போலீஸ்காரர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களின் எண் பலகைகளில் "போலீஸ்' என குறிப்பிடக்கூடாது என மாநகரப் போலீஸôருக்கு துறைரீதியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்களைத் தடுக்க வேண்டிய போலீஸôரே தங்களுடைய வாகனங்களின் எண் பலகைகளில் தங்களுடைய துறைப்பெயரை எழுதுவது முறையான செயல் அல்ல என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கே. ராதாகிருஷ்ணன் மாநகரப் போலீஸ் ஆணையராக இருந்தபோது, சாலை விதிகளை முழுமையாக அமல்படுத்தும் பணி தீவிரம் பெற்றது. அவர் உள்பட பல மூத்த அதிகாரிகள் மாற்றப்பட்டதால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
இது மாநகரப் போலீஸ் கமிஷனர், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.
சராசரியாக நாளொன்றுக்கு 600 வழக்குகள் பதிவாகும் இடங்களில் இப்போது நாளொன்றுக்கு 100 வழக்குகளே பதிவாகின்றன.
விதிமீறல்கள் குறையாமல், அது தொடர்பாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்தது போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதன் அடிப்படையில், மாநகரப் போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், போக்குவரத்த போலீஸ் கூடுதல் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து போக்குவரத்து போலீஸ் அமலாக்கப் பிரிவினருக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அனைத்து முக்கிய சாலை சந்திப்புகளிலும் போக்குவரத்துப் போலீஸôர் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். சிக்னல்களில் விதிகளை மீறுபவர்களில் ஒருவரைக் கூட விட்டுவிடாமல் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்களில் அதிக வேகமாகச் செல்வோர், உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர் என விதிகளை மீறும் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
வாகன எண் பலகைகளில், எண்கள் மட்டும் இருக்க வேண்டும். அதுவும் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எண் பலகைகளில் வாகன எண்களைத் தவிர பெயர் உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் இருக்கக் கூடாது.
இவ்வாறு விதிகளை மீறி எண் பலகைகளில் தங்கள் துறைகளின் பெயர்கள், தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுதி இருந்தால் அந்த வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸôரும் தங்கள் வாகனங்களின் எண் பலகைகளில் "போலீஸ்' என குறிப்பிடக்கூடாது. அவ்வாறு குறிப்பிட்டால் அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி முதல் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என போக்குவரத்து போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
சனி, 10 அக்டோபர், 2009
புதன், 7 அக்டோபர், 2009
தகவல் பெறும் உரிமை விழிப்புணர்வு வாரம் அதிகாரிகள் குழப்பம்: ஆர்வலர்கள் அச்சம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு வாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து அரசு அதிகாரிகளிடையே குழப்பம் நிலவுகிறது.
அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்த விவரங்களை பொது மக்கள் எழுத்து மூலம் கேட்டுப் பெற வகை செய்யும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
அரசு நிர்வாகம் தொடர்புடையது என்றுக் கூறி மறுக்கப்பட்டு வந்த பல்வேறு தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்க இந்தச் சட்டம் உதவுகிறது.
இருப்பினும், இந்தச் சட்டத்தின் பயன்பாடு முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை. அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழியர்கள் பலருக்கே இது தொடர்பான முழு விவரங்கள் தெரியாமல் உள்ளது.
இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் முழுமை அடையாமல் உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இச் சட்டம் குறித்து பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 6-ம் தேதி (நாளை) முதல் 12-ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
"தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம், அந்த வாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சிகள் நடத்துவது' உள்ளிட்ட விவரங்கள் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த சுற்றறிக்கை செப்டம்பர் 10-ம் தேதி தமிழக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வந்துள்ளது.
தில்லியில்...
விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தில்லியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த தேசிய மாநாடு இம்மாதம் 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது.
முதல் நாளில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலும், நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் பங்கேற்கின்றனர்.
இதே போல, மத்திய அரசின் சுற்றறிக்கைப் பெற்ற ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில்...
ஆனால், தமிழகத்தில் விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பது குறித்த சுற்றறிக்கை இப்போதுதான் துறைத் தலைவர்களுக்கே அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், எத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் அதிகாரிகளிடம் இது விஷயத்தில் குழப்பம் நிலவுகிறது.
இந்த குழப்பம் காரணமாக, தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் போல, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் பின்தங்கிவிடுமோ என சமூக ஆர்வலர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே மற்ற துறைகள் எதுவானாலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதில் முன்னிலை வகிக்கும் தமிழக அரசு இதிலும் தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து அரசு அதிகாரிகளிடையே குழப்பம் நிலவுகிறது.
அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்த விவரங்களை பொது மக்கள் எழுத்து மூலம் கேட்டுப் பெற வகை செய்யும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
அரசு நிர்வாகம் தொடர்புடையது என்றுக் கூறி மறுக்கப்பட்டு வந்த பல்வேறு தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்க இந்தச் சட்டம் உதவுகிறது.
இருப்பினும், இந்தச் சட்டத்தின் பயன்பாடு முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை. அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழியர்கள் பலருக்கே இது தொடர்பான முழு விவரங்கள் தெரியாமல் உள்ளது.
இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் முழுமை அடையாமல் உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இச் சட்டம் குறித்து பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 6-ம் தேதி (நாளை) முதல் 12-ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
"தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம், அந்த வாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சிகள் நடத்துவது' உள்ளிட்ட விவரங்கள் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த சுற்றறிக்கை செப்டம்பர் 10-ம் தேதி தமிழக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வந்துள்ளது.
தில்லியில்...
விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தில்லியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த தேசிய மாநாடு இம்மாதம் 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது.
முதல் நாளில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலும், நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் பங்கேற்கின்றனர்.
இதே போல, மத்திய அரசின் சுற்றறிக்கைப் பெற்ற ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில்...
ஆனால், தமிழகத்தில் விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பது குறித்த சுற்றறிக்கை இப்போதுதான் துறைத் தலைவர்களுக்கே அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், எத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் அதிகாரிகளிடம் இது விஷயத்தில் குழப்பம் நிலவுகிறது.
இந்த குழப்பம் காரணமாக, தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் போல, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் பின்தங்கிவிடுமோ என சமூக ஆர்வலர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே மற்ற துறைகள் எதுவானாலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதில் முன்னிலை வகிக்கும் தமிழக அரசு இதிலும் தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சனி, 26 செப்டம்பர், 2009
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்துக்காக சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக 2004 செப்டம்பர் 17-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, தமிழில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் மூலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008 மே 19-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.
சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. மைசூரில் உள்ள இந்திய
செம்மொழிகள் நடுவண் நிறுவனத்தின் ஒரு திட்டமாக இருந்த செம்மொழித் தமிழாய்வுத் திட்டம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக 21-1-2009-ல் பதிவு செய்யப்பட்டது.
முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் தமிழறிஞர்கள் அடங்கிய ஐம்பெருங்குழு, கவிஞர்கள் அடங்கிய எண்பேராயம் ஆகிய குழுக்களின் வழிகாட்டுதல்கள்படி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தமிழில் செவ்வியல் காலம் எனப்படும் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான அனைத்து ஓலைச்சுவடிகளையும் இந்த நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு ஆய்வுகளையும் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் மேற்கொண்டுள்ளது.
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகியவை தொடர்பாக 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புகளை வெளியிடும் பணிகளை இந்த ஆய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.
புதிய வளாகம்: பாலாறு இல்ல வளாகத்தில் உள்ள இந்த அலுவலகம் நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. நிறுவனத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற ஆய்வு மற்றும் நூலகப் பிரிவுகள் அமைக்க இந்த வளாகம் போதுமானதாக இல்லை.
எனவே இந்த நிறுவனத்துக்கு வேறு ஒரு வளாகம் அமைக்க நிலம் தேவை என்ற கருத்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்க மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
இந்த நிலத்தில் புதிய ஆய்வு மற்றும் நூலக வளாக கட்டுமானப் பணிகளுக்கு ரூ.9 கோடியும், பிற செலவுகளுக்காக ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ. 12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என இதன் பொறுப்பு அலுவலர் க. இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக 2004 செப்டம்பர் 17-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, தமிழில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் மூலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008 மே 19-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.
சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. மைசூரில் உள்ள இந்திய
செம்மொழிகள் நடுவண் நிறுவனத்தின் ஒரு திட்டமாக இருந்த செம்மொழித் தமிழாய்வுத் திட்டம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக 21-1-2009-ல் பதிவு செய்யப்பட்டது.
முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் தமிழறிஞர்கள் அடங்கிய ஐம்பெருங்குழு, கவிஞர்கள் அடங்கிய எண்பேராயம் ஆகிய குழுக்களின் வழிகாட்டுதல்கள்படி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தமிழில் செவ்வியல் காலம் எனப்படும் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான அனைத்து ஓலைச்சுவடிகளையும் இந்த நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு ஆய்வுகளையும் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் மேற்கொண்டுள்ளது.
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகியவை தொடர்பாக 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புகளை வெளியிடும் பணிகளை இந்த ஆய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.
புதிய வளாகம்: பாலாறு இல்ல வளாகத்தில் உள்ள இந்த அலுவலகம் நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. நிறுவனத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற ஆய்வு மற்றும் நூலகப் பிரிவுகள் அமைக்க இந்த வளாகம் போதுமானதாக இல்லை.
எனவே இந்த நிறுவனத்துக்கு வேறு ஒரு வளாகம் அமைக்க நிலம் தேவை என்ற கருத்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்க மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
இந்த நிலத்தில் புதிய ஆய்வு மற்றும் நூலக வளாக கட்டுமானப் பணிகளுக்கு ரூ.9 கோடியும், பிற செலவுகளுக்காக ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ. 12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என இதன் பொறுப்பு அலுவலர் க. இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
வியாழன், 17 செப்டம்பர், 2009
ஏரியைப் பராமரிப்பவரின் காலடியை தலையில் வைத்துக் கொள்வேன்: 1,000 ஆண்டுகளுக்கு முன் கல்வெட்டு
ஏரியைப் பராமரிப்பவர்களின் காலடியை தலையில் வைத்துக் கொள்வேன் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டில் பதிவு செய்துள்ளார் ஒரு குறுநில மன்னர்.
விழுப்புரம் அருகே கண்டுபிடித்த கல்வெட்டு பொறித்த உரலில் இந்த செய்தி உள்ளது என தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர் தெரிவித்தார்.
கல்வெட்டுகளை படியெடுக்கும் முனைப்புத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இந்த உரலை கண்டறிந்த கல்வெட்டாய்வாளர் இரா. சிவானந்தம் இது குறித்து கூறியது:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுர் வட்டத்தில் திருக்கோயிலூர்- திருவண்ணாமலை வழித்தடத்தில் மணலூர்பேட்டையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஜம்பை என்ற சிற்றூர் அமைந்துள்ளது.
இவ்வூரின் கிழக்கில் உள்ள குன்றில் அதியமான் பற்றிய குறிப்புகள் அடங்கிய தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது.
இந்த குன்றின் மேற்கில் உள்ள ஏரியில், கல் உரல் ஒன்று கண்டறியப்பட்டது. ஐந்தடி உயரமும், மூன்றடி விட்டமும் உள்ள இந்த உரலில் நடுப்பகுதி குழி ஓரடி ஆழமும் கொண்டுள்ளது.
உரலின் மேல் விளிம்பில் 10 செ.மீ. அகலம் உள்ள பகுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகள் கரடுமுரடாக இருப்பதால் இது ஏதாவது ஒரு இடத்தில் நிலையாக புதைத்து வைத்திருக்க வேண்டும்.
இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் உருவ அமைப்பைக் கொண்டு இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கல்வெட்டு கூறும் செய்தி...
இந்த கல்வெட்டில், "வ த ஸ்ரீ கள்ளையன் செய்த தருமம் கழத்துவப்பட்டியும் பனைப் பெரிக்கட்டின இவை என்முடி மெலன' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏரியை கள்ளையன் என்பவர் உருவாக்கி இருக்கலாம். களத்துமேடு மூலமாகப் பெறப்படும் வருவாயிலிருந்தும், பனை மர குத்தகை மூலமாகவும் பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த பொறுப்பை தொடர்ந்து நிலைநாட்டி வருபவர்களின் காலடியை என் தலைமேல் வைத்துக்கொள்வேன்' என்று கள்ளையன் கூறுவதாக இதில் காணப்படும் வாசகங்களுக்கு கல்வெட்டாய்வாளர்கள் பொருள் கூறுவதாக சிவானந்தம் தெரிவித்தார்.
பாசனத்துக்காக ஏரிகளை உருவாக்கி அதனால் பயனடையும் விவசாயிகளிடம் இருந்து களத்துமேட்டு பயன்படுத்தியதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏரியின் அருகில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டும் அவற்றை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த வருவாயையும் பயன்படுத்தி ஏரியை பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளதை இந்த கல்வெட்டுச் செய்தி உறுதி செய்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழமையான செக்கு மற்றும் உரல்கள் கிடைக்கின்றன. ஆனால், இப்போதுதான் எழுத்துகள் பொறிக்கப்பட்ட உரல் கிடைத்துள்ளது என தொல்லியல் துறை முதுநிலை கல்வெட்டு ஆய்வாளர் கி.சு. சம்பத் தெரிவித்தார்.
கி.பி. 900-ம் ஆண்டு பல்லவர்கள் ஆட்சி முடிந்து சோழர்கள் ஆட்சிக்காலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில், ஜம்பை ஏரியில் கிடைத்த உரலில் குறிப்பிடப்படும் கள்ளையன் இப் பகுதியின் குறுநில ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் அருகே கண்டுபிடித்த கல்வெட்டு பொறித்த உரலில் இந்த செய்தி உள்ளது என தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர் தெரிவித்தார்.
கல்வெட்டுகளை படியெடுக்கும் முனைப்புத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இந்த உரலை கண்டறிந்த கல்வெட்டாய்வாளர் இரா. சிவானந்தம் இது குறித்து கூறியது:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுர் வட்டத்தில் திருக்கோயிலூர்- திருவண்ணாமலை வழித்தடத்தில் மணலூர்பேட்டையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஜம்பை என்ற சிற்றூர் அமைந்துள்ளது.
இவ்வூரின் கிழக்கில் உள்ள குன்றில் அதியமான் பற்றிய குறிப்புகள் அடங்கிய தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது.
இந்த குன்றின் மேற்கில் உள்ள ஏரியில், கல் உரல் ஒன்று கண்டறியப்பட்டது. ஐந்தடி உயரமும், மூன்றடி விட்டமும் உள்ள இந்த உரலில் நடுப்பகுதி குழி ஓரடி ஆழமும் கொண்டுள்ளது.
உரலின் மேல் விளிம்பில் 10 செ.மீ. அகலம் உள்ள பகுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகள் கரடுமுரடாக இருப்பதால் இது ஏதாவது ஒரு இடத்தில் நிலையாக புதைத்து வைத்திருக்க வேண்டும்.
இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் உருவ அமைப்பைக் கொண்டு இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கல்வெட்டு கூறும் செய்தி...
இந்த கல்வெட்டில், "வ த ஸ்ரீ கள்ளையன் செய்த தருமம் கழத்துவப்பட்டியும் பனைப் பெரிக்கட்டின இவை என்முடி மெலன' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏரியை கள்ளையன் என்பவர் உருவாக்கி இருக்கலாம். களத்துமேடு மூலமாகப் பெறப்படும் வருவாயிலிருந்தும், பனை மர குத்தகை மூலமாகவும் பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த பொறுப்பை தொடர்ந்து நிலைநாட்டி வருபவர்களின் காலடியை என் தலைமேல் வைத்துக்கொள்வேன்' என்று கள்ளையன் கூறுவதாக இதில் காணப்படும் வாசகங்களுக்கு கல்வெட்டாய்வாளர்கள் பொருள் கூறுவதாக சிவானந்தம் தெரிவித்தார்.
பாசனத்துக்காக ஏரிகளை உருவாக்கி அதனால் பயனடையும் விவசாயிகளிடம் இருந்து களத்துமேட்டு பயன்படுத்தியதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏரியின் அருகில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டும் அவற்றை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த வருவாயையும் பயன்படுத்தி ஏரியை பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளதை இந்த கல்வெட்டுச் செய்தி உறுதி செய்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழமையான செக்கு மற்றும் உரல்கள் கிடைக்கின்றன. ஆனால், இப்போதுதான் எழுத்துகள் பொறிக்கப்பட்ட உரல் கிடைத்துள்ளது என தொல்லியல் துறை முதுநிலை கல்வெட்டு ஆய்வாளர் கி.சு. சம்பத் தெரிவித்தார்.
கி.பி. 900-ம் ஆண்டு பல்லவர்கள் ஆட்சி முடிந்து சோழர்கள் ஆட்சிக்காலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில், ஜம்பை ஏரியில் கிடைத்த உரலில் குறிப்பிடப்படும் கள்ளையன் இப் பகுதியின் குறுநில ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிய "பாப்பாபட்டிகள்'!
தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் யாரும் போட்டியிடாததால் 10 பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கு 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை.
59 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டு உறுப்பினர்கள், 5 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களிலும் தேர்தல் நடைபெறவில்லை.
ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தன.
ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிவிக்கப்பட்டும், பிற சாதியினரின் ஆதிக்கம் காரணமாக எழுந்த பிரச்னைகளால் ஆதிதிராவிடர் பிரிவு மக்கள் போட்டியிடாமல் இருந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
2006-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதற்கு சுமூகத்தீர்வு காணப்பட்டது. தேர்தல் நடைபெற்று ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அரசின் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
மீண்டும் மீண்டும்...:
ஆனால், பாப்பாபட்டி உள்ளிட்ட 4 பஞ்சாயத்துக்களில் தீர்ந்த பிரச்னை மற்ற இடங்களில் தொடர்வது இப்போது தெரிய வந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஒன்றியத்தில் நடுவாளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே புலிப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்தில் புதூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பேரயாம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமாபுரம், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் செய்யாத்துவண்ணம், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் அத்தியுர்திருக்கை, வல்லம் ஒன்றியத்தில் கடுகுபட்டு ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 2006-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை.
இதில் நடுவாளூர், கொளப்பாக்கம், புதூர், கடுகுப்பட்டு ஆகியவை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டவை. புலிப்பாக்கம், பேரயாம்பட்டு, ராமாபுரம், செய்யாத்துவண்ணம், அத்தியுர்திருக்கை ஆகியவை பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை.
பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் கொப்பனாப்பட்டி பஞ்சாயத்தில் 2008- செப்டம்பர் முதல் தேர்தல் நடைபெறவில்லை.
59 பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிடங்கள்:
இதேபோல 59 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.
மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறாத பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் விவரம்:
அரியலூர்: 3 (எஸ்.சி. 1, பொது-2), கடலூர்: 5 (எஸ்.சி.), காஞ்சிபுரம்: 7 (எஸ்.டி. 1, பொது 4, பெண்கள் 2), கிருஷ்ணகிரி: 1, மதுரை: 2, புதுக்கோட்டை: 9 (பொது 5, பெண்கள் 3, எஸ்.சி. 1), ராமநாதபுரம்: 1, திருவண்ணாமலை: 11 (பொது 4, எஸ்.சி. 4, எஸ்.டி. 2, பெண்கள் 1), திருச்சி: 1 (எஸ்.டி.), திருவள்ளூர்: 1 (எஸ்.டி.), தூத்துக்குடி: 1 (எஸ்.சி.), வேலூர்: 8 (எஸ்.டி), விழுப்புரம்: 9 (பொது 3, பெண்கள் 1, எஸ்.சி. 3, எஸ்.டி. 2).
நகர்ப்புற உள்ளாட்சிகளில்...: வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டுகளில் யாரும் போட்டியிடாததால், 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை. தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருவதாக மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பட்டி, கோவை மாவட்டம் சிறுமுகை, வீரபாண்டி, கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் யாரும் போட்டியிடாததால் 2006-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேர்தல் நடைபெறவில்லை.
மாநிலத் தேர்தல் ஆணையர் பதில்:
இது குறித்து கேட்டபோது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் கூறியது:
சாதிப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு நடைபெறும் பகுதிகளில் அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்ளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
59 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டு உறுப்பினர்கள், 5 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களிலும் தேர்தல் நடைபெறவில்லை.
ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தன.
ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிவிக்கப்பட்டும், பிற சாதியினரின் ஆதிக்கம் காரணமாக எழுந்த பிரச்னைகளால் ஆதிதிராவிடர் பிரிவு மக்கள் போட்டியிடாமல் இருந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
2006-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதற்கு சுமூகத்தீர்வு காணப்பட்டது. தேர்தல் நடைபெற்று ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அரசின் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
மீண்டும் மீண்டும்...:
ஆனால், பாப்பாபட்டி உள்ளிட்ட 4 பஞ்சாயத்துக்களில் தீர்ந்த பிரச்னை மற்ற இடங்களில் தொடர்வது இப்போது தெரிய வந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஒன்றியத்தில் நடுவாளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே புலிப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்தில் புதூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பேரயாம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமாபுரம், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் செய்யாத்துவண்ணம், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் அத்தியுர்திருக்கை, வல்லம் ஒன்றியத்தில் கடுகுபட்டு ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 2006-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை.
இதில் நடுவாளூர், கொளப்பாக்கம், புதூர், கடுகுப்பட்டு ஆகியவை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டவை. புலிப்பாக்கம், பேரயாம்பட்டு, ராமாபுரம், செய்யாத்துவண்ணம், அத்தியுர்திருக்கை ஆகியவை பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை.
பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் கொப்பனாப்பட்டி பஞ்சாயத்தில் 2008- செப்டம்பர் முதல் தேர்தல் நடைபெறவில்லை.
59 பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிடங்கள்:
இதேபோல 59 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.
மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறாத பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் விவரம்:
அரியலூர்: 3 (எஸ்.சி. 1, பொது-2), கடலூர்: 5 (எஸ்.சி.), காஞ்சிபுரம்: 7 (எஸ்.டி. 1, பொது 4, பெண்கள் 2), கிருஷ்ணகிரி: 1, மதுரை: 2, புதுக்கோட்டை: 9 (பொது 5, பெண்கள் 3, எஸ்.சி. 1), ராமநாதபுரம்: 1, திருவண்ணாமலை: 11 (பொது 4, எஸ்.சி. 4, எஸ்.டி. 2, பெண்கள் 1), திருச்சி: 1 (எஸ்.டி.), திருவள்ளூர்: 1 (எஸ்.டி.), தூத்துக்குடி: 1 (எஸ்.சி.), வேலூர்: 8 (எஸ்.டி), விழுப்புரம்: 9 (பொது 3, பெண்கள் 1, எஸ்.சி. 3, எஸ்.டி. 2).
நகர்ப்புற உள்ளாட்சிகளில்...: வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டுகளில் யாரும் போட்டியிடாததால், 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை. தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருவதாக மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பட்டி, கோவை மாவட்டம் சிறுமுகை, வீரபாண்டி, கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் யாரும் போட்டியிடாததால் 2006-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேர்தல் நடைபெறவில்லை.
மாநிலத் தேர்தல் ஆணையர் பதில்:
இது குறித்து கேட்டபோது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் கூறியது:
சாதிப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு நடைபெறும் பகுதிகளில் அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்ளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
சனி, 12 செப்டம்பர், 2009
ஒற்றை இலக்கத்தில் நன்னடத்தை கைதிகள் எண்ணிக்கை
சிறையில், தொடர்ந்து 7 ஆண்டுகளைக் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான தகுதியானவர்களின் எண்ணிக்கை தற்போது ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளது.
இதே அடிப்படையில் கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு 1,405 பேர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறையில் 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அவர்களது நன்னடத்தை காரணமாக, அண்ணா பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களின்போது விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, இதில் 10 ஆண்டுகள் என்று இருந்ததை 7 ஆண்டுகளாகக் குறைத்து தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு 1,405 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்த லீலாவதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கருமலையான், முத்துராமலிங்கம், முருகன், நல்லமுத்து, சொங்கன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒரு சிலர் திமுக உள்ளூர் நிர்வாகிகள் என்பதாலேயே ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்வதற்கான கால அளவு 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.
இவ்வாறு தண்டனைக் காலத்தை குறைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வரும் 15-ம் தேதி அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எத்தனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்விடுதலை செய்வதற்கான கால அவகாசம் 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு விடுதலை ஆக அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தகுதி பெற்றனர்.
ஆனால், இப்போதைய நிலையில் இவ்வாறு விடுதலை செய்வதற்கான தகுதியுடைய கைதிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது என சிறைத்துறை தலைமை இயக்குநர் ஏடிஜிபி ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.
எனினும், தகுதியுடைய கைதிகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, கைதிகள் முன் விடுதலைக் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக குறைத்தது போன்று இப்போது, ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டுமல்லாது மற்ற வழக்குகளில் கைதாகி 7 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை, குறிப்பிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சிறைப்பட்டோர் உரிமைக்கான தன்னார்வ அமைப்பு மட்டுமே கைதிகள் விடுதலை குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது தமிழக பாஜக தரப்பில் இருந்தும் இது தொடர்பான கோரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் எடுக்க மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தி நன்னடத்தை உள்ள கைதிகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகைய நிலையில் கைதிகள் முன் விடுதலை குறித்து அரசு எவ்வித முடிவை எடுக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதே அடிப்படையில் கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு 1,405 பேர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறையில் 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அவர்களது நன்னடத்தை காரணமாக, அண்ணா பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களின்போது விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, இதில் 10 ஆண்டுகள் என்று இருந்ததை 7 ஆண்டுகளாகக் குறைத்து தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு 1,405 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்த லீலாவதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கருமலையான், முத்துராமலிங்கம், முருகன், நல்லமுத்து, சொங்கன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒரு சிலர் திமுக உள்ளூர் நிர்வாகிகள் என்பதாலேயே ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்வதற்கான கால அளவு 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.
இவ்வாறு தண்டனைக் காலத்தை குறைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வரும் 15-ம் தேதி அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எத்தனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்விடுதலை செய்வதற்கான கால அவகாசம் 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு விடுதலை ஆக அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தகுதி பெற்றனர்.
ஆனால், இப்போதைய நிலையில் இவ்வாறு விடுதலை செய்வதற்கான தகுதியுடைய கைதிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது என சிறைத்துறை தலைமை இயக்குநர் ஏடிஜிபி ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.
எனினும், தகுதியுடைய கைதிகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, கைதிகள் முன் விடுதலைக் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக குறைத்தது போன்று இப்போது, ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டுமல்லாது மற்ற வழக்குகளில் கைதாகி 7 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை, குறிப்பிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சிறைப்பட்டோர் உரிமைக்கான தன்னார்வ அமைப்பு மட்டுமே கைதிகள் விடுதலை குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது தமிழக பாஜக தரப்பில் இருந்தும் இது தொடர்பான கோரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் எடுக்க மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தி நன்னடத்தை உள்ள கைதிகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகைய நிலையில் கைதிகள் முன் விடுதலை குறித்து அரசு எவ்வித முடிவை எடுக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காப்பீடு திட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் முடக்கம்?
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் காரணமாக சென்னையில் சில வட்டாட்சியர் அலுவலகங்களில் வழக்கமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 26 தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறலாம்.
மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள்.
இதில் உறுப்பினர்களாக சேர்வதன் மூலம் ஒரு குடும்பம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வரை இலவசமாக உயிர் காக்கும் உயர் சிகிச்சையை பெறலாம்.
அடையாள அட்டைகள்...
இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களைக் கண்டறிந்து சிறப்பு அடையாள அட்டை வழங்க 750 குழுக்களை காப்பீட்டு நிறுவனம் அமைத்துள்ளதாகவும், இந்தக் குழுக்கள் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்குச் சென்று உறுப்பினர்களைக் கண்டறிந்து, சிறப்பு அடையாள அட்டையை வழங்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
வருவாய்த்துறை ஊழியர்கள்:
ஆனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள குடும்பத்தினரைக் கண்டுபிடித்து காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பொறுப்பு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் முதல்கட்டமாக மயிலாப்பூர்- திருவல்லிக்கேணி தாலுகாவில் காப்பீடு திட்ட பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு புகைப்படம் மற்றும் கைரேகை அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்டன.
வழக்கமான பணிகள் பாதிப்பு:
வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காப்பீடு திட்டம் தொடர்பான பணிகள் காரணமாக கணக்கெடுப்பு செய்ய வெளியில் சென்று விடுகின்றனர்.
இதன் காரணமாக பட்டா பெறுவது, பட்டா பதிவில் பெயர் மாற்றம் செய்வது, சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள 5 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இதே நிலை தொடர்வதாக அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பொது மக்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
காப்பீடு திட்ட பணிகள் காரணமாக ஊழியர்கள் வெளியில் சென்றுள்ளனர். வழக்கமான பணிகள் நிமித்தம் வருவோர் அடுத்த வாரம் வரலாம் என மாம்பலம்- கிண்டி தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்படுவதாக அங்கு சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல், வெள்ள நிவாரணம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து இப்போது காப்பீடு திட்டப் பணிகளும் வருவாய்த் துறையினரின் வழக்கமான பணிகளை முடக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 26 தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறலாம்.
மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள்.
இதில் உறுப்பினர்களாக சேர்வதன் மூலம் ஒரு குடும்பம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வரை இலவசமாக உயிர் காக்கும் உயர் சிகிச்சையை பெறலாம்.
அடையாள அட்டைகள்...
இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களைக் கண்டறிந்து சிறப்பு அடையாள அட்டை வழங்க 750 குழுக்களை காப்பீட்டு நிறுவனம் அமைத்துள்ளதாகவும், இந்தக் குழுக்கள் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்குச் சென்று உறுப்பினர்களைக் கண்டறிந்து, சிறப்பு அடையாள அட்டையை வழங்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
வருவாய்த்துறை ஊழியர்கள்:
ஆனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள குடும்பத்தினரைக் கண்டுபிடித்து காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பொறுப்பு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் முதல்கட்டமாக மயிலாப்பூர்- திருவல்லிக்கேணி தாலுகாவில் காப்பீடு திட்ட பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு புகைப்படம் மற்றும் கைரேகை அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்டன.
வழக்கமான பணிகள் பாதிப்பு:
வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காப்பீடு திட்டம் தொடர்பான பணிகள் காரணமாக கணக்கெடுப்பு செய்ய வெளியில் சென்று விடுகின்றனர்.
இதன் காரணமாக பட்டா பெறுவது, பட்டா பதிவில் பெயர் மாற்றம் செய்வது, சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள 5 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இதே நிலை தொடர்வதாக அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பொது மக்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
காப்பீடு திட்ட பணிகள் காரணமாக ஊழியர்கள் வெளியில் சென்றுள்ளனர். வழக்கமான பணிகள் நிமித்தம் வருவோர் அடுத்த வாரம் வரலாம் என மாம்பலம்- கிண்டி தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்படுவதாக அங்கு சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல், வெள்ள நிவாரணம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து இப்போது காப்பீடு திட்டப் பணிகளும் வருவாய்த் துறையினரின் வழக்கமான பணிகளை முடக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதன், 2 செப்டம்பர், 2009
அதிக கேள்விகள் கேட்கக் கூடாது: தகவல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு?
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மேல்முறையீட்டு மனுக்களை, அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகக் கூறி மாநில தகவல் ஆணையம் தள்ளுபடி செய்து வருகிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத விதத்தில் தகவல் ஆணையம் தங்கள் மனுக்களை தள்ளுபடி செய்வது அதிர்ச்சி அளிப்பதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை அந்தந்த அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகக் கூறி ஏராளமான மனுக்களை மாநில தகவல் ஆணையம் நிராகரித்து வருவதாக தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக, தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளித்துள்ள சொத்து விவரங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தலைமைச் செயலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவுக்கு தலைமைச் செயலரின் அலுவலகத்தில் இருந்து பதில் கிடைக்காத நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் 2-வது மேல்முறையீட்டு மனுவை கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
மனுவில் அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகவும் தேவையான தகவலை மட்டும் கேளுங்கள் என்றுக் கூறி மாநில தகவல் ஆணையம் இந்த மனுவை நிராகரித்துள்ளது.
இந்த மனு மட்டுமல்ல, இதேபோல ஏராளமான மனுக்கள் கடந்த சில மாதங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய பதிலை பொது தகவல் அதிகாரிகள் அளிக்க வேண்டும்.
ஒரு வேளை மனுதாரர் கேட்கும் வடிவத்தில் அவருக்கு பதில் அளிப்பதில் நடைமுறை பிரச்னைகள் இருந்தால் அந்த குறிப்பிட்ட கேள்வியை மட்டும் நிராகரிக்க தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 7(9) பிரிவில் வழிவகை உள்ளது.
ஆனால், பொது தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டை விசாரிக்கும் அதிகாரியும் நிராகரிக்காத நிலையில் 2-வது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் மாநில தகவல் ஆணையர்கள் நிராகரிப்பது எந்த விதத்தில் நியாயம் என மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த பிரிவிலும் இல்லாத வகையில் தங்கள் மனுக்களை தகவல் ஆணையம் நிராகரித்து வருவது சட்டத்துக்கு எதிரானது என்றும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத விதத்தில் தகவல் ஆணையம் தங்கள் மனுக்களை தள்ளுபடி செய்வது அதிர்ச்சி அளிப்பதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை அந்தந்த அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகக் கூறி ஏராளமான மனுக்களை மாநில தகவல் ஆணையம் நிராகரித்து வருவதாக தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக, தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளித்துள்ள சொத்து விவரங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தலைமைச் செயலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவுக்கு தலைமைச் செயலரின் அலுவலகத்தில் இருந்து பதில் கிடைக்காத நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் 2-வது மேல்முறையீட்டு மனுவை கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
மனுவில் அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகவும் தேவையான தகவலை மட்டும் கேளுங்கள் என்றுக் கூறி மாநில தகவல் ஆணையம் இந்த மனுவை நிராகரித்துள்ளது.
இந்த மனு மட்டுமல்ல, இதேபோல ஏராளமான மனுக்கள் கடந்த சில மாதங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய பதிலை பொது தகவல் அதிகாரிகள் அளிக்க வேண்டும்.
ஒரு வேளை மனுதாரர் கேட்கும் வடிவத்தில் அவருக்கு பதில் அளிப்பதில் நடைமுறை பிரச்னைகள் இருந்தால் அந்த குறிப்பிட்ட கேள்வியை மட்டும் நிராகரிக்க தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 7(9) பிரிவில் வழிவகை உள்ளது.
ஆனால், பொது தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டை விசாரிக்கும் அதிகாரியும் நிராகரிக்காத நிலையில் 2-வது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் மாநில தகவல் ஆணையர்கள் நிராகரிப்பது எந்த விதத்தில் நியாயம் என மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த பிரிவிலும் இல்லாத வகையில் தங்கள் மனுக்களை தகவல் ஆணையம் நிராகரித்து வருவது சட்டத்துக்கு எதிரானது என்றும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வியாழன், 27 ஆகஸ்ட், 2009
சனி, 22 ஆகஸ்ட், 2009
"முன்னுரிமைச் சான்றிதழ்' மோசடி! - விழிபிதுங்கும் வேலைவாய்ப்புத் துறை!
அரசுத் திட்டங்களுக்கு நிலம் அளித்ததாகக் கூறி வேலைவாய்ப்புக்கான "முன்னுரிமைச் சான்றிதழ்' வழங்கியதில் மோசடி நடந்திருப்பது குறித்த விவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட முன்னுரிமைச் சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க உத்தரவிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவைப்படும் நிலங்கள் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நிலம் கையகப்படுத்தப்படும் பணிகளின் காரணமாக தங்களது வாழ்வாதாரமாக உள்ள முழு நிலத்தை இழக்கும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சான்றிதழ் அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் மூலம் அளிக்கப்படுகிறது.
இப்படி முன்னுரிமைச் சான்றிதழ் பெறக் குறைந்தது 2 ஏக்கரும், அதற்கு அதிகமாகவும் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது.
இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி அந்த விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவரவர் கல்வித் தகுதி அடிப்படையில் பதிவு செய்யும் போது பொது பட்டியலில் உள்ளவர்களைவிட இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்தகைய ஒரு சலுகை இருப்பதே தெரியாமல் ஏராளமானோர் அரசுக்கு நிலம் அளித்துவிட்டு நகர்ப்புறப் பகுதிகளுக்கு கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ஆனால், இந்த சலுகையை தவறாகப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைக்கும் சிலர், அரசு சார்பில் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து பத்து சென்ட், இருபது சென்ட் என்று பெயருக்கு குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.
பின்னர் நிலங்களை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு உரிய இழப்பீட்டையும், நிலம் வழங்கியதாகக் கூறி வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கான சான்றிதழையும் பெற்றுக் கொள்கின்றனர்.
இதுபோல சான்றிதழ்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உரிய கல்வித் தகுதியுடன் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் நபர்கள் அரசு பணி பெறுவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த மோசடியால் நிலம் வழங்கி அரசின் சலுகையை பெறவேண்டிய விவசாயிகளின் குடும்பத்தினரும், உரிய கல்வித் தகுதியுடன் பல ஆண்டுகளாக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
நாமக்கல்லில்...: நாமக்கல்லில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற திடீர் சோதனையில் தரகர் முருகேசன் என்பவர் சிக்கினார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் முன்னுரிமைச் சான்றிதழ் மோசடி குறித்த விவரங்கள் தெரியவந்தன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ் பெற்றுள்ளது உறுதியானது. மேலும் இதில் 25 பேர் பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வட்டாட்சியர், 2 வருவாய் ஆய்வாளர்கள், 12 கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
வருவாய்த் துறை, வேலை வாய்ப்புத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் இந்த மோசடி அரங்கேறி வருவது விசாரணையில் நாமக்கல் சம்பவம் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும்...: நாமக்கல் மட்டுமல்லாமல் திருச்சியிலும் இது போன்று மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
"அரசுத் திட்டங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வரை அளிப்பவர்களுக்கே இந்த முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், 10 சென்ட் மற்றும் அதற்கும் குறைவாக நிலம் அளித்தவர்களுக்கும் மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன' என ஊழல் ஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் "திருச்சி' வேங்கை தெரிவித்தார்.
ஏதோ ஒரு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வாக இதனை கருதாமல் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த மோசடி குறித்து வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களில் வழங்கப்பட்ட அனைத்து முன்னுரிமைச் சான்றிதழ்களையும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க உத்தரவிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட முன்னுரிமைச் சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க உத்தரவிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவைப்படும் நிலங்கள் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நிலம் கையகப்படுத்தப்படும் பணிகளின் காரணமாக தங்களது வாழ்வாதாரமாக உள்ள முழு நிலத்தை இழக்கும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சான்றிதழ் அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் மூலம் அளிக்கப்படுகிறது.
இப்படி முன்னுரிமைச் சான்றிதழ் பெறக் குறைந்தது 2 ஏக்கரும், அதற்கு அதிகமாகவும் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது.
இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி அந்த விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவரவர் கல்வித் தகுதி அடிப்படையில் பதிவு செய்யும் போது பொது பட்டியலில் உள்ளவர்களைவிட இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்தகைய ஒரு சலுகை இருப்பதே தெரியாமல் ஏராளமானோர் அரசுக்கு நிலம் அளித்துவிட்டு நகர்ப்புறப் பகுதிகளுக்கு கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ஆனால், இந்த சலுகையை தவறாகப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைக்கும் சிலர், அரசு சார்பில் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து பத்து சென்ட், இருபது சென்ட் என்று பெயருக்கு குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.
பின்னர் நிலங்களை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு உரிய இழப்பீட்டையும், நிலம் வழங்கியதாகக் கூறி வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கான சான்றிதழையும் பெற்றுக் கொள்கின்றனர்.
இதுபோல சான்றிதழ்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உரிய கல்வித் தகுதியுடன் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் நபர்கள் அரசு பணி பெறுவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த மோசடியால் நிலம் வழங்கி அரசின் சலுகையை பெறவேண்டிய விவசாயிகளின் குடும்பத்தினரும், உரிய கல்வித் தகுதியுடன் பல ஆண்டுகளாக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
நாமக்கல்லில்...: நாமக்கல்லில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற திடீர் சோதனையில் தரகர் முருகேசன் என்பவர் சிக்கினார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் முன்னுரிமைச் சான்றிதழ் மோசடி குறித்த விவரங்கள் தெரியவந்தன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ் பெற்றுள்ளது உறுதியானது. மேலும் இதில் 25 பேர் பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வட்டாட்சியர், 2 வருவாய் ஆய்வாளர்கள், 12 கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
வருவாய்த் துறை, வேலை வாய்ப்புத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் இந்த மோசடி அரங்கேறி வருவது விசாரணையில் நாமக்கல் சம்பவம் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும்...: நாமக்கல் மட்டுமல்லாமல் திருச்சியிலும் இது போன்று மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
"அரசுத் திட்டங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வரை அளிப்பவர்களுக்கே இந்த முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், 10 சென்ட் மற்றும் அதற்கும் குறைவாக நிலம் அளித்தவர்களுக்கும் மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன' என ஊழல் ஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் "திருச்சி' வேங்கை தெரிவித்தார்.
ஏதோ ஒரு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வாக இதனை கருதாமல் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த மோசடி குறித்து வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களில் வழங்கப்பட்ட அனைத்து முன்னுரிமைச் சான்றிதழ்களையும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க உத்தரவிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனூர் கந்தசாமி கோயில் குடமுழுக்கு நடப்பதில் சிக்கல்?
திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள ஆனூர் முருகன் கோயில் பராமரிப்புப் பணியில் உபயதாரர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் இடையிலான பிரச்னை காரணமாக குடமுழுக்கு விழா திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொன்விளைந்த களத்தூர் அருகில் உள்ளது ஆனூர் கிராமம். இங்கு செüந்தரவல்லி உடனுறை அஷ்டபுரீஸ்வரர் கோயில், வேதநாராயணப் பெருமாள் கோயில், கந்தசாமி கோயில் ஆகியவை உள்ளன.
பல்லவர் காலம், முதலாம் பராந்தகன், முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகள் இந்த கோயில்களில் உள்ளன.
தொல்லியல் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த, இந்த கிராமத்தில் உள்ள பழமையான கந்தசாமி கோயில் கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்தது.
இந்த கிராமத்தில் பிறந்து பணி நிமித்தம் வேறு ஊர்களில் குடியேறியவர்கள் பலர் மேற்கொண்ட முயற்சியால் ஆனூர், "ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை' 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கை அடிப்படையில் இங்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கந்தசாமி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இதன்படி பல்வேறு கொடையாளர்களின் உதவியுடன் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் கோயிலின் கருவறை, மகா மண்டபம், மூன்று நிலை ராஜகோபுரம், விநாயகர் சன்னதி, தரைகளில் கற்கள் பதித்தல், சுற்றுவர் சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலாண பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால் செப்டம்பர் 4-ம் தேதி குடமுழுக்கு விழா நடத்த கிராம மக்களும், அறக்கட்டளையினரும் முடிவு செய்தனர். விழாவுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளுக்காக இது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலரிடம் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் அணுகினர்.
இந்த நிலையில், கோயில் திருப்பணி குறித்த விளம்பரம் மற்றும் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் நன்கொடை பெறுவது குறித்து இடம் பெற்றிருந்த தகவல்கள் தொடர்பாக கோயில் செயல் அலுவலருக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செயல் அலுவலர் பதில்:
""நன்கொடை பெறுவது குறித்து நாளிதழ் விளம்பரத்திலும், விழா அழைப்பிதழிலும் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள் குறித்து அறக்கட்டளை நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது நிர்வாக நடைமுறையே தவிர குடமுழுக்கு விழாவை தடுக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை'' என இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தெரிவித்தார்.
அனுமதி கிடைக்கவில்லை:
எனினும், இதுவரை குடமுழுக்கு விழாவுக்கான அனுமதியை இந்து சமய அறநிலையத் துறை அளிக்காததால், விழா நடைபெறுமா என கிராம மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு கெüரவப் பிரச்னையாக மாறி நூறாண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள கந்தசாமி கோயில் குடமுழுக்கு விழாவை தடுத்துவிடாமல் அரசு உரிய நடவடிக்கை என்கின்றனர் ஆனூர் கிராம மக்கள்.
செங்கல்பட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொன்விளைந்த களத்தூர் அருகில் உள்ளது ஆனூர் கிராமம். இங்கு செüந்தரவல்லி உடனுறை அஷ்டபுரீஸ்வரர் கோயில், வேதநாராயணப் பெருமாள் கோயில், கந்தசாமி கோயில் ஆகியவை உள்ளன.
பல்லவர் காலம், முதலாம் பராந்தகன், முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகள் இந்த கோயில்களில் உள்ளன.
தொல்லியல் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த, இந்த கிராமத்தில் உள்ள பழமையான கந்தசாமி கோயில் கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்தது.
இந்த கிராமத்தில் பிறந்து பணி நிமித்தம் வேறு ஊர்களில் குடியேறியவர்கள் பலர் மேற்கொண்ட முயற்சியால் ஆனூர், "ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை' 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கை அடிப்படையில் இங்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கந்தசாமி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இதன்படி பல்வேறு கொடையாளர்களின் உதவியுடன் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் கோயிலின் கருவறை, மகா மண்டபம், மூன்று நிலை ராஜகோபுரம், விநாயகர் சன்னதி, தரைகளில் கற்கள் பதித்தல், சுற்றுவர் சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலாண பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால் செப்டம்பர் 4-ம் தேதி குடமுழுக்கு விழா நடத்த கிராம மக்களும், அறக்கட்டளையினரும் முடிவு செய்தனர். விழாவுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளுக்காக இது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலரிடம் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் அணுகினர்.
இந்த நிலையில், கோயில் திருப்பணி குறித்த விளம்பரம் மற்றும் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் நன்கொடை பெறுவது குறித்து இடம் பெற்றிருந்த தகவல்கள் தொடர்பாக கோயில் செயல் அலுவலருக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செயல் அலுவலர் பதில்:
""நன்கொடை பெறுவது குறித்து நாளிதழ் விளம்பரத்திலும், விழா அழைப்பிதழிலும் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள் குறித்து அறக்கட்டளை நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது நிர்வாக நடைமுறையே தவிர குடமுழுக்கு விழாவை தடுக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை'' என இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தெரிவித்தார்.
அனுமதி கிடைக்கவில்லை:
எனினும், இதுவரை குடமுழுக்கு விழாவுக்கான அனுமதியை இந்து சமய அறநிலையத் துறை அளிக்காததால், விழா நடைபெறுமா என கிராம மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு கெüரவப் பிரச்னையாக மாறி நூறாண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள கந்தசாமி கோயில் குடமுழுக்கு விழாவை தடுத்துவிடாமல் அரசு உரிய நடவடிக்கை என்கின்றனர் ஆனூர் கிராம மக்கள்.
வியாழன், 20 ஆகஸ்ட், 2009
"அப்பழுக்கற்ற' அரசு ஊழியர் யார்? குழப்பத்தில் வீட்டுவசதி வாரியம்
அரசின் விருப்ப உரிமை அடிப்படையில், "அப்பழுக்கற்ற' அரசு ஊழியர் என்ற பிரிவில் வீடு, மனைகளை ஒதுக்கீடு செய்வதில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உருவாக்கும் புதிய குடியிருப்புகள் மற்றும் மனைப் பிரிவுகளில் 10 சதவீதம் அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இதில் சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற பிரிவில் சாதனை படைத்தவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள், பொது நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் என 2003-ல் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட இந்த பட்டியல் நடைமுறைக்கு வந்த பின்னர் பெரும்பாலும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களே அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்று கூறி அதிக ஒதுக்கீடுகளை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
திருமணமாகாத, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கூறப்பட்ட காரணம் கேள்விக்குறியாகியுள்ளது.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்ற பிரிவின் கீழ் வீடு, மனை பெற்றவர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதும் சிலர் தண்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று தமிழக அரசு முகப்பேர் ஏரித் திட்டத்தில் மனை ஒதுக்கீடு செய்த (அரசாணை எண்: 216. 13-3-2008) சுமதி ரவிச்சந்திரன் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகளால் சில மாதங்கள் முன்னர் கைது செய்யப்பட்டார்.
யார் சான்றளித்தது?
சுமதி ரவிச்சந்திரன் எப்போது, யாரால் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என சான்றளிக்கப்பட்டார் என்று விசாரித்தபோது, தங்கள் துறையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என யாரையும் சான்றளிக்கவில்லை என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறையும், பாஸ்போர்ட் வழங்கல் பிரிவு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் மேற்கூறிய பதில்களை (கடித எண்: எம்ஏஎஸ்.ஆர்டிஐ.206.09. 13-07-09) அளித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் எதன் அடிப்படையில் சுமதி ரவிச்சந்திரன் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று கண்டறியப்பட்டு அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டில் மனை ஒதுக்கீடு பெற்றார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இவர் மட்டுமல்ல அரசு அதிகாரத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் பலரும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்களாக வீடு, மனை ஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று வீட்டுவசதி வாரியத்தின் முகப்பேர் கோட்ட அலுவலகத்தில், "பேக்ட்' அமைப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அண்மையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்றுக் கூறி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கோப்புகளில் உரிய ஆவணங்கள் இல்லாதது இந்த ஆய்வின்போது தெரியவந்துள்ளது.
மத்திய அரசிலும், தமிழக அரசிலும் எந்தத் துறையிலும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என அறிவிக்கப்படுவது, சான்றளிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
குழப்பத்தில் அதிகாரிகள்:
""அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளின் அடிப்படையிலேயே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலிடத்தில் இருந்து வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் கேட்டு கெடுபிடி செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்'' என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் யார்? என்பது குறித்த உரிய வரைமுறைகள் இல்லாததால் மனை ஒதுக்கீட்டு பிரிவு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உருவாக்கும் புதிய குடியிருப்புகள் மற்றும் மனைப் பிரிவுகளில் 10 சதவீதம் அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இதில் சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற பிரிவில் சாதனை படைத்தவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள், பொது நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் என 2003-ல் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட இந்த பட்டியல் நடைமுறைக்கு வந்த பின்னர் பெரும்பாலும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களே அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்று கூறி அதிக ஒதுக்கீடுகளை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
திருமணமாகாத, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கூறப்பட்ட காரணம் கேள்விக்குறியாகியுள்ளது.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்ற பிரிவின் கீழ் வீடு, மனை பெற்றவர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதும் சிலர் தண்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று தமிழக அரசு முகப்பேர் ஏரித் திட்டத்தில் மனை ஒதுக்கீடு செய்த (அரசாணை எண்: 216. 13-3-2008) சுமதி ரவிச்சந்திரன் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகளால் சில மாதங்கள் முன்னர் கைது செய்யப்பட்டார்.
யார் சான்றளித்தது?
சுமதி ரவிச்சந்திரன் எப்போது, யாரால் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என சான்றளிக்கப்பட்டார் என்று விசாரித்தபோது, தங்கள் துறையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என யாரையும் சான்றளிக்கவில்லை என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறையும், பாஸ்போர்ட் வழங்கல் பிரிவு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் மேற்கூறிய பதில்களை (கடித எண்: எம்ஏஎஸ்.ஆர்டிஐ.206.09. 13-07-09) அளித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் எதன் அடிப்படையில் சுமதி ரவிச்சந்திரன் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று கண்டறியப்பட்டு அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டில் மனை ஒதுக்கீடு பெற்றார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இவர் மட்டுமல்ல அரசு அதிகாரத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் பலரும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்களாக வீடு, மனை ஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று வீட்டுவசதி வாரியத்தின் முகப்பேர் கோட்ட அலுவலகத்தில், "பேக்ட்' அமைப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அண்மையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்றுக் கூறி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கோப்புகளில் உரிய ஆவணங்கள் இல்லாதது இந்த ஆய்வின்போது தெரியவந்துள்ளது.
மத்திய அரசிலும், தமிழக அரசிலும் எந்தத் துறையிலும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என அறிவிக்கப்படுவது, சான்றளிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
குழப்பத்தில் அதிகாரிகள்:
""அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளின் அடிப்படையிலேயே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலிடத்தில் இருந்து வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் கேட்டு கெடுபிடி செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்'' என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் யார்? என்பது குறித்த உரிய வரைமுறைகள் இல்லாததால் மனை ஒதுக்கீட்டு பிரிவு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
நாட்டிலேயே முதல் முறையாக மாநில தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் ஆய்வு
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விளைவாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் 3 பேர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.மாநில தகவல் ஆணையத்தை பொது மக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் சிலர் ஆய்வு செய்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை 2005-ம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பல்வேறு நடைமுறைகள் குறித்த விவரங்களை எழுத்துமூலமாக கேட்டறிய மக்களுக்கு உரிமை கிடைத்துள்ளது.
இந்த சட்டத்தின்படி தகவலை கேட்டு பெறுவது மட்டுமல்லாது அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், முக்கிய கோப்புகள், ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இருந்து விளக்கம் பெறுவதுடன் அல்லாமல் தங்களுக்குத் தேவைப்படும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெறுவதற்கும் மக்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு சில அரசு அலுவலகங்களில் மட்டுமே அதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோப்புகளை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சமூக ஆர்வலர்கள்:
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மனித உரிமைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நா. மதியழகன், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ரமேஷ் ஆகியோர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமலாக்கும் அதிகார அமைப்பான தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய அலுவலகத்தை ஆய்வு செய்ய மனு செய்திருந்தனர்.
முதலில் தயங்கி தாமதம் செய்த தகவல் ஆணையம் இவர்களின் பகீரத முயற்சிக்குப் பின் அண்மையில் இதற்கான அனுமதியை அளித்தது. இதன்படி, ஆகஸ்ட் 10, 11 ஆகிய நாள்களில் இவர்கள் இருவரும் தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் உறுப்பினர் கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து மாநில தகவல் ஆணையத்தை ஆய்வு செய்தனர்.
""ஆய்வுக்கு அனுமதி அளித்ததுடன், ஆய்வு செய்தமைக்கான சான்றிதழையும் மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் தங்களுக்கு வழங்கினர்'' என்றார் வழக்கறிஞர் ரமேஷ்.
""இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து அரசு அலுவலகங்களையும் பொது மக்கள் நேரடியாக ஆய்வு செய்து அங்கு நடைபெறும் நிர்வாக நடைமுறை விவரங்களை தெரிந்து கொள்ள வழிகாட்டும் விதமாக இந்த ஆய்வு அமைந்திருந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.
தகவல் தர மறுத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட பொது தகவல் அதிகாரிகள் பட்டியல், அவர்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என இந்த ஆய்வில் தெரிய வந்தது என்றார் மதியழகன்.
14 பதவிகள் காலி:
ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரது பணி விவரங்கள், அதிகாரங்கள், செயல்பாடுகள், ஊதியங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
மாநில தகவல் ஆணையர் பதவி உள்பட மொத்தம் 14 பதவியிடங்கள் ஆணையத்தில் காலியாக இருப்பது தங்களது ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
""தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கத்தை மேலும் விரைவுப்படுத்துவதில் இந்த ஆய்வு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது'' என்றார் ஆய்வின் போது உடன் இருந்த கல்யாணசுந்தரம்.
சனி, 8 ஆகஸ்ட், 2009
சென்னை மாவட்ட ஆட்சியர் மீது ஆதிதிராவிடர் தேசிய ஆணையம் புகார்
சென்னை புரசைவாக்கம் - பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய பதில் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் மீது ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய ஆணையத்தின் தமிழக இயக்குநர் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பி. கல்யாணசுந்தரம் (67). லஞ்சம் கொடாதோர் இயக்க உறுப்பினரான இவர் தனது பேரன் கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதிச் சான்றிதழ் கோரி புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 6-3-2008-ல் விண்ணப்பித்தார்.
தனது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கல்யாணசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார். ஆனால், இதற்கும் வட்டாட்சியர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லையாம்.
இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை ஆணையர், செயலர், முதல்வர் என அனைத்து தரப்பிலும் கல்யாணசுந்தரம் முறையிட்டார்.
இந்த முறையீடுகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன், புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியருக்கு பல முறை கடிதம் அனுப்பினார்.
இதன் பின்பும் சம்பந்தப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து மனுதாரரையும், வட்டாட்சியரையும் மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் விசாரணைக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி அழைத்திருந்தார்.
இந்த விசாரணையில் ஆஜரான மனுதாரர், ""புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போர் அங்குள்ள அதிகாரிகளால் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்; லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்'' என்றும் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார்.
ஆனால், இந்த விசாரணையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியரோ, அவரது தரப்பினரோ ஆஜராகவில்லை.
இந்த நிலையில், மனுதாரர் கல்யாணசுந்தரம் இது குறித்து ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் (என்.சி.எஸ்.சி.) முறையிட்டார்.
இதன் அடிப்படையில் கல்யாணசுந்தரத்தின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு என்.சி.எஸ்.சி.யின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன் கடிதம் எழுதினார்.
ஜூன் மாதம் 4-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியராக வி. ஷோபனா பொறுப்பேற்றது முதல் இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி கடிதம் (எண்: 2/15/2008 ரெப்.) அனுப்பினார்.
""கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதி சான்றிதழ் கோரும் மனு தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எவ்விதப் பதிலோ அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கையோ வரவில்லை.
கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்த வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இந்த பிரச்னையில் ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் உரிமையியல் நீதித்துறை அதிகாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என இ. தசரதன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பதில்:
இந்த பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வி. ஷோபனா கூறியது:
""இப் பிரச்னை தனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. எனினும், இதில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்'' என்றார்.
இது தொடர்பாக தேசிய ஆணையத்தின் தமிழக இயக்குநர் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பி. கல்யாணசுந்தரம் (67). லஞ்சம் கொடாதோர் இயக்க உறுப்பினரான இவர் தனது பேரன் கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதிச் சான்றிதழ் கோரி புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 6-3-2008-ல் விண்ணப்பித்தார்.
தனது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கல்யாணசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார். ஆனால், இதற்கும் வட்டாட்சியர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லையாம்.
இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை ஆணையர், செயலர், முதல்வர் என அனைத்து தரப்பிலும் கல்யாணசுந்தரம் முறையிட்டார்.
இந்த முறையீடுகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன், புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியருக்கு பல முறை கடிதம் அனுப்பினார்.
இதன் பின்பும் சம்பந்தப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து மனுதாரரையும், வட்டாட்சியரையும் மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் விசாரணைக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி அழைத்திருந்தார்.
இந்த விசாரணையில் ஆஜரான மனுதாரர், ""புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போர் அங்குள்ள அதிகாரிகளால் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்; லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்'' என்றும் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார்.
ஆனால், இந்த விசாரணையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியரோ, அவரது தரப்பினரோ ஆஜராகவில்லை.
இந்த நிலையில், மனுதாரர் கல்யாணசுந்தரம் இது குறித்து ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் (என்.சி.எஸ்.சி.) முறையிட்டார்.
இதன் அடிப்படையில் கல்யாணசுந்தரத்தின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு என்.சி.எஸ்.சி.யின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன் கடிதம் எழுதினார்.
ஜூன் மாதம் 4-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியராக வி. ஷோபனா பொறுப்பேற்றது முதல் இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி கடிதம் (எண்: 2/15/2008 ரெப்.) அனுப்பினார்.
""கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதி சான்றிதழ் கோரும் மனு தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எவ்விதப் பதிலோ அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கையோ வரவில்லை.
கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்த வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இந்த பிரச்னையில் ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் உரிமையியல் நீதித்துறை அதிகாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என இ. தசரதன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பதில்:
இந்த பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வி. ஷோபனா கூறியது:
""இப் பிரச்னை தனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. எனினும், இதில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்'' என்றார்.
அதிகரிக்கும் சுற்றுச்சுவர் விதி மீறல்கள்!
சென்னையில் குடியிருப்பு வளாகங்களில் சுற்றுச் சுவர் உயரம் தொடர்பான விதி மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விதி மீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மற்றவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எதிர்வீட்டு சுற்றுச்சுவரின் உயரம் உங்கள் வீட்டு வெப்ப நிலையைப் பாதிக்கும் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாக தெரியாது.
ஆனால், கே.கே. நகர் பொப்பிலி ராஜா 91, 92 ஆகிய தெருக்களைச் சேர்ந்த மக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது.
இங்குள்ள ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச் சுவரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பி வலை வேலி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது கம்பி வேலி அகற்றப்பட்டு இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
5 அடி உயரச் சுவர் மீது, 2 அடி உயரத்துக்கு இரும்புத் தட்டி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு இத்தகைய இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
உச்சி வெயில் நேரத்தில் வெப்பக் கதிர்கள் தட்டிகள் மீது பட்டு பிரதிபலிப்பதால் சுற்றுப்புறத்தில் வெப்ப நிலை அதிகரிக்கிறது.
பெரிய சமதள பரப்பின் குறுக்கே சராசரிக்கும் அதிக உயரத்தில் இருக்கும் இந்தத் தட்டிகள் காற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளதும் வெப்பம் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று "எக்ஸ்னோரா' உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவும் விதி மீறலே...:
தனி வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் 2 மீட்டர் உயரம் வரை மட்டுமே சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்ட வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் (டி.சி.ஆர்.) குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள வளாகங்கள் தவிர வேறு வளாகங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் அனுமதியின்றி செயற்கையான இரும்புத் தட்டிகள் அமைப்பது விதிமீறல்தான் என்கின்றனர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.
எதிர்வீட்டு சுற்றுச்சுவரின் உயரம் உங்கள் வீட்டு வெப்ப நிலையைப் பாதிக்கும் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாக தெரியாது.
ஆனால், கே.கே. நகர் பொப்பிலி ராஜா 91, 92 ஆகிய தெருக்களைச் சேர்ந்த மக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது.
இங்குள்ள ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச் சுவரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பி வலை வேலி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது கம்பி வேலி அகற்றப்பட்டு இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
5 அடி உயரச் சுவர் மீது, 2 அடி உயரத்துக்கு இரும்புத் தட்டி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு இத்தகைய இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
உச்சி வெயில் நேரத்தில் வெப்பக் கதிர்கள் தட்டிகள் மீது பட்டு பிரதிபலிப்பதால் சுற்றுப்புறத்தில் வெப்ப நிலை அதிகரிக்கிறது.
பெரிய சமதள பரப்பின் குறுக்கே சராசரிக்கும் அதிக உயரத்தில் இருக்கும் இந்தத் தட்டிகள் காற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளதும் வெப்பம் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று "எக்ஸ்னோரா' உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவும் விதி மீறலே...:
தனி வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் 2 மீட்டர் உயரம் வரை மட்டுமே சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்ட வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் (டி.சி.ஆர்.) குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள வளாகங்கள் தவிர வேறு வளாகங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் அனுமதியின்றி செயற்கையான இரும்புத் தட்டிகள் அமைப்பது விதிமீறல்தான் என்கின்றனர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.
புதன், 5 ஆகஸ்ட், 2009
மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் பராந்தகச் சோழன் சிலை அமைப்பதில் சர்ச்சை

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் முதலாம் பராந்தகச் சோழனின் சிலை அமைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வடபழனியில் ஒரு வாடகைக் கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் எதிரில் நிலம் ஒதுக்கப்பட்டு புதிய வளாகம் ரூ. 2.17 கோடியில் கட்டப்பட்டது.
இந்தப் புதிய வளாகத்தைத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிதி அமைச்சர் க. அன்பழகன் கடந்த ஜூன் 19-ம் தேதி திறந்து வைத்தார்.
அதிமுக ஆட்சியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம் அமைக்க ஒதுக்கப்பட்ட இந்த இடம் திமுக ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சொந்தக் கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தும் இப்போதைய நடைமுறைக்கு முன்னோடியாக உள்ள குடவோலை முறை குறித்தச் செய்திகள் முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
எனவே புதிய வளாக நுழைவாயிலில், முதலாம் பராந்தகச் சோழன் மற்றும் குடவோலை முறை குறித்த சிற்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் அவ்விதம் சிலை அமைப்பதற்கு முன்னதாகவே புதிய வளாகத்துக்கான திறப்பு விழா நடைபெற்றது. இருப்பினும், புதிய வளாகத்தின் சுற்றுச்சுவரில் சிலை வைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்காக தமிழக அரசு ரூ. 6 லட்சத்தை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியது.
உருவ மாதிரி கிடைக்கவில்லை
இந்தச் சிலை வைப்பதற்காக முதலாம் பராந்தகச் சோழனின் உருவ மாதிரியைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேடினர். அரசு ஆவணக் காப்பகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதற்கான தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், முதலாம் பராந்தகச் சோழனின் உருவ மாதிரி எங்கும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜராஜ சோழன் உள்ளிட்ட சில சோழ மன்னர்களின் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாம் பராந்தகச் சோழனின் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சிலரின் மூலம் இந்தச் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
விலை அதிகம்
""மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் அடிப்படையில், அங்கு வைக்கப்படுவதற்காக உருவாக்கப்படும் சிலைக்கு மொத்தச் செலவு அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்தைத் தாண்டாது'' என இது போன்ற சிற்பங்களை உருவாக்குவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், அரசு இதற்கு ஒதுக்கியுள்ள ரூ. 6 லட்சம் சிலைக்காக முழுமையாக செலவிடப்பட்டதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஆணையருக்கும் சில உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக சிலர் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் ஆணைய ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
வரலாற்று ஆசிரியர்கள்
முதலாம் பராந்தகச் சோழன் கி.பி. 907-ம் ஆண்டு முதல் கி.பி. 953-ம் ஆண்டு வரை ஆட்சிப் புரிந்தார். களபிரரை முறியடித்து கி.பி. 575-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசை கி.பி. 915-ல் முறியடித்து மதுரையை வென்றவர் முதலாம் பராந்தகச் சோழன்.
உத்தரமேரூர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள குடவோலை முறையில் அதிகாரிகளே (வாரியத் தலைவர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் இது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறை அல்ல எனவும் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இது தொடர்பாக, இந்தியத் தொல்லியல் துறையின் 1904-05 ஆண்டு அறிக்கையில், (பக்கம் 136, 138) குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
இத்தகைய சூழலில், உருவ மாதிரி குறித்த உறுதியான ஆவணங்களின் அடிப்படை இல்லாமல் பராந்தகச் சோழன் என்று கூறி ஒரு சிலையை உருவாக்கி முக்கியமான ஒரு இடத்தில் வைப்பதன் மூலம் மக்களிடம் தவறான தகவல் பரவ வழிவகுத்துவிடக்கூடாது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009
ஜரிகை எரிப்புப் புகையால் தி. நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு: மாசுகட்டுப்பாடு வாரியம் பாராமுகம் ஏன்?
சென்னை தியாகராய நகரில் ஜரிகைகளை எரிக்கும் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் புகையால் துரைசாமி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தியாகராய நகரில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பெரும்பாலானவற்றில் பழைய பட்டுச் சேலைகளை வாங்கிக் கொண்டு புதிய சேலைகளை தள்ளுபடி விலையில் அளிக்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பழைய பட்டுச் சேலைகளில் இருக்கும் ஜரிகைகளை வாங்கி அவற்றை எரித்து, இதில் இருந்து செம்பு, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்கும் பணியை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய பணிகளை செய்வது தொழில் ரீதியான செயல்பாடு. இவை தொழிற்சாலைகள் உள்ள பகுதியில் மட்டும் நடைபெறவேண்டும். அதுவும் மாசுக்கட்டுப்பாடு வாரித்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
ஆனால், தியாகராய நகரில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் வணிகப் பகுதிகளுக்கு அருகில் சிலர் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஜரிகை எரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், துர்நாற்றத்துடன் வெளியாகும் புகையால் அருகில் உள்ள வணிகப் பகுதிகளில் வந்து செல்வோரும், அங்கு பணி புரிவோரும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக துரைசாமி சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் ஜரிகை எரிப்புப் பணியால் வெளியாகும் புகையால் இந்த சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் பகல் நேரங்களில் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இவ்வாறு வெளியாகும் புகையால் இப் பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வந்து செல்வோரும், பணி புரிவோருக்கு உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாய சூழல் நிலவுவதாக இங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றின் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
மாநகராட்சி நிர்வாகமும், மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதிக்கு வந்து செல்லும் மக்களின் கோரிக்கை.
தியாகராய நகரில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பெரும்பாலானவற்றில் பழைய பட்டுச் சேலைகளை வாங்கிக் கொண்டு புதிய சேலைகளை தள்ளுபடி விலையில் அளிக்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பழைய பட்டுச் சேலைகளில் இருக்கும் ஜரிகைகளை வாங்கி அவற்றை எரித்து, இதில் இருந்து செம்பு, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்கும் பணியை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய பணிகளை செய்வது தொழில் ரீதியான செயல்பாடு. இவை தொழிற்சாலைகள் உள்ள பகுதியில் மட்டும் நடைபெறவேண்டும். அதுவும் மாசுக்கட்டுப்பாடு வாரித்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
ஆனால், தியாகராய நகரில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் வணிகப் பகுதிகளுக்கு அருகில் சிலர் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஜரிகை எரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், துர்நாற்றத்துடன் வெளியாகும் புகையால் அருகில் உள்ள வணிகப் பகுதிகளில் வந்து செல்வோரும், அங்கு பணி புரிவோரும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக துரைசாமி சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் ஜரிகை எரிப்புப் பணியால் வெளியாகும் புகையால் இந்த சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் பகல் நேரங்களில் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இவ்வாறு வெளியாகும் புகையால் இப் பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வந்து செல்வோரும், பணி புரிவோருக்கு உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாய சூழல் நிலவுவதாக இங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றின் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
மாநகராட்சி நிர்வாகமும், மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதிக்கு வந்து செல்லும் மக்களின் கோரிக்கை.
ரூ. 1.6 கோடியில் பொலிவு பெறுகிறது கீழ்க்கட்டளை ஏரி
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள கீழ்க்கட்டளை ஏரி ரூ. 1.6 கோடியில் புதுப் பொலிவு பெற உள்ளது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மடிப்பாக்கம் சந்திப்புக்கு முன்னர் அமைந்துள்ளது கீழ்க்கட்டளை ஏரி.
பல்லாவரம் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை உள்வாங்கி சேமித்து அதன் பிறகு உபரியாகும் நீர் பள்ளிக்கரனைக்கு செல்லும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
ரூ. 1.6 கோடி...:
இந்த நிலையில், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (என்.எல்.சி.பி.) கீழ் தமிழகத்தில் கீழ்க்கட்டளை ஏரி உள்பட 3 ஏரிகளை சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதற்கான திட்டத்தை ரூ. 1.6 கோடி மதிப்பீட்டில் தயாரித்துள்ளது. இதன்படி திட்டத்தின் மொத்த மதிப்பில் 70 சதவீதத் தொகை மத்திய அரசிடம் இருந்தும், 20 சதவீதம் மாநில அரசிடம் இருந்தும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்தும் பெறப்படும்.
முள்கம்பி வேலி...:
இந்த திட்டத்தின்படி 56 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும். வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் கண்டறியப்பட்டு முள்கம்பி வேலி போடப்படும்.
இதனால் ஏரிக்குள் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து மாசுப்படுத்துவது, ஆக்கிரமிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். மேலும், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியின் நடுவில் சிறிய அளவிலான தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சிக்கான படகு போக்குவரத்து தொடங்கப்படும்.
கழிவுநீரை சுத்தப்படுத்த...:
எரிமலைகளில் இருந்து வெளியாகும் ஒருவகை தாதுவை மண்ணுடன் கலந்து ஏரிக்குள் நீர் வரும் பகுதியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஏரிக்குள் வரும் போதே கழிவுநீரை சுத்தப்படுத்த முடியும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதற்கான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை முகமைக்கு பொதுப்பணித்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அமைப்பு பரிசீலனை:
மத்திய அரசின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கண்காணிப்பு அமைப்பான இந்த முகமை மூலம் கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.
இந்த திட்டத்துக்கு தனது பங்காக 10 சதவீதத் தொகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்லாவரம் நகராட்சியின் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் பங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல புறநகரில் உள்ள மற்ற ஏரிகளையும் சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லாவரம் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை உள்வாங்கி சேமித்து அதன் பிறகு உபரியாகும் நீர் பள்ளிக்கரனைக்கு செல்லும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
ரூ. 1.6 கோடி...:
இந்த நிலையில், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (என்.எல்.சி.பி.) கீழ் தமிழகத்தில் கீழ்க்கட்டளை ஏரி உள்பட 3 ஏரிகளை சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதற்கான திட்டத்தை ரூ. 1.6 கோடி மதிப்பீட்டில் தயாரித்துள்ளது. இதன்படி திட்டத்தின் மொத்த மதிப்பில் 70 சதவீதத் தொகை மத்திய அரசிடம் இருந்தும், 20 சதவீதம் மாநில அரசிடம் இருந்தும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்தும் பெறப்படும்.
முள்கம்பி வேலி...:
இந்த திட்டத்தின்படி 56 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும். வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் கண்டறியப்பட்டு முள்கம்பி வேலி போடப்படும்.
இதனால் ஏரிக்குள் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து மாசுப்படுத்துவது, ஆக்கிரமிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். மேலும், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியின் நடுவில் சிறிய அளவிலான தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சிக்கான படகு போக்குவரத்து தொடங்கப்படும்.
கழிவுநீரை சுத்தப்படுத்த...:
எரிமலைகளில் இருந்து வெளியாகும் ஒருவகை தாதுவை மண்ணுடன் கலந்து ஏரிக்குள் நீர் வரும் பகுதியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஏரிக்குள் வரும் போதே கழிவுநீரை சுத்தப்படுத்த முடியும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதற்கான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை முகமைக்கு பொதுப்பணித்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அமைப்பு பரிசீலனை:
மத்திய அரசின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கண்காணிப்பு அமைப்பான இந்த முகமை மூலம் கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.
இந்த திட்டத்துக்கு தனது பங்காக 10 சதவீதத் தொகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்லாவரம் நகராட்சியின் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் பங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல புறநகரில் உள்ள மற்ற ஏரிகளையும் சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள், 27 ஜூலை, 2009
"பாண்டு' வாத்தியக் காவலர்கள் நியமனம்: தேர்வுக் குழுமத்தின் "மெüனம்' கலையுமா?
தமிழக காவல் துறையில் "பாண்டு' வாத்தியக் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 317 பேர் நியமன ஆணை கிடைக்காமல் கடந்த ஓராண்டாக காத்திருக்கின்றனர்.
தமிழக காவல் துறையில் தலைமையகம் மற்றும் சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் ஆணையர், ஐ.ஜி. அலுவலகங்கள், சிறப்பு காவல்படை பட்டாலியன்களில் வாத்தியக் காவலர்கள் பிரிவு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாத்தியக் காவலர்களாக இந்தப் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மற்ற காவலர்களைப் போலவே தேர்வு நடத்தி இந்தப் பிரிவுக்கான காவலர்களைத் தேர்வு செய்கிறது. ஆனால், பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதல், லத்திகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பணி சார்ந்த சில பயிற்சிகள் தவிர்த்து மற்ற காவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் இவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வாத்திய காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பான தமிழக அரசின் உள்துறை பிறப்பித்த அரசாணையின்படி (எண்: 877- காவல் 9) கடந்த 2007-ல் வாத்திய காவலர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2008 ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்களின் கல்வித் தகுதி, வயதுச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, இசைக்கும் திறன் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இவற்றில் தேர்வானவர்கள் காவல் விசாரணை, கைவிரல் ரேகை எடுத்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனையும் செய்து இறுதியாக 317 பேர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 2008 ஜூன் 24-ல் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு உரிய நியமன ஆணை வழங்கி பயிற்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், தேர்வு செய்யப்பட்டு ஓராண்டாக பயிற்சிக்கு அனுப்பப்படாமல் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் 317 பேரும் காத்திருக்கின்றனர்.
"இது தொடர்பாக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தை பல முறை அணுகினாலும், அதிகாரிகள் தரப்பில் உறுதியான பதில் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்கின்றனர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
ஆனால், எங்களுக்கு பிறகு மேலும் ஒரு தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடித்தவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தற்போது பயிற்சியை முடிக்கும் நிலையில் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் அல்லது உயர் படிப்புக்கும் செல்லாமல் வாத்தியக் காவலர் வேலைக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு நியமன ஆணைகள் வழங்குவதை தேர்வுக் குழுமம் விரைவுப்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வுக் குழுமத்தின் நிலை...:
இது தொடர்பாக விசாரித்த போது, வாத்திய காவலர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆணைகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ளும் அதிகாரிகள் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.
இவர்களை தவிர்த்துவிட்டு வேறு பிரிவினரை பயிற்சிக்கு அனுப்பியதை உறுதி செய்யவும் அதிகாரிகள் மறுத்தனர்.
தமிழக காவல் துறையில் தலைமையகம் மற்றும் சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் ஆணையர், ஐ.ஜி. அலுவலகங்கள், சிறப்பு காவல்படை பட்டாலியன்களில் வாத்தியக் காவலர்கள் பிரிவு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாத்தியக் காவலர்களாக இந்தப் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மற்ற காவலர்களைப் போலவே தேர்வு நடத்தி இந்தப் பிரிவுக்கான காவலர்களைத் தேர்வு செய்கிறது. ஆனால், பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதல், லத்திகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பணி சார்ந்த சில பயிற்சிகள் தவிர்த்து மற்ற காவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் இவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வாத்திய காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பான தமிழக அரசின் உள்துறை பிறப்பித்த அரசாணையின்படி (எண்: 877- காவல் 9) கடந்த 2007-ல் வாத்திய காவலர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2008 ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்களின் கல்வித் தகுதி, வயதுச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, இசைக்கும் திறன் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இவற்றில் தேர்வானவர்கள் காவல் விசாரணை, கைவிரல் ரேகை எடுத்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனையும் செய்து இறுதியாக 317 பேர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 2008 ஜூன் 24-ல் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு உரிய நியமன ஆணை வழங்கி பயிற்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், தேர்வு செய்யப்பட்டு ஓராண்டாக பயிற்சிக்கு அனுப்பப்படாமல் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் 317 பேரும் காத்திருக்கின்றனர்.
"இது தொடர்பாக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தை பல முறை அணுகினாலும், அதிகாரிகள் தரப்பில் உறுதியான பதில் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்கின்றனர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
ஆனால், எங்களுக்கு பிறகு மேலும் ஒரு தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடித்தவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தற்போது பயிற்சியை முடிக்கும் நிலையில் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் அல்லது உயர் படிப்புக்கும் செல்லாமல் வாத்தியக் காவலர் வேலைக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு நியமன ஆணைகள் வழங்குவதை தேர்வுக் குழுமம் விரைவுப்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வுக் குழுமத்தின் நிலை...:
இது தொடர்பாக விசாரித்த போது, வாத்திய காவலர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆணைகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ளும் அதிகாரிகள் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.
இவர்களை தவிர்த்துவிட்டு வேறு பிரிவினரை பயிற்சிக்கு அனுப்பியதை உறுதி செய்யவும் அதிகாரிகள் மறுத்தனர்.
திங்கள், 20 ஜூலை, 2009
கால்நூற்றாண்டு அரசாணையால் பல்லாவரம் நகராட்சிக்கு ரூ. 1 கோடி வருவாய் இழப்பு!
வணிக வளாகங்களுக்கு வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை 1985-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணை காரணமாக பல்லாவரம் நகராட்சிக்கு ரூ. 1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்க்கட்டளை பஸ் நிலைய வளாகத்தில் மெகாசிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் ரூ. 68 லட்சத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது.
தரைதளத்தில் தலா 144 சதுர அடி பரப்பளவில் 44 கடைகள் உள்ளன.
2770 சதுர அடி, 2800 சதுர அடி, 815 சதுர அடி என முன்று பிரிவுகளைக் கொண்டதாக முதல் தளம் கட்டப்பட்டது.
ஒரு சதுர அடிக்கு ரூ. 10 என்ற அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 92-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தரை தளத்தில் உள்ள 43 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு கடையில் நகராட்சியின் வரி வசூலிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் உள்ள வணிக பகுதிகள் கடந்த 9 ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறை 29-04-1985-ல் பிறப்பித்த அரசாணை 285-ன் படி நகராட்சி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகையே காரணமாக கூறப்படுகிறது.
கீழ்க்கட்டளை பகுதியில் தனியார் கட்டடங்களில் செயல்படும் வங்கிகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அளிக்கும் வாடகையைவிட நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்படும் வாடகை 200 மடங்கு அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.
உதாரணமாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வளாகத்தில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசாணை எண் 285-ஐ சுட்டிக்காட்டி நகராட்சி அதிகாரிகள் 970 சதுர அடி இடம் தருவதாகவும் அதற்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை தர வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை காவல் துறை ஏற்காததால் 637 சதுர அடி இடத்தை ரூ. 16,500 வாடகையில் அளிக்க நகராட்சி அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இதே அளவு இடத்தை ரூ. 6,000 மாத வாடகைக்குப் பெற்று காவல் நிலையம் தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது.
அஞ்சலகம்...:
இந்நிலையில், கீழ்க்கட்டளை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை அடிப்படையில் இங்கு அஞ்சலகம் தொடங்க தபால்துறை முடிவு செய்தது. இதற்காக 750 சதுர அடி இடம் கேட்டு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி கடிதம் எழுதினார்.
இதற்கு 26-9-2008-ல் பதில் அளித்த நகராட்சி ஆணையர், கீழ்க்கட்டளை வணிக வளாகத்தில் 2770 சதுர அடி, 2880 சதுர அடி அளவு இடங்கள் மட்டுமே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 285-ன் படி வாடகை செலுத்த சம்மதம் தெரிவித்தால் இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
ஆனால், கீழ்க்கட்டளை அஞ்சலகத்துக்கு 815 சதுர அடி நிலத்தை ரூ. 25 ஆயிரம் மாத வாடகை தர வேண்டும் என நகராட்சி சார்பில் கோரப்பட்டது. மேலும், 9 மாத வாடகையை முன்பணமாகத் தர வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது கீழ்க்கட்டளை பகுதியில் சந்தை நிலவரத்தைவிட அதிகமாக உள்ளதாகக் கூறி இதனை ஏற்க தபால்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்த வளாகத்துக்கு வாடகை நிர்ணயிப்பதில் அரசாணை 285-ஐ சுட்டிக் காட்டும் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் முதல் மாடியில் 2 ஆயிரம் சதுர அடி இடத்தை ரூ. 20 ஆயிரம் மாத வாடகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு ஒரு விதத்திலும், அஞ்சலகத்துக்கு ஒரு விதத்திலும் வாடகை நிர்ணயிப்பது ஏன்? என்று கீழ்க்கட்டளை பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நகர்மன்றத் தலைவர் உறுதி:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது இப்பகுதி மக்களின் கோரிக்கை அடிப்படையில் நகராட்சி வணிக வளாகத்தில் இடம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லாவரம் நகர் மன்றத் தலைவர் இ. கருணாநிதி உறுதி அளித்திருந்தார்.
ஆனால், வாடகை நிர்ணயிப்பதில் நகராட்சி அதிகாரிகள் நடந்துக் கொள்ளும் போக்கு நகர்மன்றத் தலைவரின் உறுதி நிறைவேறுவதை தடுப்பதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
வருவாய் இழப்பு:
மேலும், சந்தை மதிப்புப் படி சதுர அடி ரூ. 10 வீதத்தில் வாடகைக்கு விட்டிருந்தால் மாதம் ரூ. 75 ஆயிரம் வீதம் கடந்த 9 ஆண்டுகளில் நகராட்சிக்கு ரூ. ஒரு கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். இந்த வருவாய் நகராட்சிக்கு இழப்பாக மாறியுள்ளது. வணிக வளாகமும் பாழாகும் நிலையில் உள்ளது.
அதிகாரிகளின் இந்தப் போக்கு காரணமாக கீழ்க்கட்டளை பகுதி மக்களுக்கு அஞ்சலக வசதி கிடைப்பதும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் மட்டுமல்ல...:
1985-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை காரணமாக பல்லாவரம் போன்று பல்வேறு நகராட்சிகளுக்கு சொந்தமான வளாகங்களை வாடகைக்கு விடுவதில் சிக்கல் நிலவுகிறது.
இதனால், பல்வேறு நகராட்சிகளுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணை தொடர்பான பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்க்கட்டளை பஸ் நிலைய வளாகத்தில் மெகாசிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் ரூ. 68 லட்சத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது.
தரைதளத்தில் தலா 144 சதுர அடி பரப்பளவில் 44 கடைகள் உள்ளன.
2770 சதுர அடி, 2800 சதுர அடி, 815 சதுர அடி என முன்று பிரிவுகளைக் கொண்டதாக முதல் தளம் கட்டப்பட்டது.
ஒரு சதுர அடிக்கு ரூ. 10 என்ற அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 92-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தரை தளத்தில் உள்ள 43 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு கடையில் நகராட்சியின் வரி வசூலிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் உள்ள வணிக பகுதிகள் கடந்த 9 ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறை 29-04-1985-ல் பிறப்பித்த அரசாணை 285-ன் படி நகராட்சி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகையே காரணமாக கூறப்படுகிறது.
கீழ்க்கட்டளை பகுதியில் தனியார் கட்டடங்களில் செயல்படும் வங்கிகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அளிக்கும் வாடகையைவிட நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்படும் வாடகை 200 மடங்கு அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.
உதாரணமாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வளாகத்தில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசாணை எண் 285-ஐ சுட்டிக்காட்டி நகராட்சி அதிகாரிகள் 970 சதுர அடி இடம் தருவதாகவும் அதற்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை தர வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை காவல் துறை ஏற்காததால் 637 சதுர அடி இடத்தை ரூ. 16,500 வாடகையில் அளிக்க நகராட்சி அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இதே அளவு இடத்தை ரூ. 6,000 மாத வாடகைக்குப் பெற்று காவல் நிலையம் தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது.
அஞ்சலகம்...:
இந்நிலையில், கீழ்க்கட்டளை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை அடிப்படையில் இங்கு அஞ்சலகம் தொடங்க தபால்துறை முடிவு செய்தது. இதற்காக 750 சதுர அடி இடம் கேட்டு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி கடிதம் எழுதினார்.
இதற்கு 26-9-2008-ல் பதில் அளித்த நகராட்சி ஆணையர், கீழ்க்கட்டளை வணிக வளாகத்தில் 2770 சதுர அடி, 2880 சதுர அடி அளவு இடங்கள் மட்டுமே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 285-ன் படி வாடகை செலுத்த சம்மதம் தெரிவித்தால் இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
ஆனால், கீழ்க்கட்டளை அஞ்சலகத்துக்கு 815 சதுர அடி நிலத்தை ரூ. 25 ஆயிரம் மாத வாடகை தர வேண்டும் என நகராட்சி சார்பில் கோரப்பட்டது. மேலும், 9 மாத வாடகையை முன்பணமாகத் தர வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது கீழ்க்கட்டளை பகுதியில் சந்தை நிலவரத்தைவிட அதிகமாக உள்ளதாகக் கூறி இதனை ஏற்க தபால்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்த வளாகத்துக்கு வாடகை நிர்ணயிப்பதில் அரசாணை 285-ஐ சுட்டிக் காட்டும் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் முதல் மாடியில் 2 ஆயிரம் சதுர அடி இடத்தை ரூ. 20 ஆயிரம் மாத வாடகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு ஒரு விதத்திலும், அஞ்சலகத்துக்கு ஒரு விதத்திலும் வாடகை நிர்ணயிப்பது ஏன்? என்று கீழ்க்கட்டளை பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நகர்மன்றத் தலைவர் உறுதி:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது இப்பகுதி மக்களின் கோரிக்கை அடிப்படையில் நகராட்சி வணிக வளாகத்தில் இடம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லாவரம் நகர் மன்றத் தலைவர் இ. கருணாநிதி உறுதி அளித்திருந்தார்.
ஆனால், வாடகை நிர்ணயிப்பதில் நகராட்சி அதிகாரிகள் நடந்துக் கொள்ளும் போக்கு நகர்மன்றத் தலைவரின் உறுதி நிறைவேறுவதை தடுப்பதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
வருவாய் இழப்பு:
மேலும், சந்தை மதிப்புப் படி சதுர அடி ரூ. 10 வீதத்தில் வாடகைக்கு விட்டிருந்தால் மாதம் ரூ. 75 ஆயிரம் வீதம் கடந்த 9 ஆண்டுகளில் நகராட்சிக்கு ரூ. ஒரு கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். இந்த வருவாய் நகராட்சிக்கு இழப்பாக மாறியுள்ளது. வணிக வளாகமும் பாழாகும் நிலையில் உள்ளது.
அதிகாரிகளின் இந்தப் போக்கு காரணமாக கீழ்க்கட்டளை பகுதி மக்களுக்கு அஞ்சலக வசதி கிடைப்பதும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் மட்டுமல்ல...:
1985-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை காரணமாக பல்லாவரம் போன்று பல்வேறு நகராட்சிகளுக்கு சொந்தமான வளாகங்களை வாடகைக்கு விடுவதில் சிக்கல் நிலவுகிறது.
இதனால், பல்வேறு நகராட்சிகளுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணை தொடர்பான பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
