புதன், 26 டிசம்பர், 2012

குஜராத் மாநிலத்தைப் பின்பற்றி, நகர்ப்புற திட்டங்களுக்குநிலங்களை கையகப்படுத்துவதில், புது நடைமுறை

குஜராத் மாநிலத்தைப் பின்பற்றி, நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில், புது நடைமுறையை அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

மக்கள் தொகை அதிகரிப்பு:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 48.44 சதவீதம் பேர், நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்றனர். அடுத்த சில ஆண்டுகளில், இது, 55 சதவீதமாகஅதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்களின் தேவைக்கு ஏற்ப, நகர்ப்புற பகுதிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப் படவில்லை. நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பேருந்து நிறுத்தங்கள் அமைப்பது; மெட்ரோ ரயில், மோனோ ரயில், புறவழிச்சாலைகள் போன்ற திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை, தனியாரிடம் இருந்து கையகப்படுத்துவதில், ஏற்படும் சிக்கல்களே, இதில் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
குஜராத் வழியில்...:
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நகர்ப்புற வளச்சித் திட்டங்களுக்கு நிலம் எடுப்பதில் கடைபிடிக்கும் நடைமுறைகள், நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளன. அங்கு முழுமை திட்டத்துக்கு அடுத்தபடியாக, நகர்ப்புற மேம்பாட்டுதிட்டம்உருவாக்கப்படுகிறது.எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் கண்டறியப்பட்டு, சர்வே எண்கள் அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன.இதில், அரசு திட்டத்துக்கு தேவையான அளவு போக, மீதியுள்ள நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கே சீரமைக்கப்பட்ட மனைகளாக திருப்பித் தரப்படுகின்றன.இதனால், மேம்பாட்டுத் திட்டத்தால் தாங்கள் வெளியேற்றப்படுவோம் என்ற அச்சம்தீர்க்கப்பட்டு, தேவையான நிலங்கள், எவ்வித சிக்கலும் இன்றி கையகப் படுத்தப் பட்டு பயன்படுத்தப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன், அங்கு சென்று, இத்திட்டத்தை ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், இது குறித்த, விவர அறிக்கையை தமிழக அரசுக்கு அளித்தனர்.இதே சமயத்தில், நகரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் குழு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் எடுக்க, இதற்கென நில தொகுப்புகளை உருவாக்கலாம் என்று சிபாரிசு செய்துள்ளது.இதற்காக நகரமைப்பு சட்டத்தின், "36அ' பிரிவில் உட்பிரிவு ஒன்றை சேர்க்க பரிந்துரைத்திருக்கிறது.

புதிய நடைமுறை:
இது குறித்து, நகரமைப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
இதன்படி, நகர்ப்புறப்பகுதிகளில் எதிர்காலதிட்டங்களுக்கு தேவையான நிலங்களை கண்டறிந்து, அது குறித்த சர்வே எண்கள் அடங்கிய ஒரு தொகுப்பை உருவாக்கப்படும்.அதில் தேவையான அளவை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடமேதிரும்ப அளிக்கலாம்.மேலும், வருவாய்த்துறையை சார்ந்திராமல், நகரமைப்புத்துறை மூலமே நிலங்களை விரைந்து கையகப்படுத்தலாம்.மேலும், புதிய மனைப்பிரிவு, குடியிருப்புத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் நிலையிலேயே, எதிர்கால திட்டங்களுக்கான நிலங்கள்,கண்டறியப்பட்டு கையகப் படுத்தப்படும்.இதன் அடிப்படையில், நிலத்தொகுப்புகளை உருவாக்குவதற்கான வரைவுத்திட்ட அறிக்கை, நகரமைப்புத்துறை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த அறிக்கை சட்டத்துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.அதன் ஒப்புதல் கிடைத்தவுடன், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் அரசாணையாக வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.