திங்கள், 20 அக்டோபர், 2008

ஏரிகளை தூர்வாரும் திட்டம் நடைமுறையில் இல்லை

சென்னை, அக். 19: காஞ்சிபுரம் மாவட் டத்தில் ஏரிகளை தூர்வாரும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை என பொதுப் பணித்துறையின் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சிவபெருமான் தெரிவித் தார்.

இது தொடர்பாக தகவல் பெறும் உரி மைச் சட்டம் - 2005-ன் கீழ் "ஐந்தாவது தூண்' அமைப்பின் பொதுச் செயலாளர் ரத்தின பாண்டியனுக்கு பொதுப்ப ணித்துறை அளித்துள்ள பதில்கள் விவரம்:

""காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம் பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களால் பரா மரிக்கப்படும் ஏரிகள் நீங்கலாக 84 தாங் கல்கள் உள்பட 917 ஏரிகள் கீழ்ப்பா லாறு வடிநிலக் கோட்டம் மூலம் பராம ரிக்கப்படுகின்றன.

ஏரிகளை தூர்வாரும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இல்லைஏரிக்கரைகளை பலப்படுத்தும் போது தேவைப்படும் மண் ஏரியுனுள் இருந்து எடுக்கப்படுகிறது.

இதேபோல வணிக நோக்கத்துக்காக கனிமத் துறையிடம் அனுமதி பெற்றவர் களால், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் காண்பிக்கப்படும் இடங்களில் இருந்து மண் எடுக்கப்படுகிறதுஇந்த இரு நோக்கங்களுக்காக தவிர, ஏரியுனுள் முழுவதும் மண்ணை வெட்டி எடுத்து தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை.

ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கனிமவளத் துறை அனுமதி பெற்று நீர் நிலைகளில் மண் எடுப்பது குறித்து பொதுப் பணித்துறைக்கு என அரசின் தனியான வழிகாட்டுதல்களோ, உத்தரவுகளோ இல்லை.

ஏரிகள் உடைப்பு:

கடந்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் 117 இடங்களிலும் ஆறுகளில் 11 இடங்களிலும், வாய்க்கால்களில் 40 இடங்களிலும், ஏரிகளில் 66 இடங்களி லும் கரைகள் உடைந்தன.

இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் ஏதும் இல்லைஎந்த காலங்களில் நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்வது என்பது குறித்தும், அது தொடர்பான கோப் புகளை ஆய்வு செய்து முடிவு எடுப்பது குறித்தும் அரசு விதிகள், வழிகாட்டுதல் கள் ஏதும் இல்லை'' என அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் பாழாக்கப்பட்டு வரும் நிலையில், ஏரி களை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய துறை இந்த பணிகளுக்கு 25 ஆண்டுக ளாக அனுமதி அளிக்காமல் உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக சுற் றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

ஏரிகளின் தேவை என்ன?

பொதுவாக தரைப் பரப்பில் ஒரு தடுப்பை செயற்கையாக உருவாக்கி நீரை தேக்கும் வழிமுறையின் அடிப்படையில் உருவாக் கப்பட்டவை ஏரிகள். எனவே, ஏரிகளில் தரை பரப்பில் அதிகமாக படியும் மண்ணை உரிய கால இடைவெளியில் அகற்றுவது அவசியம் ஏரிகளைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகள் குடியிருப்புகளாக மாறியுள்ளன.

இதனால் ஏரிகள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டன என்று கூறி, இவற்றை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என ஒரு பிரி வினர் கோஷமிட்டு வருகின்றனர்.

ஆனால், ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதி களில் சாகுபடி பணிகளுக்கு தேவைப் பட்டதைவிட தற்போது மக்களின் தண் ணீர் தேவை பலமடங்கு அதிகரித்துள் ளது.

எனவே, ஏரிகளை முன்பிருந்த தரைப்பரப்பைவிட ஆழப்படுத்தி அதிக அளவில் நீரை சேமிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது என் கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஏரிகளின் பராமரிப்பு பொறுப்பு பொதுப்பணித்துறையிடமும், அதில் மண் எடுப்பது தொடர்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் கனிமவள துறையிடமும் உள்ளது.

இந்த முரண்பாடுகள் காரணமாக ஏரிகளில் மண் எடுப்பதில் ஊழல் அதிகரித் துள்ளது. இது தொடர்பான நடைமுறைகளும் தெளிவாக இல்லை.

தீர்வு என்ன?

எனவே, ஆற்றுப்படுகை களில் மணல் எடுப்பது முறைப்படுத்தப் பட்டு அரசின் மூலமே மணல் விற்பனை நடைபெறுவது போல, ஏரிகள் உள் ளிட்ட நீர் நிலைகளில் மண் எடுப்பதும் முறைப்படுத்தப்பட்டு அரசின் மூலமே நடைபெற வேண்டும்.

அப்போது தான் ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு மக்களின் தண்ணீர் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படும்.

நீர் நிலைகள் பாதுகாக்கப்படுவதோடு மண் எடுப்பதில் நிலவும் ஊழலும் கட்டுப்படுத்தப்படும் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சனி, 18 அக்டோபர், 2008

கட்சி மாறியதற்கு கைமாறு!

சென்னை, அக். 15: ம.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எல்கணேசனுக்கு "விருப் புரிமை' திட்டத்தின் கீழ் சென்னை முகப் பேர் ஏரி திட்டத்தில் மனை ஒதுக்கி தமி ழக அரசு உத்தரவிட் டுள்ளதும.

தி.மு.க.வில்...:

கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க. அணியில் இருந்து விலகி அதிமுகவு டன் கூட்டணி சேர்ந்தது. தேர்தல் முடிந்து சில மாதங்கள் கழித்து 2006 டிசம்பர் மாதம் கட்சி யின் அவைத் தலைவராக இருந்த எல். கணே சன், துணை பொதுச் செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடவடிக்கைகளை எடுத்தனர்.

தி.மு.க. ஆதரவு...:

தாங்கள்தான் உண்மை யான ம.தி.மு.க.வினர் என்று கூறி திமுக தலை வரும் முதல்வருமான கருணாநிதியை எல்கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் சந்தித்தனர்.

இதன் பின்னர் திமுக சார்பில் நடத்தப்ப டும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் ம.தி.மு.க.வினராக இவர்கள் இருவரும்தான் அழைக்கப்பட்டனர்ம.தி.மு.க.வில் உள்ள சிலரை தங்கள் பக்கம் இழுத்து, குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற் சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி வந்தார்.

மேலும், இவர்கள் இருவ ரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்தும் நீக் கப்பட்டனர்இந்த விவகாரத்தில், வைகோ தலைமையி லான கட்சியே மதிமுக என்றும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்ப டுத்த மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், மதிமுக உறுப்பினர் கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என வைகோ அறிவித்திருந்தார்.

ஆனால், கட்சியின் கொறடா உத்தரவை மீறி எல். கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்இதையடுத்து இவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும்
நீக்கப்பட்டனர்.

மனை ஒதுக்கீடு:

இத்தகைய சூழலில் மதிமுக வின் மக்களவை உறுப்பினராக உள்ள எல்கணேசனுக்கு சென்னை முகப்பேர் ஏரித் திட் டத்தில் உயர் வருவாய்ப் பிரிவில் மனை (எண்: 1052) ஒதுக்கப்பட்டுள்ளதுஅரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஒதுக்கீடு செய்யப்படுவதாக மார்ச் 8-ம் தேதி யிட்ட வீட்டுவசதித் துறை அரசாணையில் (2 டி எம்.எஸ். எண்: 157) குறிப்பிடப்பட்டுள்ளது".

முகப்பேர் ஏரி திட்டப்பகுதியில் உள்ள உயர் வருவாய்ப் பிரிவு மனை எண்: 1052-ஐ சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ், அரசு விருப்புரிமை யில் எல். கணேசன் என்பவருக்கு தவணை முறையில் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகி றது' என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

மனை ஒதுக்கீடு தொடர்பான எந்த ஆவணத் திலும் எல். கணேசன் மக்களவை உறுப்பினர் என்பதைக் குறிப்பிடாமல், சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அனைத்துச் சலுகைகளும் இருக்கும்போது அவர் தன்னை மக்களவை உறுப்பினராக அடையாளம் காட்டாமல், ஒரு சமூக சேவகர் என்று கூறி அரசின் மனை ஒதுக்கீட்டுச் சலுகை யைப் பெறுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சி மாறியதற்காகவா...:

அரசியல் மற்றும் பொது வாழ்வில் நீண்ட நாள் அனுபவம் கொண்டவர் என்ற முறையில் அரசின் விருப்பு ரிமையின் கீழ் மனை ஒதுக்கீடு பெற எல். கணே சன் தகுதியுடையவர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அவர் தற்போது மதிமுகவில் இருந்து திமுகவில் சேர்வது என்ற நிலைப் பாட்டை எடுத்த பின்னர், அரசியல் காரணங்க ளுக்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.