகமைக்கு பொதுப்பணித்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அமைப்பு பரிசீலனை:
மத்திய அரசின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கண்காணிப்பு அமைப்பான இந்த முகமை மூலம் கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.
இந்த திட்டத்துக்கு தனது பங்காக 10 சதவீதத் தொகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்லாவரம் நகராட்சியின் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் பங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல புறநகரில் உள்ள மற்ற ஏரிகளையும் சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லாவரம் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை உள்வாங்கி சேமித்து அதன் பிறகு உபரியாகும் நீர் பள்ளிக்கரனைக்கு செல்லும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
ரூ. 1.6 கோடி...:
இந்த நிலையில், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (என்.எல்.சி.பி.) கீழ் தமிழகத்தில் கீழ்க்கட்டளை ஏரி உள்பட 3 ஏரிகளை சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதற்கான திட்டத்தை ரூ. 1.6 கோடி மதிப்பீட்டில் தயாரித்துள்ளது. இதன்படி திட்டத்தின் மொத்த மதிப்பில் 70 சதவீதத் தொகை மத்திய அரசிடம் இருந்தும், 20 சதவீதம் மாநில அரசிடம் இருந்தும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்தும் பெறப்படும்.
முள்கம்பி வேலி...:
இந்த திட்டத்தின்படி 56 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும். வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் கண்டறியப்பட்டு முள்கம்பி வேலி போடப்படும்.
இதனால் ஏரிக்குள் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து மாசுப்படுத்துவது, ஆக்கிரமிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். மேலும், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியின் நடுவில் சிறிய அளவிலான தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சிக்கான படகு போக்குவரத்து தொடங்கப்படும்.
கழிவுநீரை சுத்தப்படுத்த...:
எரிமலைகளில் இருந்து வெளியாகும் ஒருவகை தாதுவை மண்ணுடன் கலந்து ஏரிக்குள் நீர் வரும் பகுதியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஏரிக்குள் வரும் போதே கழிவுநீரை சுத்தப்படுத்த முடியும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதற்கான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை முகமைக்கு பொதுப்பணித்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அமைப்பு பரிசீலனை:
மத்திய அரசின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கண்காணிப்பு அமைப்பான இந்த முகமை மூலம் கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.
இந்த திட்டத்துக்கு தனது பங்காக 10 சதவீதத் தொகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்லாவரம் நகராட்சியின் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் பங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல புறநகரில் உள்ள மற்ற ஏரிகளையும் சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள், 27 ஜூலை, 2009
"பாண்டு' வாத்தியக் காவலர்கள் நியமனம்: தேர்வுக் குழுமத்தின் "மெüனம்' கலையுமா?
தமிழக காவல் துறையில் "பாண்டு' வாத்தியக் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 317 பேர் நியமன ஆணை கிடைக்காமல் கடந்த ஓராண்டாக காத்திருக்கின்றனர்.
தமிழக காவல் துறையில் தலைமையகம் மற்றும் சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் ஆணையர், ஐ.ஜி. அலுவலகங்கள், சிறப்பு காவல்படை பட்டாலியன்களில் வாத்தியக் காவலர்கள் பிரிவு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாத்தியக் காவலர்களாக இந்தப் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மற்ற காவலர்களைப் போலவே தேர்வு நடத்தி இந்தப் பிரிவுக்கான காவலர்களைத் தேர்வு செய்கிறது. ஆனால், பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதல், லத்திகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பணி சார்ந்த சில பயிற்சிகள் தவிர்த்து மற்ற காவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் இவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வாத்திய காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பான தமிழக அரசின் உள்துறை பிறப்பித்த அரசாணையின்படி (எண்: 877- காவல் 9) கடந்த 2007-ல் வாத்திய காவலர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2008 ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்களின் கல்வித் தகுதி, வயதுச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, இசைக்கும் திறன் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இவற்றில் தேர்வானவர்கள் காவல் விசாரணை, கைவிரல் ரேகை எடுத்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனையும் செய்து இறுதியாக 317 பேர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 2008 ஜூன் 24-ல் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு உரிய நியமன ஆணை வழங்கி பயிற்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், தேர்வு செய்யப்பட்டு ஓராண்டாக பயிற்சிக்கு அனுப்பப்படாமல் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் 317 பேரும் காத்திருக்கின்றனர்.
"இது தொடர்பாக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தை பல முறை அணுகினாலும், அதிகாரிகள் தரப்பில் உறுதியான பதில் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்கின்றனர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
ஆனால், எங்களுக்கு பிறகு மேலும் ஒரு தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடித்தவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தற்போது பயிற்சியை முடிக்கும் நிலையில் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் அல்லது உயர் படிப்புக்கும் செல்லாமல் வாத்தியக் காவலர் வேலைக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு நியமன ஆணைகள் வழங்குவதை தேர்வுக் குழுமம் விரைவுப்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வுக் குழுமத்தின் நிலை...:
இது தொடர்பாக விசாரித்த போது, வாத்திய காவலர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆணைகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ளும் அதிகாரிகள் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.
இவர்களை தவிர்த்துவிட்டு வேறு பிரிவினரை பயிற்சிக்கு அனுப்பியதை உறுதி செய்யவும் அதிகாரிகள் மறுத்தனர்.
தமிழக காவல் துறையில் தலைமையகம் மற்றும் சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் ஆணையர், ஐ.ஜி. அலுவலகங்கள், சிறப்பு காவல்படை பட்டாலியன்களில் வாத்தியக் காவலர்கள் பிரிவு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாத்தியக் காவலர்களாக இந்தப் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மற்ற காவலர்களைப் போலவே தேர்வு நடத்தி இந்தப் பிரிவுக்கான காவலர்களைத் தேர்வு செய்கிறது. ஆனால், பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதல், லத்திகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பணி சார்ந்த சில பயிற்சிகள் தவிர்த்து மற்ற காவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் இவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வாத்திய காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பான தமிழக அரசின் உள்துறை பிறப்பித்த அரசாணையின்படி (எண்: 877- காவல் 9) கடந்த 2007-ல் வாத்திய காவலர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2008 ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்களின் கல்வித் தகுதி, வயதுச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, இசைக்கும் திறன் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இவற்றில் தேர்வானவர்கள் காவல் விசாரணை, கைவிரல் ரேகை எடுத்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனையும் செய்து இறுதியாக 317 பேர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 2008 ஜூன் 24-ல் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு உரிய நியமன ஆணை வழங்கி பயிற்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், தேர்வு செய்யப்பட்டு ஓராண்டாக பயிற்சிக்கு அனுப்பப்படாமல் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் 317 பேரும் காத்திருக்கின்றனர்.
"இது தொடர்பாக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தை பல முறை அணுகினாலும், அதிகாரிகள் தரப்பில் உறுதியான பதில் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்கின்றனர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
ஆனால், எங்களுக்கு பிறகு மேலும் ஒரு தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடித்தவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தற்போது பயிற்சியை முடிக்கும் நிலையில் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் அல்லது உயர் படிப்புக்கும் செல்லாமல் வாத்தியக் காவலர் வேலைக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு நியமன ஆணைகள் வழங்குவதை தேர்வுக் குழுமம் விரைவுப்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வுக் குழுமத்தின் நிலை...:
இது தொடர்பாக விசாரித்த போது, வாத்திய காவலர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆணைகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ளும் அதிகாரிகள் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.
இவர்களை தவிர்த்துவிட்டு வேறு பிரிவினரை பயிற்சிக்கு அனுப்பியதை உறுதி செய்யவும் அதிகாரிகள் மறுத்தனர்.
திங்கள், 20 ஜூலை, 2009
கால்நூற்றாண்டு அரசாணையால் பல்லாவரம் நகராட்சிக்கு ரூ. 1 கோடி வருவாய் இழப்பு!
வணிக வளாகங்களுக்கு வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை 1985-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணை காரணமாக பல்லாவரம் நகராட்சிக்கு ரூ. 1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்க்கட்டளை பஸ் நிலைய வளாகத்தில் மெகாசிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் ரூ. 68 லட்சத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது.
தரைதளத்தில் தலா 144 சதுர அடி பரப்பளவில் 44 கடைகள் உள்ளன.
2770 சதுர அடி, 2800 சதுர அடி, 815 சதுர அடி என முன்று பிரிவுகளைக் கொண்டதாக முதல் தளம் கட்டப்பட்டது.
ஒரு சதுர அடிக்கு ரூ. 10 என்ற அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 92-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தரை தளத்தில் உள்ள 43 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு கடையில் நகராட்சியின் வரி வசூலிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் உள்ள வணிக பகுதிகள் கடந்த 9 ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறை 29-04-1985-ல் பிறப்பித்த அரசாணை 285-ன் படி நகராட்சி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகையே காரணமாக கூறப்படுகிறது.
கீழ்க்கட்டளை பகுதியில் தனியார் கட்டடங்களில் செயல்படும் வங்கிகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அளிக்கும் வாடகையைவிட நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்படும் வாடகை 200 மடங்கு அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.
உதாரணமாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வளாகத்தில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசாணை எண் 285-ஐ சுட்டிக்காட்டி நகராட்சி அதிகாரிகள் 970 சதுர அடி இடம் தருவதாகவும் அதற்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை தர வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை காவல் துறை ஏற்காததால் 637 சதுர அடி இடத்தை ரூ. 16,500 வாடகையில் அளிக்க நகராட்சி அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இதே அளவு இடத்தை ரூ. 6,000 மாத வாடகைக்குப் பெற்று காவல் நிலையம் தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது.
அஞ்சலகம்...:
இந்நிலையில், கீழ்க்கட்டளை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை அடிப்படையில் இங்கு அஞ்சலகம் தொடங்க தபால்துறை முடிவு செய்தது. இதற்காக 750 சதுர அடி இடம் கேட்டு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி கடிதம் எழுதினார்.
இதற்கு 26-9-2008-ல் பதில் அளித்த நகராட்சி ஆணையர், கீழ்க்கட்டளை வணிக வளாகத்தில் 2770 சதுர அடி, 2880 சதுர அடி அளவு இடங்கள் மட்டுமே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 285-ன் படி வாடகை செலுத்த சம்மதம் தெரிவித்தால் இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
ஆனால், கீழ்க்கட்டளை அஞ்சலகத்துக்கு 815 சதுர அடி நிலத்தை ரூ. 25 ஆயிரம் மாத வாடகை தர வேண்டும் என நகராட்சி சார்பில் கோரப்பட்டது. மேலும், 9 மாத வாடகையை முன்பணமாகத் தர வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது கீழ்க்கட்டளை பகுதியில் சந்தை நிலவரத்தைவிட அதிகமாக உள்ளதாகக் கூறி இதனை ஏற்க தபால்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்த வளாகத்துக்கு வாடகை நிர்ணயிப்பதில் அரசாணை 285-ஐ சுட்டிக் காட்டும் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் முதல் மாடியில் 2 ஆயிரம் சதுர அடி இடத்தை ரூ. 20 ஆயிரம் மாத வாடகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு ஒரு விதத்திலும், அஞ்சலகத்துக்கு ஒரு விதத்திலும் வாடகை நிர்ணயிப்பது ஏன்? என்று கீழ்க்கட்டளை பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நகர்மன்றத் தலைவர் உறுதி:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது இப்பகுதி மக்களின் கோரிக்கை அடிப்படையில் நகராட்சி வணிக வளாகத்தில் இடம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லாவரம் நகர் மன்றத் தலைவர் இ. கருணாநிதி உறுதி அளித்திருந்தார்.
ஆனால், வாடகை நிர்ணயிப்பதில் நகராட்சி அதிகாரிகள் நடந்துக் கொள்ளும் போக்கு நகர்மன்றத் தலைவரின் உறுதி நிறைவேறுவதை தடுப்பதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
வருவாய் இழப்பு:
மேலும், சந்தை மதிப்புப் படி சதுர அடி ரூ. 10 வீதத்தில் வாடகைக்கு விட்டிருந்தால் மாதம் ரூ. 75 ஆயிரம் வீதம் கடந்த 9 ஆண்டுகளில் நகராட்சிக்கு ரூ. ஒரு கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். இந்த வருவாய் நகராட்சிக்கு இழப்பாக மாறியுள்ளது. வணிக வளாகமும் பாழாகும் நிலையில் உள்ளது.
அதிகாரிகளின் இந்தப் போக்கு காரணமாக கீழ்க்கட்டளை பகுதி மக்களுக்கு அஞ்சலக வசதி கிடைப்பதும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் மட்டுமல்ல...:
1985-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை காரணமாக பல்லாவரம் போன்று பல்வேறு நகராட்சிகளுக்கு சொந்தமான வளாகங்களை வாடகைக்கு விடுவதில் சிக்கல் நிலவுகிறது.
இதனால், பல்வேறு நகராட்சிகளுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணை தொடர்பான பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்க்கட்டளை பஸ் நிலைய வளாகத்தில் மெகாசிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் ரூ. 68 லட்சத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது.
தரைதளத்தில் தலா 144 சதுர அடி பரப்பளவில் 44 கடைகள் உள்ளன.
2770 சதுர அடி, 2800 சதுர அடி, 815 சதுர அடி என முன்று பிரிவுகளைக் கொண்டதாக முதல் தளம் கட்டப்பட்டது.
ஒரு சதுர அடிக்கு ரூ. 10 என்ற அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 92-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தரை தளத்தில் உள்ள 43 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு கடையில் நகராட்சியின் வரி வசூலிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் உள்ள வணிக பகுதிகள் கடந்த 9 ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறை 29-04-1985-ல் பிறப்பித்த அரசாணை 285-ன் படி நகராட்சி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகையே காரணமாக கூறப்படுகிறது.
கீழ்க்கட்டளை பகுதியில் தனியார் கட்டடங்களில் செயல்படும் வங்கிகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அளிக்கும் வாடகையைவிட நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்படும் வாடகை 200 மடங்கு அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.
உதாரணமாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வளாகத்தில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசாணை எண் 285-ஐ சுட்டிக்காட்டி நகராட்சி அதிகாரிகள் 970 சதுர அடி இடம் தருவதாகவும் அதற்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை தர வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை காவல் துறை ஏற்காததால் 637 சதுர அடி இடத்தை ரூ. 16,500 வாடகையில் அளிக்க நகராட்சி அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இதே அளவு இடத்தை ரூ. 6,000 மாத வாடகைக்குப் பெற்று காவல் நிலையம் தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது.
அஞ்சலகம்...:
இந்நிலையில், கீழ்க்கட்டளை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை அடிப்படையில் இங்கு அஞ்சலகம் தொடங்க தபால்துறை முடிவு செய்தது. இதற்காக 750 சதுர அடி இடம் கேட்டு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி கடிதம் எழுதினார்.
இதற்கு 26-9-2008-ல் பதில் அளித்த நகராட்சி ஆணையர், கீழ்க்கட்டளை வணிக வளாகத்தில் 2770 சதுர அடி, 2880 சதுர அடி அளவு இடங்கள் மட்டுமே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 285-ன் படி வாடகை செலுத்த சம்மதம் தெரிவித்தால் இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
ஆனால், கீழ்க்கட்டளை அஞ்சலகத்துக்கு 815 சதுர அடி நிலத்தை ரூ. 25 ஆயிரம் மாத வாடகை தர வேண்டும் என நகராட்சி சார்பில் கோரப்பட்டது. மேலும், 9 மாத வாடகையை முன்பணமாகத் தர வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது கீழ்க்கட்டளை பகுதியில் சந்தை நிலவரத்தைவிட அதிகமாக உள்ளதாகக் கூறி இதனை ஏற்க தபால்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்த வளாகத்துக்கு வாடகை நிர்ணயிப்பதில் அரசாணை 285-ஐ சுட்டிக் காட்டும் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் முதல் மாடியில் 2 ஆயிரம் சதுர அடி இடத்தை ரூ. 20 ஆயிரம் மாத வாடகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு ஒரு விதத்திலும், அஞ்சலகத்துக்கு ஒரு விதத்திலும் வாடகை நிர்ணயிப்பது ஏன்? என்று கீழ்க்கட்டளை பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நகர்மன்றத் தலைவர் உறுதி:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது இப்பகுதி மக்களின் கோரிக்கை அடிப்படையில் நகராட்சி வணிக வளாகத்தில் இடம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லாவரம் நகர் மன்றத் தலைவர் இ. கருணாநிதி உறுதி அளித்திருந்தார்.
ஆனால், வாடகை நிர்ணயிப்பதில் நகராட்சி அதிகாரிகள் நடந்துக் கொள்ளும் போக்கு நகர்மன்றத் தலைவரின் உறுதி நிறைவேறுவதை தடுப்பதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
வருவாய் இழப்பு:
மேலும், சந்தை மதிப்புப் படி சதுர அடி ரூ. 10 வீதத்தில் வாடகைக்கு விட்டிருந்தால் மாதம் ரூ. 75 ஆயிரம் வீதம் கடந்த 9 ஆண்டுகளில் நகராட்சிக்கு ரூ. ஒரு கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். இந்த வருவாய் நகராட்சிக்கு இழப்பாக மாறியுள்ளது. வணிக வளாகமும் பாழாகும் நிலையில் உள்ளது.
அதிகாரிகளின் இந்தப் போக்கு காரணமாக கீழ்க்கட்டளை பகுதி மக்களுக்கு அஞ்சலக வசதி கிடைப்பதும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் மட்டுமல்ல...:
1985-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை காரணமாக பல்லாவரம் போன்று பல்வேறு நகராட்சிகளுக்கு சொந்தமான வளாகங்களை வாடகைக்கு விடுவதில் சிக்கல் நிலவுகிறது.
இதனால், பல்வேறு நகராட்சிகளுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணை தொடர்பான பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
சனி, 18 ஜூலை, 2009
திருமங்கலீஸ்வரர் கோயில் நில விவகாரம் வருவாய்த் துறை, சி.எம்.டி.ஏ. நிலை என்ன?
சென்னை கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு விவகாரத்தில் வருவாய்த்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) நிலைப்பாடு குறித்து குழப்பம் நிலவுகிறது.
திருமங்கலீஸ்வரர் கோயில் நிலம் அபகரிக்கப்படுவது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.
இதையடுத்து அந்த நிலத்தில் "ஓசோன் குழுமத்தின்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
மேலும், தன்னிச்சையாக செயல்பட்டு இந்த அனுமதியை வழங்கியதாக மாநகராட்சியின் 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்களில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.
கோயம்பேடு சந்திப்பில் டபிள்யு.எஸ். இன்சுலேட்டர் சேதுராமன் என்பவரிடம் இருந்து ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். இதன் பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தினர் காலத்தில் அங்கு உள்ள மற்ற நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் மட்டுமல்லாது இதே பகுதியில் நீராதார புறம்போக்கு மற்றும் கிராம நத்தம் புறம்போக்காக சுமார் 9 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
2003-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தின் மனைப்பிரிவு திட்டம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த மாநகராட்சியின் அப்போதைய வருவாய் அதிகாரி ஜெயகாந்தன் தனது கடிதத்தில் மேற்கண்ட தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.
கோயில் நிலம் மட்டுமல்லாது வருவாய்த்துறைக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலமும் தவறான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய கிராம நத்தம் அல்லது நீராதார புறம்போக்கு நிலத்தில் எவ்வித அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்ட அனுமதி அளிக்கப்படமாட்டாது என சி.எம்.டி.ஏ.வின் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ. எப்படி ஒப்புதல் அளித்தது என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மேலும், ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் கட்டுப்பாட்டில் இந்த நிலம் இருந்தபோது நிலத்தின் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சட்டவிரோதமான முறையில் திருத்தப்பட்டுள்ளது குறித்த ஆட்சேபனைகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.
வரைபட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களுடன் நோட்டரி பப்ளிக் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள ஒருவரின் சான்றொப்பத்துடன் ஆவணங்களை சமர்ப்பித்தாலே போதும் என சி.எம்.டி.ஏ. விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு வரும் ஆவணங்களின் உண்மைத் தன்மை தனியாக ஆய்வு செய்யப்படுவதில்லை.
இந்த நிலையில், ஓசோன் குழுமத்துக்கு ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனம் விற்ற நிலத்தின் ஆவணங்கள் பற்றிய உண்மைத் தன்மை மர்மமாகவே இருப்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருமங்கலீஸ்வரர் கோயில் நிலம் அபகரிக்கப்படுவது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.
இதையடுத்து அந்த நிலத்தில் "ஓசோன் குழுமத்தின்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
மேலும், தன்னிச்சையாக செயல்பட்டு இந்த அனுமதியை வழங்கியதாக மாநகராட்சியின் 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்களில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.
கோயம்பேடு சந்திப்பில் டபிள்யு.எஸ். இன்சுலேட்டர் சேதுராமன் என்பவரிடம் இருந்து ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். இதன் பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தினர் காலத்தில் அங்கு உள்ள மற்ற நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் மட்டுமல்லாது இதே பகுதியில் நீராதார புறம்போக்கு மற்றும் கிராம நத்தம் புறம்போக்காக சுமார் 9 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
2003-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தின் மனைப்பிரிவு திட்டம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த மாநகராட்சியின் அப்போதைய வருவாய் அதிகாரி ஜெயகாந்தன் தனது கடிதத்தில் மேற்கண்ட தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.
கோயில் நிலம் மட்டுமல்லாது வருவாய்த்துறைக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலமும் தவறான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய கிராம நத்தம் அல்லது நீராதார புறம்போக்கு நிலத்தில் எவ்வித அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்ட அனுமதி அளிக்கப்படமாட்டாது என சி.எம்.டி.ஏ.வின் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ. எப்படி ஒப்புதல் அளித்தது என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மேலும், ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் கட்டுப்பாட்டில் இந்த நிலம் இருந்தபோது நிலத்தின் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சட்டவிரோதமான முறையில் திருத்தப்பட்டுள்ளது குறித்த ஆட்சேபனைகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.
வரைபட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களுடன் நோட்டரி பப்ளிக் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள ஒருவரின் சான்றொப்பத்துடன் ஆவணங்களை சமர்ப்பித்தாலே போதும் என சி.எம்.டி.ஏ. விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு வரும் ஆவணங்களின் உண்மைத் தன்மை தனியாக ஆய்வு செய்யப்படுவதில்லை.
இந்த நிலையில், ஓசோன் குழுமத்துக்கு ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனம் விற்ற நிலத்தின் ஆவணங்கள் பற்றிய உண்மைத் தன்மை மர்மமாகவே இருப்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
புதன், 15 ஜூலை, 2009
'தினமணி' செய்தி எதிரொலி: ரூ. 120 கோடி நில விவகாரம்- கட்டட அனுமதி நிறுத்தம்
சென்னை கோயம்பேடு சந்திப்பில் "ஓசோன் குழுமத்தின்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்தி வைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அனுமதியை அளித்த செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோயம்பேடு சந்திப்பில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, "ரூ. 120 கோடி கோயில் நிலம் அபகரிப்பு?' என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை "தினமணியில்' செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட விளக்க அறிக்கை:
ஓசோன் நிறுவனம் வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்த 42.53 ஏக்கர் நிலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக கருதப்படும் 1.77 ஏக்கர் நிலத்தின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைகால உத்தரவில் "தற்போது உள்ள நிலை தொடர' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்படி நிலத்தைத் தவிர்த்து மீதமுள்ள நிலத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆய்வு செய்து வரைபட அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டல செயற்பொறியாளரால் கட்டட அனுமதி வழங்கப்பட்டது.
வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி சாலை வசதிக்காக எடுக்கப்பட்ட நிலத்தினை மாநகராட்சி வசம் ஒப்படைப்பு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான தீர்மானம் எதுவும் மண்டல வார்டுக்குழு கூட்டத்திலோ அல்லது மாநகராட்சி மன்றத்திலோ ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படவில்லை.
எனவே, சாலை வசதிக்கான நிலத்தினை ஒப்படைப்பு செய்வது தொடர்பாக மாநகராட்சி மன்றத்தில் அனுமதி பெறும் வரை 5-வது மண்டல செயற்பொறியாளரால் வழங்கப்பட்ட கட்டட அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் பெறாமல் முடிவு மேற்கொண்டதற்காக 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மேயர் மா. சுப்பிரமணியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சைதை ரவி மறுப்பு:
""கட்டட அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் எதுவும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதத்துக்கு வரவில்லை. விவாதத்துக்கே வராத தீர்மானம் குறித்து நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?'' என இது தொடர்பான தனது மறுப்பு அறிக்கையில் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை பி. ரவி (காங்கிரஸ்) பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் இதே பிரச்னைக்காக ஆளுநரிடம் மனு கொடுத்தவர் மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சேபிக்காதது ஏன்?
மன்றக் கூட்டத்தில் தீர்மானம் வரவில்லை என்பதற்காக மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் சர்ச்சைக்குரிய நிலத்தில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான கட்டுமானத் திட்டம் மேற்கொள்ள கட்டட அனுமதி வழங்கப்பட்டது குறித்து தனது ஆட்சேபத்தை அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சைதை ரவி தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த கட்டட அனுமதி வழங்கப்பட்டது குறித்து, 5-வது மண்டல தலைவரான, காங்கிரûஸச் சேர்ந்த சுரேஷுக்கு தெரிந்த விவரம் அதே காங்கிரûஸச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போனது எப்படி? எதிர்க்கட்சித் தலைவராக தனது பொறுப்பை சைதை ரவி தட்டிக்கழிப்பதாக இது ஆகாதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
"ஓசோன் குழுமத்தின்' கட்டுமானத் திட்டம் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும் நிலத்தை விற்ற ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறித்து நாளிதழ்களில் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
கடந்த 2-ம் தேதி கூட இந்த வழக்குகள் தொடர்பான வழக்கறிஞரின் அறிவிப்பு தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.
பலிகடா?
ஏற்கெனவே மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு ஆளுநர், முதல்வர் தலையீடு வரை சென்ற விவகாரத்தில் மேயர், ஆணையர் உள்ளிட்டோருக்குத் தெரியாமல் மண்டல செயற்பொறியாளர் ஒருவர் தன்னிச்சையாக கட்டட அனுமதி வழங்குவது சாத்தியமில்லை என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
இந்த விவகாரத்தில் பலன் அடைந்த முக்கிய நபர் ஒருவரைக் காப்பாற்றவே செயற்பொறியாளர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார் என கூறப்படுகிறது.
கோயில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை முயற்சித்து வரும் நிலையில் சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளித்துவிட்டதை காட்டி, ஓசையின்றி மாநகராட்சியால் கட்டட அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த உரிய விசாரணை நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் மாநகர மேயர் ஈடுபட்டிருப்பதும், மேயர் மற்றும் ஆணையர் தலையீடு மட்டுமின்றி அதிகார மையத்தின் நெருக்கடியும் இந்த அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கோயம்பேடு சந்திப்பில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, "ரூ. 120 கோடி கோயில் நிலம் அபகரிப்பு?' என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை "தினமணியில்' செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட விளக்க அறிக்கை:
ஓசோன் நிறுவனம் வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்த 42.53 ஏக்கர் நிலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக கருதப்படும் 1.77 ஏக்கர் நிலத்தின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைகால உத்தரவில் "தற்போது உள்ள நிலை தொடர' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்படி நிலத்தைத் தவிர்த்து மீதமுள்ள நிலத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆய்வு செய்து வரைபட அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டல செயற்பொறியாளரால் கட்டட அனுமதி வழங்கப்பட்டது.
வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி சாலை வசதிக்காக எடுக்கப்பட்ட நிலத்தினை மாநகராட்சி வசம் ஒப்படைப்பு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான தீர்மானம் எதுவும் மண்டல வார்டுக்குழு கூட்டத்திலோ அல்லது மாநகராட்சி மன்றத்திலோ ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படவில்லை.
எனவே, சாலை வசதிக்கான நிலத்தினை ஒப்படைப்பு செய்வது தொடர்பாக மாநகராட்சி மன்றத்தில் அனுமதி பெறும் வரை 5-வது மண்டல செயற்பொறியாளரால் வழங்கப்பட்ட கட்டட அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் பெறாமல் முடிவு மேற்கொண்டதற்காக 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மேயர் மா. சுப்பிரமணியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சைதை ரவி மறுப்பு:
""கட்டட அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் எதுவும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதத்துக்கு வரவில்லை. விவாதத்துக்கே வராத தீர்மானம் குறித்து நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?'' என இது தொடர்பான தனது மறுப்பு அறிக்கையில் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை பி. ரவி (காங்கிரஸ்) பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் இதே பிரச்னைக்காக ஆளுநரிடம் மனு கொடுத்தவர் மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சேபிக்காதது ஏன்?
மன்றக் கூட்டத்தில் தீர்மானம் வரவில்லை என்பதற்காக மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் சர்ச்சைக்குரிய நிலத்தில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான கட்டுமானத் திட்டம் மேற்கொள்ள கட்டட அனுமதி வழங்கப்பட்டது குறித்து தனது ஆட்சேபத்தை அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சைதை ரவி தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த கட்டட அனுமதி வழங்கப்பட்டது குறித்து, 5-வது மண்டல தலைவரான, காங்கிரûஸச் சேர்ந்த சுரேஷுக்கு தெரிந்த விவரம் அதே காங்கிரûஸச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போனது எப்படி? எதிர்க்கட்சித் தலைவராக தனது பொறுப்பை சைதை ரவி தட்டிக்கழிப்பதாக இது ஆகாதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
"ஓசோன் குழுமத்தின்' கட்டுமானத் திட்டம் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும் நிலத்தை விற்ற ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறித்து நாளிதழ்களில் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
கடந்த 2-ம் தேதி கூட இந்த வழக்குகள் தொடர்பான வழக்கறிஞரின் அறிவிப்பு தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.
பலிகடா?
ஏற்கெனவே மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு ஆளுநர், முதல்வர் தலையீடு வரை சென்ற விவகாரத்தில் மேயர், ஆணையர் உள்ளிட்டோருக்குத் தெரியாமல் மண்டல செயற்பொறியாளர் ஒருவர் தன்னிச்சையாக கட்டட அனுமதி வழங்குவது சாத்தியமில்லை என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
இந்த விவகாரத்தில் பலன் அடைந்த முக்கிய நபர் ஒருவரைக் காப்பாற்றவே செயற்பொறியாளர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார் என கூறப்படுகிறது.
கோயில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை முயற்சித்து வரும் நிலையில் சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளித்துவிட்டதை காட்டி, ஓசையின்றி மாநகராட்சியால் கட்டட அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த உரிய விசாரணை நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் மாநகர மேயர் ஈடுபட்டிருப்பதும், மேயர் மற்றும் ஆணையர் தலையீடு மட்டுமின்றி அதிகார மையத்தின் நெருக்கடியும் இந்த அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ரூ. 120 கோடி கோயில் நிலம் அபகரிப்பு?
சென்னை கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று அபகரிக்க முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த நிலத்தை மீட்கக் குரல் கொடுத்த திமுக, காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவோடு இப்போது நில அபகரிப்பு நடைபெற்றுள்ளது என்பதுதான் இந்த குற்றச்சாட்டில் வேடிக்கை.
கோயம்பேடு திருமங்கலம் பகுதியில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான (சர்வே எண்கள்: 227/2, 227/3, 230/2) 3.03 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களை "ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினர்.
2003-ம் ஆண்டு தங்களுக்குச் சொந்தமான நிலங்களுடன், திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தையும் ஆக்கிரமித்து புதிய மனைப்பிரிவு உருவாக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள "ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் முயற்சித்தனராம்.
இதற்கு அனுமதி கோரும் தீர்மானம் 29-1-2003-ல் நடைபெற்ற மாநகராட்சிமன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.
காங்கிரஸ், திமுக எதிர்ப்பு:
கோயில் நிலத்தைத் தனியார் நிறுவனத்தினர் கைப்பற்ற அனுமதிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்திருப்பதாகக் கூறி அப்போது கவுன்சிலராக இருந்த ராயபுரம் மனோ தலைமையில் சைதை ரவி உள்ளிட்ட காங்கிரஸôரும், சி.வி. மலையன் தலைமையில் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.க.வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்திய காங்கிரஸôர் தங்கள் கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆளுநரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுவும் அளித்தனர்.
வருவாய் அதிகாரி ஆட்சேபம்:
கோயில் நிலத்தைக் கைப்பற்ற முயற்சி நடப்பது குறித்து சந்தேகப்பட்ட அப்போதைய மாநகராட்சி வருவாய் அதிகாரி ஜெயகாந்தன், கட்டட அனுமதி வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையினரும் கட்டட அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
""திருமங்கலீஸ்வரர் கோயிலை இடித்து, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைத் தவறான ஆவணங்கள் மற்றும் தக்க அனுமதியற்ற வகையில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மூலம் "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனம் அபகரிக்க முயற்சிக்கிறது; எனவே, இதற்கு எவ்விதக் கட்டட அனுமதியும் அளிக்க வேண்டாம்'' என அன்றைய மாநகராட்சி ஆணையர் எம். கலைவாணன் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு அப்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த கெüரிசங்கர் கடிதம் எழுதினார்.
இதன் பின்னர் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தை மீட்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டது. இந்த நிலையில், மாநகராட்சி எதிர்க்கட்சியினரின் போராட்டங்களையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலையிட்டதால் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தின் மனுவை மாநகராட்சி நிராகரித்தது.
சில ஆண்டுகள் கழித்து "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் தங்கள் நிலத்துடன் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தையும் சேர்த்து புதிய அடுக்குமாடி குடியிருப்பை உருவாக்க "ஓசோன் குழுமத்துக்கு' விற்பனை செய்தனர்.
இந்த விற்பனையில் "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கும், இந்த நிலங்களின் பட்டா தொடர்பான உண்மைத் தன்மை குறித்த வழக்கும் இன்னும் தீர்க்கப்படாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இது ஒருபுறம் இருந்தபோதும், நிலத்தை வாங்கிய "ஓசோன் குழுமம்', அங்கு மிகப்பெரிய அளவில் குடியிருப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.
இந்த நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்க முதலில் மறுத்தனர். தங்கள் நிலத்தின் பட்டா தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றைக் காட்டி ஓசோன் குழுமம் திட்ட அனுமதி கோரி சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.
ஓசோன் குழுமம் குடியிருப்பு மேற்கொள்ள உள்ள 42 ஏக்கரில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் அடங்கியுள்ளதாகக் கூறி, இதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சி.எம்.டி.ஏ.வுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினர்.
இருப்பினும், கோயில் நிலம் என கூறப்படும் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில், கோயில் நிலம் நீங்கலாக மற்ற நிலங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு திட்ட அனுமதி கோரி ஓசோன் குழுமம் சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அளித்த கருத்தை ஓசோன் குழுமத்தினர் தங்களுக்குச் சாதகமாக காட்டியதையடுத்து, நிபந்தனைகள் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஓசோன் நிறுவனத்துக்கு கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்குவதற்கான தீர்மானத்துக்கு அண்மையில் நடைபெற்ற மாநகராட்சியின் மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏன் இந்த முரண்பாடு? உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நிர்பந்திக்காத நிலையில், மறுப்பதற்கான அதிகாரம் தங்களிடம் இருந்தும் சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் ஓசோன் குழுமத்தின் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை இந்தத் திட்டத்தை ஏன் மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் நிறுத்தி வைக்கவில்லை என்பது தான் பலருடைய கேள்வி.
அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்னையில் 2003-ல் கோயில் நிலம் தனியாரால் அபகரிக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்து எதிர்த்த மா. சுப்பிரமணியன் இப்போது மேயராக இருக்கும் நிலையில், திடீர் மனமாற்றம் ஏன் வந்தது என கேள்வி எழுப்புகின்றனர் அறநிலையத்துறையினர்.
காங்கிரஸ், திமுக ஆதரவு...: 2003-ல் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்த காங்கிரஸ், திமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதுதான் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தைச் சுற்றியுள்ள நிலங்களில் கட்டுமான திட்டத்துக்கு இப்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதி கோயில் நிலத்தை மீட்கும் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை வேரறுக்கும் செயல் என்பதை திமுக சார்பில் மேயராக உள்ள மா. சுப்பிரமணியனும், காங்கிரஸ் சார்பில் எதிர்கட்சித் தலைவராக உள்ள சைதை ரவியும் உணராதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ள இந்த மன (?) மாற்றத்தால் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலம் தனியார் சிலரால் அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான கட்சிகளின் மாற்றத்தின் பின்னணி குறித்தும் பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த நிலத்தை மீட்கக் குரல் கொடுத்த திமுக, காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவோடு இப்போது நில அபகரிப்பு நடைபெற்றுள்ளது என்பதுதான் இந்த குற்றச்சாட்டில் வேடிக்கை.
கோயம்பேடு திருமங்கலம் பகுதியில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான (சர்வே எண்கள்: 227/2, 227/3, 230/2) 3.03 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களை "ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினர்.
2003-ம் ஆண்டு தங்களுக்குச் சொந்தமான நிலங்களுடன், திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தையும் ஆக்கிரமித்து புதிய மனைப்பிரிவு உருவாக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள "ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் முயற்சித்தனராம்.
இதற்கு அனுமதி கோரும் தீர்மானம் 29-1-2003-ல் நடைபெற்ற மாநகராட்சிமன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.
காங்கிரஸ், திமுக எதிர்ப்பு:
கோயில் நிலத்தைத் தனியார் நிறுவனத்தினர் கைப்பற்ற அனுமதிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்திருப்பதாகக் கூறி அப்போது கவுன்சிலராக இருந்த ராயபுரம் மனோ தலைமையில் சைதை ரவி உள்ளிட்ட காங்கிரஸôரும், சி.வி. மலையன் தலைமையில் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.க.வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்திய காங்கிரஸôர் தங்கள் கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆளுநரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுவும் அளித்தனர்.
வருவாய் அதிகாரி ஆட்சேபம்:
கோயில் நிலத்தைக் கைப்பற்ற முயற்சி நடப்பது குறித்து சந்தேகப்பட்ட அப்போதைய மாநகராட்சி வருவாய் அதிகாரி ஜெயகாந்தன், கட்டட அனுமதி வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையினரும் கட்டட அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
""திருமங்கலீஸ்வரர் கோயிலை இடித்து, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைத் தவறான ஆவணங்கள் மற்றும் தக்க அனுமதியற்ற வகையில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மூலம் "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனம் அபகரிக்க முயற்சிக்கிறது; எனவே, இதற்கு எவ்விதக் கட்டட அனுமதியும் அளிக்க வேண்டாம்'' என அன்றைய மாநகராட்சி ஆணையர் எம். கலைவாணன் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு அப்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த கெüரிசங்கர் கடிதம் எழுதினார்.
இதன் பின்னர் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தை மீட்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டது. இந்த நிலையில், மாநகராட்சி எதிர்க்கட்சியினரின் போராட்டங்களையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலையிட்டதால் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தின் மனுவை மாநகராட்சி நிராகரித்தது.
சில ஆண்டுகள் கழித்து "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் தங்கள் நிலத்துடன் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தையும் சேர்த்து புதிய அடுக்குமாடி குடியிருப்பை உருவாக்க "ஓசோன் குழுமத்துக்கு' விற்பனை செய்தனர்.
இந்த விற்பனையில் "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கும், இந்த நிலங்களின் பட்டா தொடர்பான உண்மைத் தன்மை குறித்த வழக்கும் இன்னும் தீர்க்கப்படாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இது ஒருபுறம் இருந்தபோதும், நிலத்தை வாங்கிய "ஓசோன் குழுமம்', அங்கு மிகப்பெரிய அளவில் குடியிருப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.
இந்த நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்க முதலில் மறுத்தனர். தங்கள் நிலத்தின் பட்டா தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றைக் காட்டி ஓசோன் குழுமம் திட்ட அனுமதி கோரி சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.
ஓசோன் குழுமம் குடியிருப்பு மேற்கொள்ள உள்ள 42 ஏக்கரில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் அடங்கியுள்ளதாகக் கூறி, இதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சி.எம்.டி.ஏ.வுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினர்.
இருப்பினும், கோயில் நிலம் என கூறப்படும் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில், கோயில் நிலம் நீங்கலாக மற்ற நிலங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு திட்ட அனுமதி கோரி ஓசோன் குழுமம் சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அளித்த கருத்தை ஓசோன் குழுமத்தினர் தங்களுக்குச் சாதகமாக காட்டியதையடுத்து, நிபந்தனைகள் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஓசோன் நிறுவனத்துக்கு கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்குவதற்கான தீர்மானத்துக்கு அண்மையில் நடைபெற்ற மாநகராட்சியின் மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏன் இந்த முரண்பாடு? உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நிர்பந்திக்காத நிலையில், மறுப்பதற்கான அதிகாரம் தங்களிடம் இருந்தும் சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் ஓசோன் குழுமத்தின் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை இந்தத் திட்டத்தை ஏன் மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் நிறுத்தி வைக்கவில்லை என்பது தான் பலருடைய கேள்வி.
அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்னையில் 2003-ல் கோயில் நிலம் தனியாரால் அபகரிக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்து எதிர்த்த மா. சுப்பிரமணியன் இப்போது மேயராக இருக்கும் நிலையில், திடீர் மனமாற்றம் ஏன் வந்தது என கேள்வி எழுப்புகின்றனர் அறநிலையத்துறையினர்.
காங்கிரஸ், திமுக ஆதரவு...: 2003-ல் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்த காங்கிரஸ், திமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதுதான் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தைச் சுற்றியுள்ள நிலங்களில் கட்டுமான திட்டத்துக்கு இப்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதி கோயில் நிலத்தை மீட்கும் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை வேரறுக்கும் செயல் என்பதை திமுக சார்பில் மேயராக உள்ள மா. சுப்பிரமணியனும், காங்கிரஸ் சார்பில் எதிர்கட்சித் தலைவராக உள்ள சைதை ரவியும் உணராதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ள இந்த மன (?) மாற்றத்தால் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலம் தனியார் சிலரால் அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான கட்சிகளின் மாற்றத்தின் பின்னணி குறித்தும் பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
திங்கள், 13 ஜூலை, 2009
சிறப்புப் போலீஸôரின் பயிற்சியில் "மாற்றம்' வருமா?
தமிழக காவல் துறையில் உள்ள சிறப்பு காவல்படையினருக்கான (டி.எஸ்.பி.) பயிற்சித் திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுடன் நடைபெற்ற மோதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின்போது இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் இத்தகைய கருத்து வலுபெற்று வருகிறது.
அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடும் இந்தியர்களை ஒடுக்கும் வகையில் தங்கள் உத்தரவை கண்மூடித்தனமாக ஏற்று செயல்படும் விதமாக காவல்படையினருக்கான பயிற்சிகள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டன.
எதிரில் இருப்பவர் யார் என்பதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் தலைமையின் உத்தரவுப்படி தடியடி நடத்தியோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியோ நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் இந்தப் பயிற்சிகள் அமைந்திருந்தன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் காவல் துறையில் அவ்வப்போது ஏற்படும் தேவை அடிப்படையில், பல்வேறு சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மேலும், சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவு உள்ளிட்ட பிரிவில் பணி புரியும் காவலர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் நவீன சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன.
ஆனால், சிறப்பு காவல்படையினருக்கான பயிற்சித் திட்டத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என மூத்த அதிகாரிகள் சிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழக காவல் துறையில் சுமார் 15 ஆயிரம் பேர் ஆயுதப் படையின் சிறப்பு காவல் படை (டி.எஸ்.பி.) போலீஸôராக உள்ளனர். இவர்களுக்கு ஆவடி, வேலூர், மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள முகாம்களில் 9 மாதங்கள் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தலைமையின் உத்தரவை அப்படியே நிறைவேற்றும் வகையில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போதுதான் கட்டுப்பாடு இருக்கும் என இதற்கு காரணம் கூறப்படுகிறது.
பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் கோயில் திருவிழாக்கள், கட்சிகளின் பேரணி, மாநாடு, முக்கிய தலைவர்கள் வருகை உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பாதுகாப்புப் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பாதுகாப்புப் பணி நீங்கலாக இவர்களில் பெரும்பாலானோர் ஆயுதப் படை மற்றும் அவசரகால அதிரடிப் படை என பிரிக்கப்பட்டு வன்முறை நிகழும் பகுதிகளில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தேர்தல் உள்ளிட்ட சில சமயங்களில் ஆட்சியாளர்களின் பாராட்டைப் பெற்றாலும், வழக்கறிஞர்- போலீஸ் மோதல் உள்ளிட்ட பல சமயங்களில் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகும் வகையிலும் அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாகவே இவர்களது செயல்பாடு அமைந்துள்ளது.
இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியே இதற்கு அடிப்படை காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஓர் இடத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அங்கு வன்முறை வெடிக்க காரணமாக இருக்கின்றனர். இது போன்ற சமயங்களில் சிறப்புப் போலீஸôர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தும்போது, வன்முறையில் ஈடுபடாத மற்றவர்கள் போலீஸôர் மீது எதிர்த் தாக்குதல் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதன் காரணமாக பிரச்னைக்கு காரணமான நபர்கள் தப்பித்துவிடுவதுடன், அப்பாவி பொது மக்களுக்கும், போலீஸôருக்கும் இடையில் மோதல் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.
இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாகாமல் தடுக்க சிறப்பு காவல்படை போலீஸôருக்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகளை நவீன கால சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுடன் நடைபெற்ற மோதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின்போது இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் இத்தகைய கருத்து வலுபெற்று வருகிறது.
அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடும் இந்தியர்களை ஒடுக்கும் வகையில் தங்கள் உத்தரவை கண்மூடித்தனமாக ஏற்று செயல்படும் விதமாக காவல்படையினருக்கான பயிற்சிகள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டன.
எதிரில் இருப்பவர் யார் என்பதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் தலைமையின் உத்தரவுப்படி தடியடி நடத்தியோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியோ நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் இந்தப் பயிற்சிகள் அமைந்திருந்தன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் காவல் துறையில் அவ்வப்போது ஏற்படும் தேவை அடிப்படையில், பல்வேறு சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மேலும், சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவு உள்ளிட்ட பிரிவில் பணி புரியும் காவலர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் நவீன சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன.
ஆனால், சிறப்பு காவல்படையினருக்கான பயிற்சித் திட்டத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என மூத்த அதிகாரிகள் சிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழக காவல் துறையில் சுமார் 15 ஆயிரம் பேர் ஆயுதப் படையின் சிறப்பு காவல் படை (டி.எஸ்.பி.) போலீஸôராக உள்ளனர். இவர்களுக்கு ஆவடி, வேலூர், மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள முகாம்களில் 9 மாதங்கள் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தலைமையின் உத்தரவை அப்படியே நிறைவேற்றும் வகையில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போதுதான் கட்டுப்பாடு இருக்கும் என இதற்கு காரணம் கூறப்படுகிறது.
பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் கோயில் திருவிழாக்கள், கட்சிகளின் பேரணி, மாநாடு, முக்கிய தலைவர்கள் வருகை உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பாதுகாப்புப் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பாதுகாப்புப் பணி நீங்கலாக இவர்களில் பெரும்பாலானோர் ஆயுதப் படை மற்றும் அவசரகால அதிரடிப் படை என பிரிக்கப்பட்டு வன்முறை நிகழும் பகுதிகளில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தேர்தல் உள்ளிட்ட சில சமயங்களில் ஆட்சியாளர்களின் பாராட்டைப் பெற்றாலும், வழக்கறிஞர்- போலீஸ் மோதல் உள்ளிட்ட பல சமயங்களில் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகும் வகையிலும் அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாகவே இவர்களது செயல்பாடு அமைந்துள்ளது.
இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியே இதற்கு அடிப்படை காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஓர் இடத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அங்கு வன்முறை வெடிக்க காரணமாக இருக்கின்றனர். இது போன்ற சமயங்களில் சிறப்புப் போலீஸôர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தும்போது, வன்முறையில் ஈடுபடாத மற்றவர்கள் போலீஸôர் மீது எதிர்த் தாக்குதல் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதன் காரணமாக பிரச்னைக்கு காரணமான நபர்கள் தப்பித்துவிடுவதுடன், அப்பாவி பொது மக்களுக்கும், போலீஸôருக்கும் இடையில் மோதல் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.
இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாகாமல் தடுக்க சிறப்பு காவல்படை போலீஸôருக்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகளை நவீன கால சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
சனி, 11 ஜூலை, 2009
சென்னை விமான நிலைய விரிவாக்க விவகாரம்: இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் ரத்தாகிறதா?
சென்னை, ஜூலை 9: சென்னை விமான நிலையத்தில் இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் திட்டம் தொடர்பாக 2007 மே 22-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இதற்கு 1069.99 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
விமான நிலையத்தை சுற்றியுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து இதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்கப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக கோவூர் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்தது.
அரசாணை வெளியீடு:
இது தொடர்பாக கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் சர்வே எண்கள் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணையை (எண்: 108) போக்குவரத்துத் துறை 2007 செப்டம்பர் 22-ம் தேதி வெளியிட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக மணப்பாக்கத்தில் அடையாற்றை ஒட்டியுள்ள 126 ஏக்கர் நிலம் கடந்த ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் விமான நிலையத்தில் கிழக்கு - மேற்காக உள்ள 2-வது ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் சில மாதங்கள் முன்னர் தொடங்கப்பட்டன.
பெரும்பாலான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மக்கள் எதிர்ப்பு:
இந்நிலையில், புதிய ஓடுதளம் அமைக்க தங்கள் நிலங்களை கையகப்படுத்த மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கோவூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் (ஐ.ஏ.ஏ.ஐ.) இப் பகுதி மக்கள் பல்வேறு மனுக்களை அனுப்பி முறையிட்டனர்.
ஆர்வம் இல்லை: மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு வழங்கும் நிலத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியகூறுகள் குறித்த எவ்வித ஆய்வுப் பணிகளும் தொடங்கப்படவில்லை என ஐ.ஏ.ஏ.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கு விரிவாக்கப் பணிகளுக்கு அதிக நிதியை முதலீடு செய்வதைவிட ஸ்ரீபெரும்பூதூரில் தனியார் முதலீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் கருதுவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் நிலை:
மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் 2009-2010 நிதி ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 126 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் குறித்தும், ஸ்ரீபெரும்பூதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இணை ஓடுதளம் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஐ.ஏ.ஏ.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்கள் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை (எண்: 108) ரத்து செய்ய வேண்டும் என மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் திட்டம் தொடர்பாக 2007 மே 22-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இதற்கு 1069.99 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
விமான நிலையத்தை சுற்றியுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து இதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்கப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக கோவூர் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்தது.
அரசாணை வெளியீடு:
இது தொடர்பாக கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் சர்வே எண்கள் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணையை (எண்: 108) போக்குவரத்துத் துறை 2007 செப்டம்பர் 22-ம் தேதி வெளியிட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக மணப்பாக்கத்தில் அடையாற்றை ஒட்டியுள்ள 126 ஏக்கர் நிலம் கடந்த ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் விமான நிலையத்தில் கிழக்கு - மேற்காக உள்ள 2-வது ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் சில மாதங்கள் முன்னர் தொடங்கப்பட்டன.
பெரும்பாலான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மக்கள் எதிர்ப்பு:
இந்நிலையில், புதிய ஓடுதளம் அமைக்க தங்கள் நிலங்களை கையகப்படுத்த மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கோவூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் (ஐ.ஏ.ஏ.ஐ.) இப் பகுதி மக்கள் பல்வேறு மனுக்களை அனுப்பி முறையிட்டனர்.
ஆர்வம் இல்லை: மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு வழங்கும் நிலத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியகூறுகள் குறித்த எவ்வித ஆய்வுப் பணிகளும் தொடங்கப்படவில்லை என ஐ.ஏ.ஏ.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கு விரிவாக்கப் பணிகளுக்கு அதிக நிதியை முதலீடு செய்வதைவிட ஸ்ரீபெரும்பூதூரில் தனியார் முதலீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் கருதுவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் நிலை:
மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் 2009-2010 நிதி ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 126 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் குறித்தும், ஸ்ரீபெரும்பூதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இணை ஓடுதளம் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஐ.ஏ.ஏ.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்கள் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை (எண்: 108) ரத்து செய்ய வேண்டும் என மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளி, 3 ஜூலை, 2009
சிறப்பு ஊதியம் நிர்ணயிப்பதில் குழப்பம்: லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் அதிருப்தி
சென்னை, ஜூலை 2: 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட பிறகும் தங்களுக்கு பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் காவல் பயிற்சி மையத்தில் பணிபுரியும் போலீஸôருக்கு அவர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதமும், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் போலீஸôருக்கு 20 சதவீதமும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று தங்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் நீண்டகாலமாக கோரி வந்தனர். இந்த நிலையில், 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராக இருந்த திலகவதி பரிந்துரையின் அடிப்படையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôருக்கு அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை சிறப்பு ஊதியமாக வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரகத்தில் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நீங்கலாக, மற்ற அனைவருக்கும் இந்த சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
அடிப்படை ஊதியம் உயரும் போது...: அடிப்படை ஊதியத்தில் மாற்றம் வரும்போது 15 சதவீத சிறப்பு ஊதியத்திலும் மாற்றம் இருக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரகம் சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அடிப்படை ஊதியத்தில் மாற்றம் ஏற்படும்போது சிறப்பு ஊதியத்திலும் மாற்றம் இருக்கும் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை விளக்கம் அளித்தது.
மீண்டும் குழப்பம்:
இந்த நிலையில் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி ஜூன் 1-ம் தேதி முதல் அமலாக்க அரசு உத்தரவிட்டது.
இதற்கான அரசாணையில், "உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் இப்போதுள்ள அளவிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படுவது தொடரும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஊதிய உயர்வு வரும்போது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôருக்கு பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படும் என நிர்வாகப் பிரிவு தெரிவித்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இது குறித்து போலீஸôர் அப் பிரிவு இயக்குநர் ஏ.டி.ஜி.பி. ராமானுஜத்திடம் முறையிட்டனர்.
"அரசின் கொள்கை முடிவு தொடர்பான இந்த விவகாரத்தில் தலையிட முடியாது' என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிருப்தி:
சிறப்பு ஊதியம் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக லஞ்ச ஒழிப்புப் பிரிவில் நிர்வாகப் பிரிவினரின் செயல்பாடுகள் குறித்து, இதரப் பிரிவு போலீஸôரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனால், அடிப்படை ஊதியம் உயர்ந்த பிறகும் பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் காவல் பயிற்சி மையத்தில் பணிபுரியும் போலீஸôருக்கு அவர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதமும், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் போலீஸôருக்கு 20 சதவீதமும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று தங்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் நீண்டகாலமாக கோரி வந்தனர். இந்த நிலையில், 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராக இருந்த திலகவதி பரிந்துரையின் அடிப்படையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôருக்கு அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை சிறப்பு ஊதியமாக வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரகத்தில் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நீங்கலாக, மற்ற அனைவருக்கும் இந்த சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
அடிப்படை ஊதியம் உயரும் போது...: அடிப்படை ஊதியத்தில் மாற்றம் வரும்போது 15 சதவீத சிறப்பு ஊதியத்திலும் மாற்றம் இருக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரகம் சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அடிப்படை ஊதியத்தில் மாற்றம் ஏற்படும்போது சிறப்பு ஊதியத்திலும் மாற்றம் இருக்கும் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை விளக்கம் அளித்தது.
மீண்டும் குழப்பம்:
இந்த நிலையில் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி ஜூன் 1-ம் தேதி முதல் அமலாக்க அரசு உத்தரவிட்டது.
இதற்கான அரசாணையில், "உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் இப்போதுள்ள அளவிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படுவது தொடரும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஊதிய உயர்வு வரும்போது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôருக்கு பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படும் என நிர்வாகப் பிரிவு தெரிவித்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இது குறித்து போலீஸôர் அப் பிரிவு இயக்குநர் ஏ.டி.ஜி.பி. ராமானுஜத்திடம் முறையிட்டனர்.
"அரசின் கொள்கை முடிவு தொடர்பான இந்த விவகாரத்தில் தலையிட முடியாது' என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிருப்தி:
சிறப்பு ஊதியம் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக லஞ்ச ஒழிப்புப் பிரிவில் நிர்வாகப் பிரிவினரின் செயல்பாடுகள் குறித்து, இதரப் பிரிவு போலீஸôரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனால், அடிப்படை ஊதியம் உயர்ந்த பிறகும் பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தெரிவித்தனர்.
ஞாயிறு, 28 ஜூன், 2009
சனி, 27 ஜூன், 2009
ஊதிய உயர்வு நிறுத்திவைப்பு: மாநில தேர்தல் ஆணைய ஊழியர்கள் புகார்
சென்னை, ஜூன் 26: தமிழக அரசின் உத்தரவுப்படி 6-வது ஊதியக்குழு பரிந்துரையின் ஊதிய உயர்வு வழங்குவது தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
6-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி 2009 ஜூன் 1-ம் தேதி முதல் என்ற புதிய விகிதத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைத் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, அனைத்துத் துறைகளிலும் பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இங்குள்ள ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு விகிதங்கள் குறித்த பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் அண்மையில் தொடங்கின.
நிறுத்தி வைப்பு:
ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன், ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகள் அமலாக்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இங்குள்ள ஊழியர்களுக்கு ஜூன் மாதத்துக்கான ஊதியம் பழையபடியே குறிப்பிடப்பட்டு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு அமலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஜூலை மாதம் மேற்கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அனைத்துத் துறை ஊழியர்களும் ஜூன் மாத ஊதியத்திலிருந்தே புதிய விகிதத்தில் ஊதியம் பெறும் நிலையில் நாங்கள் மட்டும் பழையபடியே ஊதியம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
தணிக்கை இல்லை:
அரசின் அனைத்துத் துறையின் நிர்வாக செலவு கணக்குகளும் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும் நிலையில் மாநிலத் தேர்தல் ஆணைய நிர்வாக செலவு கணக்குகள் மட்டும் தணிக்கை செய்யப்படாமல் உள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் ஆணைய புதிய கட்டட திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், "மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதுடன் நின்றுவிடாமல் அரசு ஊழியர்களின் பிரச்னைகளையும் தீர்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது' என குறிப்பிட்டார்.
ஆனால், எங்களது பிரச்னைகள் மட்டும் தீர்க்கப்படாமல் உள்ளது என்கின்றனர் தேர்தல் ஆணைய ஊழியர்கள்.
6-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி 2009 ஜூன் 1-ம் தேதி முதல் என்ற புதிய விகிதத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைத் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, அனைத்துத் துறைகளிலும் பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இங்குள்ள ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு விகிதங்கள் குறித்த பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் அண்மையில் தொடங்கின.
நிறுத்தி வைப்பு:
ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன், ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகள் அமலாக்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இங்குள்ள ஊழியர்களுக்கு ஜூன் மாதத்துக்கான ஊதியம் பழையபடியே குறிப்பிடப்பட்டு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு அமலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஜூலை மாதம் மேற்கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அனைத்துத் துறை ஊழியர்களும் ஜூன் மாத ஊதியத்திலிருந்தே புதிய விகிதத்தில் ஊதியம் பெறும் நிலையில் நாங்கள் மட்டும் பழையபடியே ஊதியம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
தணிக்கை இல்லை:
அரசின் அனைத்துத் துறையின் நிர்வாக செலவு கணக்குகளும் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும் நிலையில் மாநிலத் தேர்தல் ஆணைய நிர்வாக செலவு கணக்குகள் மட்டும் தணிக்கை செய்யப்படாமல் உள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் ஆணைய புதிய கட்டட திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், "மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதுடன் நின்றுவிடாமல் அரசு ஊழியர்களின் பிரச்னைகளையும் தீர்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது' என குறிப்பிட்டார்.
ஆனால், எங்களது பிரச்னைகள் மட்டும் தீர்க்கப்படாமல் உள்ளது என்கின்றனர் தேர்தல் ஆணைய ஊழியர்கள்.
வியாழன், 7 மே, 2009
ஓசையின்றி உயருகிறது சிமென்ட் விலை
கடந்த சில மாதங்களாக நிலையாக இருந்த சிமென்ட் விலை இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அடுத்த சில வாரங்களில் சிமென்ட் விலையை ஒரு மூட்டை ரூ. 300-ஆக அதிகரிப்பது என உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 2007 ஜனவரியில் ஒரு மூட்டை (50 கிலோ) சிமென்ட் விலை ரூ. 185-ஆக இருந்தது. இது அடுத்த 2 மாதங்களில் ரூ. 225 ஆனது.
சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. 2007 இறுதியில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 300 வரை அதிகரித்தது.
சிமென்ட் விலை உயர்வு மேலும் தொடர்ந்ததால் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சில தனியார் கட்டுமான நிறுவனங்களும், கட்டுமான வல்லுநர் சங்கங்களும் சேர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்யத் தொடங்கின.
மத்திய அரசின் எம்.எம்.டி.சி. நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக சிமென்ட் இறக்குமதி செய்து, தேவைப்படுவோருக்குக் குறைந்த விலையில் அளிக்கத் தொடங்கியது. இந்த நிறுவனம் இறக்குமதி செய்யும் சிமென்டை தமிழ்நாடு சிமென்ட் கழகம் மூலம் வாங்கி நுகர் பொருள் வழங்கல் துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 300-ல் இருந்து ரூ. 230 வரை குறைந்தது. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 190-க்குள்ளேயே இருந்தது.
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று சிமென்ட் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு நீக்கியது.
கடந்த நவம்பரில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் பொருளாதார உறவுகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து உள்நாட்டில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை மீண்டும் உயர்த்தத் தொடங்கினர். கடந்த ஆண்டு மத்தியில் ரூ. 240-ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்டின் விலை இப்போது ரூ. 260-ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் விலை உயர்வு:
மக்களவைத் தேர்தல் பரபரப்பில், அரசியல் கட்சிகள் மூழ்கியிருக்கும் வேளையில், சிமென்ட் உற்பத்தியாளர்கள், விற்பனை முகவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிமென்ட் உற்பத்தியை இப்போதுள்ள அளவில் இருந்து 20 சதவீதம் குறைப்பது என்றும், விற்பனை விலையை படிப்படியாக ஒரு மூட்டைக்கு ரூ. 35 வரை அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 300-ஆக அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின் புதிதாக அமையும் மத்திய அரசிடம் தங்கள் துறைக்கு பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் ரூ. 260 ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்ட் விலை தற்போது ரூ. 268-ஆக அதிகரித்துள்ளது.
தேர்தலுக்குப் பின் விலை குறையுமா?
"ரூ. 90 செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 268-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, ஒரு மூட்டை சிமென்ட் விலையை ரூ. 160-க்குள் இருக்குமாறு கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் தமிழகப் பிரிவுத் தலைவர் எல். மூர்த்தி வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பின் மத்திய, மாநில அரசுகளிடம் இது குறித்து முறையிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 2007 ஜனவரியில் ஒரு மூட்டை (50 கிலோ) சிமென்ட் விலை ரூ. 185-ஆக இருந்தது. இது அடுத்த 2 மாதங்களில் ரூ. 225 ஆனது.
சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. 2007 இறுதியில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 300 வரை அதிகரித்தது.
சிமென்ட் விலை உயர்வு மேலும் தொடர்ந்ததால் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சில தனியார் கட்டுமான நிறுவனங்களும், கட்டுமான வல்லுநர் சங்கங்களும் சேர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்யத் தொடங்கின.
மத்திய அரசின் எம்.எம்.டி.சி. நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக சிமென்ட் இறக்குமதி செய்து, தேவைப்படுவோருக்குக் குறைந்த விலையில் அளிக்கத் தொடங்கியது. இந்த நிறுவனம் இறக்குமதி செய்யும் சிமென்டை தமிழ்நாடு சிமென்ட் கழகம் மூலம் வாங்கி நுகர் பொருள் வழங்கல் துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 300-ல் இருந்து ரூ. 230 வரை குறைந்தது. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 190-க்குள்ளேயே இருந்தது.
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று சிமென்ட் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு நீக்கியது.
கடந்த நவம்பரில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் பொருளாதார உறவுகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து உள்நாட்டில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை மீண்டும் உயர்த்தத் தொடங்கினர். கடந்த ஆண்டு மத்தியில் ரூ. 240-ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்டின் விலை இப்போது ரூ. 260-ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் விலை உயர்வு:
மக்களவைத் தேர்தல் பரபரப்பில், அரசியல் கட்சிகள் மூழ்கியிருக்கும் வேளையில், சிமென்ட் உற்பத்தியாளர்கள், விற்பனை முகவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிமென்ட் உற்பத்தியை இப்போதுள்ள அளவில் இருந்து 20 சதவீதம் குறைப்பது என்றும், விற்பனை விலையை படிப்படியாக ஒரு மூட்டைக்கு ரூ. 35 வரை அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 300-ஆக அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின் புதிதாக அமையும் மத்திய அரசிடம் தங்கள் துறைக்கு பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் ரூ. 260 ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்ட் விலை தற்போது ரூ. 268-ஆக அதிகரித்துள்ளது.
தேர்தலுக்குப் பின் விலை குறையுமா?
"ரூ. 90 செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 268-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, ஒரு மூட்டை சிமென்ட் விலையை ரூ. 160-க்குள் இருக்குமாறு கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் தமிழகப் பிரிவுத் தலைவர் எல். மூர்த்தி வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பின் மத்திய, மாநில அரசுகளிடம் இது குறித்து முறையிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திங்கள், 20 ஏப்ரல், 2009
இலங்கை பிரச்னை: பாராமுகத்துடன் அரசியல் கட்சிகள்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் பெண்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசும், அரசியல் கட்சிகளும் பாராமுகமாக உள்ளன.
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளோ அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. ஆனால், உண்ணாவிரதம் இருக்கும் பெண்களின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
கோரிக்கை என்ன?
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி "ஈழத் தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள்' அமைப்பு சார்பில் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த 20 பெண்கள் கடந்த 13-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் கொளத்தூர் இல்லம் அருகே கடந்த 13-ம் தேதி இந்த உண்ணாவிரதம் தொடங்கியது.
மாலை 5 மணிக்கு மேல் போராட்டம் தொடர்ந்தால் கைது செய்வோம் என போலீஸôர் தெரிவித்ததால், உண்ணாவிரதப் போராட்ட இடம் மதிமுக தலைமையகமான தாயகத்துக்கு மாற்றப்பட்டது.
போர் நிறுத்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஆகியோர் உறுதி அளிக்காதவரை போராட்டத்தை தொடர்வது என "ஈழத்தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள்' அமைப்பினர் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் இந்த அமைப்பினர் முயற்சித்தனர். இது குறித்து பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற தமிழக பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 60 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்கபாலு பதில்:
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியது: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிமுக அலுவலகத்துக்கு நான் சென்று சந்திப்பது எப்படி சாத்தியம்? எனவே, அவர்களை காங்கிரஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.
மேலும், அவர்களுக்காக எனது பிரசாரப் பணிகளை விட்டுவிட்டு சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கட்சி அலுவலகத்திலேயே காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை.
மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதில் இருந்தே இவர்களின் அரசியல் நோக்கம் வெளிப்படுகிறது'' என்றார் தங்கபாலு.
முன்னதாக இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாயகம் சென்றார். அப்போது அவரது பேச்சுக்கள் காங்கிரஸின் நிலையை எடுத்துரைப்பதாக இருந்ததால், உண்ணாவிரதப் பந்தலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
உடல் நிலை பாதிப்பு:
உண்ணாவிரதப் போராட்டம் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த ஜெயமணியின் உடல் நிலை ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்தது.
இதையடுத்து அவர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் 5-க்கும் மேற்பட்ட பெண்களின் உடல் நிலையும் மோசமடைந்து வருகிறது.
பொது இடத்தில்...:
போராட்டம் நடைபெறும் இடம் மதிமுக தலைமையகம் என்பதால் அரசுத் தரப்பில் இவர்களை நேரில் சந்திக்க அமைச்சர்கள் தயாராக இல்லை.
""உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோரில் சிலரை தலைமைச் செயலகத்துக்கு வருமாறு அரசுத் தரப்பில் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால், இந்த அழைப்பை நாங்கள் ஏற்கவில்லை'' என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக பெண்கள் இணைப்பு மையத்தின் மாநில தலைவர் ஷீலு தெரிவித்தார்.
""உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வரக்கூடாது என்று விரும்புவதால்தான், அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தலைமைச் செயலகத்தில் சந்திக்கத் தயாராக இருந்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. வீ. தங்கபாலு சத்தியமூர்த்தி பவனில் சந்திக்கத் தயாராக இருந்தும் இவர்கள் சந்திக்க மறுத்து விட்டனர்.
தனியார் இடத்துக்குள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்தால் மதிமுக பொறுப்பேற்குமா? அரசோ, காவல் துறையோ உள்ளே நுழைந்தால் அல்லது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.
அதைப் புரிந்து கொள்ளாமல் இந்தப் பெண்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க முடியாத அவஸ்தையில் இருக்கிறார்கள்'' என்று வருத்தப்படுகிறார்கள் தி.மு.க. தரப்பினர்.
"போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெண்கள் என்பதால் அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதில் நேரடியாக தலையிட்டு போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தலைவர் நிர்மலா வலியுறுத்தினார்.
""தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது கவலைப்படப் போகிறதா? இந்தப் பெண்களுக்கு விபரீதம் ஏற்பட்டால் யாருக்கு லாபம்? இதில் எல்லாமா அரசியல் ஆதாயம் தேடுவது?'' என வருத்தப்படுகின்றனர் அந்தப் பெண்களின் உறவினர்கள்.
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளோ அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. ஆனால், உண்ணாவிரதம் இருக்கும் பெண்களின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
கோரிக்கை என்ன?
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி "ஈழத் தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள்' அமைப்பு சார்பில் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த 20 பெண்கள் கடந்த 13-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் கொளத்தூர் இல்லம் அருகே கடந்த 13-ம் தேதி இந்த உண்ணாவிரதம் தொடங்கியது.
மாலை 5 மணிக்கு மேல் போராட்டம் தொடர்ந்தால் கைது செய்வோம் என போலீஸôர் தெரிவித்ததால், உண்ணாவிரதப் போராட்ட இடம் மதிமுக தலைமையகமான தாயகத்துக்கு மாற்றப்பட்டது.
போர் நிறுத்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஆகியோர் உறுதி அளிக்காதவரை போராட்டத்தை தொடர்வது என "ஈழத்தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள்' அமைப்பினர் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் இந்த அமைப்பினர் முயற்சித்தனர். இது குறித்து பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற தமிழக பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 60 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்கபாலு பதில்:
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியது: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிமுக அலுவலகத்துக்கு நான் சென்று சந்திப்பது எப்படி சாத்தியம்? எனவே, அவர்களை காங்கிரஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.
மேலும், அவர்களுக்காக எனது பிரசாரப் பணிகளை விட்டுவிட்டு சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கட்சி அலுவலகத்திலேயே காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை.
மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதில் இருந்தே இவர்களின் அரசியல் நோக்கம் வெளிப்படுகிறது'' என்றார் தங்கபாலு.
முன்னதாக இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாயகம் சென்றார். அப்போது அவரது பேச்சுக்கள் காங்கிரஸின் நிலையை எடுத்துரைப்பதாக இருந்ததால், உண்ணாவிரதப் பந்தலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
உடல் நிலை பாதிப்பு:
உண்ணாவிரதப் போராட்டம் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த ஜெயமணியின் உடல் நிலை ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்தது.
இதையடுத்து அவர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் 5-க்கும் மேற்பட்ட பெண்களின் உடல் நிலையும் மோசமடைந்து வருகிறது.
பொது இடத்தில்...:
போராட்டம் நடைபெறும் இடம் மதிமுக தலைமையகம் என்பதால் அரசுத் தரப்பில் இவர்களை நேரில் சந்திக்க அமைச்சர்கள் தயாராக இல்லை.
""உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோரில் சிலரை தலைமைச் செயலகத்துக்கு வருமாறு அரசுத் தரப்பில் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால், இந்த அழைப்பை நாங்கள் ஏற்கவில்லை'' என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக பெண்கள் இணைப்பு மையத்தின் மாநில தலைவர் ஷீலு தெரிவித்தார்.
""உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வரக்கூடாது என்று விரும்புவதால்தான், அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தலைமைச் செயலகத்தில் சந்திக்கத் தயாராக இருந்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. வீ. தங்கபாலு சத்தியமூர்த்தி பவனில் சந்திக்கத் தயாராக இருந்தும் இவர்கள் சந்திக்க மறுத்து விட்டனர்.
தனியார் இடத்துக்குள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்தால் மதிமுக பொறுப்பேற்குமா? அரசோ, காவல் துறையோ உள்ளே நுழைந்தால் அல்லது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.
அதைப் புரிந்து கொள்ளாமல் இந்தப் பெண்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க முடியாத அவஸ்தையில் இருக்கிறார்கள்'' என்று வருத்தப்படுகிறார்கள் தி.மு.க. தரப்பினர்.
"போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெண்கள் என்பதால் அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதில் நேரடியாக தலையிட்டு போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தலைவர் நிர்மலா வலியுறுத்தினார்.
""தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது கவலைப்படப் போகிறதா? இந்தப் பெண்களுக்கு விபரீதம் ஏற்பட்டால் யாருக்கு லாபம்? இதில் எல்லாமா அரசியல் ஆதாயம் தேடுவது?'' என வருத்தப்படுகின்றனர் அந்தப் பெண்களின் உறவினர்கள்.
புதன், 11 மார்ச், 2009
வெளிப்படைத் தன்மை எங்கே?
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப் பட்டு மூன்றôண்டுகள் ஆகும் நிலையில் ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படவி ல்லை.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு
அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- ஐ நிறை வேற்றியது.
இந்தச் சட்டத்தின் கீழ் அரசு நிர்வாக நடை முறை தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் பெறுகின்றனர்.
இந்தச் சட்டத்தின் அமலாக்க மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ள து.
தொடக்கம்:
இதன்படி தமிழக அரசால் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் 2006
ஜனவரி 12- ம் தேதி தொடங்கப் பட்டு 28- 1- 2006- முதல் செயல்பட்டு
வருகிறது. 3 ஆணையர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆணையத்தில்
பின்னர் மேலும் 4 ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.
மூன்ற ôண்டுகளில்...:
கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 1.50 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றின் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில் மக்களுக்கு தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
உரிய தகவல்களை மனுதாரர்களுக்கு அளிக்க மறுத்தது தொடர்பாக
விளக்கம் கேட்டு 300 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என மாநிலத் தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி அண்மையில் தெரிவித்தார்.
தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக் கப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு சிலரைத்தவிர
மற்றவர்கள் யாரும் அபராதத்தைச் செலுத்தவில்லை.
அந்தந்த துறை உயர் அதிகாரிகள் மற்றும் தகவல் ஆணையத்தின்
அலட்சியப் போக்கு காரணமாக ஏராளமான அதிகாரிகள் அபராதம் செலுத்தாமல் தப்பித்து வருவதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டறிக்கை:
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 25 ( 4) பிரிவின்படி மாநிலத் தகவல் ஆணையம் தனது பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டின்
இறுதியிலும் ஆண்டறிக்கையாக தொகுத்து சட்டப்பேரவையில் அளிக்க வேண்டும்.
ஆனôல், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு
மூன்றôண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட
ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது என பொள்ளôச்சியில் இருந்து செயல்படும் தாயகம் அமைப்பின் நா. பாஸ்கரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு, " ஆண்டறிக்கை இது வரை சமர்பிக்கப்படவில்லை' என
சட்டப்பேரவை செயலக துணைச் செயலர் 10- 10- 2007- லும், பணியாளர்
நிர்வாகச் சீர்திருத்தத் துறை இணைச் செயலர் 19- 10- 2007- லும் பதில்
அளித்துள்ளனர்.
கடைசியாக சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலர் 29- 01- 2009- ல்
அளித்த ( எண்: 1822/ 2009- 1) கடிதத்திலும், தகவல் ஆணையத்தின்
ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத் தன்மை எங்கே?
இந்தநிலையில், 2006- ம் ஆண்டு முதல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவை செயலகம் உள்பட ஒவ்வொருத்துறையும் அளித்த தகவல்கள் குறித்த விவரங்கள் ஆண்டறிக்கைக்காக பெறப்பட்டு வருகிறது என மாநிலத் தகவல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.
" அரசுத் துறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை அமலாக்க வேண்டிய ஆணையமே, தனது பணிகளில்
வெளிப்படைத் தன்மையை பராமரிக்காமல் உள்ளதற்கு உதாரணமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது' என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு
அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- ஐ நிறை வேற்றியது.
இந்தச் சட்டத்தின் கீழ் அரசு நிர்வாக நடை முறை தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் பெறுகின்றனர்.
இந்தச் சட்டத்தின் அமலாக்க மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ள து.
தொடக்கம்:
இதன்படி தமிழக அரசால் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் 2006
ஜனவரி 12- ம் தேதி தொடங்கப் பட்டு 28- 1- 2006- முதல் செயல்பட்டு
வருகிறது. 3 ஆணையர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆணையத்தில்
பின்னர் மேலும் 4 ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.
மூன்ற ôண்டுகளில்...:
கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 1.50 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றின் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில் மக்களுக்கு தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
உரிய தகவல்களை மனுதாரர்களுக்கு அளிக்க மறுத்தது தொடர்பாக
விளக்கம் கேட்டு 300 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என மாநிலத் தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி அண்மையில் தெரிவித்தார்.
தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக் கப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு சிலரைத்தவிர
மற்றவர்கள் யாரும் அபராதத்தைச் செலுத்தவில்லை.
அந்தந்த துறை உயர் அதிகாரிகள் மற்றும் தகவல் ஆணையத்தின்
அலட்சியப் போக்கு காரணமாக ஏராளமான அதிகாரிகள் அபராதம் செலுத்தாமல் தப்பித்து வருவதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டறிக்கை:
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 25 ( 4) பிரிவின்படி மாநிலத் தகவல் ஆணையம் தனது பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டின்
இறுதியிலும் ஆண்டறிக்கையாக தொகுத்து சட்டப்பேரவையில் அளிக்க வேண்டும்.
ஆனôல், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு
மூன்றôண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட
ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது என பொள்ளôச்சியில் இருந்து செயல்படும் தாயகம் அமைப்பின் நா. பாஸ்கரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு, " ஆண்டறிக்கை இது வரை சமர்பிக்கப்படவில்லை' என
சட்டப்பேரவை செயலக துணைச் செயலர் 10- 10- 2007- லும், பணியாளர்
நிர்வாகச் சீர்திருத்தத் துறை இணைச் செயலர் 19- 10- 2007- லும் பதில்
அளித்துள்ளனர்.
கடைசியாக சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலர் 29- 01- 2009- ல்
அளித்த ( எண்: 1822/ 2009- 1) கடிதத்திலும், தகவல் ஆணையத்தின்
ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத் தன்மை எங்கே?
இந்தநிலையில், 2006- ம் ஆண்டு முதல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவை செயலகம் உள்பட ஒவ்வொருத்துறையும் அளித்த தகவல்கள் குறித்த விவரங்கள் ஆண்டறிக்கைக்காக பெறப்பட்டு வருகிறது என மாநிலத் தகவல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.
" அரசுத் துறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை அமலாக்க வேண்டிய ஆணையமே, தனது பணிகளில்
வெளிப்படைத் தன்மையை பராமரிக்காமல் உள்ளதற்கு உதாரணமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது' என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏன் இந்த முரண்பாடு?
சென்னை, மார்ச் 7: லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு அத் துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
அரசாணை எண் 158- ன் படி தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிவந்த லஞ்சஒழிப்புத்துறை அதி காரிகள், தற்போது பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- ன் கீழ் அரசுத் துறைகளின் நடவடி க்கைகள் தொடர்பான விவரங்களை மக்களுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டது.
நாட்டின்பாதுகாப்பு , உளவு, விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்த
விவரங்களைத்தவிர மற்ற அனைத்து தகவல்களையும் இந்த சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
ஆன ôல், கடந்த ஆகஸ்ட் 26- ம் தேதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்தி ருத்தத்துறை வெளியிட்ட அரசாணை எண் 158- ன் படி லஞ்ச ஒழிப்புத் துறை க்கும், மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள நபர்கள் மீது லஞ்சப்பு கார்கள் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்களுக்கு தகவல் அளிப்பதை
தவிர்ப்பதற்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதனை மறுக்கும் வகையில், விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான தகவல்களை வழக்கில் தொடர்புள்ளவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், விசாரணைக்குத் தொடர்பில்லாத மற்ற தகவல்களை பெறுவதை இது தடுக்காது என அரசு தரப்பில்பதில் கூறப்பட்டது.
ஆன ôல், இதற்கு மாற ôக வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத வகையி ல் லஞ்ச ஒழிப்புத்துறையின் இரு வாகனங்களின் ( டி என் 22 ஜி 5000, டி என் 22 ஜி 2000) பயன்பாடு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள் விகள் ஓரிரு மாதங்கள் முன்னர் கேட்கப்பட்டது.
பொது தகவல் அதிகாரி ஏன்?
அரசாணை எண் 158- ன் படி தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளி க்க இயலாது என லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரியான மத்தியசரக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இது இந்த விவகாரத்தில் அரசு தெரிவிதத விளக்கத்துக்கு முரண்பட்ட வகை யில் இருப்பதாக " தினமணியில்' செய்தி வெளியானது.
மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்று கூறும் அலுவலகத்தில் பொதுதகவல் அதிகாரிபதவி இருப்பது குறித்தும் அந்த செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டது.
ரகசிய உத்தரவு:
இதன் எதிரொலியாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு வரும்கடிதங்களுக்கு பதில் ( பதில் அளிக்க இயலாது என்று குறிப்பி ட்டு) கடிதம் அனுப்பும் போது அதில் பொது தகவல் அதிகாரி என குறிப்பி டக்கூடாது என அதிகாரி களுக்கு ரகசிய உத்தர விட்டு கடந்த ஜனவரி 21- ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
பதில் கிடைத்தது:
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் சட்ட ஆலோசகராகப்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வி. வி. சோமசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்
சில கேள்விகள் கேட்டு கடந்த ஜனவரி 12- ம் தேதி கடிதம் அனுப்பியுள்ள ôர்.
இதற்கு உரிய பதில்களை, பொது தகவல் அதிகாரியான மத்தியசரக காவல் கண்காணிப்பாளர் பிப்ரவரி 20- ம் தேதியிட்ட தனது கடிதத்தின் ( கழ். தஸ்ரீ. சர். எ1/ 21446/ 07) மூலம் அளித்துள்ள ôர்.
முரண்பாடு ஏன்?
இதுவரை தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக அரசாணை எண் 158- ஐ சுட்டிக்காட்டி பதில் அளிக்க இயலாது என்றுக் கூறி வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இப்போது
பதில் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும், வழக்கு விசாரணையில் தொடர்பில்லாத தகவல்களை கேட்டு வரும் குறிப்பிட்ட ஒருவரின் கடிதத்துக்கு பதில் அளிப்பதும், மற்றெ ôருவரி ன் கடிதத்துக்கு பதில் அளிக்க மறுப்பதும் என்ன நியாயம் என்பதே தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் கேள்வி.
அரசாணை எண் 158- ன் படி தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிவந்த லஞ்சஒழிப்புத்துறை அதி காரிகள், தற்போது பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- ன் கீழ் அரசுத் துறைகளின் நடவடி க்கைகள் தொடர்பான விவரங்களை மக்களுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டது.
நாட்டின்பாதுகாப்பு , உளவு, விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்த
விவரங்களைத்தவிர மற்ற அனைத்து தகவல்களையும் இந்த சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
ஆன ôல், கடந்த ஆகஸ்ட் 26- ம் தேதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்தி ருத்தத்துறை வெளியிட்ட அரசாணை எண் 158- ன் படி லஞ்ச ஒழிப்புத் துறை க்கும், மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள நபர்கள் மீது லஞ்சப்பு கார்கள் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்களுக்கு தகவல் அளிப்பதை
தவிர்ப்பதற்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதனை மறுக்கும் வகையில், விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான தகவல்களை வழக்கில் தொடர்புள்ளவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், விசாரணைக்குத் தொடர்பில்லாத மற்ற தகவல்களை பெறுவதை இது தடுக்காது என அரசு தரப்பில்பதில் கூறப்பட்டது.
ஆன ôல், இதற்கு மாற ôக வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத வகையி ல் லஞ்ச ஒழிப்புத்துறையின் இரு வாகனங்களின் ( டி என் 22 ஜி 5000, டி என் 22 ஜி 2000) பயன்பாடு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள் விகள் ஓரிரு மாதங்கள் முன்னர் கேட்கப்பட்டது.
பொது தகவல் அதிகாரி ஏன்?
அரசாணை எண் 158- ன் படி தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளி க்க இயலாது என லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரியான மத்தியசரக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இது இந்த விவகாரத்தில் அரசு தெரிவிதத விளக்கத்துக்கு முரண்பட்ட வகை யில் இருப்பதாக " தினமணியில்' செய்தி வெளியானது.
மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்று கூறும் அலுவலகத்தில் பொதுதகவல் அதிகாரிபதவி இருப்பது குறித்தும் அந்த செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டது.
ரகசிய உத்தரவு:
இதன் எதிரொலியாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு வரும்கடிதங்களுக்கு பதில் ( பதில் அளிக்க இயலாது என்று குறிப்பி ட்டு) கடிதம் அனுப்பும் போது அதில் பொது தகவல் அதிகாரி என குறிப்பி டக்கூடாது என அதிகாரி களுக்கு ரகசிய உத்தர விட்டு கடந்த ஜனவரி 21- ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
பதில் கிடைத்தது:
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் சட்ட ஆலோசகராகப்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வி. வி. சோமசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்
சில கேள்விகள் கேட்டு கடந்த ஜனவரி 12- ம் தேதி கடிதம் அனுப்பியுள்ள ôர்.
இதற்கு உரிய பதில்களை, பொது தகவல் அதிகாரியான மத்தியசரக காவல் கண்காணிப்பாளர் பிப்ரவரி 20- ம் தேதியிட்ட தனது கடிதத்தின் ( கழ். தஸ்ரீ. சர். எ1/ 21446/ 07) மூலம் அளித்துள்ள ôர்.
முரண்பாடு ஏன்?
இதுவரை தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக அரசாணை எண் 158- ஐ சுட்டிக்காட்டி பதில் அளிக்க இயலாது என்றுக் கூறி வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இப்போது
பதில் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும், வழக்கு விசாரணையில் தொடர்பில்லாத தகவல்களை கேட்டு வரும் குறிப்பிட்ட ஒருவரின் கடிதத்துக்கு பதில் அளிப்பதும், மற்றெ ôருவரி ன் கடிதத்துக்கு பதில் அளிக்க மறுப்பதும் என்ன நியாயம் என்பதே தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் கேள்வி.
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009
மாநகராட்சி வழங்கும்குப்பைத் தொட்டிகள் தரமற்றவை!
சென்னை, பிப்.12: சென்னையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக வீடுகளுக்கு வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் தரமானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து அளிக்கும் பணிகளுக்காக குடிசைப்பகுதி வீடுகளுக்கு தலா 2 வீதம் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் குப்பைத் தொட்டிகள் டிசம்பர் 26-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு குப்பைத் தொட்டி ரூ11.80 விலையில் மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத் திடம் இருந்து இதற்காக ரூ. 51 லட்சம் செலவில் 4.31 லட்சம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
பல்லாவரத்தில்...:
ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை பல்லாவரம் நகராட்சி செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பல்லாவரம் நகராட்சியில் 26 வார்டுகளில் உள்ள 16 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க ஒவ்வொன்றும் ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகளை வாங்க பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் விலைக்கும் பல்லாவரத்தில் வழங்கப்பட உள்ள குப்பைத் தொட்டிகளின் விலைக்கும் ரூ.50 க்கு மேல் வேறுபாடு இருப்பது குறித்து "தினமணியில்' கடந்த 10-ம் தேதி செய்தி வெளியானது.
நகராட்சி பதில்:
இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல்லாவரம் நகராட்சித் தலைவர் இ. கருணாநிதி அளித்துள்ள விளக்க அறிக்கை விவரம்:
பல்லாவரம் நகராட்சி மூலம் வாங்கி வழங்கப்படவுள்ள குப்பைத் தொட்டிகள் நீண்டநாள் உழைக்கக் கூடிய, அதிக தாங்கும் திறனும், கலப்பில்லாத தூய் மையான பாலித்திலின் மூலப்பொருள் மூலம் அடிக்கடி கழுவிப் பயன்படுத்தும் வகையில் மூடியுடன் கூடிய தலா 600 கிராம் எடையுள்ள பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் தயாரிக்கப்படும் தரமுள்ள தனியார் நிறுவனமான சின்டெக்ஸ் தயாரிக்கும் குப்பைத் தொட்டிகள் ஆகும். இதன் விலை தலா ரூ.69.
சென்னையில்...:
சென்னை மாநகராட்சி வாங்கிய குப்பைத் தொட்டிகள் கிண்டியில் இயங்கிவரும் மத்திய அரசின் சிப்பெட் நிறுவனத்தின் மூலம் மறு சுழற்சி செய்யப்பட்ட சாதாரண பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட 8 லிட்டர் கொள்ளளவும் 225 கிராம் எடையும் கொண்ட குப்பைத் தொட்டிகள்.
இதன் விலை தலா ரூ.11.80எனவே, பல்லாவரம் நகராட்சி வழங்கவுள்ள குப் பைத் தொட்டிகளை சென்னை மாநகராட்சி வழங்கும் குப்பைத் தொட்டிகளுடன் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல என இ. கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
பல்லாவரம் நகராட்சித் தலைவரின் இந்த விளக்க அறிக்கை அடிப்படையில், சென்னை மாநகராட்சி வழங்கிய குப்பைத் தொட்டிகள் தரம் குறைந்தவையா என்ற கேள்வி அடுத்து எழுகிறது.
அது மட்டுமல்ல, ஒரு நகராட்சியே, மத்திய அரசு நிறுவனத்தின் தயாரிப்பு தரமானது அல்ல என்று கூறி தனியார் நிறுவனத்திடம் குப்பைத் தொட்டிகளை வாங்குவது எந்த வகையில் லாபம் என்ற கேள்வியும் எழுகிறது.
சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து அளிக்கும் பணிகளுக்காக குடிசைப்பகுதி வீடுகளுக்கு தலா 2 வீதம் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் குப்பைத் தொட்டிகள் டிசம்பர் 26-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு குப்பைத் தொட்டி ரூ11.80 விலையில் மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத் திடம் இருந்து இதற்காக ரூ. 51 லட்சம் செலவில் 4.31 லட்சம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
பல்லாவரத்தில்...:
ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை பல்லாவரம் நகராட்சி செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பல்லாவரம் நகராட்சியில் 26 வார்டுகளில் உள்ள 16 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க ஒவ்வொன்றும் ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகளை வாங்க பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் விலைக்கும் பல்லாவரத்தில் வழங்கப்பட உள்ள குப்பைத் தொட்டிகளின் விலைக்கும் ரூ.50 க்கு மேல் வேறுபாடு இருப்பது குறித்து "தினமணியில்' கடந்த 10-ம் தேதி செய்தி வெளியானது.
நகராட்சி பதில்:
இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல்லாவரம் நகராட்சித் தலைவர் இ. கருணாநிதி அளித்துள்ள விளக்க அறிக்கை விவரம்:
பல்லாவரம் நகராட்சி மூலம் வாங்கி வழங்கப்படவுள்ள குப்பைத் தொட்டிகள் நீண்டநாள் உழைக்கக் கூடிய, அதிக தாங்கும் திறனும், கலப்பில்லாத தூய் மையான பாலித்திலின் மூலப்பொருள் மூலம் அடிக்கடி கழுவிப் பயன்படுத்தும் வகையில் மூடியுடன் கூடிய தலா 600 கிராம் எடையுள்ள பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் தயாரிக்கப்படும் தரமுள்ள தனியார் நிறுவனமான சின்டெக்ஸ் தயாரிக்கும் குப்பைத் தொட்டிகள் ஆகும். இதன் விலை தலா ரூ.69.
சென்னையில்...:
சென்னை மாநகராட்சி வாங்கிய குப்பைத் தொட்டிகள் கிண்டியில் இயங்கிவரும் மத்திய அரசின் சிப்பெட் நிறுவனத்தின் மூலம் மறு சுழற்சி செய்யப்பட்ட சாதாரண பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட 8 லிட்டர் கொள்ளளவும் 225 கிராம் எடையும் கொண்ட குப்பைத் தொட்டிகள்.
இதன் விலை தலா ரூ.11.80எனவே, பல்லாவரம் நகராட்சி வழங்கவுள்ள குப் பைத் தொட்டிகளை சென்னை மாநகராட்சி வழங்கும் குப்பைத் தொட்டிகளுடன் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல என இ. கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
பல்லாவரம் நகராட்சித் தலைவரின் இந்த விளக்க அறிக்கை அடிப்படையில், சென்னை மாநகராட்சி வழங்கிய குப்பைத் தொட்டிகள் தரம் குறைந்தவையா என்ற கேள்வி அடுத்து எழுகிறது.
அது மட்டுமல்ல, ஒரு நகராட்சியே, மத்திய அரசு நிறுவனத்தின் தயாரிப்பு தரமானது அல்ல என்று கூறி தனியார் நிறுவனத்திடம் குப்பைத் தொட்டிகளை வாங்குவது எந்த வகையில் லாபம் என்ற கேள்வியும் எழுகிறது.
வியாழன், 12 பிப்ரவரி, 2009
செலவு கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம்
சென்னை, பிப். 9: மாநகராட்சி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதில் வேட்பாளர்கள் தாமதம் காட்டி வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை கணக்கு தாக்கல் தொடர்பான நடைமுறைகள் முடியவில்லை என மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் தெரிவித்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட்டவர்களில் உரிய காலத்துக்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 1,112 பேரும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் கணக்குகளை தாக்கல் செய்யாத 2,106 பேரும் என மொத்தம் 3,618 பேர் தேர்த லில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் சென்னை மாநகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் தங்களது கணக்குகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தாக்கல் செய்யாவிட்டால்...
சென்னை மாந கராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கு 1,112 பேர் போட்டியிட்டனர். இவர்களிடம் தேர்தல் செலவு கணக்கு விவரங்களைப் பெற்று அவற்றை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டியது மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையரின் பொறுப்பு.
தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த 30 நாள் களுக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலமாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு சமர்ப்பிக்காத வர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்படும். இதற்குப் பிறகும் அவர்கள் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களை அடுத்த தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதி.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட வர்களும் தங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்இருப்பினும், தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் சென்னை மாநகராட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்கள் இதுவரை முழுமையாக தாக்கல் செய்யப்படாமல் உள்ளது.
இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் டிசந்திரசேகரன் வெள்ளிக்கிழமை கூறியது:
சென்னை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற்றபோது மாநகராட்சி ஆணையராகவும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமாக இருந்தவர் ம.ப. விஜயகுமார்.
இவர் வேறு துறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஓய்வும் பெற்று விட்டார்.
இந்த நிலையில் மாநகராட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்களைச் சேகரித்து ஆணையத்திடம் அளிப்பதாக இப்போது ஆணையராக உள்ள ராஜேஷ் லக்கானி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் மண்டல வாரியாக வேட்பாளர்களிடம் இருந்து செலவு கணக்கு விவரங்களைப் பெற்று அனுப்பி வருகிறார். இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த கணக்குகள் முழுமையாக கிடைத்து அவற்றை ஆய்வு செய்த பின்னரே தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார்.
கடந்த 2006-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட்டவர்களில் உரிய காலத்துக்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 1,112 பேரும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் கணக்குகளை தாக்கல் செய்யாத 2,106 பேரும் என மொத்தம் 3,618 பேர் தேர்த லில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் சென்னை மாநகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் தங்களது கணக்குகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தாக்கல் செய்யாவிட்டால்...
சென்னை மாந கராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கு 1,112 பேர் போட்டியிட்டனர். இவர்களிடம் தேர்தல் செலவு கணக்கு விவரங்களைப் பெற்று அவற்றை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டியது மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையரின் பொறுப்பு.
தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த 30 நாள் களுக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலமாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு சமர்ப்பிக்காத வர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்படும். இதற்குப் பிறகும் அவர்கள் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களை அடுத்த தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதி.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட வர்களும் தங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்இருப்பினும், தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் சென்னை மாநகராட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்கள் இதுவரை முழுமையாக தாக்கல் செய்யப்படாமல் உள்ளது.
இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் டிசந்திரசேகரன் வெள்ளிக்கிழமை கூறியது:
சென்னை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற்றபோது மாநகராட்சி ஆணையராகவும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமாக இருந்தவர் ம.ப. விஜயகுமார்.
இவர் வேறு துறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஓய்வும் பெற்று விட்டார்.
இந்த நிலையில் மாநகராட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்களைச் சேகரித்து ஆணையத்திடம் அளிப்பதாக இப்போது ஆணையராக உள்ள ராஜேஷ் லக்கானி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் மண்டல வாரியாக வேட்பாளர்களிடம் இருந்து செலவு கணக்கு விவரங்களைப் பெற்று அனுப்பி வருகிறார். இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த கணக்குகள் முழுமையாக கிடைத்து அவற்றை ஆய்வு செய்த பின்னரே தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய உத்தரவு!
சென்னை, பிப். 9: தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோரி பொது மக்கள் அனுப்பும் கடிதங்களுக்குப் பதில் அளிக்கும்போது "பொதுத் தகவல் அதிகாரி' என குறிப்பிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகா ரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறையில், பொதுத் தகவல் அதிகாரி பதவி இருப்பது ஏன் என்று "தினமணியில்' ஜனவரி 15-ல் வெளியான செய்தியின் எதிரொலியாக இந்த ரகசிய உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரும் விவரங்களை அளிப்பதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விலக்கு அளித்து கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
அரசின் இந்த நடவடிக்கை தகவல்பெறும் பொது மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக தன்னார்வ அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அரசாணை எண்: 158-படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் இருக்கும் வழக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை தொடர்பில்லாத சில தக வல்களைக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அரசாணை எண்: 158-ஐ சுட்டிக்காட்டி தங்கள் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களைத் தரஇயலாது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட் டது.
இது தொடர்பான பதில் கடிதத்தில் அதனை அனுப்பியவர் தன்னை, ""பொதுத் தகவல் அதிகாரி' என குறிப்பிட்டிருந்தார். தகவல் பெறும் உரிமைச்சட் டத்தில் இருந்து தங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிக்கொள்ளும் அந்தத் துறையில் பொதுத் தகவல் அதிகாரி பதவி இருப்பது எப்படி என கடந்த ஜனவரி 15-ல் "தின மணி' கேள்வி எழுப்பியது.
ரகசிய சுற்றறிக்கை:
இதை யடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் அனைத்துப்பிரிவு மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனவரி 21-ம் தேதியிட்ட ஒரு ரகசிய சுற்றறிக்கை (எண்: 32679/வி.ஏசி.-4/2005) அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கடிதங்களுக்கு (தகவல் அளிக்க இயலாது என்று கூறி) பதில் கடிதம் அனுப்பும் அதிகாரிகள் அதில் தங்களை பொது தகவல் அதிகாரி என குறிப்பிடக் கூடாது.
அதற்குப் பதிலாக ""காவல் கண் காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை மத்திய சரகம், சென்னை- 28'' என்று குறிப்பிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரகசிய சுற்றறிக்கை மூலம், தங்கள் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை அத் துறை அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
இது அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் பதிலுக்கு எதிரானதாகவே உள் ளதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறையில், பொதுத் தகவல் அதிகாரி பதவி இருப்பது ஏன் என்று "தினமணியில்' ஜனவரி 15-ல் வெளியான செய்தியின் எதிரொலியாக இந்த ரகசிய உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரும் விவரங்களை அளிப்பதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விலக்கு அளித்து கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
அரசின் இந்த நடவடிக்கை தகவல்பெறும் பொது மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக தன்னார்வ அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அரசாணை எண்: 158-படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் இருக்கும் வழக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை தொடர்பில்லாத சில தக வல்களைக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அரசாணை எண்: 158-ஐ சுட்டிக்காட்டி தங்கள் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களைத் தரஇயலாது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட் டது.
இது தொடர்பான பதில் கடிதத்தில் அதனை அனுப்பியவர் தன்னை, ""பொதுத் தகவல் அதிகாரி' என குறிப்பிட்டிருந்தார். தகவல் பெறும் உரிமைச்சட் டத்தில் இருந்து தங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிக்கொள்ளும் அந்தத் துறையில் பொதுத் தகவல் அதிகாரி பதவி இருப்பது எப்படி என கடந்த ஜனவரி 15-ல் "தின மணி' கேள்வி எழுப்பியது.
ரகசிய சுற்றறிக்கை:
இதை யடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் அனைத்துப்பிரிவு மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனவரி 21-ம் தேதியிட்ட ஒரு ரகசிய சுற்றறிக்கை (எண்: 32679/வி.ஏசி.-4/2005) அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கடிதங்களுக்கு (தகவல் அளிக்க இயலாது என்று கூறி) பதில் கடிதம் அனுப்பும் அதிகாரிகள் அதில் தங்களை பொது தகவல் அதிகாரி என குறிப்பிடக் கூடாது.
அதற்குப் பதிலாக ""காவல் கண் காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை மத்திய சரகம், சென்னை- 28'' என்று குறிப்பிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரகசிய சுற்றறிக்கை மூலம், தங்கள் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை அத் துறை அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
இது அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் பதிலுக்கு எதிரானதாகவே உள் ளதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குப்பைத் தொட்டியில் ஏன் இந்த முரண்பாடு?
சென்னை, பிப். 9: சென்னை பல்லாவரம் நகராட்சியில் தலா ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சியில் இதேபோல வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளின் விலையை விட இது பல மடங்கு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளுக்கு சேர்த்து வேங்கடமங்கலத்தில் குப்பைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ரூ.44.21 கோடி மதிப்பீட்டில் இத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு பல்லாவரம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியான நிறுவனங்களை தேர்வுச் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் நட வடிக்கைகளை பல்லாவரம் நகராட்சி மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும் 26 வார்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 16 ஆயிரம் குடும்பங்களுக்கு குப்பைத் தொட்டிகளை வழங்க நகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, ஒவ்வொன்றும் 10 லிட்டர் கொள்ளளவுள்ள 16 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.
இதில் "கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' ரூ.77-க்கும், "சின்டெக்ஸ் நிறுவனம்' ரூ.80-க்கும் குப்பைத் தொட்டிகளை வழங்க முன் வந்தன"கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' குறிப் பிட்டுள்ள ரூ.77 மற்ற நிறுவனங்களின் விலை யைவிட குறைவாக இருந்தாலும், இது தங்களது மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக இருப்பதாக 2008 டிசம்பர் 23-ல் நடைபெற்ற நகராட்சி மன்றக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப் பட்டது.
எனவே, அந்த நிறுவனம் மதிப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப விலையை குறைத்துக் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒப்பந்த நிறுவனத்திடம் பேரம்:
நகராட்சி நிர்வாகம் மூலம் இது குறித்து நகராட்சி பொறியாளர் மேற்குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்இதையடுத்து, அந்த நிறுவனம் தலா ரூ.69 விலையில் குப்பைத் தொட்டிகளை வழங்க முன்வந்தது.
இதற்கு 2009 ஜனவரி 27-ல் நகராட்சிக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டதுஇதே நிறுவனத்திடம், இதே விலைக்கு தங்கள் நகராட்சிப் பகுதிகளுக்கு தேவைப்படும் எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகளை வாங்குவது குறித்து ஆலந்தூர், தாம்பரம் நகராட்சிகள் தனித்தனியாக முடிவு செய்துக் கொள்ளலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில்...:
சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வீட்டில் இருந்து சேகரிப்பதற்காக குடிசைப்பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகள் தலா ரூ.12-க்கு மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத்திடமி ருந்து வாங்கப்பட்டுள்ளது.
அங்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு, அதில் மற்ற நிறுவனங்கள் தெரிவித்த விலைகள் ஆய்வு செய்யப்பட்டு, மிகக் குறைவான விலை சிப் பெட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்திடம் இருந்து குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
முரண்பாடு:
8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டி ரூ.12-க்கு கிடைக்கும் போது, வெறும் 2 லிட்டர் கூடுதலாக அதாவது 10 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகளை ரூ.69 விலைக்கு பல்லாவரம் நகராட்சி வாங்க முடிவு செய்துள்ளது.
குப்பைத் தொட்டியின் அளவில் 8 லிட்டருக்கும், 10 லிட்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், அதற்கான விலையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதே மக்களிடம் தற்போது எழுந்துள்ள கேள்வி.
நகராட்சி பதில்:
கொள்ளளவு அதிகம் என்பது மட்டுமல்ல, நாங்கள் வாங்கும் குறைந்த எண்ணிக்கையும் இந்த அதிக விலைக்கு காரணம் என்று நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை விசாரித்து மக்களின் வரி பணம் வீணாகாமல் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் இதேபோல வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளின் விலையை விட இது பல மடங்கு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளுக்கு சேர்த்து வேங்கடமங்கலத்தில் குப்பைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ரூ.44.21 கோடி மதிப்பீட்டில் இத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு பல்லாவரம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியான நிறுவனங்களை தேர்வுச் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் நட வடிக்கைகளை பல்லாவரம் நகராட்சி மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும் 26 வார்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 16 ஆயிரம் குடும்பங்களுக்கு குப்பைத் தொட்டிகளை வழங்க நகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, ஒவ்வொன்றும் 10 லிட்டர் கொள்ளளவுள்ள 16 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.
இதில் "கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' ரூ.77-க்கும், "சின்டெக்ஸ் நிறுவனம்' ரூ.80-க்கும் குப்பைத் தொட்டிகளை வழங்க முன் வந்தன"கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' குறிப் பிட்டுள்ள ரூ.77 மற்ற நிறுவனங்களின் விலை யைவிட குறைவாக இருந்தாலும், இது தங்களது மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக இருப்பதாக 2008 டிசம்பர் 23-ல் நடைபெற்ற நகராட்சி மன்றக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப் பட்டது.
எனவே, அந்த நிறுவனம் மதிப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப விலையை குறைத்துக் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒப்பந்த நிறுவனத்திடம் பேரம்:
நகராட்சி நிர்வாகம் மூலம் இது குறித்து நகராட்சி பொறியாளர் மேற்குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்இதையடுத்து, அந்த நிறுவனம் தலா ரூ.69 விலையில் குப்பைத் தொட்டிகளை வழங்க முன்வந்தது.
இதற்கு 2009 ஜனவரி 27-ல் நகராட்சிக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டதுஇதே நிறுவனத்திடம், இதே விலைக்கு தங்கள் நகராட்சிப் பகுதிகளுக்கு தேவைப்படும் எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகளை வாங்குவது குறித்து ஆலந்தூர், தாம்பரம் நகராட்சிகள் தனித்தனியாக முடிவு செய்துக் கொள்ளலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில்...:
சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வீட்டில் இருந்து சேகரிப்பதற்காக குடிசைப்பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகள் தலா ரூ.12-க்கு மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத்திடமி ருந்து வாங்கப்பட்டுள்ளது.
அங்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு, அதில் மற்ற நிறுவனங்கள் தெரிவித்த விலைகள் ஆய்வு செய்யப்பட்டு, மிகக் குறைவான விலை சிப் பெட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்திடம் இருந்து குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
முரண்பாடு:
8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டி ரூ.12-க்கு கிடைக்கும் போது, வெறும் 2 லிட்டர் கூடுதலாக அதாவது 10 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகளை ரூ.69 விலைக்கு பல்லாவரம் நகராட்சி வாங்க முடிவு செய்துள்ளது.
குப்பைத் தொட்டியின் அளவில் 8 லிட்டருக்கும், 10 லிட்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், அதற்கான விலையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதே மக்களிடம் தற்போது எழுந்துள்ள கேள்வி.
நகராட்சி பதில்:
கொள்ளளவு அதிகம் என்பது மட்டுமல்ல, நாங்கள் வாங்கும் குறைந்த எண்ணிக்கையும் இந்த அதிக விலைக்கு காரணம் என்று நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை விசாரித்து மக்களின் வரி பணம் வீணாகாமல் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
புதன், 28 ஜனவரி, 2009
அகதிகள் முகாமில் இந்தியர்!
சென்னை பூந்தமல்லியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் இந்தியக் குடிமகனான மகேந்திரன் (எ) கண்ணன் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் வட்டாம்வலசை கிராமத்தைச் சேர்ந்த சேதுவும் அவரது மனைவியும் 70-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இலங்கை சென்றனர். அங்கு அவர்களுக்கு கண்ணன் பிறந்தார்.
1984-ம் ஆண்டு ராணுவத் தாக்குதலில் மன்னார் அருகில் இவர்கள் குடும்பம் தங்கி இருந்த பேசாலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேது தனது மகன் கண்ணன் மற்றும் மனைவியுடன் அகதிகளுடன் தமிழகம் வந்தார்.
அகதிகளுடன் வந்ததால் இவர்களைப் போலீஸôர் மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். பின்னர் சிவகாசி முகாமுக்கு மாற்றினர்.
தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து சொந்த ஊரான வட்டாம்வலசைக்குச் சென்றார் கண்ணன். அங்கு காளீஸ்வரியுடன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகள் சரோஜினி (13), மகன்கள் சுதாகர் (9), சுரேஷ் (8) உள்ளனர்.
கூலி வேலை செய்து வந்த கண்ணன் பற்றி 7-3-2007-ல் விசாரித்த ராமநாதபுரம் "கியூ' பிரிவு போலீஸôர், 9-3-2007-ல் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்று அலுவலகத்திலேயே 5 நாள்கள் தங்க வைத்து பின்னர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையறிந்த இவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி விடுவித்தனர்.
சிறையில் இருந்து வெளியில் வந்த கண்ணனை வழிமறித்த "கியூ' பிரிவு போலீஸôர் வலுகட்டாயமாக ஒரு வேனில் ஏற்றி செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அடைத்தனர். பின்னர் டிசம்பர் மாதம் பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமுக்கு மாற்றினர்.
தன்னை விடுவிவிக்க வேண்டும், "கியூ' பிரிவு போலீஸôரின் தவறான தகவல்கள் அடிப்படையில் வெளிநாட்டவர் என தன்னைத் தவறாகக் குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்ணன் கோரியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் வட்டாம்வலசை கிராமத்தைச் சேர்ந்த சேதுவும் அவரது மனைவியும் 70-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இலங்கை சென்றனர். அங்கு அவர்களுக்கு கண்ணன் பிறந்தார்.
1984-ம் ஆண்டு ராணுவத் தாக்குதலில் மன்னார் அருகில் இவர்கள் குடும்பம் தங்கி இருந்த பேசாலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேது தனது மகன் கண்ணன் மற்றும் மனைவியுடன் அகதிகளுடன் தமிழகம் வந்தார்.
அகதிகளுடன் வந்ததால் இவர்களைப் போலீஸôர் மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். பின்னர் சிவகாசி முகாமுக்கு மாற்றினர்.
தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து சொந்த ஊரான வட்டாம்வலசைக்குச் சென்றார் கண்ணன். அங்கு காளீஸ்வரியுடன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகள் சரோஜினி (13), மகன்கள் சுதாகர் (9), சுரேஷ் (8) உள்ளனர்.
கூலி வேலை செய்து வந்த கண்ணன் பற்றி 7-3-2007-ல் விசாரித்த ராமநாதபுரம் "கியூ' பிரிவு போலீஸôர், 9-3-2007-ல் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்று அலுவலகத்திலேயே 5 நாள்கள் தங்க வைத்து பின்னர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையறிந்த இவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி விடுவித்தனர்.
சிறையில் இருந்து வெளியில் வந்த கண்ணனை வழிமறித்த "கியூ' பிரிவு போலீஸôர் வலுகட்டாயமாக ஒரு வேனில் ஏற்றி செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அடைத்தனர். பின்னர் டிசம்பர் மாதம் பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமுக்கு மாற்றினர்.
தன்னை விடுவிவிக்க வேண்டும், "கியூ' பிரிவு போலீஸôரின் தவறான தகவல்கள் அடிப்படையில் வெளிநாட்டவர் என தன்னைத் தவறாகக் குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்ணன் கோரியுள்ளார்.
சனி, 17 ஜனவரி, 2009
யார் சொல்வது சரி?
சென்னை, ஜன. 15: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்ச ஊழலை ஒழிக்கவும் ""தகவல் பெறும் உரிமைச் சட்டம்'' 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அரசின் நிர்வாக நடைமுறையை மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுத்த இரும்புத்திரையை விலக்கும் வகையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தது.
தகவல்பெறும் உரிமைச் சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி உளவு மற்றும் தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய துறைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும்.
இவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறைகளிலும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படுவதற்கு இந்த விலக்கு பொருந்தாது.
உளவு, தேசப் பாதுகாப்பு தொடர்பானவை மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 8 (1) (எச்) பிரிவின் கீழ் ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் 24 (4) பிரிவின் படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியத் துறைகளுக்கு முதலில் விலக்கு அளித்தது.
தொடர்ந்து, இந்தப் பிரிவைப் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு விலக்கு அளித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விலக்கு அளித்து அரசாணை:
இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை (எண்: 158) கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.
அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் நடைபெற்ற சில முறைகேடுகள் குறித்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினரும் கேட்க முயற்சித்ததால் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாகப் புகார் எழுந்தது.
தேசப் பாதுகாப்பு தொடர்பான உளவுப் பணிகளில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சி.பி.ஐ. உள்பட பெரும்பாலான மாநிலங்களில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் கூட இத்தகைய விலக்கு அளிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் செய்திகள் வெளியாயின.
முதல்வர் பதில்:
இதையடுத்து, இந்த செய்திகளை மறுக்கும் விதமாக, கேள்வி-பதில் அறிக்கை மூலம் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, ""விசாரணையில் இருக்கும் வழக்குகளின் விவரங்களை அதில் தொடர்புடையவர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றால் அது விசாரணையை பாதிக்கும் என்பதால் அந்த குறிப்பிட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிப்பதாக ஆகாது. மேலும், இது குறித்து சில விஷமிகள் பொய்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்'' என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.
முதல்வர் கூறியபடி எந்த வழக்கு தொடர்பாகவும் இல்லாமல், லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசு வாகனம் (டி.என்.-22-ஜி-5000) பயன்படுத்தப்படும் விதம் குறித்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டது.
தகவல் அளிக்க மறுப்பு:
ஆனால், அரசாணை எண்: 158-ன் படி லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, மேற்கூறிய கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொதுத் தகவல் அதிகாரியாக தன்னை குறிப்பிட்டுக் கொண்டுள்ள மத்திய சரக கண்காணிப்பாளர், ஜனவரி 6-ம் தேதியிட்ட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தகவல் பெறும் உரிமைச் சட்டமே தங்களுக்குப் பொருந்தாது என்று கூறுவதற்கு அந்தத் துறைக்கு தகவல் பெறும் சட்டப்படியான பொதுத் தகவல் அதிகாரியாக ஒருவர் இருப்பது ஏன்?
மேலும், வழக்குகளின் விசாரணை நிலவரம் குறித்த தகவல்களின் ரகசியத் தன்மையை பாதுகாக்கவே அரசாணை எண்: 158 பிறப்பிக்கப்பட்டதாக முதல்வர் கூறுகிறார்.
ஆனால், அந்தத் துறைக்கே இந்தச் சட்டம் பொருந்தாது என அதன் பொதுத் தகவல் அதிகாரி தெரிவிக்கிறார். இதில் யார் சொல்வது சரி என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
அரசின் நிர்வாக நடைமுறையை மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுத்த இரும்புத்திரையை விலக்கும் வகையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தது.
தகவல்பெறும் உரிமைச் சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி உளவு மற்றும் தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய துறைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும்.
இவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறைகளிலும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படுவதற்கு இந்த விலக்கு பொருந்தாது.
உளவு, தேசப் பாதுகாப்பு தொடர்பானவை மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 8 (1) (எச்) பிரிவின் கீழ் ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் 24 (4) பிரிவின் படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியத் துறைகளுக்கு முதலில் விலக்கு அளித்தது.
தொடர்ந்து, இந்தப் பிரிவைப் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு விலக்கு அளித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விலக்கு அளித்து அரசாணை:
இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை (எண்: 158) கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.
அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் நடைபெற்ற சில முறைகேடுகள் குறித்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினரும் கேட்க முயற்சித்ததால் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாகப் புகார் எழுந்தது.
தேசப் பாதுகாப்பு தொடர்பான உளவுப் பணிகளில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சி.பி.ஐ. உள்பட பெரும்பாலான மாநிலங்களில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் கூட இத்தகைய விலக்கு அளிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் செய்திகள் வெளியாயின.
முதல்வர் பதில்:
இதையடுத்து, இந்த செய்திகளை மறுக்கும் விதமாக, கேள்வி-பதில் அறிக்கை மூலம் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, ""விசாரணையில் இருக்கும் வழக்குகளின் விவரங்களை அதில் தொடர்புடையவர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றால் அது விசாரணையை பாதிக்கும் என்பதால் அந்த குறிப்பிட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிப்பதாக ஆகாது. மேலும், இது குறித்து சில விஷமிகள் பொய்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்'' என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.
முதல்வர் கூறியபடி எந்த வழக்கு தொடர்பாகவும் இல்லாமல், லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசு வாகனம் (டி.என்.-22-ஜி-5000) பயன்படுத்தப்படும் விதம் குறித்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டது.
தகவல் அளிக்க மறுப்பு:
ஆனால், அரசாணை எண்: 158-ன் படி லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, மேற்கூறிய கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொதுத் தகவல் அதிகாரியாக தன்னை குறிப்பிட்டுக் கொண்டுள்ள மத்திய சரக கண்காணிப்பாளர், ஜனவரி 6-ம் தேதியிட்ட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தகவல் பெறும் உரிமைச் சட்டமே தங்களுக்குப் பொருந்தாது என்று கூறுவதற்கு அந்தத் துறைக்கு தகவல் பெறும் சட்டப்படியான பொதுத் தகவல் அதிகாரியாக ஒருவர் இருப்பது ஏன்?
மேலும், வழக்குகளின் விசாரணை நிலவரம் குறித்த தகவல்களின் ரகசியத் தன்மையை பாதுகாக்கவே அரசாணை எண்: 158 பிறப்பிக்கப்பட்டதாக முதல்வர் கூறுகிறார்.
ஆனால், அந்தத் துறைக்கே இந்தச் சட்டம் பொருந்தாது என அதன் பொதுத் தகவல் அதிகாரி தெரிவிக்கிறார். இதில் யார் சொல்வது சரி என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
புதன், 14 ஜனவரி, 2009
நியமனத்தில் முறைகேடு!
சென்னை, ஜன. 11: தமிழ்நாடு அரசுப்பணியா ளர் தேர்வாணையம் மூலம் 4 டி.எஸ்.பி.க்கள் உள்பட 10 உயர் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
24 துணை ஆட்சியர்கள், 20 டி.எஸ்.பி.க்கள், 10 வணிக வரி அதிகாரிகள், 33 கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் என 91 பதவிகளுக்கான, காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 27-12-2000-ல் வெளியிட்டது.
நேர்முகத் தேர்வு:
இதன்படி நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் இருந்து 182 பேர் நான்கு ஆண்டுக ளுக்கு பின்னர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
2004 ஜூன் மாதம் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், தகுதி அடிப்ப டையில் அந்தந்த பதவிகளுக்கு 91 பேர் தேர்வு செய்யப்பட்டனர்மேலும் 30 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர மற்ற அனைவ ரும் "தேர்வு பெறாதவர்கள்'' என அறிவிக்கப்பட்டனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 25-8-2004-ல் வெளியிடப்பட்டது. இருப்பினும், இவர்களுக்கு 4 ஆண்டு தாமதத்துக்கு பிறகு 15-4-2008-ல் தேர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.
"தேர்வு பெற்றவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள் ளவர்கள் தவிர மற்ற அனைவரும் தேர்வு பெறாதவர்கள் என அறி விக்கப்படுகிறது. மேலும் இவ்வாறு தேர்வு பெறாதவர்களுடன் தேர்வாணையம் எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளாது' என தேர்வாணயம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டது.
முரண்பாடு:
ஆனால், இதற்கு மாறாக, தேர்வானவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறாத எஸ்.பி. முத்தமிழ்ச்செல்வி (509612), நடுகாட்டுராஜா (509882), கே. ஸ்டா லின் (517019), கே. சண்முகம் (515870) ஆகியோர் டி.எஸ்.பி. பதவிகளுக்கும், ஜி.பி. அருளரசு (574748), வி. துரைசாமி (537475), எஸ். மருது பாண்டியன் (548127), பி.எம். முருகேசன் (509658) , எம். ராஜா (512039) ஆகியோர் கூட்டுறவுச் சங் கங்களின் துணைப் பதிவாளர் பதவிக்கும், என்ஸ்ரீநிவாசன் (540819) வணிக வரி அலுவலர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி தேர்வாணைகளை (எண்: 719/ஓ.எஸ்.டி.-சி1.2000) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 15-4- 2008-ல் வெளியிட்டது.
அவரவர்களுக்குக் கடிதங்களையும் தேர்வாணையம் அனுப்பியது.
தவறு என்ன?
தமிழ்நாடு அரசின் விதிகளின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகள் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதவிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்யும்போது, மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேரை தகுதி அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கலாம்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அந்தப்பதவிகளில் சேர விரும்பவில்லை என்று எழுத்து பூர்வமாக தெரிவித்தால் அந்தப் பதவிகளுக்கு தனியாகத் தேர்வு நடத்தாமல் அடுத்த நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபருக்கே அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
விதிகள் இப்படி இருக்க, பணியாளர் தேர்வாணையமோ காத்திருப்போர் பட் டியலில் உள்ள தகுதிவாய்ந்த நபர்களைப் புறக்கணித்துவிட்டு தேர்வு பெறாதவர்கள் என அறி விக்கப்பட்டவர்களில் சிலருக்கு தேர்வாணைகளை அளித்திருப் பது புதிராக உள்ளது.
சில ஆண்டுகள் சேவைக்கு பின்னர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ள இந்தப் பணியிடங்களுக் கான தேர்வில் தேர்வாணையம் இப்படி நடந்து கொண்டுள்ளது ஆணையத்தில் பெறும் முறை கேடு நடந்துள்ளதைக் காட்டுவ தாக ""காத்திருப்போர் பட்டியலில்'' உள்ளவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
விசாரணை தேவை:
இவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இல்லாத நபர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஆணையத்தின் முழு கூட்டம் நடத்தப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அரசின் ஒப்புதலுடன் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
ஆனால், மேற்கூறிய 10 பேருக்கும் தேர்வாணைகள் அனுப்பியதில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதால் அது விஷயத்தில் தேர் வாணைய உறுப்பினர்கள் சிலரே அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
பதில் இல்லை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் காசிவிஸ்வநாதன் வெளியூர் பயணத்தில் இருப்பதால், இது குறித்துத் தேர்வாணையம் தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
24 துணை ஆட்சியர்கள், 20 டி.எஸ்.பி.க்கள், 10 வணிக வரி அதிகாரிகள், 33 கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் என 91 பதவிகளுக்கான, காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 27-12-2000-ல் வெளியிட்டது.
நேர்முகத் தேர்வு:
இதன்படி நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் இருந்து 182 பேர் நான்கு ஆண்டுக ளுக்கு பின்னர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
2004 ஜூன் மாதம் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், தகுதி அடிப்ப டையில் அந்தந்த பதவிகளுக்கு 91 பேர் தேர்வு செய்யப்பட்டனர்மேலும் 30 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர மற்ற அனைவ ரும் "தேர்வு பெறாதவர்கள்'' என அறிவிக்கப்பட்டனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 25-8-2004-ல் வெளியிடப்பட்டது. இருப்பினும், இவர்களுக்கு 4 ஆண்டு தாமதத்துக்கு பிறகு 15-4-2008-ல் தேர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.
"தேர்வு பெற்றவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள் ளவர்கள் தவிர மற்ற அனைவரும் தேர்வு பெறாதவர்கள் என அறி விக்கப்படுகிறது. மேலும் இவ்வாறு தேர்வு பெறாதவர்களுடன் தேர்வாணையம் எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளாது' என தேர்வாணயம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டது.
முரண்பாடு:
ஆனால், இதற்கு மாறாக, தேர்வானவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறாத எஸ்.பி. முத்தமிழ்ச்செல்வி (509612), நடுகாட்டுராஜா (509882), கே. ஸ்டா லின் (517019), கே. சண்முகம் (515870) ஆகியோர் டி.எஸ்.பி. பதவிகளுக்கும், ஜி.பி. அருளரசு (574748), வி. துரைசாமி (537475), எஸ். மருது பாண்டியன் (548127), பி.எம். முருகேசன் (509658) , எம். ராஜா (512039) ஆகியோர் கூட்டுறவுச் சங் கங்களின் துணைப் பதிவாளர் பதவிக்கும், என்ஸ்ரீநிவாசன் (540819) வணிக வரி அலுவலர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி தேர்வாணைகளை (எண்: 719/ஓ.எஸ்.டி.-சி1.2000) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 15-4- 2008-ல் வெளியிட்டது.
அவரவர்களுக்குக் கடிதங்களையும் தேர்வாணையம் அனுப்பியது.
தவறு என்ன?
தமிழ்நாடு அரசின் விதிகளின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகள் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதவிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்யும்போது, மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேரை தகுதி அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கலாம்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அந்தப்பதவிகளில் சேர விரும்பவில்லை என்று எழுத்து பூர்வமாக தெரிவித்தால் அந்தப் பதவிகளுக்கு தனியாகத் தேர்வு நடத்தாமல் அடுத்த நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபருக்கே அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
விதிகள் இப்படி இருக்க, பணியாளர் தேர்வாணையமோ காத்திருப்போர் பட் டியலில் உள்ள தகுதிவாய்ந்த நபர்களைப் புறக்கணித்துவிட்டு தேர்வு பெறாதவர்கள் என அறி விக்கப்பட்டவர்களில் சிலருக்கு தேர்வாணைகளை அளித்திருப் பது புதிராக உள்ளது.
சில ஆண்டுகள் சேவைக்கு பின்னர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ள இந்தப் பணியிடங்களுக் கான தேர்வில் தேர்வாணையம் இப்படி நடந்து கொண்டுள்ளது ஆணையத்தில் பெறும் முறை கேடு நடந்துள்ளதைக் காட்டுவ தாக ""காத்திருப்போர் பட்டியலில்'' உள்ளவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
விசாரணை தேவை:
இவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இல்லாத நபர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஆணையத்தின் முழு கூட்டம் நடத்தப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அரசின் ஒப்புதலுடன் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
ஆனால், மேற்கூறிய 10 பேருக்கும் தேர்வாணைகள் அனுப்பியதில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதால் அது விஷயத்தில் தேர் வாணைய உறுப்பினர்கள் சிலரே அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
பதில் இல்லை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் காசிவிஸ்வநாதன் வெளியூர் பயணத்தில் இருப்பதால், இது குறித்துத் தேர்வாணையம் தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
புதன், 24 டிசம்பர், 2008
அங்கீகாரம் இல்லாத மனைகள்: அரசு புது முடிவு?
சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் உருவாகும் மனைப் பிரிவுகளின் (லே-அவுட்) எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதுசென்னையில் நாளுக்குநாள் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது.
வெளிமாவட்டங்களில் இருந்து குடிபெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் புறநகர் பகுதிகளில் குடியேற மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களின் தேவைகளைப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைத்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் புறநகர்பகுதிகளில் விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மனைப் பிரிவுகளாக மாற்றி தனித்தனி மனைக ளாக விற்று வருகிறார்கள்.
"சி.எம்.ஏ.' பகுதி என அழைக்கப்படும் சென்னை பெருநகர் பகுதியில் இவ்வாறு உருவாகும் புதிய மனைப் பிரிவுகள் அனைத்தும் இதற்காக சி.எம்.டி.ஏ. வகுத்துள்ள விதி முறைகளின்படியே இருக்க வேண்டும்.
சி.எம்.ஏ. பகுதிக்கு வெளியே புதிய மனைப் பிரிவு களை உருவாக்க நகர மற்றும் ஊரமைப்பு துறை அனுமதியைப் பெற வேண்டும்.
விதிகள் அவசியம்:
சி.எம்.டி.ஏ. விதிகளின்படி விளை யாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பொதுப் பயன்களுக்கு தேவையான நிலத்தை ஒதுக்க வேண்டும்வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலைகளுக்கு இடம் விடவேண்டும்.
இவை உள்ளிட்ட விதிகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகளுக்கு மட்டுமே சி.எம்.டி.ஏ. அங்கீ காரம் வழங்கும்.
பட்டா உள்ள விவசாய நிலத்தில் அங்கீகாரம் இன்றி உருவாகும் மனைப் பிரிவுகள் தொடர்பான பிரச்னைக ளைவிட நத்தம் புறம்போக்கு நிலத்தில் உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதில் பல்வேறு பிரச் னைகள் ஏற்படுகின்றன.
சி.எம்.டி.ஏ. நிலை என்ன?
சென்னைப் பெருநகர் பகுதியில் 1976-க்கு பின்னர் உருவான அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளை ஒழுங்குபடுத்த சி.எம்.டி.ஏ. 1990 ஏப்ரலில் நடவடிக்கை எடுத்தது.
1989-க்கு முன்னர் உருவான வீட்டுமனைகளை சில நிபந்தனைகளுடன் ஒழுங்குபடுத்த சில நடவடிக்கை களை சி.எம்.டி.ஏ. 1992-ல் அறிவித்தது இதையடுத்து, அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்த இவற்றுக்கான வரன்முறைத் திட்டத்தை சி.எம்.டி.ஏ. 1999-ல் அறிவித்தது.
இவ்வாறு வரன்முறைப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டம் 2000, 2001, 2002-ம் ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டதுஇத்திட்டங்கள் மூலம் அங்கீகாரம் பெறாமல் உருவாக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளுக்கு வரன்முறைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
அரசு புதிய முடிவு?
1999-ம் ஆண்டு வரன்முறைத் திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட் டது. விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவாக இந்த நடவ டிக்கை இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக இந்த திட்டம் தடைப்பட்டது.
அங்கீகாரம் இன்றி உருவாக்கப்பட்டதால் இந்த மனைகளில் வீடு கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டனவிதிகளை மீறி உருவான மனைப் பிரிவுகளை உருவாக்கியவர்கள் எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்வ தில்லை.
மாறாக, இவற்றை வாங்கியவர்களே பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்இந்த மனைகளை வரன்முறைப்படுத்த அரசு தனி யான கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
ஆனால், பல ஆண்டுகளாக அரசு இதில் மெüனமாகவே இருந்து வந் ததுஇந்த நிலையில் 2-வது மாஸ்டர் பிளான் நடைமு றைக்கு வந்துள்ள நிலையில் அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உரு வாகியுள்ளது.
இதையடுத்து 2000-ம் ஆண்டு முதல் 2005- ம் ஆண்டு வரை சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுக்க அரசு முன்வந்துள்ளது.
இதற்காக, அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகள் குறித்த பட்டியல் அடங்கிய கோப்பு சி.எம்.டி.ஏ.விடம் இருந்து வீட்டுவசதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கோப்பு தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய வீட்டுவசதித் துறை 2007-ம் ஆண்டு வரையிலான பட்டியலுடன் சேர்த்து புதிய பட்டியலை அளிக் குமாறு கேட்டுள்ளது.
இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை
வரன்முறைப்படுத்துவது குறித்து அரசின் முடிவு விரைவில் வெளியாகும் என பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து குடிபெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் புறநகர் பகுதிகளில் குடியேற மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களின் தேவைகளைப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைத்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் புறநகர்பகுதிகளில் விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மனைப் பிரிவுகளாக மாற்றி தனித்தனி மனைக ளாக விற்று வருகிறார்கள்.
"சி.எம்.ஏ.' பகுதி என அழைக்கப்படும் சென்னை பெருநகர் பகுதியில் இவ்வாறு உருவாகும் புதிய மனைப் பிரிவுகள் அனைத்தும் இதற்காக சி.எம்.டி.ஏ. வகுத்துள்ள விதி முறைகளின்படியே இருக்க வேண்டும்.
சி.எம்.ஏ. பகுதிக்கு வெளியே புதிய மனைப் பிரிவு களை உருவாக்க நகர மற்றும் ஊரமைப்பு துறை அனுமதியைப் பெற வேண்டும்.
விதிகள் அவசியம்:
சி.எம்.டி.ஏ. விதிகளின்படி விளை யாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பொதுப் பயன்களுக்கு தேவையான நிலத்தை ஒதுக்க வேண்டும்வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலைகளுக்கு இடம் விடவேண்டும்.
இவை உள்ளிட்ட விதிகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகளுக்கு மட்டுமே சி.எம்.டி.ஏ. அங்கீ காரம் வழங்கும்.
பட்டா உள்ள விவசாய நிலத்தில் அங்கீகாரம் இன்றி உருவாகும் மனைப் பிரிவுகள் தொடர்பான பிரச்னைக ளைவிட நத்தம் புறம்போக்கு நிலத்தில் உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதில் பல்வேறு பிரச் னைகள் ஏற்படுகின்றன.
சி.எம்.டி.ஏ. நிலை என்ன?
சென்னைப் பெருநகர் பகுதியில் 1976-க்கு பின்னர் உருவான அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளை ஒழுங்குபடுத்த சி.எம்.டி.ஏ. 1990 ஏப்ரலில் நடவடிக்கை எடுத்தது.
1989-க்கு முன்னர் உருவான வீட்டுமனைகளை சில நிபந்தனைகளுடன் ஒழுங்குபடுத்த சில நடவடிக்கை களை சி.எம்.டி.ஏ. 1992-ல் அறிவித்தது இதையடுத்து, அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்த இவற்றுக்கான வரன்முறைத் திட்டத்தை சி.எம்.டி.ஏ. 1999-ல் அறிவித்தது.
இவ்வாறு வரன்முறைப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டம் 2000, 2001, 2002-ம் ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டதுஇத்திட்டங்கள் மூலம் அங்கீகாரம் பெறாமல் உருவாக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளுக்கு வரன்முறைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
அரசு புதிய முடிவு?
1999-ம் ஆண்டு வரன்முறைத் திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட் டது. விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவாக இந்த நடவ டிக்கை இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக இந்த திட்டம் தடைப்பட்டது.
அங்கீகாரம் இன்றி உருவாக்கப்பட்டதால் இந்த மனைகளில் வீடு கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டனவிதிகளை மீறி உருவான மனைப் பிரிவுகளை உருவாக்கியவர்கள் எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்வ தில்லை.
மாறாக, இவற்றை வாங்கியவர்களே பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்இந்த மனைகளை வரன்முறைப்படுத்த அரசு தனி யான கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
ஆனால், பல ஆண்டுகளாக அரசு இதில் மெüனமாகவே இருந்து வந் ததுஇந்த நிலையில் 2-வது மாஸ்டர் பிளான் நடைமு றைக்கு வந்துள்ள நிலையில் அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உரு வாகியுள்ளது.
இதையடுத்து 2000-ம் ஆண்டு முதல் 2005- ம் ஆண்டு வரை சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுக்க அரசு முன்வந்துள்ளது.
இதற்காக, அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகள் குறித்த பட்டியல் அடங்கிய கோப்பு சி.எம்.டி.ஏ.விடம் இருந்து வீட்டுவசதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கோப்பு தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய வீட்டுவசதித் துறை 2007-ம் ஆண்டு வரையிலான பட்டியலுடன் சேர்த்து புதிய பட்டியலை அளிக் குமாறு கேட்டுள்ளது.
இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை
வரன்முறைப்படுத்துவது குறித்து அரசின் முடிவு விரைவில் வெளியாகும் என பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
