வெள்ளி, 30 ஜூலை, 2010

தனியார் குடியிருப்புகளாக மாறும் அரசு ஒதுக்கீட்டு மனைகள்

  அரசு ஒதுக்கீட்டின்கீழ் பெற்ற மனைகளில் தனியார் குடியிருப்புகள் கட்டுவது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இது விதிகளுக்கு மாறானது இல்லை என தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.



தனியார் குடியிருப்புகளாகும் அரசு ஒதுக்கீட்டு மனைகள் என்ற தலைப்பில் தினமணியில் திங்கள்கிழமை வெளியான செய்தி தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள விளக்கம்:


வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து ஒதுக்கீடு பெற்ற மனையையோ அல்லது வீட்டையோ, ஒதுக்கீடு பெற்றதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது என்றும், அப்படி விற்பதானால் வீட்டுவசதி வாரியத்திடம்தான் விற்க வேண்டும் என்றும், வீட்டுவசதி வாரிய விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது.÷இந்த விதிமுறை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், 2003-ம் ஆண்டு அடியோடு நீக்கப்பட்டுவிட்டது.


முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எச்.பி.என். ஷெட்டியின் மகன் தீபக் என பலரும் அந்தந்த மனைகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டியிருப்பதாகத் தெரிகிறது.


இதேபோன்று சைதை துரைசாமி தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுவசதி வாரிய மனையை மேம்படுத்தி வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.


இவர்களை போலவே, அரசு விருப்ப ஒதுக்கீட்டு முறையில் மனைகள் ஒதுக்கீடு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அவ்வாறு ஒதுக்கீடு பெற்ற மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ, வர்த்தக வளாகங்களாகவோ மேம்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். இதில் வீட்டுவசதி வாரியத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை.


சென்னை அண்ணா நகரை சேர்ந்த பர்வின் ஜாபர், நந்தம்பாக்கத்தை சேர்ந்த துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் அப்போதைய சந்தை விலைக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.


ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த மனைகளுக்குரிய தொகையை பல்வேறு தவணைகளில் செலுத்தி சொந்தமாக்கிக் கொண்டு விற்பனைப் பத்திரங்களையும் பெற்றுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து அந்தந்த மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக அவர்கள் மேம்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த மாதிரி செய்வது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதால், இது எந்த வகையிலும் வீட்டுவசதி வாரியத்தின் விதிகளுக்கு முரண்பாடானது இல்லை என வீட்டுவசதி வாரியம் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வியாழன், 22 ஜூலை, 2010

தனியார் குடியிருப்புகளாகும் அரசு ஒதுக்கீட்டு மனைகள்!

அரசின் விருப்ப உரிமை பிரிவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளை பெற்ற சிலர், தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

  

அரசு ஒதுக்கீட்டின் வீட்டு மனை பெற காத்திருப்போர் மற்றும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மத்தியில் இந்த மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதிய மனைப் பிரிவுகளையும், குடியிருப்புகளையும் உருவாக்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. 

 இவ்வாறு உருவாக்கப்பட்ட மனைகள், குடியிருப்புகளில் 85 சதவீதத்தை வீட்டுவசதி வாரியம், குறைந்த வருவாய் பிரிவு, உயர் வருவாய் பிரிவு, அரசு ஊழியர்கள், பொது போட்டி, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் என வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறது.  எஞ்சிய 15 சதவீத மனைகள், குடியிருப்புகள் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 

 இவ்வாறு அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிகளை மீறி பலர் வீடு, மனை ஒதுக்கீடு பெறுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. இந்த புகார்கள் மீது எப்போதாவது விசாரணையும் நடத்தப்படுவது உண்டு.

 இந்த புகார்கள் ஒரு புறம் இருந்தாலும், இவ்வாறு மனைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களுக்கு சென்னையில் சொந்த வீடு இல்லை எனக்கூறி விண்ணப்பித்ததன் அடிப்படையில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பர்வீன் ஜாபருக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில் திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் அரசின் விருப்ப உரிமை பிரிவின் கீழ் 540-வது மனை 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

 4,756 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை ரூ. 1.26 கோடி மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பர்வீன் ஜாபர் தரப்பில் இருந்து 2 தவணைகளில் இதற்கான தொகை வீட்டு வசதி வாரியத்திடம் செலுத்தப்பட்டு விற்பனை பத்திரமும் பெறப்பட்டுவிட்டது.

இதேபோல, தங்களுக்கும் சென்னையில் வசிக்க சொந்தமாக வீடு இல்லை என்று கோரியதன் அடிப்படையில் அரசின் விருப்ப உரிமை பிரிவின்கீழ், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த இரா. துர்கா சங்கர் என்பவருக்கு, வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில் திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் 538-வது மனை 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 4,668 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை ரூ. 1.12 கோடி மதிப்பில் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதற்கான தொகையை இவரும் உடனடியாக முழுமையாக செலுத்தி விற்பனை பத்திரத்தையும் பெற்றுவிட்டார். 

 இவ்வாறு ஒரே இடத்தில் அடுத்தடுத்து உள்ள மனைகளை அரசின் விருப்ப உரிமையின் கீழ் ஒதுக்கீடு பெற்ற பர்வீன் ஜாபர், துர்கா சங்கர் ஆகியோர் பிரபல தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரை பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு கூட்டாக புதிய குடியிருப்பு ஒன்றை அந்த நிலத்தில் கட்டியுள்ளனர்.

 2 மனைகளையும் ஒன்றாக சேர்த்து மொத்தம் 9,424 சதுர அடியில், 12 வீடுகளை கொண்ட 4 மாடி குடியிருப்பை 2009-ம் ஆண்டு தொடங்கி சில மாதங்களுக்கு முன்னர் கட்டி முடித்தனர். தற்போது இதில் அனைத்து வீடுகளையும் அவர்கள் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

 ஒரு சதுர அடி ரூ. 8 ஆயிரம் என்ற அடிப்படையில் இந்த குடியிருப்புகள் முற்றிலுமாக வர்த்தக நோக்கத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

என்ன தவறு? 

இவர்களை போல பல்வேறு பகுதிகளிலும் ஏதாவது காரணம் கூறி அரசிடம் இருந்து வீட்டு மனைக்கான ஒதுக்கீடு பெற்ற பலரும் இதுபோல தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்தில் புதிய குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.


 மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. இருப்பினும், உள்ளார்ந்து பார்க்கும் போது, அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீடு என்பது சொந்தமாக வீடு இல்லை என்று கோருபவர்களின் வீட்டு வசதித் தேவையைப் பூர்த்தி செய்யவே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 

 ஆனால், இவ்வாறு அரசிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஒதுக்கீடு பெற்றவர்கள் தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம் என அரசு ஒதுக்கீட்டின் வீடு, மனை பெற விண்ணப்பித்து காத்திருப்போர் கேள்வி எழுப்புகின்றனர். 

வீட்டுவசதி வாரியத்தின் நிலை என்ன?  

ஒதுக்கீடு பெற்றவர்கள் அதற்கான முழுத் தொகையையும் செலுத்தி விற்பனை பத்திரத்தை பெற்றுவிட்டால், அந்த மனை அவர்களுக்கு சொந்தமாகி விடுகிறது. அதன் பின்னர் அதில் அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் தலையிட முடியாது என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

திங்கள், 14 ஜூன், 2010

ஒரு வழக்கில் இரு வேறு உத்தரவு; தகவல் ஆணையத்தில் குழப்பம்

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல் முறையீட்டு வழக்கில் 2 தகவல் ஆணையர்கள், இரு வெவ்வேறு வித உத்தரவை பிறப்பித்துள்ளனர். தகவல் ஆணையர்களின் இத்தகைய நடவடிக்கையால் தகவல் கோருபவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.







தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசின் விருப்புரிமை பிரிவின் கீழ் காவல் துறை, நீதித்துறையைச் சார்ந்த குறிப்பிட்ட சில முக்கிய நபர்கள் வீடுகளை பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களுக்கு ஆளான நபர்கள் இவ்வாறு புதிய சொத்துகள் வாங்கியது தொடர்பாக அந்தந்த துறை தலைமைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்பது விதி.






இந்த விதிப்படி அதிகாரிகள் தங்களது புதிய சொத்துகள் குறித்து தகவல் தெரிவித்தார்களா என்ற விவரங்களை அளிக்குமாறு, சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை தலைமை அலுவலகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆகியவற்றுக்கு மனு செய்திருந்தார்.






ஆனால், இந்த மனுக்களை பெற்ற அந்தந்தத் துறைகளின் பொது தகவல் அதிகாரிகள் உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து, இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.






இந்த மனுக்களில் டிஜிபி அலுவலகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகியவை தொடர்பான மனுக்களை தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன் விசாரித்தார்.






மனுதாரர் கோரும் தகவல்களை அவருக்கு அளித்துவிட்டு, அது குறித்து ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என டிஜிபி அலுவலக பொது தகவல் அதிகாரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தனித்தனியாக உத்தரவிட்டார்.






இதேபோல, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறுமற்றொரு மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஜி. ராமகிருஷ்ணன், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உயர் நீதிமன்ற பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.






இந்த 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சட்டப்படி 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறையினர் மனுதாரருக்கு உரிய தகவல்களை அளித்திருக்க வேண்டும். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 3 துறைகளின் பொது தகவல் அதிகாரிகளும் மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.






இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்தார்.






இந்த 3 மேல் முறையீட்டு மனுக்களையும் தகவல் ஆணையர் ஆர். பெருமாள்சாமி அண்மையில் விசாரித்தார். இதில் உயர் நீதிமன்றம், டிஜிபி அலுவலகம் தொடர்பான மனுக்களை தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அவர் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த அவர், பொது தகவல் அதிகாரிகளின் பணிச்சுமை குறித்து அறிந்து கொள்ளுமாறு மனுதாரருக்கு அறிவுரை கூறியுள்ளார்.






இதே வழக்கில், தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர்ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் எந்தக் கருத்தையும் தனது உத்தரவில் தகவல் ஆணையர் பெருமாள்சாமி குறிப்பிடவில்லை.






எனவே, இவரது உத்தரவு காரணமாக முந்தைய உத்தரவுகளின் அமலாக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரே வழக்கில் முந்தைய உத்தரவுக்கு மாறாக மற்றொரு தகவல் ஆணையர் புதிய உத்தரவு பிறப்பிப்பது தகவல் ஆணையத்தின் பணிகள் குறித்த குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதன், 28 ஏப்ரல், 2010

காவலர்கள் உயர் கல்விக்கு ஆட்சேபணையில்லா சான்றிதழ் அளிப்பதில் தாமதம் ஏன்?

  சென்னையில் உயர் கல்வி பயில விரும்பும் காவலர்களுக்கு அதற்கான அனுமதி மற்றும் ஆட்சேபணையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகக் காவல் துறையில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆகிய பிரிவுகளுக்கு பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சியை கல்வித் தகுதியாகக் கொண்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் காவலர்களாக பணியாற்றிக் கொண்டு அஞ்சல் வழியில் பட்டப்படிப்பை முடித்தால் அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று உயர் பதவிகளுக்கு விரைந்து செல்ல முடியும்.

பணியிலிருக்கும் காவலர்கள் தங்கள் துறை மேலதிகாரிகளின் சான்றுடன் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட சில சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. 

காவல் துறையில் சாதனை படைப்பதை தங்கள் வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ள ஏராளமான இளைஞர்கள் முதலில் காவலர்களாக இத்துறையில் கால் பதித்துவிட்டு அதன் பின்னர் பட்டப்படிப்பு முடித்து உயர் பதவிகளுக்கு வருவது வழக்கமான ஒரு நடைமுறையாகும்.

இப்போதைய நிலையில் இவ்வாறு காவல் பணியில் சேரும் ஆயிரம் பேரில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மேற்படிப்பில் சேர விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது தமிழகக் காவல் துறையில் சுமார் 6 ஆயிரம் பேர்  ஆயுதப்படை, சிறப்புப் போலீஸ் படையில் உள்ளனர். 

இதில் சென்னையில் மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவலர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியாக பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் முதலில் மாநகரப் போலீஸில் உள்ள நிர்வாகப் பிரிவில் இருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழும், துறை சார்ந்த பணியை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.


  இவ்வாறு அனுமதி மற்றும் ஆட்சேபணையில்லா சான்றிதழ் பெற சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மாநகரப் போலீஸ் நிர்வாகப் பிரிவில் விண்ணப்பித்தனர். இந்த மனுக்கள் மீது நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் இதுவரை எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்து வருவதாக காவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


இதனால் தங்களது உயர் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு தங்களது பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என அந்தக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

முடங்கியுள்ள வீட்டுவசதி வாரிய இணையதளம்

 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முடங்கியுள்ளது.







தமிழகத்தில் அனைத்து விதமான வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புத் தேவைகளை நியாயமான விலையில் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடங்கப்பட்டது.






இந்த வாரியம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், நிலங்களை கையகப்படுத்தி மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி குலுக்கல் மூலம் உரிய நபர்களுக்கு ஒதுக்கி வருகிறது.






இத்தகைய பணிகளில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.






இதற்காக தகவல் தேவைப்படும் அனைவரும் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களை நேரடியாக அணுகுவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும், இவ்வாறு அணுகும் பொதுமக்களுக்கு உரிய தகவல்களை உடனடியாக அளிப்பதில் அதிகாரிகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறப்படுகிறது.






இணையதளம் தொடக்கம்: இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டது.






தொடக்கத்தில் வீட்டுவசதி வாரியத்தின் அடிப்படைத் தகவல்களை மட்டும் உள்ளடக்கியதாக இந்த இணையதளம் இருந்தது.






பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து, இந்த இணையதளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில், வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட- ஒதுக்கீடு செய்யப்படாத மனைப் பிரிவுகள், குடியிருப்புகள், வீடுகள் குறித்த முழுமையான விவரங்கள் இடம் பெற்றிருந்தன.






மேலும், மனைப் பிரிவுகள், குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்துக்கு செலுத்திய- செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்த விவரங்களையும் அவரவர் இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த இணையதளம் அமைந்திருந்தது.






வீட்டுவசதி வாரியத்தின் புதிய திட்டங்கள், குலுக்கல் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களுடன், வீட்டுவசதி வாரியத்துக்கு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் தொடர்பான விவரங்களையும் இணையதளம் மூலம் அறிய முடிந்தது. www.tnhb.gov.in என்ற முகவரியில் இயங்கி வந்த இணையதளம் கடந்த 6 மாதங்களாக முடங்கியுள்ளது.






இதனால், வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு விவரங்களை பெறுவதற்கு மக்கள் அந்தந்த பிரிவு அலுவலகங்களையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏராளமானோர் தகவல்களுக்காக அலுவலர்களை தொடர்பு கொள்வதால் அவர்களிடமும் சலிப்பு ஏற்படுகிறது.






இது தேவையற்ற அலைச்சலையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது என ஒதுக்கீட்டுதாரர்களும், ஒதுக்கீடு பெற முனைவோரும் புகார் தெரிவித்தனர்.






தீர்வு எப்போது? இணையதளத்தை மேலும் புதுப்பொலிவாக்க வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கடந்த ஆண்டு திட்டமிட்டனர்.






இதற்கான பணி அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவர்கள் பணி முடிந்தவுடன் விரைவில் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன், 21 ஏப்ரல், 2010

தினமணி செய்தி எதிரொலி: கோயம்பேடு கோயில் நில விவகாரம்: ஓசோன் குழுமம் ஆவணங்களை சமர்ப்பிக்க மேயர் ஆணை

 சென்னை கோயம்பேடில் மெட்ரோசோன் திட்டப் பகுதியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் ஒரு பகுதியில் தாற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் அலுவலகத்தை அகற்றுமாறு மேயர் மா. சுப்பிரமணியன் ஆணையிட்டார்.

திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 1.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றத்திலும் அளிக்கப்பட்ட உறுதி மீறப்படுவதாக கூறப்படும் புகார்கள் தொடர்பான செய்தி "தினமணி'யில் கடந்த 19-ம் தேதி வெளியானது.

இதன் எதிரொலியாக பிரச்னைக்குரிய நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சம்பந்தப்பட்ட திட்டப் பகுதியை மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்,
கமிஷனர் பொறுப்பு வகிக்கும் ஆஷிஸ் சாட்டர்ஜி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஓசோன் குழுமத்தின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக தூண்கள் அமைப்பதற்காக இங்கு எந்திரங்கள் மூலம் துளையிடுவதால் தங்கள் கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்படுவதாக இதற்கு பின்பக்கத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.

எனவே, இவ்வாறு அதிர்வுகள் ஏற்படாத வகையில் வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த பரிசீலிக்குமாறு ஓசோன் குழும பொறியாளர்களை மேயர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

100 அடி சாலையை (ஜவஹர்லால் நேரு சாலை) பாடிக்குப்பம் பகுதியுடன் இணைக்கும் வகையில் விடப்பட்டுள்ள 12 மீட்டர் அகல சாலைக்கான நிலத்தை மேயர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் இந்த திட்டப்பகுதியில் காலியாக விட வேண்டிய 4 ஏக்கர் நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை மேயர் ஆய்வு செய்தார்.

கோயில் நிலம்: 

ஓசோன் குழுமத்தின் திட்டப்பகுதியின் நடுவில் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்: 230/2}ல் உள்ள 1.36 ஏக்கர் நிலத்தை மேயர் ஆய்வு செய்தார். இந்த நிலத்தை 12 மீட்டர் சாலையுடன் இணைக்கும் வகையில் 7.2 மீட்டர் அகல சாலைக்கு நிலம் விடப்படாமல் இருந்தது குறித்து ஓசோன் குழும பிரதிநிதிகளிடம் மேயர் விளக்கம் கேட்டார்.

இந்த நிலத்துடன் இணைப்பு சாலைக்கு விட வேண்டிய நிலத்தையும் சேர்த்து உடனடியாக முள்கம்பி வேலி அமைப்பதாக ஓசோன் குழும பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.

தாற்காலிக அலுவலகம்: இதன் பின் சர்வே எண் 227/3}ல் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 41 சென்ட் நிலத்தையும் மேயர் ஆய்வு செய்தார்.

அந்த நிலத்தில் ஓசோன் குழுமத்தின் "மெட்ரோசோன்' பிரிவு தாற்காலிக அலுவலகத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது குறித்து அதிகாரிகளிடமும், அந்த நிறுவன பிரதிநிதிகளிடமும் மேயர் விசாரித்தார்.

""2007}ம் ஆண்டு இந்த அலுவலகம் கட்டப்பட்டதால், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 2008}ல் உச்ச நீதிமன்றம் "எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும்' என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவது ஆகாது'' என ஓசோன் குழும பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.

ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கும் போது இந்த நிலம் எப்படி இருந்தது என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அப்படி தெரிவிக்கப்பட்ட விவரங்களில் தாற்காலிக அலுவலகம் இருப்பது உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்த ஆவணங்களை உடனடியாக சமர்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள தாற்காலிக அலுவலகத்தை அகற்றிவிட்டு நிலத்தைச் சுற்றி முள்கம்பி வேலி போட வேண்டும் என மேயர் மா. சுப்பிரமணியன்
உத்தரவிட்டார்.

மீறப்படும் அரசின் உறுதிமொழி

  சென்னை கோயம்பேடு சந்திப்பில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலத்தை பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் சி.எம்.டி.ஏ. விதித்த நிபந்தனைகள் தனியார் கட்டுமான நிறுவனத்தால் மீறப்படுவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதி மொழி மீறப்படுவதாக கூறப்படுகிறது.
 
கோயம்பேடு சந்திப்பில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3.03 ஏக்கரை உள்ளடக்கிய 42 ஏக்கர் நிலம் ஓசோன் குழுமத்துக்கு ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரீஸ் நிறுவனத்தால் விற்கப்பட்டது. 
 
இந்த நிலத்தில் பிரமாண்ட குடியிருப்புத் திட்டத்தை மேற்கொள்ள ஓசோன் குழுமம் முடிவு செய்தது. இதற்கான திட்ட அனுமதி கோரும் மனுவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2003-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ. மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 
அப்போது இந்த பிரச்னையில் அனுமதி அளிக்க மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸýம், திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டதன் பேரில் ஓசோன் குழுமத்தின் திட்ட அனுமதி விண்ணப்பத்துக்கு ஒப்புதல் தருவது நிறுத்தி வைக்கப்பட்டது. 
 
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
 
ஆனால், சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர்த்து மற்ற நிலங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் 2009-ல் அதே விண்ணப்பத்துக்கு சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதி வழங்கியது.
 
சி.எம்.டி.ஏ.வின் நிலைப்பாடு கோயில் நிலத்தை மீட்கும் இந்து சமய அறநிலையத்துறையின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விரிவான செய்தி தினமணியில் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி வெளியானது.
 
இதன் எதிரொலியாக, ஓசோன் குழுமத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மன்றத்துக்கு தெரிவிக்காமல் முடிவெடுóத்ததற்காக 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
 
சட்டப்பேரவையில்  
 
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஜூலை 16-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதத்துக்கு செய்தித் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைவருமான பரிதி இளம்வழுதி பதில் அளித்தார். 
 
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் 3.03 ஏக்கர் நிலத்தில் 1.26 ஏக்கர் நிலம் ஏற்கெனவே மத்திய அரசின் பொதுப்பணித்துறையால் வாங்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கை 2008 நவம்பர் 7-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்படி நிலம் எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 
 
இதன் அடிப்படையில் 1.77 ஏக்கர் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஓசோன் குழுமத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பரிதி இளம்வழுதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
 
மாநகராட்சியில்
 
 ஜூலை 22-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பான விவாதத்துக்கு மேயர் மா. சுப்பிரமணியன் ""திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என உரிமைக் கோரப்படும் 3.03 ஏக்கர் நிலத்தில் ஓசோன் குழுமத்தின் திட்டப் பகுதியில் அமைந்துள்ள 1.77 ஏக்கர் நிலத்திற்கு வழியாக 7.2 மீட்டர் அகலபாதை குறிப்பிட்டு அந்த நிலத்திலும் எந்தவிதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு அதற்கான உறுதி மொழிபத்திரம் பெறப்பட்டபிறகே கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
 
ஓசோன் விளக்கம் 
 
இந்த விவகாரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தில், எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறாது. அந்த நிலம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் படி தனியாக வைக்கப்படும். மேலும், அதற்கு செல்லும் வகையில் சாலைக்கான நிலமும் விடப்பட்டுள்ளது என ஓசோன் குழுமம் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
போலீஸில் புகார் 
 
ஓசோன் குழுமத்தின் திட்டத்துக்காக அங்கு தூண்கள் அமைப்பதற்காக எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் காரணமாக திட்டப் பகுதிக்கு பின்பக்கத்தில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிர்வுகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
 
இங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மத்தியில், இந்த அதிர்வுகள் காரணமாக தங்கள் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. 
 
ஆனால், இந்த புகார் மீது இதுவரை போலீஸôர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஓசோன் குழும திட்டப் பகுதிக்கு பின்புறம் உள்ள பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
மீறப்படும் உறுதி மொழி 
 
அடுத்த சில மாதங்களில், நிறுத்திவைக்கப்பட்ட கட்டட அனுமதியை மீண்டும் பெற்று கட்டுமானப் பணிகளை திட்ட அனுமதியில் எவ்வித திருத்தமும் செய்யாமல் ஓசோன் குழுமம் தொடங்கியது. 
 
இதில் பிரச்னைக்குரிய 1.77 ஏக்கர் நிலம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தனித்து வைக்கப்படாமல் திட்டப் பகுதியுடன் சேர்த்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
பேரவையில் அமைச்சர் பரிதி இளம்வழுதி அளித்த உறுதிக்கு மாறாக, பிரச்னைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருள்களை வைக்கும் கொட்டகைகள், ஊழியர்கள் தங்கும் கொட்டகைகள் ஆகியவற்றை ஓசோன் குழுமம் அமைத்துள்ளது.
 
மேலும், அந்த நிலத்துக்கு செல்வதற்காக  7.2 மீட்டர் அகலபாதைக்கான நிலம் இதுவரை தனியாக ஒதுக்கப்படவோ, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவோ இல்லை எனவும் தெரியவந்துள்ளது. பிரச்னைக்குரிய நிலத்தை தனியாக வைத்து பராமரிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மீண்டும் தட்டிக்கழித்துள்ளனர். 
 
மேலும், அந்த நிலத்துக்குள் சென்று ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைத்துறையினர் உள்ளிட்ட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஒரு தரப்பினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் இருப்பதும், பிரச்னைக்குரிய நிலத்தை ஓசோன் குழுமம் தனது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதும் முரண்பாடாக அமைந்துள்ளது. 
 
பிரச்னைக்குரிய நிலத்தை அது தொடர்பான வழக்கின் எதிர்தரப்பினரின் கட்டுப்பாட்டில் விட்டுவைப்பது எந்த விதத்தில் நியாயமானதாகும்? மேலும், இதில் மனுதாரர் தரப்பான அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த நிலத்தை பாதுகாத்து வைக்க வேண்டிய இதர துறைகள் எதிர்தரப்புக்கு சாதகமாக செயல்படுவது ஏன்? 
 
கோயில் நிலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் அளிக்கப்பட்ட உறுதி என்ன ஆனது என்பதே இந்து சமய அறநிலையத் துறையினரிடம் இப்போது எழுந்துள்ள கேள்வி.

வெள்ளி, 19 மார்ச், 2010

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத 17 கவுன்சிலர்கள்

  சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் 17 வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை.
 
கடந்த 4 நிதி ஆண்டுகளில் வார்டு  மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியில் சராசரியாக 67 சதவீதம் மட்டுமே செலவிடப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மாநகராட்சி அதிகாரிகள் இத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டு ஆண்டுதோறும் இதற்காக குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
 
மாநகராட்சியின் பல்வேறு துறைகள் மூலம் சுகாதாரம், பள்ளிக் கல்வி, சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குறிப்பிட்ட பகுதிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதி வார்டு உறுப்பினர்கள் நேரடியாக நிதி ஒதுக்கி திட்டங்களைச் செயல்படுத்த இந்த மேம்பாட்டு நிதி அளிக்கப்படுகிறது.
 
இதற்கான வழிகாட்டி நெறி முறைகள் வகுக்கப்பட்டு மன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த 2005}06, 2006}07, 2007}08, 2008}09 ஆகிய நிதி ஆண்டுகளில் வார்டு மேம்பாட்டுக்காக உறுப்பினர்களுக்கு ஒதுப்பட்ட நிதி, அதில் செலவழிக்கப்பட்ட தொகை, செலவழிக்கப்படாத தொகை குறித்த விவரங்களை போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவ், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரியிருந்தார். 
 
மாநகராட்சி பதில்: 
 
இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிதி ஆலோசகர் மற்றும் பொதுத் தகவல் அதிகாரி அளித்துள்ள பதில் விவரம்:
 
மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்துக்காக, 2005}06 நிதி ஆண்டில் ரூ. 1,085 லட்சம் ஒதுக்கப்பட்டதில் ரூ. 967.8 லட்சம் (89.2 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2006}07 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 5.31 கோடி (48.97 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2007}08 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 7.60 கோடி (70.07 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2008}09 நிதி ஆண்டில், ரூ. 23.25 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 14.76 கோடி (63.5 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2009}2010 நிதி ஆண்டில் ரூ. 38.75 கோடி ஒதுக்கப்பட்டதில் டிசம்பர் மாதம் வரை ரூ. 9.74 கோடி (25.14 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.5 நிதி ஆண்டுகளில் மொத்தம் ரூ. 94.55 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 47.09 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆண்டு சராசரியாக 67 சதவீத நிதி மட்டுமே செலவிடபட்டுள்ளது.
 
 மேயர்: 
 
இதேபோல மேயருக்கான சிறப்பு மேம்பாட்டு நிதிக்காக 2005}06 முதல் 2009}2010 வரையிலான 5 நிதி ஆண்டுகளில் ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 44.99 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
 
ஒரு பைசா கூட பயன்படுத்தாதவர்கள்: 
 
சென்னை மாநகராட்சியில் உள்ள 10 மண்டலங்களில் 1, 4, 6, 7, 8 ஆகிய மண்டலங்களில் 2005}06 முதல் 2008}09 நிதி ஆண்டு வரை வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை.
 
 
இதேபோல, நடப்பு நிதி ஆண்டில் 97, 98, 99, 100, 101, 102, 103, 106, 108, 111, 113, 114, 116, 117, 118, 121, 128 ஆகிய வார்டுகளில் கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தங்களது பதிலில் குறிப்பிட்டுள்ளனர்.
 
 
இதுவரை வார்டு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 25 லட்சமாக இருந்த மேம்பாட்டு நிதி, வரும் நிதி ஆண்டில் இருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது.

தகவல் அளிக்க கட்டணம் வசூலிப்பதில் குழப்பம்


  கவல் கோரும் மனுதாரர்களுக்கு ஆவணங்களின் நகல்களை அளிக்க கட்டணம் வசூலிப்பதில் அரசு அதிகாரிகளிடம் குழப்பம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிந்க்கின்றனர்.
 
2005ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள, "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்'படி அரசின் நிர்வாக நடைமுறை குறித்த தகவல்களை மக்கள் மனுச் செய்து எழுத்துப்பூர்வமாக பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இவ்வாறு தகவல்களைப் பெற மாநில அரசுத் துறை அலுவலகமானால் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லையை ஒட்டி அனுப்ப வேண்டும். மத்திய அரசுத்துறைகளில் தகவல் கோரும்போது, ரூ.10-க்கான வங்கி வரைவோலை அல்லது அஞ்சல் ஆணையை இணைத்து அனுப்ப வேண்டும்.மனுதாரர் கோரும் தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களின் நகல்களை ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் பெற்றுக் கொண்டு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இவ்வாறு மனுச் செய்யும்போதும், நகல்களைப் பெறும்போதும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு, கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த விலக்கு வரம்பில் வரத் தகுதி இல்லாத மற்ற அனைவரும் உரிய கட்டணங்களை அவசியம் செலுத்தியாக வேண்டும்.இவ்வாறு தகவல்கள் தொடர்பான ஆவணங்களின் நகல்களைப் பெற செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து, தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
 
தகவல் கோரும் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும். தகவல் தொடர்புக்கான நகல்களைப் பெற ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்தக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 0075 அல்லது, 00800 உள்ளிட்ட சில குறிப்பிட்ட கணக்குகளில் செலுத்தி அதற்கான ஒப்புகைச் சீட்டை உரிய பொதுத் தகவல் அதிகாரியிடம் செலுத்தி நகல்களைப் பெறலாம்.
 
நகல்களுக்கான கட்டணங்களை ரொக்கமாகவோ, அஞ்சல் பணவிடை மூலமாகவோ செலுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தமிழக அரசின் பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளிடம் இது குறித்த முழுமையான விவரங்கள் இன்னமும் சென்றடையாத நிலை உள்ளது.
 
குறிப்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை தொடர்பான சில ஆவண நகல்களை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவி கோரியிருந்தாராம்.குறிப்பிட்ட ஒரு சலானைப் பயன்படுத்தி பாரத ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டும் என அங்குள்ள பொதுத் தகவல் அதிகாரி தெரிவித்தாராம்.
 
ஆனால், முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய அலுவலகத்தில் வங்கி வரைவோலை, அல்லது வங்கி காசோலை, அஞ்சல் பணவிடை மூலம் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என மனுதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் அவர்களது அலுவலகத்திலேயே கட்டணத்தை ரொக்கமாகவோ, அல்லது காசோலை மூலமாகவும் பெற்றுக் கொள்கின்றனர்.
 
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகங்களில் தகவல் தொடர்பான ஆவணங்களை அளிப்பதற்கான கட்டணங்களை காசோலை மூலமாகவே பெற்றுக் கொள்கின்றனர்.கட்டணங்களைப் பெறுவதற்கு அரசு தெளிவாக ஒரு நடைமுறையை அறிவித்துள்ள நிலையிலும், ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் வெவ்வேறு விதங்களில் கட்டணங்கள் பெறப்படுகின்றன. இது மனுதாரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 
 
அரசின் அறிவுறுத்தல்கள் அனைத்து நிலைகளுக்கும் முழுமையாகச் சென்றடையாததே இந்தக் குழப்பத்துக்குக் காரணம் எனத் தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
 
இவ்வாறு வெவ்வேறு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் மனுதாரர்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனைத் தடுத்து அனைத்து அலுவலகங்களிலும் ஒரே சீரான நடைமுறை அமலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

திங்கள், 8 மார்ச், 2010

முதல்வரின் முன்னாள் செயலர் டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம்

  முதல்வர் கருணாநிதியின் முன்னாள் செயலரும், மாநில தகவல் ஆணையருமான டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் அளித்துள்ளது தமிழக அரசு.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ஆர். ராமசாமி. முதல்வர் கருணாநிதியின் செயலராக 3 முறை இருந்தவர்.வயது மூப்பு காரணமாக கடந்த 2008}ம் ஆண்டு ஏப்ரல் 5}ம் தேதி டி.ஆர். ராமசாமி ஓய்வு பெற்றார். பின்னர் 2008 மே 7}ம் தேதி இவர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையின் போது டி.ஆர். ராமசாமிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக சில உயர்ரக ஊசி மருந்துகளுடன் கதிரியக்க சிகிச்சையும் அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
 
இந்த சிகிச்சையில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான "ஐஆர்இஎஸ்எஸ்ஏ}250' ரக மாத்திரைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட பரிசோதனை மற்றும் மாத்திரைகள் வாங்கிய வகையில் டி.ஆர். ராமசாமிக்கு ரூ. 5.91 லட்சம் செலவாகியுள்ளது.
 
மேலும், தொடர் சிகிச்சைக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் தனது நிலை குறித்து விளக்கி, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அளிக்குமாறு அரசிடம் டி.ஆர். ராமசாமி கோரியிருந்தார்.
 
இது தொடர்பாக பொள்ளாச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் "தாயகம்' அமைப்பைச் சேர்ந்த நா. பாஸ்கரன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியிருந்தார்.
 
இதற்கு தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை பொது தகவல் அலுவலர் ச.ராமலிங்கம் கடந்த 2}ம் தேதி அளித்த பதில் விவரம்:
 
தகவல் ஆணையர் டி.ஆர். ராமசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.12.54 லட்சத்தை அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை (எண்: 22) பிப்ரவரி 5}ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி டி.ஆர். ராமசாமியின் மருத்துவ செலவுகளுக்காக முதல்கட்டமாக ரூ. 5.91 லட்சத்தை அளிக்கவும், மற்ற சிகிச்சைகள் முடிவடைந்தவுடன் மீதித் தொகையை அளிக்கவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசின் உயர் பதவியில், அதுவும் முதல்வரின் செயலராக பணிபுரிந்த அதிகாரி ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி வழங்குவது அரசின் சுய விருப்பத்தை பொருத்தது.எனினும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரியும்போதும், ஓய்வு பெற்ற சமயத்திலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய வசதிகளை செய்ய முறைப்படியான காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இத்தகைய சலுகைகள் மூலம் கிடைக்கும் உதவிகளுக்கு மாற்றாக, தகவல் ஆணையர் டி.ஆர்.ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அரசே நேரடியாக வழங்கியுள்ளது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வியாழன், 4 மார்ச், 2010

சிமென்ட் விலை: மூட்டைக்கு ரூ.25 உயர்வு?

  மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரி உயர்வை அடுத்து சில்லறை விற்பனையில் சிமென்ட்டின் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.25 வரை அதிகரிக்க உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த விலை உயர்வை இறுதி செய்வது குறித்து முடிவெடுப்பதற்காக உற்பத்தியாளர்களின் ரகசிய கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் 2006 முதல் சிமென்ட் விலையை முறையான காரணங்கள் எதுவும் இன்றி உற்பத்தியாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.÷அரசின் நடவடிக்கையை அடுத்து தவிர்க்க முடியாத நிலையில் சிமென்ட் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த சில மாதங்களுக்குள் விலை உயருவது தொடர்கதையாகிவிட்டது.
 
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூட்டை ரூ.260 ஆக உயர்ந்த சிமென்ட் விலை அக்டோபரில் ரூ.245 ஆக குறைந்தது. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் சிமென்ட் அளவு படிப்படியாக அதிகரித்தது. 
 
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த டிசம்பரில் சில்லறை விற்பனையில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.200 ஆக குறைந்தது.இருப்பினும் இந்த விலை குறைப்பு குறுகிய காலமே நீடித்தது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து சிமென்ட் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வார நிலவரப்படி ஒரு மூட்டை சிமென்ட் ரூ.240 வரை விற்கப்பட்டது.
 
 
உற்பத்தி வரி உயர்வு: 
 
கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சிமென்ட் உள்ளிட்ட பொருள்கள் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை விலை ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், ஒரு மூட்டை விலையை ரூ.25 வரை உயர்த்த தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.÷டீசல் விலை உயர்வு, மூலப்பொருள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்த விலை உயர்வை உற்பத்தியாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
 
விலை உயர்வு சாத்தியமா? 
 
உற்பத்தியாளர்கள் அறிவிக்கும் விலை உயர்வு அமலாவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக விற்பனையாளர்களும், கட்டுமானத் துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
மேலும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் குறைந்த விலையில் சிமென்ட் கிடைப்பதால் மொத்தமாக கொள்முதல் செய்வோர் தமிழக உற்பத்தியாளர்களை தவிர்த்து வெளிமாநிலங்களில் வாங்க முன்வந்துள்ளனர்.
 
மேலும், இப்போது எல்லா நிறுவனங்களின் உற்பத்தியும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் சிமென்ட் விற்பனை அதிகரிக்கவில்லை.இதனால், உற்பத்தியாளர்கள் முன்பு போல் தங்கள் விருப்பப்படி சிமென்ட் விலையை உயர்த்துவது அவ்வளவு எளிதானதல்ல என கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 1 மார்ச், 2010

தகவல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: 16 தன்னார்வ அமைப்புகள் அரசிடம் வலியுறுத்தல்

  தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.
 
தமிழகத்தில் மாநில தகவல் ஆணையம் 2006}ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ராமகிருஷ்ணனை தலைமை தகவல் ஆணையராகவும்,  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜி. ராமகிருஷ்ணன், ஆர். ரத்தினசாமி ஆகியோரை தகவல் ஆணையர்களாகவும் நியமித்து தமிழக அரசு 12-1-2006-ல் அரசாணை வெளியிட்டது.
 
இதன் பின்னர், டி.ஆர். ராமசாமி, ஆர். பெருமாள்சாமி, டி. ஸ்ரீநிவாசன், பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமித்து 7-5-2008-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
 
பதவிக்காலம்: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நிர்வாக விதிகளின்படி தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது அவர்களின் 65 வயது வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த விதியின்படி, வயது மூப்பு காரணமாக தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து இப்போது தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், ஜி. ராமகிருஷ்ணன் அக்டோபர் மாதத்திலும் ஓய்வு பெறுகின்றனர்.
 
இதனால், 3 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்ப வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 
 
தகுதி என்ன?  
 
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 15 (5)-ன்படி சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இதழியல், வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தகவல் ஆணையர்களாக நியமிக்கலாம்.
 
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் அரசால் நியமிக்கப்பட்ட 7 ஆணையர்களில் 6 பேர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஒருவர் கல்லூரி பேராசிரியர்.பணியில் உள்ள அரசு அதிகாரிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி சரியாக செயல்பட வில்லை என்ற மேல்முறையீட்டு மனுக்களே தகவல் ஆணையத்துக்கு வருகிறது. 
 
இத்தகைய மனுக்களை விசாரிப்பவர்கள் முன்னாள் அதிகாரிகளாக இருக்கும் நிலையில் அவர்களின் விசாரணை மக்களுக்கு எத்தகைய திருப்தியை தரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதனால், மாநிலத் தகவல் ஆணையத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் திருப்தியின்மையே நிலவுகிறது. 
 
வெளிப்படையான நியமனம்:  
 
எனவே, அடுத்த சில மாதங்களில் 3 தகவல் ஆணையர்களை நியமிக்கும் போது, அதற்கான நடவடிக்கைகளை அரசு வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
 
நாளேடுகளில் விளம்பரம் செய்து, சட்டத்தில் குறிப்பிட்டுள்ள துறைகளை சேர்ந்தவர்களில் தகுதி வாய்ந்த நபர்களை அரசு சாரா அமைப்புகள் மூலம் ஆய்வு செய்து, அதில் இருந்து உரிய நபர்களை தேர்ந்தெடுத்து தகவல் ஆணையர்களாக நியமிக்கலாம் என பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
 
இது தொடர்பாக, பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த வி. மாதவ், அஜீத் மேனன், அருண் கோபாலன், அரவிந்த் கெஜ்ரிவால், எம். விஜயபாஸ்கர், பத்திரிகையாளர் நித்யானந்த் ஜெயராமன், வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், வி. கிருஷ்ணகாந்த், பேராசிரியர் வி. வசந்திதேவி, விஜயானந்த் உள்ளிட்ட 16 பேர் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
 
தமிழக அரசின் தலைமைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஆகியோருக்கு இது தொடர்பான மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

குரல் மூலமே புகார்களை பதிவு செய்யலாம்: டிஜிபி அலுவலகத்தில் புதிய வசதி


  குற்ற நிகழ்வுகள் மற்றும் காவல்துறை சேவைகளில் ஏற்படும் குறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்ய சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குரல் மூலமே புகார்களை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோர் தங்கள் புகார்களை போலீஸôருக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக தங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.
 
குறிப்பிட்ட சில நிகழ்வுகள் தவிர்த்து பெரும்பாலான குற்ற நிகழ்வுகளில் இத்தகைய நடைமுறையிலேயே போலீஸôரின் நடவடிக்கைகள் தொடங்கும்.இவ்வாறு புகார்களை அளிக்க பொதுமக்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களையே நாட வேண்டியுள்ளது. 
 
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளூரில் அரசியல் செல்வாக்கு மிக்கவராகவோ அல்லது செல்வாக்கு மிக்கவரின் நெருக்கமானவராகவோ இருந்தால் போலீஸôரிடம் புகார் தெரிவிப்பது என்பதே பொது மக்களுக்கு எளிதானதாக இருப்பதில்லை.
 
இத்தகைய சூழலில் விவரம் தெரிந்தவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையத்தை தாண்டி உயர் அதிகாரிகளை நேரில் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை அளிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
 
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதி காவல் நிலையத்தை தொடர்புக் கொள்வதில் பிரச்னை ஏதும் இருந்தாலோ அல்லது, போலீஸôரின் சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலோ அது பற்றி காவல் துறை தலைமைக்கு தெரிவிக்க முடியாமல் போகிறது.
 
சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடைபெற்றால் அது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்பது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
 
இத்தகைய பிரச்னைகளை தீர்க்க சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக புகார்கள் பெறப்படுகின்றன.இருந்தாலும், குற்ற நிகழ்வுகள் மற்றும் போலீஸôரின் பணிகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து காவல் துறை தலைமையிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க முடியாத சூழல் நிலவியது.
 
இதற்கு தீர்வாக சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகமான டிஜிபி அலுவலகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு அதன் மூலம் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இதில் மேலும் ஒரு வசதியாக பொது மக்கள் தங்கள் குரலிலேயே புகார்களை பதிவு செய்ய புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள், 044-28447200- என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அதில் ஆங்கிலம், தமிழ் மொழி அறிவிப்புகளைத் தொடர்ந்து "பீப்' என்ற சப்தம் ஒலிக்கும். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.
 
இவ்வாறு, தானியங்கி தொலைபேசி எண்ணுக்கு வரும் புகார்கள் குரல் பதிவையே அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்படும்.இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமையகத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். 
 
 
மேலும், புகார் அளித்தவரின் அடையாளமும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.சில ஆண்டுகள் முன்பே திட்டமிடப்பட்டாலும் அண்மையில் தான் இந்த சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பகட்டத்திலேயே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்!



  கவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களில் தங்கள் துறை சாராத கேள்விகள் இருந்தால்,​​ அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல்,​​ மனுதாரருக்கே சில பொது தகவல் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாகப் புகார் எழுந்துள்ளது.
 
இவ்வாறு திருப்பி அனுப்புவது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மீறுவதாகும்.​ எனவே,​​ இத்தகைய அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
 
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள்,​​ நீர் வரத்துக் கால்வாய்கள்,​​ சாலைகள்,​​ பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும்,​​ அவற்றை அகற்ற பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள்,​​ அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிக்க தகவல்களை அளிக்குமாறு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பி.கல்யாணசுந்தரம் என்பவர் வருவாய் துறையிடம் கோரி இருந்தார்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் விண்ணப்பித்து தகவல்களை பெறலாம்.இதன்படி,​​ வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர் என்பதற்கான அரசின் சான்றிதழின் நகலுடன் கல்யாணசுந்தரம் தனது மனுவை வருவாய்த் துறைக்கு கடந்த மாதம் 4}ம் தேதி அனுப்பினார்.
 
வருவாய் துறை பதில்:​​ 
 
இது தொடர்பாக வருவாய்த் துறையின் சார்பு செயலரும் பொது தகவல் அதிகாரியுமான முஹமத் இலியாஸ் பாஷா,​​ ஜனவரி 27-ம் தேதி மனுதாரருக்கு கடிதம் ​(எண்:​ 1008/நி.மு.​ 6 ​(2)10}1) ஒன்றை அனுப்பினார்.
 
அதில்,​​ "தங்கள் மனுவில்,​​ தகவல்களை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது.இருப்பினும் அதற்கான ரூ.​ 10-க்கான கட்டண வில்லை ஒட்டப்படவில்லை.​ எனவே,​​ தங்கள் மனு அசலாக தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.​
 
மேலும்,​​ ஏரி,​​ குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால்,​​ இது குறித்து பொதுப் பணித் துறையினை அணுகுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சட்டம் சொல்வது என்ன?​ 
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6 ​(3 ​(2))-ன் படி,​​ தகவல் கோரி வரும் மனுக்களில் உள்ள கேள்விகள் வேறு ஒரு அதிகார அமைப்பின் செயற்பணிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக இருந்தால்,​​ சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு ​(துறைக்கு)​ மாற்றம் செய்து,​​ அது குறித்து விண்ணப்பதாரருக்கு தெரிவித்தல் வேண்டும்.
 
சட்டத்தில் இப்படி இருக்க,​​ தங்கள் துறைக்கு சாராத கேள்விகள் அடங்கிய மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல் வருவாய்த் துறையினர் ​ விண்ணப்பதாரருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
மேலும், ​​ வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட்ட சலுகையான கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்பதையும் ஏற்க மறுத்துள்ளனர்.
 
வருவாய்த் துறை மட்டுமல்ல,​​ ஆதிதிராவிடர் நலத் துறை,​​ பணியாளர் நலத் துறை,​​ சென்னை மாநகராட்சி ​ உள்ளிட்ட துறைகளின் பொது தகவல் அதிகாரிகளும் இதேபோல மனுக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் இத்தகைய பொது தகவல் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விண்ணப்பதாரர்களும்,​​ சமூக ஆர்வலர்களும் ​ வலியுறுத்தியுள்ளனர்.

சனி, 6 பிப்ரவரி, 2010

கொடைக்கானல் வனப்பகுதியில் நக்ஸலைட் ஊடுருவல்?​​: மர்ம நபர்களால் மலைக்கிராமங்களில் பதற்றம்



   கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றித் திரிவதாக அங்குள்ள கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை அதிரடிப்படை போலீஸôர் தீவிரப்படுத்தியுள்ளனர்."மர்ம நபர்கள் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்' என்று போலீஸ் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் பின்தங்கிய மற்றும் எல்லையோர கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பது உறுதியானது.​ இத்தகைய இயக்கங்களை ஒடுக்கும் வகையில் போலீஸôர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 
போலீஸôரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் கொடைக்கானலை அடுத்துள்ள பழனி மேல்மலைப் பகுதிகள்,​​ ​ காடுகளில் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊடுருவினர்.இது குறித்த ரகசிய தகவலின்பேரில் அதிரடிப்படை போலீஸôர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நவீன் பிரசாந்த் கொல்லப்பட்டார்.​ 
 
இதையடுத்து கொடைக்கானல் மற்றும் பழனி மலைப் பகுதிகள்,​​ அதையொட்டியுள்ள காடுகள்,​​ மலைக் கிராமங்களில் அதிரடிப்படை போலீஸôர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
 
மர்ம நபர்கள்...:​​ 
 
இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூக்கால்,​​ மன்னவனூர்,​​ கவுஞ்சி,​​ பூண்டி,​​ போளூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் மர்ம நபர்கள் நடமாடுவதாக அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் இந்த நபர்கள் இரவு நேரங்களில் தனியாக வரும் கிராம வாசிகளிடம் வழிப்பறி செய்வதாகவும் அவர்கள் கூறினர்.பணம், ​​ துணிகள்,​​ மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் மிரட்டி வாங்கிக் கொள்வதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவித்தனர்.​ 
 
மன்னவனூர் கிராமத்தில் கைகாட்டி என்னுமிடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனியாகச் சென்ற கிராமவாசி ஒருவரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சித்ததாக மன்னவனூர் கிராம மக்கள் போலீஸôரிடம் புகார் தெரிவித்தனர்.
 
கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக இரவு நேரங்களில் போலீஸôர் கிராமங்களில் இருப்பதில்லை.​ இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.​ 
 
மேலும்,​​ இந்த கிராமங்களுக்கு வரும் வெளியாட்களும்,​​ அவர்களது வாகனங்களும் எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் 24 மணி நேரமும் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.இதையடுத்து மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை அதிரடிப்படை போலீஸôர் தீவிரப்படுத்தியுள்ளனர்.​
 
இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸôர் தெரிவித்தனர்.
 
நக்ஸலைட்களா?​​
 
"கிராம மக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் பார்த்தால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் மர்ம நபர்கள் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்' என அதிரடிப்படை போலீஸôருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைத் தொடங்கி தீவிரமாக நடத்தி வந்த முதல் தலைமுறை தலைவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு விட்டனர்.ஆனால், ​​ அவர்களைப் பின்பற்றி வந்த இரண்டாம் தலைமுறையினர் பலர் இப்போதும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.​ 
 
அவர்களது வழிகாட்டுதலில் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட அவ்வப்போது முயற்சித்து வருவதாக போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.​ 
 
இதனையடுத்து,​​ கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை முழுவீச்சில் முடுக்கிவிடுவது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

கம்பி விலை:​ டன்​னுக்கு ரூ.​ 10 ஆயி​ரம் உயர்வு

   மி​ழ​கத்​தில் கட்​டு​மா​னப் பணி​க​ளுக்கு பயன்​ப​டுத்​தப்​ப​டும் இரும்பு கம்​பி​க​ளின் விலை ஒரே வாரத்​தில் டன்​னுக்கு ரூ.​ 10 ஆயி​ரம் வரை உயர்ந்​துள்​ளது.​திடீ​ரென ஏற்​பட்ட இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிப்​ப​தாக விற்​ப​னை​யா​ளர்​கள் மற்​றும் கட்​டு​மா​னத் துறை​யி​னர் தெரி​வித்​த​னர்.​
 
செயில் ​(எஸ்.ஏ.ஐ.எல்.)​,​​ விசாக்,​​ டாடா உள்​ளிட்ட நிறு​வ​னங்​கள் மூலம் நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளுக்கு இரும்பு கம்​பி​கள் வார்க்​கப்​பட்டு கட்​டு​மா​னப் பணி​க​ளுக்கு அனுப்​பப்​ப​டு​கின்​றன.​ அண்​மைக்​கா​ல​மாக சிறிய வார்ப்​பா​லை​க​ளின் எண்​ணிக்​கை​யும் அதி​க​ரித்​துள்​ளது.​​
 
 
விலை உயர்வு:​​ 
 
 
கடந்த 2007}ம் ஆண்​டின் இறு​தி​யில் ஒரு டன் ரூ.​ 25 ஆயி​ர​மாக இருந்த கம்​பி​க​ளின் விலை 2008}ம் ஆண்​டின் தொடக்​கத்​தில் ஒரு டன் ரூ.​ 40 ஆயி​ரம் வரை அதி​க​ரித்​தது.​ இத​னால்,​​ நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளில் கட்​டு​மா​னப்​ப​ணி​கள் முடங்​கும் நிலை ஏற்​பட்​டது.
 
 
​2008}ம் ஆண்​டின் மத்​தி​யில் அதி​க​பட்​ச​மாக ஒரு டன் ரூ.​ 48 ஆயி​ரம் வரை உயர்ந்​தது.​ பல்​வேறு தரப்​பி​ன​ரின் வற்​பு​றுத்​தலை ஏற்று இரும்பு இறக்​கு​ம​திக்​கான வரி விகி​தங்​க​ளில் மத்​திய அரசு சில மாற்​றங்​களை செய்​தது.​ இருப்​பி​னும் இந்த முயற்​சி​கள் உரிய பலனை அளிக்​க​வில்லை.​ஏற் ​று​மதி தொடர்​பா​க​வும் மத்​திய அரசு சில கட்​டுப்​பா​டு​களை விதித்​தது.
 
 
​ இத​னை​ய​டுத்து கம்பி விலை படிப்​ப​டி​யாக குறை​யத் தொடங்​கி​யது.​படிப்​ப​டி​யாக குறைந்த கம்பி விலை கடந்த வாரம் டன்​னுக்கு ரூ.​ 25 ஆயி​ரம் முதல் ரூ.​ 28 ஆயி​ரம் வரை இருந்​தது.​இந்த நிலை​யில்,​​ தற்​போது ஒரு டன் கம்பி விலை ரூ.​ 38 ஆயி​ர​மாக அதி​க​ரித்​தது.​ 
 
 
பெரிய நிறு​வ​னங்​கள் தங்​க​ளது கம்​பி​க​ளின் விலை​யில் ரூ.​ 2 ஆயி​ரம் முதல் ரூ.​ 3 ஆயி​ரம் வரை அதி​க​ரித்​துள்​ளன.​
 
 
கார​ ணம் என்ன?​​ 
 
தமி​ழ​கத்​தில் தற்​போ​தைய நிலை​யில் சுமார் 80 தனி​யார் வார்ப்​பா​லை​கள் செயல்​ப​டு​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் கம்பி தேவை​யில் 70 சத​வீ​தம் இந்த ஆலை​கள் மூலம் பூர்த்தி செய்​யப்​ப​டு​கின்​றன.​
 
கச்சா இரும்பு தாதுவை நிலக்​க​ரி​யு​டன் சேர்த்து உருக்கி கம்​பி​க​ளாக வார்க்​கும் வசதி பெரிய ஆலை​க​ளில் மட்​டும் உள்​ளது.​ இத்​த​கைய வசதி இல்​லாத சிறிய ஆலை​கள் கச்சா இரும்பை நிலக்​க​ரி​யு​டன் சேர்த்து உருக்​கும் பணியை எளி​தாக்க "ஸ்பான்ச் அயன்' என்ற பொருளை பயன்​ப​டுத்த வேண்​டும்.​
 
 
ஆந்​தி​ரம்}​ கர்​நா​டக எல்​லை​யில் உள்ள ரெய்ச்​சூர்,​​ சத்​தீஸ்​கர் ஆகிய இடங்​க​ளில் மட்​டுமே ஸ்பான்ச் அயன் கிடைக்​கி​றது.​தெலங் ​கானா பிரச்னை கார​ண​மாக ஸ்பான்ச் அயன் வரத்​தில் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால்,​​ விலை உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக சிறிய வார்ப்​பா​லை​கள் தரப்​பில் கூறப்​ப​டு​கி​றது.​
 
 
அரசு தலை​யி​டுமா?​​ 
 
 
""கம்பி விலை​யேற்​றத்​துக்கு ஆலை​கள் தரப்​பில் உறு​தி​யான கார​ணங்​கள் எது​வும் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை என்​ப​தால் நுகர்​வோ​ரி​டம் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது'' என திருச்சி டிரே​டிங் நிறு​வ​னத்​தின் நிர்​வாகி வி.​ முரு​கன் தெரி​வித்​தார்.​
 
 
பெரிய ஆலை​க​ளின் விலை உயர்வை கார​ணம் காட்டி சிறிய ஆலை​கள் செய்​தி​ருக்​கும் இந்த திடீர் விலை உயர்வு செயற்​கை​யா​ன​தாக உள்​ளது.​ இந்த விவ​கா​ரத்​தில் அரசு தலை​யிட்டு விலை உயர்வை கட்​டுப்​ப​டுத்த வேண்​டும் என கட்​டு​மா​னத் துறை​யி​னர் வலி​யு​றுத்​தி​யுள்​ள​னர்.