ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

மாநகராட்சி வழங்கும்குப்பைத் தொட்டிகள் தரமற்றவை!

சென்னை, பிப்.12: சென்னையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக வீடுகளுக்கு வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் தரமானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து அளிக்கும் பணிகளுக்காக குடிசைப்பகுதி வீடுகளுக்கு தலா 2 வீதம் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் குப்பைத் தொட்டிகள் டிசம்பர் 26-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு குப்பைத் தொட்டி ரூ11.80 விலையில் மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத் திடம் இருந்து இதற்காக ரூ. 51 லட்சம் செலவில் 4.31 லட்சம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

பல்லாவரத்தில்...:

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை பல்லாவரம் நகராட்சி செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பல்லாவரம் நகராட்சியில் 26 வார்டுகளில் உள்ள 16 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க ஒவ்வொன்றும் ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகளை வாங்க பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் விலைக்கும் பல்லாவரத்தில் வழங்கப்பட உள்ள குப்பைத் தொட்டிகளின் விலைக்கும் ரூ.50 க்கு மேல் வேறுபாடு இருப்பது குறித்து "தினமணியில்' கடந்த 10-ம் தேதி செய்தி வெளியானது.

நகராட்சி பதில்:

இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல்லாவரம் நகராட்சித் தலைவர் இ. கருணாநிதி அளித்துள்ள விளக்க அறிக்கை விவரம்:

பல்லாவரம் நகராட்சி மூலம் வாங்கி வழங்கப்படவுள்ள குப்பைத் தொட்டிகள் நீண்டநாள் உழைக்கக் கூடிய, அதிக தாங்கும் திறனும், கலப்பில்லாத தூய் மையான பாலித்திலின் மூலப்பொருள் மூலம் அடிக்கடி கழுவிப் பயன்படுத்தும் வகையில் மூடியுடன் கூடிய தலா 600 கிராம் எடையுள்ள பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் தயாரிக்கப்படும் தரமுள்ள தனியார் நிறுவனமான சின்டெக்ஸ் தயாரிக்கும் குப்பைத் தொட்டிகள் ஆகும். இதன் விலை தலா ரூ.69.

சென்னையில்...:

சென்னை மாநகராட்சி வாங்கிய குப்பைத் தொட்டிகள் கிண்டியில் இயங்கிவரும் மத்திய அரசின் சிப்பெட் நிறுவனத்தின் மூலம் மறு சுழற்சி செய்யப்பட்ட சாதாரண பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட 8 லிட்டர் கொள்ளளவும் 225 கிராம் எடையும் கொண்ட குப்பைத் தொட்டிகள்.

இதன் விலை தலா ரூ.11.80எனவே, பல்லாவரம் நகராட்சி வழங்கவுள்ள குப் பைத் தொட்டிகளை சென்னை மாநகராட்சி வழங்கும் குப்பைத் தொட்டிகளுடன் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல என இ. கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

பல்லாவரம் நகராட்சித் தலைவரின் இந்த விளக்க அறிக்கை அடிப்படையில், சென்னை மாநகராட்சி வழங்கிய குப்பைத் தொட்டிகள் தரம் குறைந்தவையா என்ற கேள்வி அடுத்து எழுகிறது.

அது மட்டுமல்ல, ஒரு நகராட்சியே, மத்திய அரசு நிறுவனத்தின் தயாரிப்பு தரமானது அல்ல என்று கூறி தனியார் நிறுவனத்திடம் குப்பைத் தொட்டிகளை வாங்குவது எந்த வகையில் லாபம் என்ற கேள்வியும் எழுகிறது.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

செலவு கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம்

சென்னை, பிப். 9: மாநகராட்சி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதில் வேட்பாளர்கள் தாமதம் காட்டி வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை கணக்கு தாக்கல் தொடர்பான நடைமுறைகள் முடியவில்லை என மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட்டவர்களில் உரிய காலத்துக்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 1,112 பேரும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் கணக்குகளை தாக்கல் செய்யாத 2,106 பேரும் என மொத்தம் 3,618 பேர் தேர்த லில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதில் சென்னை மாநகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் தங்களது கணக்குகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தாக்கல் செய்யாவிட்டால்...

சென்னை மாந கராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கு 1,112 பேர் போட்டியிட்டனர். இவர்களிடம் தேர்தல் செலவு கணக்கு விவரங்களைப் பெற்று அவற்றை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டியது மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையரின் பொறுப்பு.

தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த 30 நாள் களுக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலமாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பிக்காத வர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்படும். இதற்குப் பிறகும் அவர்கள் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களை அடுத்த தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதி.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட வர்களும் தங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்இருப்பினும், தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் சென்னை மாநகராட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்கள் இதுவரை முழுமையாக தாக்கல் செய்யப்படாமல் உள்ளது.

இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் டிசந்திரசேகரன் வெள்ளிக்கிழமை கூறியது:

சென்னை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற்றபோது மாநகராட்சி ஆணையராகவும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமாக இருந்தவர் ம.ப. விஜயகுமார்.

இவர் வேறு துறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஓய்வும் பெற்று விட்டார்.

இந்த நிலையில் மாநகராட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்களைச் சேகரித்து ஆணையத்திடம் அளிப்பதாக இப்போது ஆணையராக உள்ள ராஜேஷ் லக்கானி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் மண்டல வாரியாக வேட்பாளர்களிடம் இருந்து செலவு கணக்கு விவரங்களைப் பெற்று அனுப்பி வருகிறார். இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த கணக்குகள் முழுமையாக கிடைத்து அவற்றை ஆய்வு செய்த பின்னரே தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய உத்தரவு!

சென்னை, பிப். 9: தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோரி பொது மக்கள் அனுப்பும் கடிதங்களுக்குப் பதில் அளிக்கும்போது "பொதுத் தகவல் அதிகாரி' என குறிப்பிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகா ரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறையில், பொதுத் தகவல் அதிகாரி பதவி இருப்பது ஏன் என்று "தினமணியில்' ஜனவரி 15-ல் வெளியான செய்தியின் எதிரொலியாக இந்த ரகசிய உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரும் விவரங்களை அளிப்பதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விலக்கு அளித்து கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசின் இந்த நடவடிக்கை தகவல்பெறும் பொது மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக தன்னார்வ அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அரசாணை எண்: 158-படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் இருக்கும் வழக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை தொடர்பில்லாத சில தக வல்களைக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அரசாணை எண்: 158-ஐ சுட்டிக்காட்டி தங்கள் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களைத் தரஇயலாது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட் டது.

இது தொடர்பான பதில் கடிதத்தில் அதனை அனுப்பியவர் தன்னை, ""பொதுத் தகவல் அதிகாரி' என குறிப்பிட்டிருந்தார். தகவல் பெறும் உரிமைச்சட் டத்தில் இருந்து தங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிக்கொள்ளும் அந்தத் துறையில் பொதுத் தகவல் அதிகாரி பதவி இருப்பது எப்படி என கடந்த ஜனவரி 15-ல் "தின மணி' கேள்வி எழுப்பியது.

ரகசிய சுற்றறிக்கை:

இதை யடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் அனைத்துப்பிரிவு மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனவரி 21-ம் தேதியிட்ட ஒரு ரகசிய சுற்றறிக்கை (எண்: 32679/வி.ஏசி.-4/2005) அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கடிதங்களுக்கு (தகவல் அளிக்க இயலாது என்று கூறி) பதில் கடிதம் அனுப்பும் அதிகாரிகள் அதில் தங்களை பொது தகவல் அதிகாரி என குறிப்பிடக் கூடாது.

அதற்குப் பதிலாக ""காவல் கண் காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை மத்திய சரகம், சென்னை- 28'' என்று குறிப்பிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரகசிய சுற்றறிக்கை மூலம், தங்கள் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை அத் துறை அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

இது அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் பதிலுக்கு எதிரானதாகவே உள் ளதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

குப்பைத் தொட்டியில் ஏன் இந்த முரண்பாடு?

சென்னை, பிப். 9: சென்னை பல்லாவரம் நகராட்சியில் தலா ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் இதேபோல வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளின் விலையை விட இது பல மடங்கு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளுக்கு சேர்த்து வேங்கடமங்கலத்தில் குப்பைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ரூ.44.21 கோடி மதிப்பீட்டில் இத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு பல்லாவரம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியான நிறுவனங்களை தேர்வுச் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் நட வடிக்கைகளை பல்லாவரம் நகராட்சி மேற்கொண்டது.

இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும் 26 வார்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 16 ஆயிரம் குடும்பங்களுக்கு குப்பைத் தொட்டிகளை வழங்க நகராட்சி முடிவு செய்தது.

இதற்காக, ஒவ்வொன்றும் 10 லிட்டர் கொள்ளளவுள்ள 16 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

இதில் "கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' ரூ.77-க்கும், "சின்டெக்ஸ் நிறுவனம்' ரூ.80-க்கும் குப்பைத் தொட்டிகளை வழங்க முன் வந்தன"கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' குறிப் பிட்டுள்ள ரூ.77 மற்ற நிறுவனங்களின் விலை யைவிட குறைவாக இருந்தாலும், இது தங்களது மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக இருப்பதாக 2008 டிசம்பர் 23-ல் நடைபெற்ற நகராட்சி மன்றக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப் பட்டது.

எனவே, அந்த நிறுவனம் மதிப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப விலையை குறைத்துக் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்த நிறுவனத்திடம் பேரம்:

நகராட்சி நிர்வாகம் மூலம் இது குறித்து நகராட்சி பொறியாளர் மேற்குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்இதையடுத்து, அந்த நிறுவனம் தலா ரூ.69 விலையில் குப்பைத் தொட்டிகளை வழங்க முன்வந்தது.

இதற்கு 2009 ஜனவரி 27-ல் நகராட்சிக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டதுஇதே நிறுவனத்திடம், இதே விலைக்கு தங்கள் நகராட்சிப் பகுதிகளுக்கு தேவைப்படும் எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகளை வாங்குவது குறித்து ஆலந்தூர், தாம்பரம் நகராட்சிகள் தனித்தனியாக முடிவு செய்துக் கொள்ளலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில்...:

சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வீட்டில் இருந்து சேகரிப்பதற்காக குடிசைப்பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகள் தலா ரூ.12-க்கு மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத்திடமி ருந்து வாங்கப்பட்டுள்ளது.

அங்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு, அதில் மற்ற நிறுவனங்கள் தெரிவித்த விலைகள் ஆய்வு செய்யப்பட்டு, மிகக் குறைவான விலை சிப் பெட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்திடம் இருந்து குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

முரண்பாடு:

8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டி ரூ.12-க்கு கிடைக்கும் போது, வெறும் 2 லிட்டர் கூடுதலாக அதாவது 10 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகளை ரூ.69 விலைக்கு பல்லாவரம் நகராட்சி வாங்க முடிவு செய்துள்ளது.

குப்பைத் தொட்டியின் அளவில் 8 லிட்டருக்கும், 10 லிட்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், அதற்கான விலையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதே மக்களிடம் தற்போது எழுந்துள்ள கேள்வி.

நகராட்சி பதில்:

கொள்ளளவு அதிகம் என்பது மட்டுமல்ல, நாங்கள் வாங்கும் குறைந்த எண்ணிக்கையும் இந்த அதிக விலைக்கு காரணம் என்று நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், இது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை விசாரித்து மக்களின் வரி பணம் வீணாகாமல் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.