சென்னை கோயம்பேடு சந்திப்பில் ஓசோன் குழுமத்தின் குடியிருப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.எம்.டி.ஏ. உறுப்பினர், செயலர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்திப்பில் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ்-பாட்டரீஸ் நிறுவனத்திடம் இருந்து 42 ஏக்கர் நிலத்தை ஓசோன் நிறுவனம் வாங்கி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை உருவாக்கியது.
இந்த 42 ஏக்கர் நிலத்தில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலமும் சேர்த்து விற்கப்பட்டதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கோயில் நிலத்தை ஓசோன் குழுமத்தினர் தங்களது கட்டுமான திட்டத்துக்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ள ஓசோன் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பான சர்ச்சை குறித்து தினமணியில் 2009 ஜூலை 14, 2010 ஏப்ரல் 19 ஆகிய தேதிகளில் செய்தி வெளியானது.
இரண்டுமுறையும் இதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பிரச்னை எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த சி.எம்.டி.ஏ. தலைவரும் செய்தித் துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி, ஓசோன் நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டதில் எவ்வித
விதிமீறலும் நடைபெறவில்லை என்றும், திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.
4.76 ஏக்கர் நிலம் அபகரிப்பு விவகாரம்: இந்த திட்டப் பகுதியில் அடங்கியுள்ள சர்வே எண்: 2307ஏ-ல் 3 ஏக்கர், சர்வே எண்: 2291ஏ-ல் 1.76 ஏக்கர் என மொத்தம் 4.76 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
இங்குள்ள மொத்த நிலத்துக்கும் 1914-ம் ஆண்டில் அமாவாசை, ஆளவட்டான் ஆகிய இருவரும் பூர்வீக உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இவர்களிடம் இருந்து வெவ்வேறு பெயர்களுக்கு நிலத்தின் உரிமை மாறியது.
அதன் பின்னர் இதன் ஒரு பகுதி நிலம் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளர்களின் முந்தைய தலைமுறையினர் வசம் வந்தது.
இதே சமயத்தில் இவர்களுக்கு போக மீதியுள்ள நிலத்தில் (சர்வே எண்: 2307ஏ-ல் 3 ஏக்கர், சர்வே எண்: 2291ஏ-ல் 1.76 ஏக்கர்) 4.76 ஏக்கர் நிலம் பூர்வீக உரிமையாளர்களான அமாவாசை, ஆளவட்டான் ஆகியோரின் வாரிசுகள் 21 பேருக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் அனைவரும் நிலத்தின் உரிமையை தங்களது உறவினரான இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கருக்கு அளித்தனர். உடல் நல பாதிப்பு காரணமாக அவர் இறந்ததை அடுத்து, அவரது மகன் பார்த்தி பாஸ்கர் (எ) பாலகிருஷ்ணனுக்கு நிலத்தின் உரிமை 1996-ல் அளிக்கப்பட்டது.
இந்தப் பொது அதிகார ஆவணத்தைப் பயன்படுத்தி நிலத்துக்குப் பட்டா பெறுவதற்காக சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநரை 1996-ல் பார்த்தி பாஸ்கர் அணுகினார். பிறகு இயக்குநரின் அறிவுறுத்தலின்படி கோயம்பேடு பகுதிகளுக்கான உதவி செட்டில்மென்ட் அதிகாரியை பார்த்தி பாஸ்கர் அணுகினார்.
ஆனால், தாமதம் மற்றும் வாரிசுகளின் அடையாளம் குறித்து எழுந்த கேள்விகள் அடிப்படையில் பட்டா வழங்க அவர் மறுத்துவிட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செட்டில்மென்ட் அதிகாரியும் பட்டா வழங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து பார்த்தி பாஸ்கர் தரப்பினர் சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநரிடமே முறையிட்டனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இயக்குநர், மனுதாரர் பார்த்தி பாஸ்கர், ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் என இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்டறிந்த பின்னர், பட்டா வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள எழும்பூர்- நுங்கம்பாக்கம் வட்டாட்சியருக்கு 1999 ஜூலை 5-ம் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை சீராய்வு செய்யுமாறு நில நிர்வாக ஆணையரிடம் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தினர் மனுச் செய்தனர். இந்த மனுவின் அடிப்படையில் சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநரின் உத்தரவில் சில நுணுக்கமான காரணங்களைச் சீராய்வு செய்ய 2001 மே 14-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, பார்த்தி பாஸ்கர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு (எண்: 12613/2001) தொடர்ந்தனர். இந்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட நிலத்தில் எவ்வித கட்டுமான திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து பார்த்தி பாஸ்கர் தரப்பில் 2002-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும் சி.எம்.டி.ஏ.வுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேபத்தை கருத்தில் கொள்ளாமல் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தில் கட்டுமான திட்டம் மேற்கொள்ள ஓசோன் குழுமத்துக்கு 2009-ல் அனுமதி அளிக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார்: இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அது குறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பார்த்தி பாஸ்கர் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 10-6-2009-ல் புகார் அளிக்கப்பட்டது.
இதனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததை அடுத்து, இது தொடர்பாக பார்த்தி பாஸ்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சி.டி. செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ. சரவணன் ஆகியோர் ஆஜராகினர்.
தீர்ப்பு விவரம்: இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சி.டி. செல்வம் கடந்த மாதம் 27-ம் தேதி இறுதிகட்ட விசாரணைகளை முடித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
ஓசோன் குழுமத்துக்கு திட்ட அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள வேண்டும். திட்ட அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் புகார் குறித்து இந்த விசாரணையில் தெரிய வரும் தகவல்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி சி.டி. செல்வம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சனி, 25 செப்டம்பர், 2010
புதன், 22 செப்டம்பர், 2010
மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் சிபிஐ தொடர்ந்த வழக்குகள் முடக்கம்
லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சிபிஐ பதிவு செய்த 127 வழக்குகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 38 அதிகாரிகள் மீதான வழக்குகளும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் வி.வி. சாய்ராம் பாபு 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணி புரிந்து வருகிறார்.
சென்னையில் உள்ள சிபிஐ ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலனாய்வு முடிவடைந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தற்போது தடைபட்டுள்ளது. 1988-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு சட்டப்படி மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் முன்னர், அந்த குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் சிபிஐ அனுமதி பெற வேண்டும். இதன்படி சாய்ராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூன் 9-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி:
இதேபோல, சென்னை மண்டல பாஸ்போர்ட் துறை அதிகாரியாக இருந்த சுமதி ரவிச்சந்திரன் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக 2009 ஏப்ரல் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது அஞ்சல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் மீதான வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவரது நியமன அதிகாரம் கொண்ட வெளியுறவுத்துறை உயரதிகாரியின் அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த மே 10-ம் தேதி கடிதம் அனுப்பினர்.
இந்தக் கடிதத்தின் மீது ஆய்வு செய்து உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சுமதி ரவிச்சந்திரன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தடைபட்டுள்ளது.
இதனால் வழக்கு அடுத்த நிலைக்குச் செல்லாமல் புலனாய்வு முடிந்த நிலையிலேயே முடங்கியுள்ளது.
குடிபெயர்வோர் பாதுகாவல்
அதிகாரி:
வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்வோருக்கு உரிய அனுமதி அளிப்பதற்காக சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவல் அலுவலகத்தின் அதிகாரியாக இருந்த சேகர், அதே அலுவலகத்தைச் சேர்ந்த அஸ்வினி குமார், லூர்து ஜெயசீலன் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கிலும் புலனாய்வு முடிந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் நியமன அதிகாரம் கொண்ட உயரதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கடிதம் அனுப்பினர்.
இதற்கும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் இந்த வழக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையிலேயே முடங்கியுள்ளது.
127 வழக்குகள் முடக்கம்:
இந்த மூன்று வழக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 343 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதில் தமிழகத்தை சேர்ந்த 38 மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் முடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து வழக்கு விவரங்களையும் சிபிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தீர்வு எப்போது?
மத்திய அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி வரும் கடிதங்கள் நீண்ட காலமாக அனுமதி அளிக்கப்படாமல் வைக்கப்படுவதால் சிபிஐ தொடரும் லஞ்ச ஊழல் வழக்குகளின் நிலை கேள்விக்குறியாகிறது. இத்தகைய கடிதங்களுக்கு 3 மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் இத்தகைய போக்கு காரணமாக, சிபிஐ அதிகாரிகளின் பணிகள் மறைமுகமாக முடக்கப்படுவதாக கருதப்பட வேண்டியுள்ளது என லஞ்ச ஊழலுக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 38 அதிகாரிகள் மீதான வழக்குகளும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் வி.வி. சாய்ராம் பாபு 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணி புரிந்து வருகிறார்.
சென்னையில் உள்ள சிபிஐ ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலனாய்வு முடிவடைந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தற்போது தடைபட்டுள்ளது. 1988-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு சட்டப்படி மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் முன்னர், அந்த குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் சிபிஐ அனுமதி பெற வேண்டும். இதன்படி சாய்ராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூன் 9-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி:
இதேபோல, சென்னை மண்டல பாஸ்போர்ட் துறை அதிகாரியாக இருந்த சுமதி ரவிச்சந்திரன் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக 2009 ஏப்ரல் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது அஞ்சல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் மீதான வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவரது நியமன அதிகாரம் கொண்ட வெளியுறவுத்துறை உயரதிகாரியின் அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த மே 10-ம் தேதி கடிதம் அனுப்பினர்.
இந்தக் கடிதத்தின் மீது ஆய்வு செய்து உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சுமதி ரவிச்சந்திரன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தடைபட்டுள்ளது.
இதனால் வழக்கு அடுத்த நிலைக்குச் செல்லாமல் புலனாய்வு முடிந்த நிலையிலேயே முடங்கியுள்ளது.
குடிபெயர்வோர் பாதுகாவல்
அதிகாரி:
வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்வோருக்கு உரிய அனுமதி அளிப்பதற்காக சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவல் அலுவலகத்தின் அதிகாரியாக இருந்த சேகர், அதே அலுவலகத்தைச் சேர்ந்த அஸ்வினி குமார், லூர்து ஜெயசீலன் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கிலும் புலனாய்வு முடிந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் நியமன அதிகாரம் கொண்ட உயரதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கடிதம் அனுப்பினர்.
இதற்கும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் இந்த வழக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையிலேயே முடங்கியுள்ளது.
127 வழக்குகள் முடக்கம்:
இந்த மூன்று வழக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 343 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதில் தமிழகத்தை சேர்ந்த 38 மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் முடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து வழக்கு விவரங்களையும் சிபிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தீர்வு எப்போது?
மத்திய அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி வரும் கடிதங்கள் நீண்ட காலமாக அனுமதி அளிக்கப்படாமல் வைக்கப்படுவதால் சிபிஐ தொடரும் லஞ்ச ஊழல் வழக்குகளின் நிலை கேள்விக்குறியாகிறது. இத்தகைய கடிதங்களுக்கு 3 மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் இத்தகைய போக்கு காரணமாக, சிபிஐ அதிகாரிகளின் பணிகள் மறைமுகமாக முடக்கப்படுவதாக கருதப்பட வேண்டியுள்ளது என லஞ்ச ஊழலுக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
ஏடிஜிபி பதவி உயர்வு தாற்காலிகமாக ஒத்திவைப்பு?
தமிழக காவல் துறையில் ஐஜி நிலையில் உள்ள 2 மூத்த அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது தொடர்பான நடைமுறைகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காவல் துறையில் ஏஎஸ்பிக்களாக பணியைத் தொடங்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்படியாக எஸ்.பி., டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என பதவி உயர்வு பெறுகின்றனர்.
தமிழக காவல் துறையில் 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களில் லத்திகா சரண், பாலச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஆண்டு டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இதில் வயது மூப்பு காரணமாக பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாகச் சேர்ந்து பொருளாதார குற்றப் பிரிவில் ஏடிஜிபியாக இருந்த திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இவர் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திலகவதி பதவி உயர்வு பெற்றதை அடுத்து ஒரு ஏடிஜிபி பதவியிடம் காலியானது. இந்த நிலையில் 1978-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜிபி அமித் வர்மா மாரடைப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
2 பேருக்கு ஏடிஜிபி வாய்ப்பு:
இதையடுத்து காலியாக உள்ள ஏடிஜிபி பதவியிடங்களின் எண்ணிக்கை 2 -ஆக அதிகரித்தது. காவல் துறை நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் தற்போது ஐஜிக்களாக உள்ளவர்களில் பதவி மற்றும் வயது மூப்பு அடிப்படையில் 2 அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.
டிஜிபி பதவியில் இருந்த ஒருவர் ஓய்வு பெற்றவுடன் ஏடிஜிபி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் நிலையில் இருந்த திலகவதிக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இதேபோல, 2 ஏடிஜிபி பதவியிடங்கள் காலியானதை அடுத்து ஐஜி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் 2 இடங்களில் உள்ளவர்களுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.
இதன்படி, 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களான புறநகர் போலீஸ் கமிஷனராக உள்ள எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை தலைவராக உள்ள ஜே.கே. திரிபாதி ஆகியோருக்கு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதற்கான வரிசைப்பட்டியல் அடங்கிய கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனைக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், பதவி உயர்வு விவகாரத்தில் எவ்வித இறுதி முடிவையும் எடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில் பதவி மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர்களை மட்டும் உடனடியாக ஏடிஜிபிக்களாக ஆக்குவதைவிட, மேலும் சிலரைச் சேர்த்து 4 அல்லது 5 பேருக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது குறித்து அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பரிசீலிக்க குழு அமைப்பு:
இவ்வாறு கூடுதல் நபர்களுக்கு ஏடிஜிபி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றால் அதற்காக உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
இந்த குழுவின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத, பெரிய அளவில் ஊழல் புகாருக்கு ஆளாகாத அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே, நிர்வாக நடைமுறைகளின்படி இவ்வாறு குழு அமைக்கும் நடவடிக்கைகள் ஜனவரியில் தான் மேற்கொள்ளப்படும் என்பதால் தற்போது காலியாக உள்ள 2 ஏடிஜிபி பதவிகளுக்காக ஐஜிக்களுக்கு பதவி உயர்வு ஜனவரியில்தான் அறிவிக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
3 ஆண்டுகளாக இடமாற்றம் செய்யப்படாதவர்கள்...
மேலும், அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
இதன்படி இடமாற்றம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளும் ஜனவரியில் மேற்கொள்ளப்படும். எனவே முக்கிய அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் அளிப்பது ஒரே சமயத்தில் மேற்கொள்ளலாம் என அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
காவல் துறையில் ஏஎஸ்பிக்களாக பணியைத் தொடங்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்படியாக எஸ்.பி., டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என பதவி உயர்வு பெறுகின்றனர்.
தமிழக காவல் துறையில் 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களில் லத்திகா சரண், பாலச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஆண்டு டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இதில் வயது மூப்பு காரணமாக பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாகச் சேர்ந்து பொருளாதார குற்றப் பிரிவில் ஏடிஜிபியாக இருந்த திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இவர் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திலகவதி பதவி உயர்வு பெற்றதை அடுத்து ஒரு ஏடிஜிபி பதவியிடம் காலியானது. இந்த நிலையில் 1978-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜிபி அமித் வர்மா மாரடைப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
2 பேருக்கு ஏடிஜிபி வாய்ப்பு:
இதையடுத்து காலியாக உள்ள ஏடிஜிபி பதவியிடங்களின் எண்ணிக்கை 2 -ஆக அதிகரித்தது. காவல் துறை நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் தற்போது ஐஜிக்களாக உள்ளவர்களில் பதவி மற்றும் வயது மூப்பு அடிப்படையில் 2 அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.
டிஜிபி பதவியில் இருந்த ஒருவர் ஓய்வு பெற்றவுடன் ஏடிஜிபி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் நிலையில் இருந்த திலகவதிக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இதேபோல, 2 ஏடிஜிபி பதவியிடங்கள் காலியானதை அடுத்து ஐஜி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் 2 இடங்களில் உள்ளவர்களுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.
இதன்படி, 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களான புறநகர் போலீஸ் கமிஷனராக உள்ள எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை தலைவராக உள்ள ஜே.கே. திரிபாதி ஆகியோருக்கு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதற்கான வரிசைப்பட்டியல் அடங்கிய கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனைக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், பதவி உயர்வு விவகாரத்தில் எவ்வித இறுதி முடிவையும் எடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில் பதவி மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர்களை மட்டும் உடனடியாக ஏடிஜிபிக்களாக ஆக்குவதைவிட, மேலும் சிலரைச் சேர்த்து 4 அல்லது 5 பேருக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது குறித்து அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பரிசீலிக்க குழு அமைப்பு:
இவ்வாறு கூடுதல் நபர்களுக்கு ஏடிஜிபி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றால் அதற்காக உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
இந்த குழுவின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத, பெரிய அளவில் ஊழல் புகாருக்கு ஆளாகாத அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு குழு அமைக்கப்படும் நிலையில், 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்கள் எஸ்.ஆர். ஜாங்கிட், ஜே.கே. திரிபாதி, டாக்டர் சி.கே. காந்திராஜன், 1986-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களில் தற்போது உளவுத்துறை ஐஜியாக உள்ள ஜாபர்சேட், சஞ்சீவ்குமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, நிர்வாக நடைமுறைகளின்படி இவ்வாறு குழு அமைக்கும் நடவடிக்கைகள் ஜனவரியில் தான் மேற்கொள்ளப்படும் என்பதால் தற்போது காலியாக உள்ள 2 ஏடிஜிபி பதவிகளுக்காக ஐஜிக்களுக்கு பதவி உயர்வு ஜனவரியில்தான் அறிவிக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
3 ஆண்டுகளாக இடமாற்றம் செய்யப்படாதவர்கள்...
மேலும், அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
இதன்படி இடமாற்றம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளும் ஜனவரியில் மேற்கொள்ளப்படும். எனவே முக்கிய அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் அளிப்பது ஒரே சமயத்தில் மேற்கொள்ளலாம் என அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
சென்னை மாநகராட்சி: சொத்துக் கணக்கு தாக்கல் செய்யாத 29 கவுன்சிலர்கள்
சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 155 கவுன்சிலர்களில் 29 பேர் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
அரசு ஊழியர்களைப் போன்று மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களது சொத்து விவரங்களை ஆண்டுதோறும் உரிய அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
பொது நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் மலிந்துவிடாமல் இருக்க இத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதற்கான தேர்தலில் போட்டியிடும் போது இது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் ஆண்டு தோறும் தத்தமது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சொத்து விவரங்களை தாக்கல் செய்வதாகவும், அதன் பின்னர் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை என்றும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களாகப் பதவி வகிப்பவர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை பட்டாளத்தைச் சேர்ந்த பி. கல்யாணசுந்தரம் தகவல்களை கோரியிருந்தார்.
அதற்கு மாநகராட்சி அளித்த பதில்: இதற்கு, பதில் அளித்து மாநகராட்சியின் மன்றத்துறை பொதுத் தகவல் அலுவலர் அண்மையில் அளித்த விவரம்:
சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர்களாக 155 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பதவியில் உள்ள காலத்தில் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை இவர்கள் அளிக்க வேண்டும்.
ஆனால், இவர்களில் மேயர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் சத்தியபாமா, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி உள்பட 126 பேர் மட்டுமே தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
29 பேர் தாக்கல் செய்யவில்லை: சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 29 கவுன்சிலர்களின் வார்டு விவரம்:
பேசின்பாலம் மண்டலத்தில் 15, 18, 28 ஆகிய வார்டுகள். புளியந்தோப்பு மண்டலத்தில் 33, 34, 38, 44 ஆகிய வார்டுகள். கீழ்ப்பாக்கம் மண்டலத்தில் 66, 67, 74, 76 ஆகிய வார்டுகள். ஐஸ்ஹவுஸ் மண்டலத்தில் 81, 82, 83, 84, 85, 87, 90, 93, 96 ஆகிய வார்டுகள். நுங்கம்பாக்கம் மண்டலத்தில் 97, 105, 108 ஆகிய வார்டுகள்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 115, 125 ஆகிய வார்டுகள். சைதாப்பேட்டை மண்டலத்தில் 132, 135, 141 ஆகிய வார்டுகள். அடையார் மண்டலத்தில் 147-வது வார்டு ஆகியவற்றின் கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
இது தொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாக மாநகராட்சி மன்றத்துறையின் பொதுத் தகவல் அலுவலர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
அடிதடி தொடர்பாக 5 வழக்குகள் நிலுவை:
சென்னை மாநகராட்சியில் 2006-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மன்றக் கூட்டங்களில் அடிதடி தகராறுகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
இருப்பினும், 2001 முதல் 2006-ம் ஆண்டு மாநகராட்சி மன்றத்தில் பிரதான கட்சிகள் கணிசமான பலத்துடன் இருந்தன. இதன்காரணமாக, மன்றக் கூட்டங்களில் பல்வேறு தகராறுகள் ஏற்பட்டன.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, மாநகராட்சி சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பான நிகழ்வுகளின் போது மாநகராட்சி சார்பில் பெரியமேடு போலீஸில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் மீது புகார் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 2002-ம் ஆண்டில் குற்றப் பதிவேட்டு எண்கள்: 136002, 136202 ஆகிய வழக்குகளும், 2004-ம் ஆண்டில் குற்றப் பதிவேடு எண்கள்: 43904, 44004 ஆகிய வழக்குகளும், 2006-ம் ஆண்டு குற்றப் பதிவேடு எண்: 51706 ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் சில வழக்குகளில் திமுக கவுன்சிலர்களும், சில வழக்குகளில் அதிமுக கவுன்சிலர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என மாநகராட்சி மன்றத்துறை பொதுத் தகவல் அலுவலர் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களைப் போன்று மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களது சொத்து விவரங்களை ஆண்டுதோறும் உரிய அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
பொது நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் மலிந்துவிடாமல் இருக்க இத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதற்கான தேர்தலில் போட்டியிடும் போது இது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் ஆண்டு தோறும் தத்தமது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சொத்து விவரங்களை தாக்கல் செய்வதாகவும், அதன் பின்னர் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை என்றும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களாகப் பதவி வகிப்பவர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை பட்டாளத்தைச் சேர்ந்த பி. கல்யாணசுந்தரம் தகவல்களை கோரியிருந்தார்.
அதற்கு மாநகராட்சி அளித்த பதில்: இதற்கு, பதில் அளித்து மாநகராட்சியின் மன்றத்துறை பொதுத் தகவல் அலுவலர் அண்மையில் அளித்த விவரம்:
சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர்களாக 155 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பதவியில் உள்ள காலத்தில் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை இவர்கள் அளிக்க வேண்டும்.
ஆனால், இவர்களில் மேயர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் சத்தியபாமா, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி உள்பட 126 பேர் மட்டுமே தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
29 பேர் தாக்கல் செய்யவில்லை: சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 29 கவுன்சிலர்களின் வார்டு விவரம்:
பேசின்பாலம் மண்டலத்தில் 15, 18, 28 ஆகிய வார்டுகள். புளியந்தோப்பு மண்டலத்தில் 33, 34, 38, 44 ஆகிய வார்டுகள். கீழ்ப்பாக்கம் மண்டலத்தில் 66, 67, 74, 76 ஆகிய வார்டுகள். ஐஸ்ஹவுஸ் மண்டலத்தில் 81, 82, 83, 84, 85, 87, 90, 93, 96 ஆகிய வார்டுகள். நுங்கம்பாக்கம் மண்டலத்தில் 97, 105, 108 ஆகிய வார்டுகள்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 115, 125 ஆகிய வார்டுகள். சைதாப்பேட்டை மண்டலத்தில் 132, 135, 141 ஆகிய வார்டுகள். அடையார் மண்டலத்தில் 147-வது வார்டு ஆகியவற்றின் கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
இது தொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாக மாநகராட்சி மன்றத்துறையின் பொதுத் தகவல் அலுவலர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
அடிதடி தொடர்பாக 5 வழக்குகள் நிலுவை:
சென்னை மாநகராட்சியில் 2006-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மன்றக் கூட்டங்களில் அடிதடி தகராறுகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
இருப்பினும், 2001 முதல் 2006-ம் ஆண்டு மாநகராட்சி மன்றத்தில் பிரதான கட்சிகள் கணிசமான பலத்துடன் இருந்தன. இதன்காரணமாக, மன்றக் கூட்டங்களில் பல்வேறு தகராறுகள் ஏற்பட்டன.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, மாநகராட்சி சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பான நிகழ்வுகளின் போது மாநகராட்சி சார்பில் பெரியமேடு போலீஸில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் மீது புகார் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 2002-ம் ஆண்டில் குற்றப் பதிவேட்டு எண்கள்: 136002, 136202 ஆகிய வழக்குகளும், 2004-ம் ஆண்டில் குற்றப் பதிவேடு எண்கள்: 43904, 44004 ஆகிய வழக்குகளும், 2006-ம் ஆண்டு குற்றப் பதிவேடு எண்: 51706 ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் சில வழக்குகளில் திமுக கவுன்சிலர்களும், சில வழக்குகளில் அதிமுக கவுன்சிலர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என மாநகராட்சி மன்றத்துறை பொதுத் தகவல் அலுவலர் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திங்கள், 6 செப்டம்பர், 2010
பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: சென்னை புறநகரில் 19 இடங்களில் புதிய கட்டடங்கள் கட்ட தடை
பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி சென்னை புறநகரில் 19 இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளின் அருகில் 100 மீட்டர் சுற்றளவு வரை புதிய கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க 1904-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1932-ம் ஆண்டு திருத்தப்பட்டது.
ஆனால், அதன் பின் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகள் 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
ஆனால், விதிகளை மீறுவோர் மீதான சட்ட நடவடிக்கை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை அமலாக்கும் அதிகாரத்தை யாருக்கு அளிப்பது என்பதிலும் குழப்பங்கள் நிலவின.
இவ்வாறு கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்படாததால், நகர்புறப்பகுதிகளில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு அருகில் புதிய பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு பழமையான நினைவு சின்னங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான புதிய சட்டத்தை சில மாதங்கள் முன்னர் நிறைவேற்றியது.
இதன்படி பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.
இதற்கு அப்பால் உள்ள 200 மீட்டர் தொலைவுக்கு புதிய கட்டடங்கள் கட்ட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் தடையின்மை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நினைவுச்சின்னம் உள்ள பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
இதில் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த பட்டியல் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை சி.எம்.டி.ஏ. தனது எல்லைக்குள் உள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது.
சென்னையில்...
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெல்லெஸ்லி இல்லம், கிளைவ் இல்லம் உள்ளிட்ட 13 இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜார்ஜ் டவுன் பகுதியில் சட்டக் கல்லூரி வளாகத்தில் டேவிட் ஏல் மற்றும் ஜோசப் ஹிம்னர்ஸ் ஆகியோரது நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதி, தண்டையார்பேட்டையில் உள்ள பழைய டவுன் ஹால் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை புறநகரில்...
சென்னை புறநகரில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எருமையூரில் 32.68 ஏக்கர், குன்னத்தூர் கிராமத்தில் 22.9 ஏக்கர் மலை பகுதி, நந்தம்பாக்கம் கிராமத்தில் 0.91 ஏக்கர், சிக்காரயாபுரம் கிராமத்தில் 24.9 ஏக்கர், சிறுகளத்தூர் கிராமத்தில் 56.93 ஏக்கர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய தாம்பரம் தாலுகாவில், ஐயஞ்சேரி கிராமத்தில் 60 ஏக்கர், கடப்பேரி கிராமத்தில் 184.84 ஏக்கர், கிளாம்பாக்கம் கிராமத்தில் 46.95 ஏக்கர், நன்மங்கலம் கிராமத்தில் 8 ஏக்கர், நெடுங்குன்றம் கிராமத்தில் 48.40 ஏக்கர், ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 73.50 ஏக்கர் பகுதிகளில் பழமையான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்லாவரத்தில்...
பல்லாவரத்தில் பழைய பல்லாவரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சர்வே எண் 63-ல் 21.77 ஏக்கர், சர்வே எண் 56-ல் 36.15 ஏக்கர், திரிசூலம் பகுதியில் 51.25 ஏக்கர், பெரும்பாக்கம் கிராமத்தில் 157.67 ஏக்கர், பெருங்களத்தூர் கிராமத்தில் 206.77 ஏக்கர், செம்பாக்கம் கிராமத்தில் 164.47 ஏக்கர், மேடவாக்கம் அருகில் உள்ள சிட்டாலபாக்கத்தில் 20.63 ஏக்கர், பரங்கிமலை பகுதியில் 14.93 ஏக்கர், திருநீர்மலை கிராமத்தில் 58.75 ஏக்கர், வண்டலூரில் 3.31 ஏக்கர் இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தவிர மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், மணிமங்கலத்தில் உள்ள பழமையான கோயில் அமைந்துள்ள இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
நாட்டில் பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க 1904-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1932-ம் ஆண்டு திருத்தப்பட்டது.
ஆனால், அதன் பின் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகள் 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
ஆனால், விதிகளை மீறுவோர் மீதான சட்ட நடவடிக்கை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை அமலாக்கும் அதிகாரத்தை யாருக்கு அளிப்பது என்பதிலும் குழப்பங்கள் நிலவின.
இவ்வாறு கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்படாததால், நகர்புறப்பகுதிகளில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு அருகில் புதிய பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு பழமையான நினைவு சின்னங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான புதிய சட்டத்தை சில மாதங்கள் முன்னர் நிறைவேற்றியது.
இதன்படி பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.
இதற்கு அப்பால் உள்ள 200 மீட்டர் தொலைவுக்கு புதிய கட்டடங்கள் கட்ட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் தடையின்மை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நினைவுச்சின்னம் உள்ள பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
இதில் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த பட்டியல் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை சி.எம்.டி.ஏ. தனது எல்லைக்குள் உள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது.
சென்னையில்...
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெல்லெஸ்லி இல்லம், கிளைவ் இல்லம் உள்ளிட்ட 13 இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜார்ஜ் டவுன் பகுதியில் சட்டக் கல்லூரி வளாகத்தில் டேவிட் ஏல் மற்றும் ஜோசப் ஹிம்னர்ஸ் ஆகியோரது நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதி, தண்டையார்பேட்டையில் உள்ள பழைய டவுன் ஹால் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை புறநகரில்...
சென்னை புறநகரில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எருமையூரில் 32.68 ஏக்கர், குன்னத்தூர் கிராமத்தில் 22.9 ஏக்கர் மலை பகுதி, நந்தம்பாக்கம் கிராமத்தில் 0.91 ஏக்கர், சிக்காரயாபுரம் கிராமத்தில் 24.9 ஏக்கர், சிறுகளத்தூர் கிராமத்தில் 56.93 ஏக்கர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய தாம்பரம் தாலுகாவில், ஐயஞ்சேரி கிராமத்தில் 60 ஏக்கர், கடப்பேரி கிராமத்தில் 184.84 ஏக்கர், கிளாம்பாக்கம் கிராமத்தில் 46.95 ஏக்கர், நன்மங்கலம் கிராமத்தில் 8 ஏக்கர், நெடுங்குன்றம் கிராமத்தில் 48.40 ஏக்கர், ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 73.50 ஏக்கர் பகுதிகளில் பழமையான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்லாவரத்தில்...
பல்லாவரத்தில் பழைய பல்லாவரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சர்வே எண் 63-ல் 21.77 ஏக்கர், சர்வே எண் 56-ல் 36.15 ஏக்கர், திரிசூலம் பகுதியில் 51.25 ஏக்கர், பெரும்பாக்கம் கிராமத்தில் 157.67 ஏக்கர், பெருங்களத்தூர் கிராமத்தில் 206.77 ஏக்கர், செம்பாக்கம் கிராமத்தில் 164.47 ஏக்கர், மேடவாக்கம் அருகில் உள்ள சிட்டாலபாக்கத்தில் 20.63 ஏக்கர், பரங்கிமலை பகுதியில் 14.93 ஏக்கர், திருநீர்மலை கிராமத்தில் 58.75 ஏக்கர், வண்டலூரில் 3.31 ஏக்கர் இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தவிர மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், மணிமங்கலத்தில் உள்ள பழமையான கோயில் அமைந்துள்ள இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
தலைமைத் தகவல் ஆணையர் நியமனம்: வழிமுறை மாறுமா?
தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து சர்ச்சைகள் எழுவது தொடர்கதையாகி வருகிறது. நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சேபணை மற்றும் மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பு என்ன என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் புதிய வழிமுறைகள் வகுக்கப்படாததே சர்ச்சைகள் எழுவதற்குக் காரணம் என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமைத் தகவல் ஆணையர் யார் என்பது குறித்து அரசிடமிருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை காலை பதவியேற்றார்.
தொடரும் சர்ச்சைகள்...
தலைமைத் தகவல் ஆணையர் நியமனத்தில் சர்ச்சை ஏற்படுவது புதிதல்ல. இதற்கு முன்னர் தலைமைத் தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக உள்ள வஜாகத் ஹபிபுல்லாவை காஷ்மீர் மாநிலத் தலைமை தகவல் ஆணையராக நியமிக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
அப்போது புதிய தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து முடிவு செய்ய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மூத்த மத்திய அமைச்சர் ஒருவரைக் கொண்ட குழு கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்றார்.
கூட்டத்தில் பங்கேற்றபின், தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை என்று கூறினார் அத்வானி.
இதனால் எவ்வித முடிவையும் எடுக்காமல் கூட்டத்தை ஒத்திவைத்தார் பிரதமர். பின்னர் வஜாஹத் ஹபிபுல்லா மாற்றம் கைவிடப்பட்டதை அடுத்து இதற்கான முயற்சிகள் முடிவுக்கு வந்தன.
ஆந்திரத்தில்...
ஆந்திர மாநிலத்தில் புதிய தலைமைத் தகவல் ஆணையரை தேர்வு செய்ய முதல்வர் ரோசையா தலைமையில் ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
புதிய தலைமைத் தகவல் ஆணையரை அரசு தரப்பில் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு சடங்கு போல கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளியேறினார். ஆனாலும், அரசு அறிவித்த நபரே அங்கு தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார்.
தமிழகத்தில்...
இதனைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா பங்கேற்காத நிலையில் கே.எஸ். ஸ்ரீபதி புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைகள் எழுவது ஏன்?
முதல்வர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவின் மூலமாகவே நியமனம் செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தக் குழுவில் முதல்வரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சரும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பதில் எவ்விதச் சிக்கலும் எழுவதில்லை.
ஆனால், இந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் நிலையில், மூன்றில் 2 பேர் (முதல்வர், அமைச்சர்) ஏற்றுக் கொண்டதால் பெரும்பான்மை கருத்து என்று கூறி நியமனம் நடைபெறுகிறது. அரசின் பொதுவான நடைமுறையின் அடிப்படையில் இந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இதுவே சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கதா, இல்லையா என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 15-வது பிரிவில் தெளிவான விளக்கம் இல்லை என்பதால் மத்திய அரசு இது தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு திருத்தங்கள் செய்யாத நிலையில், நியமனம் தொடர்பான குழுவில் எதிர்கட்சித் தலைவரின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். அரசின் முடிவே நடைமுறைக்கு வரும். இது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அமலாக்கத்தையே நாளடைவில் சிதைத்துவிடும் என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
புதிய தலைமைத் தகவல் ஆணையர் யார் என்பது குறித்து அரசிடமிருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை காலை பதவியேற்றார்.
தொடரும் சர்ச்சைகள்...
தலைமைத் தகவல் ஆணையர் நியமனத்தில் சர்ச்சை ஏற்படுவது புதிதல்ல. இதற்கு முன்னர் தலைமைத் தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக உள்ள வஜாகத் ஹபிபுல்லாவை காஷ்மீர் மாநிலத் தலைமை தகவல் ஆணையராக நியமிக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
அப்போது புதிய தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து முடிவு செய்ய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மூத்த மத்திய அமைச்சர் ஒருவரைக் கொண்ட குழு கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்றார்.
கூட்டத்தில் பங்கேற்றபின், தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை என்று கூறினார் அத்வானி.
இதனால் எவ்வித முடிவையும் எடுக்காமல் கூட்டத்தை ஒத்திவைத்தார் பிரதமர். பின்னர் வஜாஹத் ஹபிபுல்லா மாற்றம் கைவிடப்பட்டதை அடுத்து இதற்கான முயற்சிகள் முடிவுக்கு வந்தன.
ஆந்திரத்தில்...
ஆந்திர மாநிலத்தில் புதிய தலைமைத் தகவல் ஆணையரை தேர்வு செய்ய முதல்வர் ரோசையா தலைமையில் ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
புதிய தலைமைத் தகவல் ஆணையரை அரசு தரப்பில் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு சடங்கு போல கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளியேறினார். ஆனாலும், அரசு அறிவித்த நபரே அங்கு தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார்.
தமிழகத்தில்...
இதனைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா பங்கேற்காத நிலையில் கே.எஸ். ஸ்ரீபதி புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைகள் எழுவது ஏன்?
முதல்வர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவின் மூலமாகவே நியமனம் செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தக் குழுவில் முதல்வரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சரும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பதில் எவ்விதச் சிக்கலும் எழுவதில்லை.
ஆனால், இந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் நிலையில், மூன்றில் 2 பேர் (முதல்வர், அமைச்சர்) ஏற்றுக் கொண்டதால் பெரும்பான்மை கருத்து என்று கூறி நியமனம் நடைபெறுகிறது. அரசின் பொதுவான நடைமுறையின் அடிப்படையில் இந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இதுவே சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கதா, இல்லையா என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 15-வது பிரிவில் தெளிவான விளக்கம் இல்லை என்பதால் மத்திய அரசு இது தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு திருத்தங்கள் செய்யாத நிலையில், நியமனம் தொடர்பான குழுவில் எதிர்கட்சித் தலைவரின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். அரசின் முடிவே நடைமுறைக்கு வரும். இது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அமலாக்கத்தையே நாளடைவில் சிதைத்துவிடும் என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
கிழக்குக் கடற்கரைச் சாலையில் அரசு மருத்துவமனை எப்போது?
சென்னையில் இருந்து புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான
கிழக்குக் கடற்கரை சாலையில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த வழித்தடத்தில் விபத்து சிகிச்சைக்கு என முழுமையான அரசு மருத்துவமனை எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டி சர்வதேச தரத்தில் விரைவு சாலை அமைக்கும் பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (டி.என்.ஆர்.டி.சி.) மூலம் 1998-ல் தொடங்கின. முதல் கட்டமாக சென்னை முதல் புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான 113 கிலோ மீட்டர் தொலைவுக்கு சர்வதேச தரத்தில் இருவழி சாலை அமைக்கும் பணிகள் 2001-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. சுங்க கட்டணம் வசூலிக்க அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் 2002 முதல் செயல்படத் தொடங்கின.
இந்தச் சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ உதவி கோர நவீன தகவல் தொடர்பு சாதன வசதிகளும், விபத்துகளைத் தடுக்க மிக அதிக எண்ணிக்கையில் ஒளி பிரதிபலிப்பான்களும் அமைக்கப்பட்டன.
அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ்களும், தனியான போக்குவரத்து கண்காணிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
விபத்துகள் அதிகரிப்பு: போக்குவரத்து தொடங்கப்பட்டு 10-வது ஆண்டைத் தொடும் நிலையில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. வாகனப் போக்குவரத்து எதிர்பார்த்ததைவிட வெகுவாக அதிகரித்ததே இங்கு விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இரு வழிச்சாலையாக தொடங்கப்பட்ட இந்த சாலை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படாததே விபத்துக்கு முக்கியக் காரணமாக வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸôர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.
இந்தச் சாலை அமைந்துள்ள பகுதியில் சென்னை முதல் புதுச்சேரி வரை விபத்து கால அவசர சிகிச்சை வசதியுடன் ஒரு அரசு மருத்துவமனை கூட இதுவரை தொடங்கப்படவில்லை.
அரசு மருத்துவமனை வரவில்லையே தவிர பிரபலமான தனியார் மருத்துவமனைகள் புதிது புதிதாகத் தொடங்கப்படுகின்றன. விபத்துக்குள்ளாகும் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடுவது சாத்தியமல்ல.
மருத்துவமனை அமைக்கும் திட்டம்: விபத்து நேர்ந்தால் மட்டுமல்லாது இப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளுக்காகவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையையே சார்ந்து இருக்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2001-ம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை புறநகர் அரசினர் மருத்துவமனை சிறிய அளவில் தொடங்கப்பட்டது. பகுதி நேர மருத்துவ சேவை அளிக்கும் நிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது.
படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையாக இம் மருத்துவமனையை தரம் உயர்த்த 2002-ல் தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்தை 2 பிரிவுகளாக ஒதுக்கீடு செய்தார்.
அப்போதைய அதிமுக அரசு அளித்த ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக ரூ. 25 லட்சத்தில் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் புறநகர் மருத்துவமனைக்கான புதிய வளாகம் அடுத்த சில ஆண்டுகளிலேயே கட்டப்பட்டது. உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், விபத்துகால அவசர சிகிச்சை ஆகியவற்றுக்கான கூடுதல் அறைகள் தொடர்ந்து கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஈஞ்சம்பாக்கம் உள்ளாட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கு வந்தவர்கள் அரசுக்கு நினைவூட்டி திட்டத்தை துரிதப்படுத்தி இருக்க வேண்டும்.
பாதியில் நின்றது ஏன்? உள்ளாட்சி நிலையில் இருந்து வலியுறுத்தல்கள் தொடராத நிலையில் இங்கு முழுமையான அரசு மருத்துவமனை அமைக்கும் திட்டம் முன்னேற்றம் ஏதும் இன்றி பாதியில் நின்றுவிட்டது என்கிறார் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்னுவேல் கூறினார்.
இனியாவது இந்த மருத்துவமனையில் விபத்துகால சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுடன் மருத்துவமனையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கிழக்குக் கடற்கரை சாலையில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த வழித்தடத்தில் விபத்து சிகிச்சைக்கு என முழுமையான அரசு மருத்துவமனை எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டி சர்வதேச தரத்தில் விரைவு சாலை அமைக்கும் பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (டி.என்.ஆர்.டி.சி.) மூலம் 1998-ல் தொடங்கின. முதல் கட்டமாக சென்னை முதல் புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான 113 கிலோ மீட்டர் தொலைவுக்கு சர்வதேச தரத்தில் இருவழி சாலை அமைக்கும் பணிகள் 2001-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. சுங்க கட்டணம் வசூலிக்க அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் 2002 முதல் செயல்படத் தொடங்கின.
இந்தச் சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ உதவி கோர நவீன தகவல் தொடர்பு சாதன வசதிகளும், விபத்துகளைத் தடுக்க மிக அதிக எண்ணிக்கையில் ஒளி பிரதிபலிப்பான்களும் அமைக்கப்பட்டன.
அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ்களும், தனியான போக்குவரத்து கண்காணிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
விபத்துகள் அதிகரிப்பு: போக்குவரத்து தொடங்கப்பட்டு 10-வது ஆண்டைத் தொடும் நிலையில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. வாகனப் போக்குவரத்து எதிர்பார்த்ததைவிட வெகுவாக அதிகரித்ததே இங்கு விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இரு வழிச்சாலையாக தொடங்கப்பட்ட இந்த சாலை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படாததே விபத்துக்கு முக்கியக் காரணமாக வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸôர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.
இந்தச் சாலை அமைந்துள்ள பகுதியில் சென்னை முதல் புதுச்சேரி வரை விபத்து கால அவசர சிகிச்சை வசதியுடன் ஒரு அரசு மருத்துவமனை கூட இதுவரை தொடங்கப்படவில்லை.
அரசு மருத்துவமனை வரவில்லையே தவிர பிரபலமான தனியார் மருத்துவமனைகள் புதிது புதிதாகத் தொடங்கப்படுகின்றன. விபத்துக்குள்ளாகும் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடுவது சாத்தியமல்ல.
மருத்துவமனை அமைக்கும் திட்டம்: விபத்து நேர்ந்தால் மட்டுமல்லாது இப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளுக்காகவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையையே சார்ந்து இருக்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2001-ம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை புறநகர் அரசினர் மருத்துவமனை சிறிய அளவில் தொடங்கப்பட்டது. பகுதி நேர மருத்துவ சேவை அளிக்கும் நிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது.
படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையாக இம் மருத்துவமனையை தரம் உயர்த்த 2002-ல் தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்தை 2 பிரிவுகளாக ஒதுக்கீடு செய்தார்.
அப்போதைய அதிமுக அரசு அளித்த ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக ரூ. 25 லட்சத்தில் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் புறநகர் மருத்துவமனைக்கான புதிய வளாகம் அடுத்த சில ஆண்டுகளிலேயே கட்டப்பட்டது. உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், விபத்துகால அவசர சிகிச்சை ஆகியவற்றுக்கான கூடுதல் அறைகள் தொடர்ந்து கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஈஞ்சம்பாக்கம் உள்ளாட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கு வந்தவர்கள் அரசுக்கு நினைவூட்டி திட்டத்தை துரிதப்படுத்தி இருக்க வேண்டும்.
பாதியில் நின்றது ஏன்? உள்ளாட்சி நிலையில் இருந்து வலியுறுத்தல்கள் தொடராத நிலையில் இங்கு முழுமையான அரசு மருத்துவமனை அமைக்கும் திட்டம் முன்னேற்றம் ஏதும் இன்றி பாதியில் நின்றுவிட்டது என்கிறார் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்னுவேல் கூறினார்.
இனியாவது இந்த மருத்துவமனையில் விபத்துகால சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுடன் மருத்துவமனையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
சென்னை பெருநகர் விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் அறிவிப்பு
சென்னை பெருநகர் பகுதியின் எல்லை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னரே தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகள் அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
சென்னை புறநகரில் மக்கள் நெருக்கம் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
இந்த வளர்ச்சியின் காரணமாக புறநகரில் ஒரே மாதிரியான சாலைகள், கழிவுநீர் வடிகால் வசதிகள், திடக் கழிவு மேலாண்மை திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆனால், புறநகரில் சில பகுதிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளாகவும், சில பகுதிகள் ஊரக உள்ளாட்சிகளாகவும் இருப்பதால் உள்கட்டமைப்பு திட்டங்களை ஒரே மாதிரியாக செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.
புதிய மாநகராட்சிகள்: இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்கு வெளியே, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) எல்லைக்குள் வரும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்க அரசு முடிவெடுத்தது.
இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சி.எம்.டி.ஏ. துணை தலைவர் தலைமையில் உயர்நிலைக் குழு 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை, 2008 ஏப்ரல் மாதம் அரசிடம் அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது மக்களின் கருத்தை அறிய தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் 2008-ல் சி.எம்.டி.ஏ.வால் நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் இரண்டு விதமான செயற்குறிப்புகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
2 பரிந்துரைகள்: சென்னை பெருநகர் எல்லைக்குள் சென்னை மாநகராட்சியின் எல்லையை 800 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்து சென்னை மாநகராட்சியை சென்னை பெருநகர மாநகராட்சி என அறிவித்தல் என்பது ஒரு செயற்குறிப்பு.
ஆலந்தூர், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் நகராட்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளை சேர்த்து சென்னை மாநகராட்சியின் பரப்பளவை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது. இதே சமயத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதில் 2-வது செயற்குறிப்பை ஏற்ற தமிழக அரசு, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியின் எல்லைகளை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது தொடர்பான அரசாணையை கடந்த டிசம்பர் 26-ம் தேதி பிறப்பித்தது.
மேலும், தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகளை அறிவிப்பதை தாற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்தது.
பெருகி வரும் தேவை: இதே சமயத்தில், சென்னை பெருநகர் எல்லைக்கு வெளியே உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், திருவள்ளூர் பகுதிகளில் புதிய குடியிருப்புகள், தொழிற்சாலைகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதிகளுக்கு நகர்ப்புற அந்தஸ்து அளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மேலும், தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களின் எல்லைகளைக் காட்டிலும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை மிகவும் குறைவாக உள்ளது.
அரசு முடிவு: இதனால், அதிகரித்துவரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மற்ற பெருநகரங்களுடனான ஒப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், இப்போது 1,189 சதுர கி.மீ.-ஆக உள்ள சென்னை பெருநகர் பகுதியை தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்வது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, ஸ்ரீபெரும்புதூர், கேளம்பாக்கம், சிங்கபெருமாள் கோயில், திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள் வரை சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவாக்கம் செய்யும் போது எந்தெந்த பகுதிகளை சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை அளிக்குமாறு சி.எம்.டி.ஏ.வுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பணிகள் தீவிரம்: இதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து எந்தெந்த பகுதிகளை சென்னை பெருநகர் எல்லைக்குள் சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்கும் பணியை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான விரிவான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ள புதிய மாநகராட்சிகளின் உத்தேச எல்லைகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, சென்னை பெருநகர் எல்லை விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.
சென்னை புறநகரில் மக்கள் நெருக்கம் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
இந்த வளர்ச்சியின் காரணமாக புறநகரில் ஒரே மாதிரியான சாலைகள், கழிவுநீர் வடிகால் வசதிகள், திடக் கழிவு மேலாண்மை திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆனால், புறநகரில் சில பகுதிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளாகவும், சில பகுதிகள் ஊரக உள்ளாட்சிகளாகவும் இருப்பதால் உள்கட்டமைப்பு திட்டங்களை ஒரே மாதிரியாக செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.
புதிய மாநகராட்சிகள்: இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்கு வெளியே, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) எல்லைக்குள் வரும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்க அரசு முடிவெடுத்தது.
இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சி.எம்.டி.ஏ. துணை தலைவர் தலைமையில் உயர்நிலைக் குழு 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை, 2008 ஏப்ரல் மாதம் அரசிடம் அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது மக்களின் கருத்தை அறிய தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் 2008-ல் சி.எம்.டி.ஏ.வால் நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் இரண்டு விதமான செயற்குறிப்புகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
2 பரிந்துரைகள்: சென்னை பெருநகர் எல்லைக்குள் சென்னை மாநகராட்சியின் எல்லையை 800 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்து சென்னை மாநகராட்சியை சென்னை பெருநகர மாநகராட்சி என அறிவித்தல் என்பது ஒரு செயற்குறிப்பு.
ஆலந்தூர், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் நகராட்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளை சேர்த்து சென்னை மாநகராட்சியின் பரப்பளவை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது. இதே சமயத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதில் 2-வது செயற்குறிப்பை ஏற்ற தமிழக அரசு, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியின் எல்லைகளை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது தொடர்பான அரசாணையை கடந்த டிசம்பர் 26-ம் தேதி பிறப்பித்தது.
மேலும், தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகளை அறிவிப்பதை தாற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்தது.
பெருகி வரும் தேவை: இதே சமயத்தில், சென்னை பெருநகர் எல்லைக்கு வெளியே உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், திருவள்ளூர் பகுதிகளில் புதிய குடியிருப்புகள், தொழிற்சாலைகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதிகளுக்கு நகர்ப்புற அந்தஸ்து அளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மேலும், தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களின் எல்லைகளைக் காட்டிலும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை மிகவும் குறைவாக உள்ளது.
அரசு முடிவு: இதனால், அதிகரித்துவரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மற்ற பெருநகரங்களுடனான ஒப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், இப்போது 1,189 சதுர கி.மீ.-ஆக உள்ள சென்னை பெருநகர் பகுதியை தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்வது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, ஸ்ரீபெரும்புதூர், கேளம்பாக்கம், சிங்கபெருமாள் கோயில், திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள் வரை சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவாக்கம் செய்யும் போது எந்தெந்த பகுதிகளை சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை அளிக்குமாறு சி.எம்.டி.ஏ.வுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பணிகள் தீவிரம்: இதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து எந்தெந்த பகுதிகளை சென்னை பெருநகர் எல்லைக்குள் சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்கும் பணியை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான விரிவான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ள புதிய மாநகராட்சிகளின் உத்தேச எல்லைகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, சென்னை பெருநகர் எல்லை விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.
வியாழன், 5 ஆகஸ்ட், 2010
சென்னைமேல்முறையீட்டு மனுவை வாங்காதது ஏன்? மாநிலத் தகவல் ஆணையர் கேள்வி
சென்னை, ஆக. 4: சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து தகவல் கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாங்க மறுத்த அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து ஒரு மாதத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநிலத் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் உத்தரவிட்டார்.
சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட 5 பிரிவுகளின் பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்களை அளிக்கக் கோரி மாநகராட்சியின் பொது தகவல் அதிகாரியிடம், படாளம் பகுதியை சேர்ந்த பி. கல்யாணசுந்தரம் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி மனு செய்தார்.
இந்த மனுவில் கோரப்பட்டதில் சில தகவல்களை மட்டும் பொது தகவல்களை பொது தகவல் அதிகாரி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அளித்தார். ஆனால், இந்தத் தகவல்கள் முழுமையாக இல்லை என்றுக்கூறி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 19(1) பிரிவின்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 4-ம் தேதி கல்யாணசுந்தரம் அனுப்பினார். ஆனால், இந்த மனுவை வாங்க முடியாது என்றுகூறி மாநகராட்சியின் மேல்முறையீட்டு அதிகாரி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதையடுத்து கல்யாணசுந்தரம், மாநிலத் தகவல் ஆணையத்தில் இதுகுறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 19(3)-ன் கீழ் இரண்டாவது மேல்முறையீடு செய்தார். இந்த இரண்டாவது மேல்முறையீட்டு மனு ஜூலை 29-ம் தேதி, தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் ஆஜரானார். ஆனால், மாநகராட்சி சார்பில் பொது தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டு அதிகாரியும் ஆஜராகவில்லை. பொது தகவல் அதிகாரி ஆஜராகாத நிலையில் மனுதாரரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை என்று மனுதாரர் கூறியது பதிவு செய்யப்பட்டது.
தகவல் ஆணையர் உத்தரவு: விசாரணையின் முடிவில் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், கடந்த 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவு விவரம்: இந்த ஆணை பெறப்பட்ட இரு வாரங்களுக்குள் விடுபட்ட தகவல்களை முழுமையாக அளித்து மனுதாரரின் ஒப்புகை பெற்று அதன் விவரத்தை ஆணையத்துக்கு பொது தகவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை வாங்க மறுத்த மேல்முறையீட்டு அதிகாரி மீது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விதி எண் 20(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை மாநகராட்சி ஆணையர் தனது குறிப்புரையுடன் ஒரு மாதத்துக்குள் தகவல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உரிய காலத்துக்குள் விளக்கம் அளிக்கத் தவறினால், இந்த விவகாரத்தில் தகவல் ஆணையம் உரிய மேல் நடவடிக்கை எடுக்கும் என அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 29-ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியும் விசாரணைக்கு வராத பொது தகவல் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் தனது குறிப்புரையுடன் மாநகராட்சி ஆணையர், தகவல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட 5 பிரிவுகளின் பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்களை அளிக்கக் கோரி மாநகராட்சியின் பொது தகவல் அதிகாரியிடம், படாளம் பகுதியை சேர்ந்த பி. கல்யாணசுந்தரம் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி மனு செய்தார்.
இந்த மனுவில் கோரப்பட்டதில் சில தகவல்களை மட்டும் பொது தகவல்களை பொது தகவல் அதிகாரி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அளித்தார். ஆனால், இந்தத் தகவல்கள் முழுமையாக இல்லை என்றுக்கூறி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 19(1) பிரிவின்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 4-ம் தேதி கல்யாணசுந்தரம் அனுப்பினார். ஆனால், இந்த மனுவை வாங்க முடியாது என்றுகூறி மாநகராட்சியின் மேல்முறையீட்டு அதிகாரி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதையடுத்து கல்யாணசுந்தரம், மாநிலத் தகவல் ஆணையத்தில் இதுகுறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 19(3)-ன் கீழ் இரண்டாவது மேல்முறையீடு செய்தார். இந்த இரண்டாவது மேல்முறையீட்டு மனு ஜூலை 29-ம் தேதி, தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் ஆஜரானார். ஆனால், மாநகராட்சி சார்பில் பொது தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டு அதிகாரியும் ஆஜராகவில்லை. பொது தகவல் அதிகாரி ஆஜராகாத நிலையில் மனுதாரரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை என்று மனுதாரர் கூறியது பதிவு செய்யப்பட்டது.
தகவல் ஆணையர் உத்தரவு: விசாரணையின் முடிவில் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், கடந்த 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவு விவரம்: இந்த ஆணை பெறப்பட்ட இரு வாரங்களுக்குள் விடுபட்ட தகவல்களை முழுமையாக அளித்து மனுதாரரின் ஒப்புகை பெற்று அதன் விவரத்தை ஆணையத்துக்கு பொது தகவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை வாங்க மறுத்த மேல்முறையீட்டு அதிகாரி மீது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விதி எண் 20(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை மாநகராட்சி ஆணையர் தனது குறிப்புரையுடன் ஒரு மாதத்துக்குள் தகவல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உரிய காலத்துக்குள் விளக்கம் அளிக்கத் தவறினால், இந்த விவகாரத்தில் தகவல் ஆணையம் உரிய மேல் நடவடிக்கை எடுக்கும் என அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 29-ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியும் விசாரணைக்கு வராத பொது தகவல் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் தனது குறிப்புரையுடன் மாநகராட்சி ஆணையர், தகவல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளி, 30 ஜூலை, 2010
தனியார் குடியிருப்புகளாக மாறும் அரசு ஒதுக்கீட்டு மனைகள்
அரசு ஒதுக்கீட்டின்கீழ் பெற்ற மனைகளில் தனியார் குடியிருப்புகள் கட்டுவது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இது விதிகளுக்கு மாறானது இல்லை என தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தனியார் குடியிருப்புகளாகும் அரசு ஒதுக்கீட்டு மனைகள் என்ற தலைப்பில் தினமணியில் திங்கள்கிழமை வெளியான செய்தி தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள விளக்கம்:
வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து ஒதுக்கீடு பெற்ற மனையையோ அல்லது வீட்டையோ, ஒதுக்கீடு பெற்றதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது என்றும், அப்படி விற்பதானால் வீட்டுவசதி வாரியத்திடம்தான் விற்க வேண்டும் என்றும், வீட்டுவசதி வாரிய விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது.÷இந்த விதிமுறை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், 2003-ம் ஆண்டு அடியோடு நீக்கப்பட்டுவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எச்.பி.என். ஷெட்டியின் மகன் தீபக் என பலரும் அந்தந்த மனைகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டியிருப்பதாகத் தெரிகிறது.
இதேபோன்று சைதை துரைசாமி தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுவசதி வாரிய மனையை மேம்படுத்தி வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.
இவர்களை போலவே, அரசு விருப்ப ஒதுக்கீட்டு முறையில் மனைகள் ஒதுக்கீடு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அவ்வாறு ஒதுக்கீடு பெற்ற மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ, வர்த்தக வளாகங்களாகவோ மேம்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். இதில் வீட்டுவசதி வாரியத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த பர்வின் ஜாபர், நந்தம்பாக்கத்தை சேர்ந்த துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் அப்போதைய சந்தை விலைக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த மனைகளுக்குரிய தொகையை பல்வேறு தவணைகளில் செலுத்தி சொந்தமாக்கிக் கொண்டு விற்பனைப் பத்திரங்களையும் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்தந்த மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக அவர்கள் மேம்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த மாதிரி செய்வது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதால், இது எந்த வகையிலும் வீட்டுவசதி வாரியத்தின் விதிகளுக்கு முரண்பாடானது இல்லை என வீட்டுவசதி வாரியம் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
தனியார் குடியிருப்புகளாகும் அரசு ஒதுக்கீட்டு மனைகள் என்ற தலைப்பில் தினமணியில் திங்கள்கிழமை வெளியான செய்தி தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள விளக்கம்:
வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து ஒதுக்கீடு பெற்ற மனையையோ அல்லது வீட்டையோ, ஒதுக்கீடு பெற்றதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது என்றும், அப்படி விற்பதானால் வீட்டுவசதி வாரியத்திடம்தான் விற்க வேண்டும் என்றும், வீட்டுவசதி வாரிய விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது.÷இந்த விதிமுறை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், 2003-ம் ஆண்டு அடியோடு நீக்கப்பட்டுவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எச்.பி.என். ஷெட்டியின் மகன் தீபக் என பலரும் அந்தந்த மனைகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டியிருப்பதாகத் தெரிகிறது.
இதேபோன்று சைதை துரைசாமி தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுவசதி வாரிய மனையை மேம்படுத்தி வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.
இவர்களை போலவே, அரசு விருப்ப ஒதுக்கீட்டு முறையில் மனைகள் ஒதுக்கீடு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அவ்வாறு ஒதுக்கீடு பெற்ற மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ, வர்த்தக வளாகங்களாகவோ மேம்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். இதில் வீட்டுவசதி வாரியத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த பர்வின் ஜாபர், நந்தம்பாக்கத்தை சேர்ந்த துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் அப்போதைய சந்தை விலைக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த மனைகளுக்குரிய தொகையை பல்வேறு தவணைகளில் செலுத்தி சொந்தமாக்கிக் கொண்டு விற்பனைப் பத்திரங்களையும் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்தந்த மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக அவர்கள் மேம்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த மாதிரி செய்வது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதால், இது எந்த வகையிலும் வீட்டுவசதி வாரியத்தின் விதிகளுக்கு முரண்பாடானது இல்லை என வீட்டுவசதி வாரியம் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
வியாழன், 22 ஜூலை, 2010
தனியார் குடியிருப்புகளாகும் அரசு ஒதுக்கீட்டு மனைகள்!
அரசின் விருப்ப உரிமை பிரிவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளை பெற்ற சிலர், தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
அரசு ஒதுக்கீட்டின் வீட்டு மனை பெற காத்திருப்போர் மற்றும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மத்தியில் இந்த மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதிய மனைப் பிரிவுகளையும், குடியிருப்புகளையும் உருவாக்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட மனைகள், குடியிருப்புகளில் 85 சதவீதத்தை வீட்டுவசதி வாரியம், குறைந்த வருவாய் பிரிவு, உயர் வருவாய் பிரிவு, அரசு ஊழியர்கள், பொது போட்டி, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் என வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறது. எஞ்சிய 15 சதவீத மனைகள், குடியிருப்புகள் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிகளை மீறி பலர் வீடு, மனை ஒதுக்கீடு பெறுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. இந்த புகார்கள் மீது எப்போதாவது விசாரணையும் நடத்தப்படுவது உண்டு.
இந்த புகார்கள் ஒரு புறம் இருந்தாலும், இவ்வாறு மனைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களுக்கு சென்னையில் சொந்த வீடு இல்லை எனக்கூறி விண்ணப்பித்ததன் அடிப்படையில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பர்வீன் ஜாபருக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில் திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் அரசின் விருப்ப உரிமை பிரிவின் கீழ் 540-வது மனை 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
4,756 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை ரூ. 1.26 கோடி மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பர்வீன் ஜாபர் தரப்பில் இருந்து 2 தவணைகளில் இதற்கான தொகை வீட்டு வசதி வாரியத்திடம் செலுத்தப்பட்டு விற்பனை பத்திரமும் பெறப்பட்டுவிட்டது.
இதேபோல, தங்களுக்கும் சென்னையில் வசிக்க சொந்தமாக வீடு இல்லை என்று கோரியதன் அடிப்படையில் அரசின் விருப்ப உரிமை பிரிவின்கீழ், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த இரா. துர்கா சங்கர் என்பவருக்கு, வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில் திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் 538-வது மனை 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 4,668 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை ரூ. 1.12 கோடி மதிப்பில் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான தொகையை இவரும் உடனடியாக முழுமையாக செலுத்தி விற்பனை பத்திரத்தையும் பெற்றுவிட்டார்.
இவ்வாறு ஒரே இடத்தில் அடுத்தடுத்து உள்ள மனைகளை அரசின் விருப்ப உரிமையின் கீழ் ஒதுக்கீடு பெற்ற பர்வீன் ஜாபர், துர்கா சங்கர் ஆகியோர் பிரபல தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரை பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு கூட்டாக புதிய குடியிருப்பு ஒன்றை அந்த நிலத்தில் கட்டியுள்ளனர்.
2 மனைகளையும் ஒன்றாக சேர்த்து மொத்தம் 9,424 சதுர அடியில், 12 வீடுகளை கொண்ட 4 மாடி குடியிருப்பை 2009-ம் ஆண்டு தொடங்கி சில மாதங்களுக்கு முன்னர் கட்டி முடித்தனர். தற்போது இதில் அனைத்து வீடுகளையும் அவர்கள் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு சதுர அடி ரூ. 8 ஆயிரம் என்ற அடிப்படையில் இந்த குடியிருப்புகள் முற்றிலுமாக வர்த்தக நோக்கத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
என்ன தவறு?
இவர்களை போல பல்வேறு பகுதிகளிலும் ஏதாவது காரணம் கூறி அரசிடம் இருந்து வீட்டு மனைக்கான ஒதுக்கீடு பெற்ற பலரும் இதுபோல தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்தில் புதிய குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. இருப்பினும், உள்ளார்ந்து பார்க்கும் போது, அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீடு என்பது சொந்தமாக வீடு இல்லை என்று கோருபவர்களின் வீட்டு வசதித் தேவையைப் பூர்த்தி செய்யவே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
ஆனால், இவ்வாறு அரசிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஒதுக்கீடு பெற்றவர்கள் தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம் என அரசு ஒதுக்கீட்டின் வீடு, மனை பெற விண்ணப்பித்து காத்திருப்போர் கேள்வி எழுப்புகின்றனர்.
வீட்டுவசதி வாரியத்தின் நிலை என்ன?
ஒதுக்கீடு பெற்றவர்கள் அதற்கான முழுத் தொகையையும் செலுத்தி விற்பனை பத்திரத்தை பெற்றுவிட்டால், அந்த மனை அவர்களுக்கு சொந்தமாகி விடுகிறது. அதன் பின்னர் அதில் அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் தலையிட முடியாது என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
அரசு ஒதுக்கீட்டின் வீட்டு மனை பெற காத்திருப்போர் மற்றும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மத்தியில் இந்த மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதிய மனைப் பிரிவுகளையும், குடியிருப்புகளையும் உருவாக்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட மனைகள், குடியிருப்புகளில் 85 சதவீதத்தை வீட்டுவசதி வாரியம், குறைந்த வருவாய் பிரிவு, உயர் வருவாய் பிரிவு, அரசு ஊழியர்கள், பொது போட்டி, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் என வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறது. எஞ்சிய 15 சதவீத மனைகள், குடியிருப்புகள் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிகளை மீறி பலர் வீடு, மனை ஒதுக்கீடு பெறுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. இந்த புகார்கள் மீது எப்போதாவது விசாரணையும் நடத்தப்படுவது உண்டு.
இந்த புகார்கள் ஒரு புறம் இருந்தாலும், இவ்வாறு மனைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களுக்கு சென்னையில் சொந்த வீடு இல்லை எனக்கூறி விண்ணப்பித்ததன் அடிப்படையில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பர்வீன் ஜாபருக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில் திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் அரசின் விருப்ப உரிமை பிரிவின் கீழ் 540-வது மனை 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
4,756 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை ரூ. 1.26 கோடி மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பர்வீன் ஜாபர் தரப்பில் இருந்து 2 தவணைகளில் இதற்கான தொகை வீட்டு வசதி வாரியத்திடம் செலுத்தப்பட்டு விற்பனை பத்திரமும் பெறப்பட்டுவிட்டது.
இதேபோல, தங்களுக்கும் சென்னையில் வசிக்க சொந்தமாக வீடு இல்லை என்று கோரியதன் அடிப்படையில் அரசின் விருப்ப உரிமை பிரிவின்கீழ், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த இரா. துர்கா சங்கர் என்பவருக்கு, வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில் திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் 538-வது மனை 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 4,668 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை ரூ. 1.12 கோடி மதிப்பில் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான தொகையை இவரும் உடனடியாக முழுமையாக செலுத்தி விற்பனை பத்திரத்தையும் பெற்றுவிட்டார்.
இவ்வாறு ஒரே இடத்தில் அடுத்தடுத்து உள்ள மனைகளை அரசின் விருப்ப உரிமையின் கீழ் ஒதுக்கீடு பெற்ற பர்வீன் ஜாபர், துர்கா சங்கர் ஆகியோர் பிரபல தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரை பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு கூட்டாக புதிய குடியிருப்பு ஒன்றை அந்த நிலத்தில் கட்டியுள்ளனர்.
2 மனைகளையும் ஒன்றாக சேர்த்து மொத்தம் 9,424 சதுர அடியில், 12 வீடுகளை கொண்ட 4 மாடி குடியிருப்பை 2009-ம் ஆண்டு தொடங்கி சில மாதங்களுக்கு முன்னர் கட்டி முடித்தனர். தற்போது இதில் அனைத்து வீடுகளையும் அவர்கள் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு சதுர அடி ரூ. 8 ஆயிரம் என்ற அடிப்படையில் இந்த குடியிருப்புகள் முற்றிலுமாக வர்த்தக நோக்கத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
என்ன தவறு?
இவர்களை போல பல்வேறு பகுதிகளிலும் ஏதாவது காரணம் கூறி அரசிடம் இருந்து வீட்டு மனைக்கான ஒதுக்கீடு பெற்ற பலரும் இதுபோல தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்தில் புதிய குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. இருப்பினும், உள்ளார்ந்து பார்க்கும் போது, அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீடு என்பது சொந்தமாக வீடு இல்லை என்று கோருபவர்களின் வீட்டு வசதித் தேவையைப் பூர்த்தி செய்யவே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
ஆனால், இவ்வாறு அரசிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஒதுக்கீடு பெற்றவர்கள் தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம் என அரசு ஒதுக்கீட்டின் வீடு, மனை பெற விண்ணப்பித்து காத்திருப்போர் கேள்வி எழுப்புகின்றனர்.
வீட்டுவசதி வாரியத்தின் நிலை என்ன?
ஒதுக்கீடு பெற்றவர்கள் அதற்கான முழுத் தொகையையும் செலுத்தி விற்பனை பத்திரத்தை பெற்றுவிட்டால், அந்த மனை அவர்களுக்கு சொந்தமாகி விடுகிறது. அதன் பின்னர் அதில் அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் தலையிட முடியாது என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
திங்கள், 14 ஜூன், 2010
ஒரு வழக்கில் இரு வேறு உத்தரவு; தகவல் ஆணையத்தில் குழப்பம்
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல் முறையீட்டு வழக்கில் 2 தகவல் ஆணையர்கள், இரு வெவ்வேறு வித உத்தரவை பிறப்பித்துள்ளனர். தகவல் ஆணையர்களின் இத்தகைய நடவடிக்கையால் தகவல் கோருபவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசின் விருப்புரிமை பிரிவின் கீழ் காவல் துறை, நீதித்துறையைச் சார்ந்த குறிப்பிட்ட சில முக்கிய நபர்கள் வீடுகளை பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களுக்கு ஆளான நபர்கள் இவ்வாறு புதிய சொத்துகள் வாங்கியது தொடர்பாக அந்தந்த துறை தலைமைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்பது விதி.
இந்த விதிப்படி அதிகாரிகள் தங்களது புதிய சொத்துகள் குறித்து தகவல் தெரிவித்தார்களா என்ற விவரங்களை அளிக்குமாறு, சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை தலைமை அலுவலகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆகியவற்றுக்கு மனு செய்திருந்தார்.
ஆனால், இந்த மனுக்களை பெற்ற அந்தந்தத் துறைகளின் பொது தகவல் அதிகாரிகள் உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து, இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களில் டிஜிபி அலுவலகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகியவை தொடர்பான மனுக்களை தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன் விசாரித்தார்.
மனுதாரர் கோரும் தகவல்களை அவருக்கு அளித்துவிட்டு, அது குறித்து ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என டிஜிபி அலுவலக பொது தகவல் அதிகாரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தனித்தனியாக உத்தரவிட்டார்.
இதேபோல, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறுமற்றொரு மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஜி. ராமகிருஷ்ணன், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உயர் நீதிமன்ற பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இந்த 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சட்டப்படி 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறையினர் மனுதாரருக்கு உரிய தகவல்களை அளித்திருக்க வேண்டும். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 3 துறைகளின் பொது தகவல் அதிகாரிகளும் மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்தார்.
இந்த 3 மேல் முறையீட்டு மனுக்களையும் தகவல் ஆணையர் ஆர். பெருமாள்சாமி அண்மையில் விசாரித்தார். இதில் உயர் நீதிமன்றம், டிஜிபி அலுவலகம் தொடர்பான மனுக்களை தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அவர் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த அவர், பொது தகவல் அதிகாரிகளின் பணிச்சுமை குறித்து அறிந்து கொள்ளுமாறு மனுதாரருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இதே வழக்கில், தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர்ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் எந்தக் கருத்தையும் தனது உத்தரவில் தகவல் ஆணையர் பெருமாள்சாமி குறிப்பிடவில்லை.
எனவே, இவரது உத்தரவு காரணமாக முந்தைய உத்தரவுகளின் அமலாக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரே வழக்கில் முந்தைய உத்தரவுக்கு மாறாக மற்றொரு தகவல் ஆணையர் புதிய உத்தரவு பிறப்பிப்பது தகவல் ஆணையத்தின் பணிகள் குறித்த குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசின் விருப்புரிமை பிரிவின் கீழ் காவல் துறை, நீதித்துறையைச் சார்ந்த குறிப்பிட்ட சில முக்கிய நபர்கள் வீடுகளை பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களுக்கு ஆளான நபர்கள் இவ்வாறு புதிய சொத்துகள் வாங்கியது தொடர்பாக அந்தந்த துறை தலைமைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்பது விதி.
இந்த விதிப்படி அதிகாரிகள் தங்களது புதிய சொத்துகள் குறித்து தகவல் தெரிவித்தார்களா என்ற விவரங்களை அளிக்குமாறு, சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை தலைமை அலுவலகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆகியவற்றுக்கு மனு செய்திருந்தார்.
ஆனால், இந்த மனுக்களை பெற்ற அந்தந்தத் துறைகளின் பொது தகவல் அதிகாரிகள் உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து, இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களில் டிஜிபி அலுவலகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகியவை தொடர்பான மனுக்களை தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன் விசாரித்தார்.
மனுதாரர் கோரும் தகவல்களை அவருக்கு அளித்துவிட்டு, அது குறித்து ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என டிஜிபி அலுவலக பொது தகவல் அதிகாரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தனித்தனியாக உத்தரவிட்டார்.
இதேபோல, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறுமற்றொரு மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஜி. ராமகிருஷ்ணன், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உயர் நீதிமன்ற பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இந்த 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சட்டப்படி 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறையினர் மனுதாரருக்கு உரிய தகவல்களை அளித்திருக்க வேண்டும். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 3 துறைகளின் பொது தகவல் அதிகாரிகளும் மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்தார்.
இந்த 3 மேல் முறையீட்டு மனுக்களையும் தகவல் ஆணையர் ஆர். பெருமாள்சாமி அண்மையில் விசாரித்தார். இதில் உயர் நீதிமன்றம், டிஜிபி அலுவலகம் தொடர்பான மனுக்களை தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அவர் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த அவர், பொது தகவல் அதிகாரிகளின் பணிச்சுமை குறித்து அறிந்து கொள்ளுமாறு மனுதாரருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இதே வழக்கில், தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர்ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் எந்தக் கருத்தையும் தனது உத்தரவில் தகவல் ஆணையர் பெருமாள்சாமி குறிப்பிடவில்லை.
எனவே, இவரது உத்தரவு காரணமாக முந்தைய உத்தரவுகளின் அமலாக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரே வழக்கில் முந்தைய உத்தரவுக்கு மாறாக மற்றொரு தகவல் ஆணையர் புதிய உத்தரவு பிறப்பிப்பது தகவல் ஆணையத்தின் பணிகள் குறித்த குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதன், 28 ஏப்ரல், 2010
காவலர்கள் உயர் கல்விக்கு ஆட்சேபணையில்லா சான்றிதழ் அளிப்பதில் தாமதம் ஏன்?
சென்னையில் உயர் கல்வி பயில விரும்பும் காவலர்களுக்கு அதற்கான அனுமதி மற்றும் ஆட்சேபணையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழகக் காவல் துறையில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆகிய பிரிவுகளுக்கு பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சியை கல்வித் தகுதியாகக் கொண்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் காவலர்களாக பணியாற்றிக் கொண்டு அஞ்சல் வழியில் பட்டப்படிப்பை முடித்தால் அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று உயர் பதவிகளுக்கு விரைந்து செல்ல முடியும்.
பணியிலிருக்கும் காவலர்கள் தங்கள் துறை மேலதிகாரிகளின் சான்றுடன் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட சில சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
காவல் துறையில் சாதனை படைப்பதை தங்கள் வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ள ஏராளமான இளைஞர்கள் முதலில் காவலர்களாக இத்துறையில் கால் பதித்துவிட்டு அதன் பின்னர் பட்டப்படிப்பு முடித்து உயர் பதவிகளுக்கு வருவது வழக்கமான ஒரு நடைமுறையாகும்.
இப்போதைய நிலையில் இவ்வாறு காவல் பணியில் சேரும் ஆயிரம் பேரில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மேற்படிப்பில் சேர விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது தமிழகக் காவல் துறையில் சுமார் 6 ஆயிரம் பேர் ஆயுதப்படை, சிறப்புப் போலீஸ் படையில் உள்ளனர்.
இதில் சென்னையில் மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவலர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியாக பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.
இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் முதலில் மாநகரப் போலீஸில் உள்ள நிர்வாகப் பிரிவில் இருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழும், துறை சார்ந்த பணியை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அனுமதி மற்றும் ஆட்சேபணையில்லா சான்றிதழ் பெற சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மாநகரப் போலீஸ் நிர்வாகப் பிரிவில் விண்ணப்பித்தனர். இந்த மனுக்கள் மீது நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் இதுவரை எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்து வருவதாக காவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களது உயர் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு தங்களது பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என அந்தக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வியாழன், 22 ஏப்ரல், 2010
முடங்கியுள்ள வீட்டுவசதி வாரிய இணையதளம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முடங்கியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து விதமான வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புத் தேவைகளை நியாயமான விலையில் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடங்கப்பட்டது.
இந்த வாரியம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், நிலங்களை கையகப்படுத்தி மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி குலுக்கல் மூலம் உரிய நபர்களுக்கு ஒதுக்கி வருகிறது.
இத்தகைய பணிகளில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
இதற்காக தகவல் தேவைப்படும் அனைவரும் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களை நேரடியாக அணுகுவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும், இவ்வாறு அணுகும் பொதுமக்களுக்கு உரிய தகவல்களை உடனடியாக அளிப்பதில் அதிகாரிகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இணையதளம் தொடக்கம்: இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில் வீட்டுவசதி வாரியத்தின் அடிப்படைத் தகவல்களை மட்டும் உள்ளடக்கியதாக இந்த இணையதளம் இருந்தது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து, இந்த இணையதளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில், வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட- ஒதுக்கீடு செய்யப்படாத மனைப் பிரிவுகள், குடியிருப்புகள், வீடுகள் குறித்த முழுமையான விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும், மனைப் பிரிவுகள், குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்துக்கு செலுத்திய- செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்த விவரங்களையும் அவரவர் இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த இணையதளம் அமைந்திருந்தது.
வீட்டுவசதி வாரியத்தின் புதிய திட்டங்கள், குலுக்கல் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களுடன், வீட்டுவசதி வாரியத்துக்கு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் தொடர்பான விவரங்களையும் இணையதளம் மூலம் அறிய முடிந்தது. www.tnhb.gov.in என்ற முகவரியில் இயங்கி வந்த இணையதளம் கடந்த 6 மாதங்களாக முடங்கியுள்ளது.
இதனால், வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு விவரங்களை பெறுவதற்கு மக்கள் அந்தந்த பிரிவு அலுவலகங்களையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏராளமானோர் தகவல்களுக்காக அலுவலர்களை தொடர்பு கொள்வதால் அவர்களிடமும் சலிப்பு ஏற்படுகிறது.
இது தேவையற்ற அலைச்சலையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது என ஒதுக்கீட்டுதாரர்களும், ஒதுக்கீடு பெற முனைவோரும் புகார் தெரிவித்தனர்.
தீர்வு எப்போது? இணையதளத்தை மேலும் புதுப்பொலிவாக்க வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கடந்த ஆண்டு திட்டமிட்டனர்.
இதற்கான பணி அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவர்கள் பணி முடிந்தவுடன் விரைவில் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அனைத்து விதமான வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புத் தேவைகளை நியாயமான விலையில் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடங்கப்பட்டது.
இந்த வாரியம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், நிலங்களை கையகப்படுத்தி மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி குலுக்கல் மூலம் உரிய நபர்களுக்கு ஒதுக்கி வருகிறது.
இத்தகைய பணிகளில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
இதற்காக தகவல் தேவைப்படும் அனைவரும் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களை நேரடியாக அணுகுவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும், இவ்வாறு அணுகும் பொதுமக்களுக்கு உரிய தகவல்களை உடனடியாக அளிப்பதில் அதிகாரிகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இணையதளம் தொடக்கம்: இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில் வீட்டுவசதி வாரியத்தின் அடிப்படைத் தகவல்களை மட்டும் உள்ளடக்கியதாக இந்த இணையதளம் இருந்தது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து, இந்த இணையதளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில், வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட- ஒதுக்கீடு செய்யப்படாத மனைப் பிரிவுகள், குடியிருப்புகள், வீடுகள் குறித்த முழுமையான விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும், மனைப் பிரிவுகள், குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்துக்கு செலுத்திய- செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்த விவரங்களையும் அவரவர் இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த இணையதளம் அமைந்திருந்தது.
வீட்டுவசதி வாரியத்தின் புதிய திட்டங்கள், குலுக்கல் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களுடன், வீட்டுவசதி வாரியத்துக்கு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் தொடர்பான விவரங்களையும் இணையதளம் மூலம் அறிய முடிந்தது. www.tnhb.gov.in என்ற முகவரியில் இயங்கி வந்த இணையதளம் கடந்த 6 மாதங்களாக முடங்கியுள்ளது.
இதனால், வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு விவரங்களை பெறுவதற்கு மக்கள் அந்தந்த பிரிவு அலுவலகங்களையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏராளமானோர் தகவல்களுக்காக அலுவலர்களை தொடர்பு கொள்வதால் அவர்களிடமும் சலிப்பு ஏற்படுகிறது.
இது தேவையற்ற அலைச்சலையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது என ஒதுக்கீட்டுதாரர்களும், ஒதுக்கீடு பெற முனைவோரும் புகார் தெரிவித்தனர்.
தீர்வு எப்போது? இணையதளத்தை மேலும் புதுப்பொலிவாக்க வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கடந்த ஆண்டு திட்டமிட்டனர்.
இதற்கான பணி அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவர்கள் பணி முடிந்தவுடன் விரைவில் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன், 21 ஏப்ரல், 2010
தினமணி செய்தி எதிரொலி: கோயம்பேடு கோயில் நில விவகாரம்: ஓசோன் குழுமம் ஆவணங்களை சமர்ப்பிக்க மேயர் ஆணை
சென்னை கோயம்பேடில் மெட்ரோசோன் திட்டப் பகுதியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் ஒரு பகுதியில் தாற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் அலுவலகத்தை அகற்றுமாறு மேயர் மா. சுப்பிரமணியன் ஆணையிட்டார்.
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 1.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றத்திலும் அளிக்கப்பட்ட உறுதி மீறப்படுவதாக கூறப்படும் புகார்கள் தொடர்பான செய்தி "தினமணி'யில் கடந்த 19-ம் தேதி வெளியானது.
இதன் எதிரொலியாக பிரச்னைக்குரிய நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சம்பந்தப்பட்ட திட்டப் பகுதியை மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்,
கமிஷனர் பொறுப்பு வகிக்கும் ஆஷிஸ் சாட்டர்ஜி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஓசோன் குழுமத்தின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக தூண்கள் அமைப்பதற்காக இங்கு எந்திரங்கள் மூலம் துளையிடுவதால் தங்கள் கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்படுவதாக இதற்கு பின்பக்கத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
எனவே, இவ்வாறு அதிர்வுகள் ஏற்படாத வகையில் வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த பரிசீலிக்குமாறு ஓசோன் குழும பொறியாளர்களை மேயர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.
100 அடி சாலையை (ஜவஹர்லால் நேரு சாலை) பாடிக்குப்பம் பகுதியுடன் இணைக்கும் வகையில் விடப்பட்டுள்ள 12 மீட்டர் அகல சாலைக்கான நிலத்தை மேயர் பார்வையிட்டார்.
அதன் பின்னர் இந்த திட்டப்பகுதியில் காலியாக விட வேண்டிய 4 ஏக்கர் நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை மேயர் ஆய்வு செய்தார்.
கோயில் நிலம்:
இந்த நிலத்துடன் இணைப்பு சாலைக்கு விட வேண்டிய நிலத்தையும் சேர்த்து உடனடியாக முள்கம்பி வேலி அமைப்பதாக ஓசோன் குழும பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.
தாற்காலிக அலுவலகம்: இதன் பின் சர்வே எண் 227/3}ல் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 41 சென்ட் நிலத்தையும் மேயர் ஆய்வு செய்தார்.
அந்த நிலத்தில் ஓசோன் குழுமத்தின் "மெட்ரோசோன்' பிரிவு தாற்காலிக அலுவலகத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது குறித்து அதிகாரிகளிடமும், அந்த நிறுவன பிரதிநிதிகளிடமும் மேயர் விசாரித்தார்.
""2007}ம் ஆண்டு இந்த அலுவலகம் கட்டப்பட்டதால், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 2008}ல் உச்ச நீதிமன்றம் "எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும்' என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவது ஆகாது'' என ஓசோன் குழும பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கும் போது இந்த நிலம் எப்படி இருந்தது என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அப்படி தெரிவிக்கப்பட்ட விவரங்களில் தாற்காலிக அலுவலகம் இருப்பது உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்த ஆவணங்களை உடனடியாக சமர்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள தாற்காலிக அலுவலகத்தை அகற்றிவிட்டு நிலத்தைச் சுற்றி முள்கம்பி வேலி போட வேண்டும் என மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 1.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றத்திலும் அளிக்கப்பட்ட உறுதி மீறப்படுவதாக கூறப்படும் புகார்கள் தொடர்பான செய்தி "தினமணி'யில் கடந்த 19-ம் தேதி வெளியானது.
இதன் எதிரொலியாக பிரச்னைக்குரிய நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சம்பந்தப்பட்ட திட்டப் பகுதியை மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்,
கமிஷனர் பொறுப்பு வகிக்கும் ஆஷிஸ் சாட்டர்ஜி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஓசோன் குழுமத்தின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக தூண்கள் அமைப்பதற்காக இங்கு எந்திரங்கள் மூலம் துளையிடுவதால் தங்கள் கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்படுவதாக இதற்கு பின்பக்கத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
எனவே, இவ்வாறு அதிர்வுகள் ஏற்படாத வகையில் வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த பரிசீலிக்குமாறு ஓசோன் குழும பொறியாளர்களை மேயர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.
100 அடி சாலையை (ஜவஹர்லால் நேரு சாலை) பாடிக்குப்பம் பகுதியுடன் இணைக்கும் வகையில் விடப்பட்டுள்ள 12 மீட்டர் அகல சாலைக்கான நிலத்தை மேயர் பார்வையிட்டார்.
அதன் பின்னர் இந்த திட்டப்பகுதியில் காலியாக விட வேண்டிய 4 ஏக்கர் நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை மேயர் ஆய்வு செய்தார்.
கோயில் நிலம்:
ஓசோன் குழுமத்தின் திட்டப்பகுதியின் நடுவில் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்: 230/2}ல் உள்ள 1.36 ஏக்கர் நிலத்தை மேயர் ஆய்வு செய்தார். இந்த நிலத்தை 12 மீட்டர் சாலையுடன் இணைக்கும் வகையில் 7.2 மீட்டர் அகல சாலைக்கு நிலம் விடப்படாமல் இருந்தது குறித்து ஓசோன் குழும பிரதிநிதிகளிடம் மேயர் விளக்கம் கேட்டார்.
இந்த நிலத்துடன் இணைப்பு சாலைக்கு விட வேண்டிய நிலத்தையும் சேர்த்து உடனடியாக முள்கம்பி வேலி அமைப்பதாக ஓசோன் குழும பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.
தாற்காலிக அலுவலகம்: இதன் பின் சர்வே எண் 227/3}ல் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 41 சென்ட் நிலத்தையும் மேயர் ஆய்வு செய்தார்.
அந்த நிலத்தில் ஓசோன் குழுமத்தின் "மெட்ரோசோன்' பிரிவு தாற்காலிக அலுவலகத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது குறித்து அதிகாரிகளிடமும், அந்த நிறுவன பிரதிநிதிகளிடமும் மேயர் விசாரித்தார்.
""2007}ம் ஆண்டு இந்த அலுவலகம் கட்டப்பட்டதால், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 2008}ல் உச்ச நீதிமன்றம் "எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும்' என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவது ஆகாது'' என ஓசோன் குழும பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கும் போது இந்த நிலம் எப்படி இருந்தது என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அப்படி தெரிவிக்கப்பட்ட விவரங்களில் தாற்காலிக அலுவலகம் இருப்பது உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்த ஆவணங்களை உடனடியாக சமர்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள தாற்காலிக அலுவலகத்தை அகற்றிவிட்டு நிலத்தைச் சுற்றி முள்கம்பி வேலி போட வேண்டும் என மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
மீறப்படும் அரசின் உறுதிமொழி
சென்னை கோயம்பேடு சந்திப்பில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலத்தை பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் சி.எம்.டி.ஏ. விதித்த நிபந்தனைகள் தனியார் கட்டுமான நிறுவனத்தால் மீறப்படுவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதி மொழி மீறப்படுவதாக கூறப்படுகிறது.
கோயம்பேடு சந்திப்பில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3.03 ஏக்கரை உள்ளடக்கிய 42 ஏக்கர் நிலம் ஓசோன் குழுமத்துக்கு ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரீஸ் நிறுவனத்தால் விற்கப்பட்டது.
இந்த நிலத்தில் பிரமாண்ட குடியிருப்புத் திட்டத்தை மேற்கொள்ள ஓசோன் குழுமம் முடிவு செய்தது. இதற்கான திட்ட அனுமதி கோரும் மனுவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2003-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ. மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது இந்த பிரச்னையில் அனுமதி அளிக்க மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸýம், திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டதன் பேரில் ஓசோன் குழுமத்தின் திட்ட அனுமதி விண்ணப்பத்துக்கு ஒப்புதல் தருவது நிறுத்தி வைக்கப்பட்டது.
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர்த்து மற்ற நிலங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் 2009-ல் அதே விண்ணப்பத்துக்கு சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதி வழங்கியது.
சி.எம்.டி.ஏ.வின் நிலைப்பாடு கோயில் நிலத்தை மீட்கும் இந்து சமய அறநிலையத்துறையின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விரிவான செய்தி தினமணியில் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி வெளியானது.
இதன் எதிரொலியாக, ஓசோன் குழுமத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மன்றத்துக்கு தெரிவிக்காமல் முடிவெடுóத்ததற்காக 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவையில்
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஜூலை 16-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதத்துக்கு செய்தித் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைவருமான பரிதி இளம்வழுதி பதில் அளித்தார்.
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் 3.03 ஏக்கர் நிலத்தில் 1.26 ஏக்கர் நிலம் ஏற்கெனவே மத்திய அரசின் பொதுப்பணித்துறையால் வாங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கை 2008 நவம்பர் 7-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்படி நிலம் எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதன் அடிப்படையில் 1.77 ஏக்கர் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஓசோன் குழுமத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பரிதி இளம்வழுதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மாநகராட்சியில்
ஜூலை 22-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பான விவாதத்துக்கு மேயர் மா. சுப்பிரமணியன் ""திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என உரிமைக் கோரப்படும் 3.03 ஏக்கர் நிலத்தில் ஓசோன் குழுமத்தின் திட்டப் பகுதியில் அமைந்துள்ள 1.77 ஏக்கர் நிலத்திற்கு வழியாக 7.2 மீட்டர் அகலபாதை குறிப்பிட்டு அந்த நிலத்திலும் எந்தவிதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு அதற்கான உறுதி மொழிபத்திரம் பெறப்பட்டபிறகே கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
ஓசோன் விளக்கம்
இந்த விவகாரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தில், எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறாது. அந்த நிலம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் படி தனியாக வைக்கப்படும். மேலும், அதற்கு செல்லும் வகையில் சாலைக்கான நிலமும் விடப்பட்டுள்ளது என ஓசோன் குழுமம் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
போலீஸில் புகார்
ஓசோன் குழுமத்தின் திட்டத்துக்காக அங்கு தூண்கள் அமைப்பதற்காக எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் காரணமாக திட்டப் பகுதிக்கு பின்பக்கத்தில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிர்வுகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மத்தியில், இந்த அதிர்வுகள் காரணமாக தங்கள் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த புகார் மீது இதுவரை போலீஸôர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஓசோன் குழும திட்டப் பகுதிக்கு பின்புறம் உள்ள பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மீறப்படும் உறுதி மொழி
அடுத்த சில மாதங்களில், நிறுத்திவைக்கப்பட்ட கட்டட அனுமதியை மீண்டும் பெற்று கட்டுமானப் பணிகளை திட்ட அனுமதியில் எவ்வித திருத்தமும் செய்யாமல் ஓசோன் குழுமம் தொடங்கியது.
இதில் பிரச்னைக்குரிய 1.77 ஏக்கர் நிலம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தனித்து வைக்கப்படாமல் திட்டப் பகுதியுடன் சேர்த்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பேரவையில் அமைச்சர் பரிதி இளம்வழுதி அளித்த உறுதிக்கு மாறாக, பிரச்னைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருள்களை வைக்கும் கொட்டகைகள், ஊழியர்கள் தங்கும் கொட்டகைகள் ஆகியவற்றை ஓசோன் குழுமம் அமைத்துள்ளது.
மேலும், அந்த நிலத்துக்கு செல்வதற்காக 7.2 மீட்டர் அகலபாதைக்கான நிலம் இதுவரை தனியாக ஒதுக்கப்படவோ, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவோ இல்லை எனவும் தெரியவந்துள்ளது. பிரச்னைக்குரிய நிலத்தை தனியாக வைத்து பராமரிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மீண்டும் தட்டிக்கழித்துள்ளனர்.
மேலும், அந்த நிலத்துக்குள் சென்று ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைத்துறையினர் உள்ளிட்ட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஒரு தரப்பினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் இருப்பதும், பிரச்னைக்குரிய நிலத்தை ஓசோன் குழுமம் தனது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதும் முரண்பாடாக அமைந்துள்ளது.
பிரச்னைக்குரிய நிலத்தை அது தொடர்பான வழக்கின் எதிர்தரப்பினரின் கட்டுப்பாட்டில் விட்டுவைப்பது எந்த விதத்தில் நியாயமானதாகும்? மேலும், இதில் மனுதாரர் தரப்பான அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த நிலத்தை பாதுகாத்து வைக்க வேண்டிய இதர துறைகள் எதிர்தரப்புக்கு சாதகமாக செயல்படுவது ஏன்?
கோயில் நிலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் அளிக்கப்பட்ட உறுதி என்ன ஆனது என்பதே இந்து சமய அறநிலையத் துறையினரிடம் இப்போது எழுந்துள்ள கேள்வி.
வெள்ளி, 19 மார்ச், 2010
ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத 17 கவுன்சிலர்கள்
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் 17 வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை.
கடந்த 4 நிதி ஆண்டுகளில் வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியில் சராசரியாக 67 சதவீதம் மட்டுமே செலவிடப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மாநகராட்சி அதிகாரிகள் இத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டு ஆண்டுதோறும் இதற்காக குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் பல்வேறு துறைகள் மூலம் சுகாதாரம், பள்ளிக் கல்வி, சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குறிப்பிட்ட பகுதிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதி வார்டு உறுப்பினர்கள் நேரடியாக நிதி ஒதுக்கி திட்டங்களைச் செயல்படுத்த இந்த மேம்பாட்டு நிதி அளிக்கப்படுகிறது.
இதற்கான வழிகாட்டி நெறி முறைகள் வகுக்கப்பட்டு மன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த 2005}06, 2006}07, 2007}08, 2008}09 ஆகிய நிதி ஆண்டுகளில் வார்டு மேம்பாட்டுக்காக உறுப்பினர்களுக்கு ஒதுப்பட்ட நிதி, அதில் செலவழிக்கப்பட்ட தொகை, செலவழிக்கப்படாத தொகை குறித்த விவரங்களை போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவ், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரியிருந்தார்.
மாநகராட்சி பதில்:
இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிதி ஆலோசகர் மற்றும் பொதுத் தகவல் அதிகாரி அளித்துள்ள பதில் விவரம்:
மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்துக்காக, 2005}06 நிதி ஆண்டில் ரூ. 1,085 லட்சம் ஒதுக்கப்பட்டதில் ரூ. 967.8 லட்சம் (89.2 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2006}07 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 5.31 கோடி (48.97 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2007}08 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 7.60 கோடி (70.07 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2008}09 நிதி ஆண்டில், ரூ. 23.25 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 14.76 கோடி (63.5 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2009}2010 நிதி ஆண்டில் ரூ. 38.75 கோடி ஒதுக்கப்பட்டதில் டிசம்பர் மாதம் வரை ரூ. 9.74 கோடி (25.14 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.5 நிதி ஆண்டுகளில் மொத்தம் ரூ. 94.55 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 47.09 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆண்டு சராசரியாக 67 சதவீத நிதி மட்டுமே செலவிடபட்டுள்ளது.
மேயர்:
இதேபோல மேயருக்கான சிறப்பு மேம்பாட்டு நிதிக்காக 2005}06 முதல் 2009}2010 வரையிலான 5 நிதி ஆண்டுகளில் ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 44.99 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
ஒரு பைசா கூட பயன்படுத்தாதவர்கள்:
சென்னை மாநகராட்சியில் உள்ள 10 மண்டலங்களில் 1, 4, 6, 7, 8 ஆகிய மண்டலங்களில் 2005}06 முதல் 2008}09 நிதி ஆண்டு வரை வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை.
இதேபோல, நடப்பு நிதி ஆண்டில் 97, 98, 99, 100, 101, 102, 103, 106, 108, 111, 113, 114, 116, 117, 118, 121, 128 ஆகிய வார்டுகளில் கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தங்களது பதிலில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை வார்டு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 25 லட்சமாக இருந்த மேம்பாட்டு நிதி, வரும் நிதி ஆண்டில் இருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது.
தகவல் அளிக்க கட்டணம் வசூலிப்பதில் குழப்பம்
Last Updated :
தகவல் கோரும் மனுதாரர்களுக்கு ஆவணங்களின் நகல்களை அளிக்க கட்டணம் வசூலிப்பதில் அரசு அதிகாரிகளிடம் குழப்பம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிந்க்கின்றனர்.
2005ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள, "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்'படி அரசின் நிர்வாக நடைமுறை குறித்த தகவல்களை மக்கள் மனுச் செய்து எழுத்துப்பூர்வமாக பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தகவல்களைப் பெற மாநில அரசுத் துறை அலுவலகமானால் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லையை ஒட்டி அனுப்ப வேண்டும். மத்திய அரசுத்துறைகளில் தகவல் கோரும்போது, ரூ.10-க்கான வங்கி வரைவோலை அல்லது அஞ்சல் ஆணையை இணைத்து அனுப்ப வேண்டும்.மனுதாரர் கோரும் தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களின் நகல்களை ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் பெற்றுக் கொண்டு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மனுச் செய்யும்போதும், நகல்களைப் பெறும்போதும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு, கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த விலக்கு வரம்பில் வரத் தகுதி இல்லாத மற்ற அனைவரும் உரிய கட்டணங்களை அவசியம் செலுத்தியாக வேண்டும்.இவ்வாறு தகவல்கள் தொடர்பான ஆவணங்களின் நகல்களைப் பெற செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து, தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
தகவல் கோரும் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும். தகவல் தொடர்புக்கான நகல்களைப் பெற ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்தக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 0075 அல்லது, 00800 உள்ளிட்ட சில குறிப்பிட்ட கணக்குகளில் செலுத்தி அதற்கான ஒப்புகைச் சீட்டை உரிய பொதுத் தகவல் அதிகாரியிடம் செலுத்தி நகல்களைப் பெறலாம்.
நகல்களுக்கான கட்டணங்களை ரொக்கமாகவோ, அஞ்சல் பணவிடை மூலமாகவோ செலுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தமிழக அரசின் பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளிடம் இது குறித்த முழுமையான விவரங்கள் இன்னமும் சென்றடையாத நிலை உள்ளது.
குறிப்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை தொடர்பான சில ஆவண நகல்களை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவி கோரியிருந்தாராம்.குறிப்பிட்ட ஒரு சலானைப் பயன்படுத்தி பாரத ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டும் என அங்குள்ள பொதுத் தகவல் அதிகாரி தெரிவித்தாராம்.
ஆனால், முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய அலுவலகத்தில் வங்கி வரைவோலை, அல்லது வங்கி காசோலை, அஞ்சல் பணவிடை மூலம் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என மனுதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் அவர்களது அலுவலகத்திலேயே கட்டணத்தை ரொக்கமாகவோ, அல்லது காசோலை மூலமாகவும் பெற்றுக் கொள்கின்றனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகங்களில் தகவல் தொடர்பான ஆவணங்களை அளிப்பதற்கான கட்டணங்களை காசோலை மூலமாகவே பெற்றுக் கொள்கின்றனர்.கட்டணங்களைப் பெறுவதற்கு அரசு தெளிவாக ஒரு நடைமுறையை அறிவித்துள்ள நிலையிலும், ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் வெவ்வேறு விதங்களில் கட்டணங்கள் பெறப்படுகின்றன. இது மனுதாரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அரசின் அறிவுறுத்தல்கள் அனைத்து நிலைகளுக்கும் முழுமையாகச் சென்றடையாததே இந்தக் குழப்பத்துக்குக் காரணம் எனத் தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறு வெவ்வேறு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் மனுதாரர்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனைத் தடுத்து அனைத்து அலுவலகங்களிலும் ஒரே சீரான நடைமுறை அமலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
திங்கள், 8 மார்ச், 2010
முதல்வரின் முன்னாள் செயலர் டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம்
முதல்வர் கருணாநிதியின் முன்னாள் செயலரும், மாநில தகவல் ஆணையருமான டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் அளித்துள்ளது தமிழக அரசு.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ஆர். ராமசாமி. முதல்வர் கருணாநிதியின் செயலராக 3 முறை இருந்தவர்.வயது மூப்பு காரணமாக கடந்த 2008}ம் ஆண்டு ஏப்ரல் 5}ம் தேதி டி.ஆர். ராமசாமி ஓய்வு பெற்றார். பின்னர் 2008 மே 7}ம் தேதி இவர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையின் போது டி.ஆர். ராமசாமிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக சில உயர்ரக ஊசி மருந்துகளுடன் கதிரியக்க சிகிச்சையும் அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்த சிகிச்சையில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான "ஐஆர்இஎஸ்எஸ்ஏ}250' ரக மாத்திரைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட பரிசோதனை மற்றும் மாத்திரைகள் வாங்கிய வகையில் டி.ஆர். ராமசாமிக்கு ரூ. 5.91 லட்சம் செலவாகியுள்ளது.
மேலும், தொடர் சிகிச்சைக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் தனது நிலை குறித்து விளக்கி, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அளிக்குமாறு அரசிடம் டி.ஆர். ராமசாமி கோரியிருந்தார்.
இது தொடர்பாக பொள்ளாச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் "தாயகம்' அமைப்பைச் சேர்ந்த நா. பாஸ்கரன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியிருந்தார்.
இதற்கு தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை பொது தகவல் அலுவலர் ச.ராமலிங்கம் கடந்த 2}ம் தேதி அளித்த பதில் விவரம்:
தகவல் ஆணையர் டி.ஆர். ராமசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.12.54 லட்சத்தை அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை (எண்: 22) பிப்ரவரி 5}ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டி.ஆர். ராமசாமியின் மருத்துவ செலவுகளுக்காக முதல்கட்டமாக ரூ. 5.91 லட்சத்தை அளிக்கவும், மற்ற சிகிச்சைகள் முடிவடைந்தவுடன் மீதித் தொகையை அளிக்கவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் உயர் பதவியில், அதுவும் முதல்வரின் செயலராக பணிபுரிந்த அதிகாரி ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி வழங்குவது அரசின் சுய விருப்பத்தை பொருத்தது.எனினும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரியும்போதும், ஓய்வு பெற்ற சமயத்திலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய வசதிகளை செய்ய முறைப்படியான காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய சலுகைகள் மூலம் கிடைக்கும் உதவிகளுக்கு மாற்றாக, தகவல் ஆணையர் டி.ஆர்.ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அரசே நேரடியாக வழங்கியுள்ளது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


