திங்கள், 30 ஜூன், 2008

சும்மா... அதிராம இருக்க!

ஒரு டன் கம்பி, ஒரு டன் கருங்கல் ஜல்லி, ஒரு டன் மணல், ஒரு டன் சிமென்ட் இவை அனைத்தும் சேர்ந்த சுமார் நான்கு டன் எடை யுள்ள உங்கள் வீட்டின் தளத்தை தாங்குவது எது? இவ்வாறு தளத்தை தாங்கும் அமைப்புகள் உறுதியானவைதானா? அவை முறைப்படி அமைக்கப்பட்டுள் ளனவா? தளத்தை தாங்கும் அமைப்புகளில் குறைபாடுகள் ஏற்பட்டால் உங்கள் வீட்டின் நிலை என்ன? இந்த கேள்விக ளுக்கு பதிலை தேடுவதற்கு முன்னர் கட்டடங்கள் கட்டப்ப டும் முறை குறித்த சில தகவல் கள்...

பொதுவாக "பிரேம்டு ஸ்ட் ரெக்ட்சர்', "லோடு பேரிங் ஸ்ட் ரெக்ட்சர்' ஆகிய 2 விதங்களில் தற் போது கட்டடங்கள் கட்டப்படுகின் றன.திட்டமிட்டு தூண்கள் மற்றும் கீழும்- மேலும் பீம்கள் அமைத்து கட்டுவது "பிரேம்டு ஸ்ட்ரெக்ட்சர்' எனப் படுகிறது.

இதில் அஸ்திவா ரத்தை அதிக எடை தாங்கும் வகை யில் கட்டினால் அதன் மீது அமைக் கப்படும் தூண்களை நம்பி எவ்வ ளவு தளங்கள் வேண்டுமானாலும் கட்டலாம்.பெரும்பாலான கட்டுமான நிறு வனங்கள் இந்த முறையை பின்பற் றியே கட்டடங்களை கட்டுகின்றன.

அஸ்திவாரத்தை மட்டும் மிக வலுவாக அமைத்துவிட்டு தூண் கள் அமைக்காமல் சுவர்களை எழுப்பி அதன் மீது தளம் போடு வது லோடு பேரிங் ஸ்ட்ரெக்ட்சர் எனப்படுகிறது. இதில் தளத்தின் சுமை அனைத்தையும் சுவர்களே தாங்குகின்றன.இதில் காலம் எனப்படும் தூண் கள் இருக்காது என்பதால் இந்த வகையில் அதிகபட்சம் 2 மாடிகள் வரை மட்டுமே கட்ட முடியும்.

மேலும், அஸ்திவாரத்துக்கு மேல் கட்டப்படும் அனைத்து சுவர்களும் முக்கால் அடி அதாவது 9 அங்குல அகலத்தில் இருக்க வேண்டும்.அப்போதுதான் அந்த சுவர் தளத் தின் சுமையை தாங்கும்.சிலர் தேவை இல்லாமல் இந்த வகை கட்டடங்களில் தூண்களை எழுப்புகின்றனர்.

ஆனால் பாதியி லேயே இந்தத் தூண்களை நிறுத்தி விடுகின்றனர்.இவ்வாறு கட்டும்போது அறை களை பிரிக்கும் வகையில் சுவர் களை நமது விருப்பத்துக்கு ஏற்ப கட்ட முடியாது. கட்டுமானப் பொருளில் தரக்குறைப்பாடு இருந் தாலோ அல்லது சுவர்களில் விரி சல் ஏற்பட்டாலோ கட்டடத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படும்.

பொதுவாக தனி வீடு கட்டு வோர் இந்த வகை கட்டுமானத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், கூடுதல் தளங்கள் அல்லது அறை கட்ட வேண்டுமானால் முழு கட்ட டத்தின் தன்மையும் மாற வேண் டிய நிலை ஏற்படும்.பெரும்பாலான கட்டுமான வல் லுநர்கள் இந்த முறையை பயன்ப டுத்துவதை தவிர்த்து வருகின்ற னர்.

ஆனால், அனுபவத்தை மட் டும் வைத்து கட்டுமானப் பணி களை மேற்கொள்ளும் சிலர் மட் டுமே இந்த முறை கட்டடங்களை கட்டி வருகின்றனர்.திட்டமிட்டு கட்டும் பிரேம்டு ஸ்ட்ரெக்ட்சர் முறையில் முதலில் கட்டட வரைபடத்தின் அடிப்படை யில் வலுவான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

அதன் மீது தூண்கள் எழுப்பப்படுகின்றன.அடித்தளத்தில் இருந்து சில அடி உயரத்தில் இந்த தூண்களை இணைக்கும் வகையில் பீம்கள் எனப்படும் கான்கிரீட் இணைப்பு கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதே போல மேலே தளம் போடுவதற்கு முன்னர் மீண்டும் பீம்கள் அமைக் கப்படும்.

இதன் மீது தளம் அமைக் கப்பட்டால் கட்டடத்தின் உறுதித் தன்மை 100 சதவீதம் உறுதிப்படுத் தப்படும்.மேலும் இந்த வகையில் கட்டும் போது தளத்தின் சுமையை தாங்கு வதில் சுவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பதால் நமது விருப்பம் போல சுவர்களை அமைத்துக் கொள்ளலாம். தளத் தின் மீது தேவையான அளவு அடுக்குகளை கட்டிக் கொள்ள லாம்.

இங்குதான் பிரச்னை:

முறை யாக தூண்கள் மற்றும் பீம்களை அமைத்து கட்ட வேண்டிய பிரேம்டு ஸ்ட்ரெக்ட்சர் முறையில் அடுக்குமாடி கட்டடம் கட்டும் பெரும்பாலானோர் முறையாக நடந்துக் கொள்கின்றனர்.

ஆனால், இந்த முறையில் குறைந்த பரப்பளவில் தனி வீட்டு கட்டும் சிலர் கம்பி செலவை குறைப்பதாகக் கூறியோ அல்லது வேறு காரணங்களை கூறியோ தளத்தை தாங்குவதற்கான பீம் போடுவதை தவிர்த்து விடுகின்ற னர்.

இதனால், தளத்தின் சுமை முழு வதும் தூண்களுக்கு மட்டும் இறங் காமல் சுவர்கள் மீதும் இறங்கும் நிலை ஏற்படும். சுமை அதிகரிப்ப தால் சுவரில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது ஒட்டு மொத்த கட்டடத்தின் உறுதித் தன் மையையும் பாதிக்கும் நிலை ஏற்ப டும்.

லேசான அதிர்வு ஏற்பட்டாலும் கூட இத்தகைய கட்டடங்கள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் தூண்களை இணைக்கும் பீம்களின் அவசியத்தை உணரலாம்.கட்டி முடித்துவிட்ட பின்னர் தூண்களை துளைத்து கம்பிகளை செருகி பீம்களை அமைப்பது நடை முறையில் வெற்றிகரமாக அமை யாது என்பது கட்டுமான வல்லுநர் களின் கருத்து.

எனவே, உங்கள் வீட்டை கட்டும் பொறியாளரிடம் இத்தகைய பீம்களை அமைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டி யது உரிமையாளர்களான உங்களின் அடிப்படை கடமை.

வி. கிருஷ்ணமூர்த்தி

மலிவு விலை சிமென்ட் விற்பனை நிறுத்தம்

சென்னை, ஜூன் 27: தமிழகத்தில் நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மூலம் நடைபெற்ற மலிவு விலை சிமென்ட் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஒரு மூட்டை ரூ. 200 என விற் பனை செய்ய தனியார் ஆலை நிர் வாகங்களிடம் இருந்து சிமென்டை பெறுவதில் அரசு அதிகாரிகள் ஆர் வம் இன்றி செயல்படுவதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் வெளிச்சந்தையில் ஒரு சிமென்ட் விலை ரூ. 275 ஆக அதிகரித்துள் ளது.தமிழகம் உள்பட பல்வேறு மாநி லங்களில் கடந்த ஆண்டு முன்பு எப் போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை அதிகரித்தது.

இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து ஒரு மூட்டை ரூ.200 என்ற விலையில் மாதந்தோறும் 20 லட்சம் சிமென்ட்டை விற்க தமிழக அரசின் தலையீட்டின் பேரில், தனியார் சிமென்ட் ஆலைகள் முன்வந்தன.

பிரச்னை ஆரம்பித்தது:

சில மாதங்கள் தொடந்து இந்த முறை யில் மக்களுக்கு சிமென்ட் கிடைத் தது. இந்த நிலையில் தமிழக அர சின் "டான்செம்' நிறுவனம் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார் பில் நேரடியாக சிமென்ட் இறக்கு மதி செய்து மக்களுக்கு இதே விலைக்கு வழங்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங் கியது.

இந்த நிலையில், சிமென்ட் இறக்கு மதி தொடர்பான பணிகள் அரசின் ஆர்வம் இன்மை காரணமாக தடை பட்டது. மேலும், தனியார் ஆலை நிர்வாகங்களிடம் இருந்து மாதம் தோறும் 20 லட்சம் மூட்டை சிமென்டை வாங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"நாங்கள் வழங்க தயாராக இருந் தும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளின் சில நடைமுறைகள் காரணமாக அறிவிக்கப்பட்ட அளவு சிமென்ட்டை குறைந்த விலை விற்பனைக்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது' என பிரபல தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் சிமென்ட் வாங்க மக்களிடம் ஆர்வம் இன்மை காரணமாக அதிக அளவு சிமென்ட் விற்பனையாகவில்லை. இருப்பு தீரா ததால் புதிதாக தனியார் ஆலைகளி டம் இருந்து சிமென்ட் வாங்கும் அளவு குறைந்து வருகிறது என நுகர்பொருள் வாணிபக் கழக அதி காரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சென்னை உள் பட தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளில் குறைந்த விலை சிமென்ட் விற் பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் படிப்படியாக நிறுத் தப்பட்டு வருவதாகவும் கட்டுமானத் துறையினர் புகார் தெரிவித்தனர்.

மீண்டும் விலை உயர்வு: இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகங்கள் ஒரு மூட்டை சிமென்ட் விலையை ரூ.275 வரை மீண்டும் அதிகரித்துள் ளன.கடந்த ஜனவரி மாதம் அரசு டைமை என்ற அரசின் அறிவிப்பு வரும்போது இருந்த நிலையே தற் போது மீண்டும் உருவாகியுள்ளது.

இதனால், கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கட்டுமான வல் லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள னர்.

கட்டடம் கட்ட சிறப்பு விதிகள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 24: சென்னை திருவான்மியூரை அடுத்துள்ள கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில் கட்டப்படும் புதிய கட்ட டடங்களுக்கான சிறப்பு விதிகளை அரசு அறிவித் துள்ளது.

கடலோர பகுதி நிலத்தடி நீர் வளம் மற்றும் கனிம வளம் ஆகியவற்றை பாதுகாக்கும் விதமாக கடலின் உயர் அலை மையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத் துக்கு அப்பாலும், பக்கிங்காம் கால்வாயில் இருந்து 100 மீட்டர் தூரத்திலும் உள்ள பகுதிகளில் புதிய கட்டடங்கள் வருவதை ஒழுங்குப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தடை விதிப்பு:

இதன்படி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், உத்தண்டி ஆகிய கிராமங்களில் புதிய கட்டடங்க ளுக்கு அனுமதி வழங்குவதற்கு தடை விதித்து அரசு 23-12-1980-ல் உத்தரவிட்டது.

நகர்ப்புற வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் தேவை மற்றும் நீர்வளம், கனிமவள வல்லுநர்கள் மேற் கொண்ட ஆய்வு முடிவுகளின் படி இந்தப் பகுதியில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

தடை நீக்கம்:

இந்த கோரிக்கைகள் அடிப்படை யில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையி லான பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை 27 ஆண்டுக ளுக்கு பின்னர் 13-3-2007-ல் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், இந்தப் பகுதியில் புதிய கட்டடங்க ளுக்கு அனுமதி வழங்குவதற்கான சிறப்பு விதிகளை உருவாக்குமாறு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) கேட்டுக் கொள்ளப்பட்டது.இதன்படி, சி.எம்.டி.ஏ. அனுப்பிய புதிய சிறப்பு விதிகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசின் ஒப்புதலை அடுத்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் ஆர். செல்லமுத்து இதற் கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

புதிய விதிகள்:
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு உட்பட்டு இந்த விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதன்படி சாதாரண குடியிருப்புகள் கட்டிக்கொள்ள நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்படும்.

மேலும், அலுவலகக் கட்டடங்கள், சிறு கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கான கட்டடங் கள் 40 சதுர மீட்டர் பரப்பளவிலும், தரை தளம் மற் றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடங்களாக இருக்க வேண்டும்.

பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கான கட்டடங்கள் 100 சதுர மீட்டர் பரப்பளவிலும் 15 மீட்டர் உயரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.மக்கள் கூடும் அரங்குகள், அரசு கட்டடங்கள், வங்கிகள், மின்வாரிய கட்டடங்கள் உள்ளிட்டவை 300 மீட்டர் பரப்பளவிலும், 15 மீட்டர் உயரத்துக் குள்ளும் இருக்க வேண்டும்.

புதிய மனைப் பிரிவுகளின் பரப்பளவு ஒரு ஹெக் டேருக்குள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் புதிய கட்டடங்கள் அரசின் சிறப்பு விதிகளில் குறிப் பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலைகளுக்கு இடம் விட்டு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு, கழிவுநீரை முறையாக வெளியேற்றுவது தொடர் பான விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண் டும்.

ஏற்கெனவே கட்டியிருந்தால்...:

தடை விதிக்கப் பட்டிருந்த காலத்தில் கட்டப்பட்டு தற்போது அறி விக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு விதிகளுக்கு உட்பட் டதாக இருக்கும் கட்டடங்கள் வரைமுறைப்படுத் தப்பட்டதாக கருதப்படும்.

சிறப்பு விதிகளுக்கு முரணாக இருக்கும் கட்டடங் கள் மீது அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தப் பகுதியில் விதிகளுக்கு உட் பட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதில் இருந்த 28 ஆண்டு கால பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள் ளது.

சி.எம்.டி.ஏ. 2-வது மாஸ்டர் பிளானை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு

சென்னை, ஜூன் 23: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) உருவாக்கியுள்ள 2- வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 ஆண்டு தாமதத்துக்கு பின்னர் கடந்த ஆண்டு சி.எம்.டி.ஏ.2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையை தயாரித்தது.இது தொடர்பாக பொது மக்கள், கட்டுமான வல்லுநர்கள், நகர மைப்பு வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பெறப்பட்டன.

இந்த கருத்துகள் அடிப்படையில் 2-வது மாஸ்டர் பிளான் இறுதி அறிக்கை தயாரிக் கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.இருப்பினும் அரசின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள் ளது.

இதனால், அதிகரித்து வரும் மக்கள் தொகையின் தேவைக்கு ஏற்ப புதிய குடியிருப்புகள் கட்டுவ தற்கு ஒப்புதல் கிடைக்காமல் உள் ளது.

அரசாணை வெளியீடு:

இந்த நிலையில் 2-வது மாஸ்டர் பிளான் தொடர்பாக, தமிழக அரசின் வீட் டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அண்மையில் வெளியிட் டுள்ள அரசாணை விவரம்:

சி.எம்.டி.ஏ. துணைத் தலைவர் அனுப்பி இருந்த 2026-ம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதற் கான 2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையை அரசு தீவிர மாக ஆராய்ந்தது. இந்த வரைவு அறிக்கை மீது அமைச்சர்களின் பரிந்துரைகளை பெற முடிவு செய் யப்பட்டது.

5 அமைச்சர்கள்:

இதற்காக முக்கி யத் துறைகளை சேர்ந்த 5 அமைச் சர்கள் கொண்ட குழு அமைக்கப்ப டுகிறது.(1) மின் துறை அமைச்சர், (2) பொதுப் பணித்துறை மற்றும் சட் டத்துறை அமைச்சர், (3) உயர் கல் வித்துறை அமைச்சர், (4) போக்குவ ரத்துத் துறை அமைச்சர், (5) செய் தித் துறை அமைச்சர் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள் ளது.

பரிந்துரை எப்போது?

மாஸ்டர் பிளான் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு தனது பரிந்துரைகளை எப்போது அளிக்க வேண்டும்? குழுவின் ஆய்வு வரை யறை என்ன? இவர்களுக்கு மாஸ் டர் பிளான் குறித்து யார் விளக்கு வார்கள்? என்பன போன்ற வினாக் களுக்கு விடை இல்லை.

எனவே, 2-வது மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வருவதை நிரந்தர மாக நிறுத்தி வைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளதா என்பதே பல்வேறு தரப்பி னருக்கும் தற்போது எழுந்துள்ள சந் தேகம்.

மனைகளை ஒதுக்க தொலைபேசி மூலம் உத்தரவு

வீட்டுவசதி வாரியத்தில் அதிகரிக்கும் முறைகேடுகள்

சென்னை, ஜூன் 21: தமிழ்நாடுவீட்டுவசதி வாரியத் தலைவர்,நிர்வாக இயக்குநர் உள்ளிட்டஉயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் அளிக்கும் உத்தரவின் படியே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இத்தகைய செயல்பாடுகள்வீட்டுவசதி வாரிய நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வீட்டுமனைகள் மட்டுமல்லாது வணிக மனைகள், பள்ளிகளுக்கான மனைகள் ஆகியவற்றையும் உருவாக்கி,அதனை மேம்படுத்தி உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.

இவ்வாறு மனைகளைஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்என்பதற்காக மனைகளைஒதுக்குவது தொடர்பானநடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால், இந்த நடைமுறைகள் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகின்றன என்பது தான்தற்போது எழுந்துள்ளகேள்வி.

எந்த ஒரு மனையானாலும்பொது அறிவிப்பு வெளியிட்டுஏலம் மூலமே ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது வீட்டுவசதி வாரியத்தின் விதியாக உள்ளது. ஆனால், இந்த விதிகள்முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாகமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீட்டுவசதி வாரியத்தில்வணிக பகுதிக்கான மனைகளை பெறுவதற்கு எப்போதுமே பலத்த போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக இந்தமனைகளை பெற விரும்புவோர் தங்களது அனைத்துவிதமான பலத்தினையும் பிரயோகப்படுத்துவதாக பரவலாக புகார் கூறப்படுகிறது.

இந்தப் புகார்களை உறுதிப்படுத்தும் விதமாக சில ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதிகாரி வெளியிட்ட ஆதாரம்:

சென்னை மேற்கு அண்ணாநகர் பஸ் நிலையம் அருகில்தந்தை பெரியார் சமுதாயமைய வளாகத்தின் ஒரு மூலையில் கோபாலன் என்பவர்கடை நடத்தி வருகிறார்.இந்தக் கடை ஆக்கிரமிப்பாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எழுந்தபுகார்களுக்கு பதில் அளித்துதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலர் சி.காமராஜ் அளித்த விவரம்:

மேற்கு அண்ணா நகர் பஸ்நிலையம் அருகில் உள்ளதந்தை பெரியார் சமுதாயமைய வளாகத்தில் 60 சதுரஅடி நிலம் எஸ்.கே. கோபாலனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த நிலத்தை எஸ்.கே. கோபாலன் என்பவருக்கு ஒதுக்குமாறு வீட்டுவசதி வாரிய தலைவர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டதால்இதற்கான ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஒதுக்கீட்டுக்கானஆணையில் (எண்:பி8.89249.84-1) வீட்டுவசதிவாரியத்தின் அண்ணா நகர்கோட்ட செயற் பொறியாளர்குறிப்பிட்டுள்ளார்.

1984-ம் ஆண்டு இந்த ஒதுக்கீடு நடைபெற்று இருந்தாலும், இது தொடர்பான உத்தரவு தொலைபேசி மூலம்அளிக்கப்பட்ட விவரம் தற்போது தான் வெளியாகியுள்ளது.

தொடரும் முறைகேடுகள்:

இது மட்டுமல்லாமல்,சென்னை உள்பட தமிழகம்முழுவதும் ஏராளமான வீட்டுமனைகள், வணிக மனைகள்,பள்ளி வளாகங்களுக்கானமனைகள் உயர் அதிகாரிகளின் தொலைபேசி உத்தரவுகள் அடிப்படையிலேயே ஒதுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் புகார்தெரிவித்துள்ளனர்.

இதனால், விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மனைகள் கிடைக்காமல் போகிறது. விதிகளுக்குமுரணான இந்த அணுகுமுறைகள் வீட்டுவசதி வாரியத்தின்ஊழலுக்கு வழிவகுப்பதாகவேஉள்ளது என ஊழலுக்கு எதிரான பிரசார இயக்கமான "ஐந்தாவது தூணின்' சென்னைமாவட்ட செயலர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திங்கள், 16 ஜூன், 2008

ரயில் பயணிகளை அச்சுறுத்தும் அல்ட்ராஸôனிக் எலி விரட்டிகள்

சென்னை, ஜூன் 15: எலிகளை விரட்டு வதற்காக குறிப்பிட்ட சில ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள அல்ட்ராஸôனிக் கருவிகள் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற் படுத்தும் வகையில் இருப்பதாக ரயில் பய ணிகள் அச்சம் தெரிவித்தனர்.

பயணிகள் உணவுப் பொருள்களைக் கண்டபடி வீசி எறிவதும், ரயில் பெட்டி களை முறையாகப் பராமரிக்காததும், எலிகள், கரப்பான்பூச்சிகளை வரவேற் கின்றன.

இந்தப் பிரச்னையால் ரயில் பயணிக ளுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்குவது குறித்து ஆலோசித்த ரயில்வே நிர்வாகம் எலிகள், பூச்சிகளை விரட்ட அல்ட்ரா ஸôனிக் கருவிகளைப் பயன்படுத்த முடிவு செய்தது.

இதன்படி, சென்னை உள்ளிட்ட பல் வேறு நகரங்களில் வட மாநிலங்களுக்குச் செல்லும் நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்க ளில் இத்தகைய கருவிகள் சோதனை முறையில் பொருத்தப்பட்டது. தற்போது சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இக்கரு விகள் பொருத்தப்பட்டுள்ளன என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் டிரான்ஸ்மிட்டர்கள் மனிதர்களின் உடல் நலனைப் பாதிக்கும் தன்மை கொண் டவை என மருத்துவர்களும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ள னர்.

பாதிப்பு என்ன?

இவை எழுப்பும் ஒலி அலைகள் மனிதர்களின் காதுகளில் கேட் காது என்றாலும், இவற்றால் மனிதர்க ளுக்கு உடல்ரீதியாக பல்வேறு பாதிப்பு கள் ஏற்படும் என தற்போது தெரியவந் துள்ளது.

இந்த அலைகள் மனிதர்களின் உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பியின் செயல் பாட்டை வேகப்படுத்தும். இதனால், உட லில் அட்ரீனலின் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும்."அட்ரீனலின் சுரப்பது அதிகரித்தால் உடலில் உள்ள இனவிருத்தி ஹார்மோன் களின் வழக்கமான செயல்பாடு பாதிக்கப் படும்' மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

அல்ட்ராஸôனிக் கருவிகள் பரப்பும் ஒலி அலைகள் காரணமாக மனிதர்க ளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். இந்த ஒலி அலைகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் மேற் கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள் ளது.

வெற்றி கிடைக்கவில்லை:

வட சென் னையில் உள்ள ஒரு தொழிலக வளாகத் தில் பறவைகளைக் கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்ட்ராஸô னிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.ஆனால், இந்த கருவிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த குருசாமி தெரி வித்தார்.

ஏற்கெனவே, தோல்வி அடைந்த இந்த முயற்சியை மீண்டும் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்வது தேவையற்ற ஒன்று என் றும் அவர் கூறினார்.பெருமளவில் மக்கள் பயன்படுத்தும் ரயில்கள் போன்றவற்றில் இத்தகைய புதிய கருவிகளை பொருத்துவதால் எத்த கைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து நீண்டகால ஆய்வுகள் மேற் கொள்ள வேண்டும்.

ஆனால், அல்ட்ராஸôனிக் கருவிகள் விவகாரத்தில் இத்தகைய ஆய்வுகள் மேற் ù க ô ள் ள ப் ப ட் ட ன வ ô ? அதன் முடிவு என்ன? என்பது குறித்த தக வல்களை ரயில்வே நிர்வாகம் வெளிப்ப டையாக தெரிவித்து மக்களின் பாதுகாப்பு உணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நவீன கருவிகளைப் பொருத் துவதற்கு பதில் ரயில்களில் பராமரிப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டியதே அவசியம் என்பது பயணிக ளின் கருத்து.

காயத்திற்கு மருந்து கருணை!

உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாலும், பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையுமே சுமையாகக் கருதும் அளவுக்கு தனி மனித மனோபாவங்கள் மாறியுள்ளது. இதில் விபத்துகளில் காயமடைந்த மற்றும் நோயுற்ற பிராணிகளின் நிலை குறித்து யாராவது கவலைப்படுவார்களா?


இந்தக் கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல் நமக்குப் பாடமாகவும் இருக்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (மாலை நேரப் பிரிவு) ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் பிந்து.


காயமடைந்த, நோயுற்ற நாய்களை எங்கு பார்த்தாலும் அவற்றைத் தாயுள்ளத்தோடு அரவணைத்து, மிகுந்த பொறுப்புடன் மருத்துவ சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார் பிந்து. நாயைப் பார்த்தவுடன் கல்லை எடுத்து அடிக்க நினைப்பவர்கள் மத்தியில் இவர் பார்வை மட்டும் இப்படி மாறியது எப்படி? அவரே சொல்கிறார்:

""சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பிரதான சாலையில் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்து நடந்தது. வேகமாகச் சென்ற வாகனத்தில் சிக்கிய ஒரு நாய் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநர் உள்பட அவ்வழியே சென்ற எல்லோரும் இந்தச் சம்பவத்தை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல் தங்களது சொந்த வேலை நிமித்தமாகச் சென்றுகொண்டிருந்தனர். இந்த விபத்தும், மக்களின் போக்கும் நாயின் உடலை மட்டுமல்ல எனது மனதையும் காயப்படுத்துவதாக அமைந்தது.

உடனடியாக அந்த நாயை அங்கிருந்து எனது வீட்டுக்கு கொண்டு சென்று, முதல் உதவி அளித்தேன். எலும்பு முறிவுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால் நாயை "ப்ளு கிராஸ்' அமைப்பினரிடம் ஒப்படைத்தேன். இதன்பிறகுதான் நோயுற்ற நாய்களின் பக்கம் என் கவனம் திரும்பியது.


இதைப்போல் விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி அருகே இன்னொரு விபத்தைப் பார்த்தேன். பஸ் சக்கரம் ஏறி காலில் பலத்த காயமடைந்து கதறுகிறார் ஒரு வாலிபர். பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் சக மனித உயிர் ஒன்று அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் தவிப்பதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அடுத்த வண்டியைப் பிடித்து அவரவர் போகவேண்டிய இடங்களுக்குச் சென்றனர்.

அந்த விபத்தை நேரில் பார்த்த நான் உடனடியாக அருகில் இருந்த தெரிந்தவர் ஒருவரின் காரைக் கேட்டுப் பெற்று காயமடைந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.

இதோடு நிற்காமல் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகி நடந்த சம்பவம் குறித்து சாட்சியம் அளித்ததன் பயனாக அந்த வாலிபரின் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைத்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் பாதிக்கப்படும் சக உயிர்கள் மீதான பரிவை எனக்குள் பலப்படுத்தியது. அடுத்த சில சம்பவங்களில் நான் நம்பிய தன்னார்வ அமைப்பின் செயல்பாடுகளும் திருப்தி தராததால், பாதிக்கப்படும் நாய்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்து பராமரிக்கத் தொடங்கினேன். 18 வருடங்களாக இந்தப் பணி தொடர்கிறது.


பி.எச்.இ.எல். நிறுவனத்தில் உயரதிகாரியாக இருந்த தந்தை பிஷ்ராடே 2005-ல் உயிரிழந்தார். இதையடுத்து, பணி நிமித்தமாக உடன் பிறந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற அவர்களுடன் தாயும் சென்றுவிட பாதிக்கப்பட்ட நாய்களுடன் நான் முழுமையாக ஐக்கியமாகிவிட்டேன்.


நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை வெறுப்புடன் பார்க்கும் பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். எது எதற்கோ மேற்கத்திய நாடுகளின் பழக்கங்களைக் கடைப்பிடிக்கும் நாம் விலங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது ஏன்?


விலங்குகளுக்காக நீங்கள் எதையும் பிரத்யேகமாகச் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் மிச்சம்மீதியாக இருக்கும் உணவுப் பண்டங்களை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசாமல் அதனை ஒரு காகிதத்திலோ அல்லது ஒரு துண்டு இலையிலோ போட்டு முறையாக வைத்தாலே போதும்.

நீங்கள் அதன் பசியை, அதன் தேவையை உணர்ந்துள்ளீர்கள் என்று அது உங்களை நம்பி இருக்கத் தொடங்கிவிடும். சில மனிதர்களைப் போன்று நாய்களுக்குப் பொய் சொல்லி உதவிகளைப் பெற்று ஏமாற்றத் தெரியாது. எனவே, உதவ வேண்டும் என்று நினைத்தால் நாய்களை நம்பி உதவலாம்.


அடிபட்ட, நோயுற்ற நாய்களை அருவருப்புடன் பார்த்து வெறுக்காமல் நம்மால் முடிந்த அளவில் சிறிய உதவிகளைச் செய்தாலே போதும் பல பெரிய பிரச்னைகள் தீர்ந்துவிடும். உதாரணமாக, புதிதாக யாரையாவது பார்த்தால் குரைப்பது நாய்களின் இயல்பான குணம்.

இதனைத் தவறாக புரிந்துக் கொள்ளும் சிலர் கையில் கிடைக்கும் கல்லால் அதனைத் தாக்குகின்றனர். இவ்வாறு தாக்கப்படுவதால் நாய்களின் உடலில் காயங்கள் ஏற்படும். இந்தக் காயங்கள் மீது கிருமி தொற்று ஏற்பட்டால் சிறு புழுக்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நாய்களின் உடலில் காயம் ஏற்பட்ட பகுதியில் மஞ்சள் தூள் அல்லது டர்பைன்டைனைக் கொட்டினாலே போதும் காயம் ஆறத் தொடங்கிவிடும். இதைவிடுத்து புழு வைத்துவிட்டது என்று கூறி நாயை மேலும் அடித்து துன்புறுத்துவது மற்றும் விரட்டி அடிப்பதால் அதனிடம் வெறி உணர்வை வளர்த்துவிடும். இது நமக்கே பாதகமாக முடியும்.


பொதுவாக நாய்கள் இனப்பெருக்கத்துக்கு எதிர்பாலினத்தைத் தேடும் போது ஒருவித ஒலியை எழுப்பும். இதனை நம்மில் பலரும் அது அழுவதாகவும் அவ்வாறு நாய் அழுவது அருகில் இருக்கும் வீட்டில் யாராவது இறக்கப்போவதற்கு முன்னெச்சரிக்கை என நினைப்பது தவறு. இவ்வாறு கூறப்படுவதும் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி வேறில்லை.

மனிதர்களுக்கு ஏற்படுவது போன்று நாய்களின் உடலில் ஏற்படும் தோல் பாதிப்பே சொறியாகும். உரிய மருந்துகள் அளித்தால் இந்தச் சொறியைக் குணப்படுத்திவிட முடியும்.

ஆனால், பலரும் தாங்கள் பாசத்துடன் வளர்க்கும் நாயானாலும், அதற்கு இத்தகைய தோல் பாதிப்பு ஏற்பட்டவுடனே வீட்டை விட்டு வெளியே விரட்டிவிடுகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்படும் நாய்கள் மற்றவர்களால் அருவருப்புடன் பார்க்கப்பட்டு மேலும் துன்புறுத்தப்படுகின்றன.

இத்தகைய சொறி பாதிப்பை ரேபிஸ் என நம்பியும் சிலர் இவற்றைக் கொல்லும் அளவுக்குச் செல்கின்றனர். சொறியால் பாதிக்கப்பட்ட பல நாய்கள் மீட்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவை தற்போது நன்றாக இருக்கின்றன.

சொறி வேறு ரேபிஸ் வேறு என்ற அளவுக்கு கூட நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. இந்த வகையான தகவல்களை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். விலங்குகளில் குறிப்பாக வேறு எதற்கும் இல்லாத வகையில் நாய்களுக்கு ஒரு சிறப்பு குணம் உள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் மனிதர்களின் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும் என மருத்துவர்களே உறுதிபடுத்தியுள்ளனர். இவ்வாறு அடுத்த ஒரு உயிரின் நலனுக்காக யோசிக்கும் போது மனிதனின் மன நிலை மேம்பட்ட நிலையை எட்டுகிறது.


ராஜபாளையம் உள்ளிட்ட நமது நாட்டு பாரம்பரிய வகை நாய்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கல்லூரி பணி மூலம் கிடைக்கும் வருவாயை வீட்டு வாடகைக்கும், நாய்களைப் பராமரிப்பதற்கும் மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தி வருகிறேன்.

குணப்படுத்தப்பட்ட நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நாய்களைப் பெற்று பராமரிக்க யாராவது முன்வந்தால் கொடுத்துவிடுகிறேன். புற்று நோய், பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட எட்டு நாய்கள் தற்போது எனது அரவணைப்பில் உள்ளது'' என்றார் பிந்து.

இந்தத் தாய் வழியில் நடைபோடப் போகிறவர் யாரோ!

ஞாயிறு, 15 ஜூன், 2008

தமிழக அரசின் சிமென்ட் இறக்குமதி திடீர் நிறுத்தம்?

சென்னை, ஜூன் 13: தமிழக அர சின் சிமென்ட் கழகம் (டான் செம்) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மேற் கொண்ட சிமென்ட் இறக்குமதி தற்போது திடீரென நிறுத்தப்பட் டுள்ளது.

இறக்குமதி சிமென்ட்டை பெறுவதற்காக செலுத்திய பணத்தை டான்செம் மற்றும் நுகர் பொருள் வாணிபக்கழகம் ஆகியவை திருப்பி அளித்து வருவ தாக கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை கடந்த ஆண்டு அதிகரித் தது. இதனால், தனியார் மற்றும் அரசு திட்டங்களுக்கான கட்டுமா னப் பணிகள் முடங்கும் நிலை ஏற் பட்டது.இந்நிலையில் தமிழக அரசின் அரசுடைமை எச்சரிக்கையை அடுத்து, ஒரு மூட்டை ரூ. 200 விலையில் குறிப்பிட்ட அளவுக்கு சிமென்ட் வழங்க தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் முன் வந்தனர்.

இந்த சிமென்ட் அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழ கத்தின் கிடங்குகள் மூலம் விற் பனை செய்யப்படுகிறது.இது தவிர அதிக அளவில் சிமென்ட் வாங்கும் கட்டுமான நிறுவனங்கள் ஒரு மூட்டை ரூ.160 விலையில் பெறுவதற்காக மத் திய அரசின் எம்.எம்.டி.சி. மூலம் இறக்குமதி சிமென்டை டான் செம் நிறுவனம் சென்னை, தூத் துக்குடி துறைமுகங்கள் மூலம் தொடங்கியது.

மேலும், தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சிமென்ட் கழகம் (டான்செம்) வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யும் சிமென்ட் ஒரு மூட்டை ரூ. 220-க்கு விற்பனை செய்யப்ப டும் என அரசு அறிவித்தது.

இதை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்தின் கிடங்குகளில் எந்த நிபந்த னையும் இன்றி மக்கள் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து வெளிச்சந்தையில் ஓபிசி 43 கிரேடு சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.235-ஆக குறைந்தது.அரசின் அறிவிப்பின்படி முதல் மாதத்தில் சென்னை துறைமுகத் துக்கு 1,250 டன்களும், தூத்துக் குடி துறைமுகத்துக்கு 1,250 டன்க ளும் சிமென்ட் வந்தன.

இவ்வாறு, இறக்குமதி சிமென்டை பெற அரசு அறிவித்தபடி கட்டுமான நிறுவனங்கள் மற்றும் சிமென்ட் விற்பனையாளர்கள் முன்பணம் செலுத்தினர்.முதலில் இந்தத் தொகையை டான்செம் நிறுவனம் நேரடியாக வாங்கியது. இதன்படி குறிப் பிட்ட சில மாதங்கள் மட்டும் இறக்குமதி சிமென்ட் கிடைத்தது.

சிமென்ட் கிடைக்கவில்லை:

கடந்த சில மாதங்களாக டான் செம் நிறுவனம் இறக்குமதி சிமென்ட்டை வாங்க விரும்பு வோரிடம் இருந்து புதிதாக முன்ப ணத்தை வாங்க மறுத்தது. இந்தத் தொகையை நுகர்பொருள் வாணி பக் கழகத்திடம் செலுத்துமாறு டான்செம் அதிகாரிகள் தெரிவித் தனர்.

நுகர்பொருள் வாணிபக் கழகத் திடம் முன்பணம் செலுத்தியவர்க ளுக்கு சிமென்ட் கிடைக்க வில்லை. இது குறித்து அதிகாரிக ளிடம் விசாரித்த போது முன்ப ணம் திருப்பி அளிக்கப்பட்டது என தமிழ்நாடு அடுக்குமாடி மற் றும் வீடு கட்டுவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. மணிசங்கர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சிமென்ட் விலை அதிகரித்துள்ளதால் சிமென்ட் இறக்குமதி தடைப்பட் டுள்ளது. எனவே, இறக்குமதி சிமென்ட்டுக்காக செலுத்திய முன்பணத்தை திரும்ப அளிக்கப் படுவதாக நுகர்பொருள் வாணி பக் கழக மற்றும் டான்செம் அதி காரிகள் கூறுகின்றனர் என இந் திய கட்டுமான வல்லுநர் சங்கத் தின் தென்னக மையத் தலைவர் எம்.கே. சுந்தரம் தெரிவித்தார்.

அரசு அறிவித்தபடி வெளிநாடு களில் இருந்து நேரடியாக சிமென்ட் இறக்குமதி நடைபெறு வது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உரிமம் பெற்ற தனியார் நிறுவனங் கள் நேரடியாக இறக்குமதி செய் யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

அதிகாரி பதில்:

சிமென்ட் இறக்குமதி தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழ கத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.சிமென்ட் இறக்குமதி தொடர் பாக முடிவெடுக்க வேண்டிய அதி காரம் நுகர் பொருள் வாணிபக் கழகத்திடம் அளிக்கப்பட்டுள்ள தால் இந்த விவகாரத்தில் எந்த பதி லும் கூறுவதற்கில்லை என டான் செம் நிறுவனத்தின் தலைவர் மற் றும் நிர்வாக இயக்குநர் கே. சத்ய கோபால் தெரிவித்தார்.

காரணம் யார்?

இறக்குமதி நிறுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 270-ஆக அதி கரித்துள்ளது. தனியார் ஆலை அதிபர்கள் தலையீடு காரணமா கவே இறக்குமதி நிறுத்தப்பட்டுள் ளதாக கட்டுமானத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கார் நிறுத்த ரூ. 9 லட்சம்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப் புகள் வாங்கும் விலையில் கார் களை நிறுத்தும் இடத்திற்காக ரூ. 9 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.இதனால், கார்கள் இல்லாதவர்களும் வீடு வாங்கும்போது கார் நிறுத்துமிடத்துக்கான தொகையாக பல லட்ச ரூபாய்களை செலவ ழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் தற்போது அடுக்குமாடி குடி யிருப்புகள் விலை அவற்றில் உள்ள கூடுதல் வசதிகளைப் பொருத்து ஒரு சதுர அடி ரூ.3,500 முதல் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்துக் கும் மேலும் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வகுத்துள்ள வளர்ச்சிக் கட்டுப் பாட்டு விதிகளின்படி அடுக்குமாடி குடியிருப் புக் கட்டடங்கள் கட்டும்போது அவற்றில் கார் கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடவசதி ஏற்படுத்த வேண்டியது கட்டா யம்.

இவ்வாறு இடவசதி ஏற்படுத்தாத கட்டடங் கள் விதி மீறல் புகாருக்கு ஆளாகியுள்ளன.இந்த பிரச்னை ஒருபுறம் இருக்க விதிகளின் படி வாகனங்களுக்கான இட வசதியுடன் ஏரா ளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவ தும் நடைபெறுகின்றன.

புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி குடியி ருப்புகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் நிறுத்தும் அளவுக்கு 120 சதுர அடி அளவுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கப்ப டும் இடங்களுக்கு வீடு விற்பனையின்போது, சென்னையில் ரூ. 2 லட்சம் வரையும், புறநகர்ப் பகுதிகளில் ரூ. 75 ஆயிரம் வரையும் வசூலிக் கப்படுகிறது என இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எம்.கே.சுந்தரம் தெரிவித்தார்.

இவ்வாறு ஒதுக்கப்படும் இடத்தின் அளவை விற்பனை ஆவணத்திலும் குறிப் பிட்டு வாகன நிறுத்தும் இட வசதியை உறுதிப் படுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.இவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களுக்காக எவ்வளவு தொகை வசூலிக்கலாம் என்பது குறித்து எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படா மல் உள்ளது.

நியாயமாக நடக்க நினைக்கும் சில கட்டுமான நிறுவன உரிமையாளர்கள், தங் களுக்குள் பேசி வைத்துக் கொண்டு ஒரு குறிப் பிட்ட தொகையை வசூலிக்கின்றனர்.

கார் நிறுத்த ரூ. 9 லட்சம்:

சென்னை அடையாறில் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றிடமிருந்து அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விற்ப னையின்போது கார் நிறுத்தும் இடத்துக்காக மட்டும் ரூ. 9 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ.80 லட்சம் என்பதால் கார் நிறுத்தும் இடத்துக் கும் இவ்வாறு அதிகபட்ச தொகை வசூலிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.ரூ. 30 லட்சம், ரூ. 40 லட்சம் விலைகளில் விற்பனை செய்யப்படும் குடியிருப்புகளில் கூட கார் நிறுத்தும் இடத்துக்காக ரூ. 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

கார் இல்லாதவர்கள்...:

கார் இருப்பவர்கள் மட்டுமல்லாது கார் இல்லாதவர்களும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கினால் நிறுத் தும் இடத்துக்கான தொகையாக பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.

இடம் ஒதுக்க வேண்டும் என விதி வகுப் பது போல இவ்வளவு தொகைதான் வசூலிக்க லாம் என்று அரசு நிர்ணயிக்க வேண்டும் என் கிறார் கோடம்பாக்கத்தில் அண்மையில் வீடு வாங்கிய ராமன்.

கார் இல்லாத நடுத்தர வருவாய்ப் பிரிவு மக் களின் நலன் கருதி அடுக்குமாடி குடியிருப்புக ளில் வாகன நிறுத்தும் இடத்துக்கான தொகையை ஒரு குறிப்பிட்ட அளவாக வரை யறை செய்ய அரசு முன்வர வேண்டும் என் பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.

வி. கிருஷ்ணமூர்த்தி

இப்படியும் ஒரு "பிசினஸ்'

சென்னையில் அடுக்குமாடி குடி யிருப்புகளில் கார் நிறுத்தும் இடவசதி இருப்பது கட்டாய மாகியுள்ள நிலையில் இதிலும் ஒரு புதிய வியாபாரம் களைகட்டியுள்ளது.

இவ்வாறு இட வசதியுடன் வீடு வாங்குவோரில் கார் இல்லாதவர்கள் தங்களுக்கான கார் நிறுத்தும் இடத்தை அடுத்த குடியிருப்பில் உள்ளவர்க ளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு அல்லது நட்பு அடிப்படையிலோ அளித்துவிடுகின்றனர்.

தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம் பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம் பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் அரு கில் உள்ள வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக வாடகை அடிப்படையில் அளிக்கப்ப டுகிறன.

வணிக நிறுவனங்களின் உரிமையா ளர்கள், அடுக்குமாடி குடியிருப்புக ளின் உரிமையாளர்கள் சங்கங்கள் தங் களுக்குள் பேசி வைத்துக் கொண்டு பகல் நேரத்தில் வாகன நிறுத்தும் இடத்தை வாடகைக்கு விட்டு குறிப் பிட்ட தொகையைப் பெறுகின்றனர்.

இது உரிய முறையில் வாகன நிறுத் தும் இட வசதியை செய்யாத கட்டட உரிமையாளர்களுக்கு மறைமுகமாக உதவும் வகையில் அமைந்துள்ளது.எனவே, கட்டட விதிகளை முறையாக அமல்படுத்த இத்தகைய செயல்பாடுக ளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமான வல்லுநர்கள் வலியுறுத்து கின்றனர்.

வாடகை வீடானாலும்...:

அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாடகைக்கு குடியேறுபவர்களிடம் கார் நிறுத்துவது உள்ளிட்ட பார்க்கிங் கட்டணமாக மாதத்துக்கு ரூ. 800 முதல் 1,500 வரை வசூலிக்கப்படுகிறது.வீட்டின் உரிமையாளர்கள் தாங்கள் வீடு வாங்கும்போது வாகன நிறுத்தும் இடத்துக்காக செலுத்திய தொகையை இவ்வாறு வசூலிக்கின்றனர்.

ஞாயிறு, 8 ஜூன், 2008

நட்சத்திரங்களை பார்க்க முடியாமல் போகலாம்..!

சென்னை, ஜூன் 5: நகர்ப்புற வளர்ச்சி காரண மாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இந்திய நக ரங்களில் ஒளி மாசு அளவு அதிகரித்து வருகி றது. இந்த நிலை மேலும் அதிகரித்தால் நமது அடுத்த தலைமுறையினர் இரவு நேரங்களில் வானில் நட்சத்திரங்களை காண முடியாத நிலை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

நகர்ப்புற வளர்ச்சி காரணமாக உயரமான பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை வெகு வாக அதிகரித்துள்ளன. இந்த கட்டடங்களை இரவிலும் பிரகாசமாக வைத்துக்கொள்ள ஒளி உமிழும் பிரமாண்டமான பல்வேறு வகை மின் சார விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக பொருத்தப்படும் விளக்குகள் பெரும் பாலும் மேல் நோக்கியே அமைக்கப்படுகின் றன. இதனால், விளக்கின் ஒளிக்கதிர்கள் பரவ லாக அனைத்து இடங்களுக்கும் பரவுகிறது.

குறைந்த எண்ணிக்கையில் இத்தகைய விளக் குகள் இருந்தவரை எவ்வித பிரச்னையும் இல்லை, இந்த விளக்குகளின் எண்ணிக்கை கோடிகளை தாண்டும்போது அது ஒட்டு மொத்த புவி பரப்பையும் இரவு நேரங்களில் பிர காசமாக்குகின்றன.

பாதிப்பு என்ன?

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தனித்தனி உயிர் நேரகால அட்டவணை (ஆண்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ஸ்ரீப்ர்ஸ்ரீந்) உள்ளது. இதன்படி குறிப்பிட்ட மணி நேரங்கள் அதா வது பகல் நேரத்தில் பிரகாசமான வெளிச்சத் தையும், குறிப்பிட்ட மணி நேரங்கள் அதாவது தூங்கும் நேரத்தில் இருட்டையும் விரும்பும் குணம் பொதுவாக உள்ளது. நாம் கண்களை மூடித்தூங்குவதும் இதன் அடிப்படையிலேயே அனிச்சை செயலாக நிகழ்கிறது.

கடலோரக் குடியிருப்புகள், பொழுதுப் போக்கு பூங்காக்கள் என்ற பெயர்களில் கட லோரப் பகுதிகளில் நாளுக்குநாள் இரவு நேரங் களில் அதிகரித்து வரும் ஒளி வெள்ளம் காரண மாக, இருட்டில் முட்டையிட்டு இனப்பெருக் கம் செய்யும் கடலாமைகள் பாதிக்கப்பட்டுள் ளன.

இனப்பெருக்கம், இரைதேடுவது ஆகிய செயல்கள் பாதிக்கப்படுவதால் இவற்றின் எண் ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது என்கின்ற னர் ஆய்வாளர்கள்.மேலும், வெüவால் உள்ளிட்ட உயிரினங்க ளும் வெளிச்சம் காரணமாக இரவில் உணவு தேட முடியாமல் அழிந்து வரும் சூழல் உருவா கியுள்ளது.

ஒளி வெள்ளம் அதிகரிப்பு காரண மாக ஏராளமான இரவு நேரப் பறவைகள் இல் லாமல் போய்விட்டன என்றும் அவர்கள் கூறு கின்றனர்.வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின் இணைப்பு மூலம் பிரகாசமான விளக்குகள் ஒளிர்வதால் இரவு நேரங்களில் காட்டு யானை, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் குழப்பம டைந்து மக்கள் வசிக்கும் பகுதி அல்லது விவ சாய நிலங்களுக்குள் புகுகின்றன என சுற்றுச்சூ ழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதிபலிப்பு ஏன்?

பகல் நேரத்தில் சூரிய கதிர்கள் காற்றில் உள்ள மூலக்கூறுகள் மூலம் பிரதிபலிப்பு அடைவதால் நிலபரப்பு வெளிச்ச மாக இருக்கிறது. இதனால் வானில் உள்ள நட் சத்திரங்களை நாம் பகலில் காண முடிவ தில்லை.

ஆனால், இரவு நேரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் நிலவின் ஒளிக்கதிர் கள் அதிக அளவில் பிரதிபலிக்கப்படுவதில்லை எனவே, நிலபரப்பில் இருந்து ஒளி பிரதிபலிக் காத நிலையில் வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் வெறும் கண்களாலேயே காணமுடிகிறது.

இந்த நிலையில் நிலப்பரப்பில் செயற்கையாக விளக்குகள் மூலம் ஏற்படும் வெளிச்சம் அதிக ரித்தால் இரவு நேர இருளை நம்பியுள்ள உயிரி னங்கள் பாதிக்கப்படுவதோடு, நமது எதிர்கால தலைமுறையினர் வானில் உள்ள நட்சத்திரங் களை காணமுடியாத நிலை ஏற்படும்.

இப்போதாவது...:

நமது நாட்டில் காற்று, நீர், ஒலி மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை கட் டுப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டு மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மூலம் இவற்றை அம லாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வரு கின்றன.

இப்போதாவது, தமிழ்நாடு மாசு கட் டுப்பாடு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப் புகள் ஒளி மாசு கட்டுப்பாடுக்கான விதிமுறை களை உருவாக்கி அமலாக்க வேண்டிய கட் டாய சூழல் உருவாகியுள்ளது.

விதிகளை மதிக்காமல் வீடு கட்டினால்...

சென்னை புறநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ரவி.தனியார் நிறுவன ஊழியரான இவர் படப்பையிலிருந்து ஒரக டம் செல்லும் வழியில் பிரதான சாலையில் இருந்து 2 கிலோ மீட் டர் தொலைவில் ஒரு கிரவுண்ட் நிலத்தை சில ஆண்டுகள் முன்பு வாங்கியிருந்தார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு வாடகை நாளுக்குநாள் அதிகரித்துள்ள நிலையில், இனி வாடகை கொடுத்து மாளாது என்பதால், தொலைவில் இருந்தாலும் பரவா யில்லை என தனது சொந்த நிலத் தில் வீடு கட்ட முடிவெடுத்தார் ரவி.

தனது வங்கி சேமிப்பில் உள்ள பணம் மற்றும் தெரிந்தவர்களி டம் பெற்ற கடன் ஆகியவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை திரட்டிய ரவி, வீடு கட்டுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை தொடங்கினார்.இதற்காக கட்டுமான பொறி யாளர் ஒருவரை அணுகி தனது வீட்டிற்கான வரைபடத்தை உரு வாக்கினார்.

பின்னர் அந்த வரை படத்துக்கு அரசின் விதிப்படி உள்ளாட்சி அமைப்பின் அனு மதி பெற அவர் முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் அலுவலகத்துக்கு சென்றார்.உள்ளூர் பிரமுகர்களையும், உள்ளாட்சி அலுவலக ஊழியர் கள் யாரையும் தெரிந்திராத நிலையில், கட்டட அனுமதிக் காக விண்ணப்பிக்க சென்றவரி டம், கட்டட அனுமதியா? அதற்கு இப்போது என்ன அவச ரம், வீட்டை கட்டி முடியுங்கள் பிறகு பார்க்கலாம் என அங்கி ருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

உள்ளாட்சி அமைப்பு ஊழியர் களின் இந்த அறிவுரை விதிப்படி நடக்க நினைத்த ரவிக்கு அதிர்ச்சி அளித்தது. இவரை போல நம்மில் பலரும் இத்த கைய அனுபவத்தை சந்தித்திருக் கலாம். சிலருக்கு இதைவிட மாறுபட்ட அனுபவமும் ஏற்பட் டிருக்கலாம்.

ரவிக்குக் கிடைத்த அனுபவம் சென்னைக்கு வெளியே.சென்னை மாநகராட்சி எல்லைக் குள் பெரம்பூருக்கு அருகில் ராமு வுக்கு கிடைத்த அனுவத்தைப் பார்ப்போம். இவர் வங்கிக்கடன் பெற வேண்டிய தேவை இல்லா மல், தன்னிடம் உள்ள பணத் தைக்கொண்டு வீடு கட்டுவதால், யாரையும் எதிர்பார்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படா மல் கட்டுமானப் பணிகளை தொடங்கினார்.

கட்டட அனுமதி வாங்கிவிட் டீர்களா என்று அவரிடம் கேட்ட போது, "நான் அக்கம்பக்கத்தில் விசாரித்தேன். எனது நிலத்தை சுற்றியுள்ள பகுதியில் யாரும் கட் டட அனுமதி வாங்கவில்லை.எனவே, நானும் அனுமதி வாங் கவில்லை' என்றார் அப்பாவி யாக.மாநகரம் முதல் குக்கிராமம் வரை வீடு கட்டும் தனி நபர்க ளால் ஏற்படும் விதிமீறல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகு திகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) அதிகார எல் லைக்குள் வருகின்றன.சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் புதிய கட்டடங்களுக்கான வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறை யில் உள்ளன.

அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட பெரிய கட்டடங்க ளின் வரைபடங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்கும் அதி காரம் சி.எம்.டி.ஏ.விடம் உள் ளது. இதேபோல, சிறு கட்டடங்க ளுக்கான (இரண்டு மாடி வரை) வரைபடங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்கும் அதிகாரம் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன.

சி.எம்.டி.ஏ. வின் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களும் உரிய அனுமதி பெறுவது கட்டாயம். இந்த விதி களை நடைமுறைப்படுத்த உள் ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அதிகாரம் வழங்கப்பட் டுள்ள நிலையில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதி கரித்து வருவது பல்வேறு கேள் விகளை எழுப்பியுள்ளது.

விதிகளை மதித்து கட்டட அனுமதி வாங்க செல்லும் நபர் கள் அந்தந்த உள்ளாட்சி அமைப் புகளால் அலைக்கழிக்கப்படு வது, சட்டம்- விதிகளை பேசா மல் அமைதியாக இருந்தால் லஞ் சம் கேட்பது என உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படும் கசப் பான அனுபவங்களே விதி மீறல் களுக்கு அடிப்படைக் காரணம்.

மேலும், சி.எம்.டி.ஏ.வின் தற் போதைய விதிகளின்படி 900 சதுர அடிக்கு குறைவான அளவு நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் பெரும்பாலும் தனி வீடு கட்டுவோர் ஒரு கிரவுண்ட், அரை கிரவுண்ட் அளவுகளில் நிலம் வாங்குவது கிடையாது.

நிலத்தின் விலை வெகுவாக அதி கரித்துள்ள நிலையில் இந்த அள வுக்கு நிலம் வாங்கவும் முடி யாது.சென்னை மாநகராட்சி, அதனை ஒட்டியுள்ள நகராட்சி கள், பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே ஓரளவு கட் டட விதிகளை பற்றிய விழிப்பு ணர்வு இருக்கிறது.

சென்னை யைச் சுற்றி சுமார் 100-க்கும் அதிகமான ஊராட்சிகள் உள் ளன. இவற்றில் கட்டட அனும திக்கான விதிகள் குறித்து போதிய அளவு விழிப்புணர்வு அதிகாரிகள் நிலையிலேயே இல்லை.இதனால் மக்களும், கட்டட அனுமதி குறித்து கவலைப்படா மல் விதிகளை மீறி வருகின்ற னர்.

கட்டட அனுமதிக்கான விதி கள் தற்போதைய நடைமுறைக்கு ஏற்றதாக இல்லாதது விதி மீற லுக்கு முக்கிய காரணமாக உள் ளது. குறைந்த பரப்பில் வீடு கட் டுவதற்கான விதிகளை உள்ளடக் கிய 2-வது மாஸ்டர் பிளானும் அரசின் பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சிறிய கட்ட டங்கள் தானே என பெரிய அள வில் முக்கியத்துவம் அளிக்கத் தவறினால் அடுத்த சில ஆண்டு களில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே நகர மைப்பு வல்லுநர்களின் அச்சம்.

வி.கிருஷ்ணமூர்த்தி

புதன், 4 ஜூன், 2008

தொடர் கதையாகும் உருக்கு விலை உயர்வு!

சென்னை, மே. 30: மத்திய அரசின் பல்வேறு நடவடிக் கைகளுக்கு பின்னர் குறைந்த உருக்கு விலை தற்போது மீண் டும் உயரத் தொடங்கியுள் ளது.

கடந்த மாதம் ஒரு டன் ரூ.50 ஆயிரம் வரை உயர்ந்த கம்பி விலை சில வாரங்க ளுக்கு முன்னர் ஒரு டன் ரூ.35 ஆயிரம் வரை குறைந்தது.இது தற்போது ஒரு டன் விலை ரூ. 46 ஆயிரம் ஆக மீண்டும் அதிகரித்துள்ளது.

கம்பி விலை உயர்வைக் கட் டுப்படுத்துவது தொடர்பாக மத் திய அரசு மேற்கொண்ட நடவ டிக்கை ஒரு தாற்காலிக தீர்வாக அமைந்ததே இதற்கு காரணம் என கட்டுமானத்துறை உள் ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்றுமதியாகும் இரும்பு தாது மீதான வரியை உயர்த்த வேண் டும் என தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்த நிலையில் தற் போது, டி.எம்.டி. கம்பிகள் உள் ளிட்ட இரும்புப் பொருள்கள் ஏற்றுமதிக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் ஏற்றுமதியா கும் இரும்பு தாதுவுக்கு வரி விதிக்காமல் குறைந்த அளவில் ஏற்றுமதியாகும் இரும்பு அடிப் படையிலான பொருள்களுக்கு வரிவிதிக்கப்பட்டுள்ளதாக இரும்பு ஆலை நிர்வாகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.டி.எம்.டி. கம்பிகள் உள் ளிட்ட இரும்பை அடிப்படை யாகக் கொண்டு உற்பத்தி செய் யப்படும் பொருள்கள் மீதான 14 சதவீத உற்பத்தி வரி ரத்து செய் யப்படுவதாக அரசு அறிவித்துள் ளது.

ஆனால், இந்த வரி ரத்து இறக்குமதி செய்யப்படும் இரும் புப் பொருள்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பய னும் இல்லை.

நாட்டில் இரும்பு கம்பி உற்பத் தியில் 60 சதவீதம் அரசின் பொதுத்துறை நிறுவனங்க ளான "செயில்', "விசாக்' ஆகியவற் றின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால், அரசின் நடவடிக்கை காரணமாக இரும்பு தாது ஏற் றுமதி அதிகரிப்பால் இந்த ஆலைகளுக்கு கச்சா இரும்பு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.

மூலப் பொருள்கள் கிடைப் பதில் தட்டுப்பாடு ஏற்படுவ தால் அரசின் நடவடிக்கைக்கு பின்னரும் கம்பி உள்ளிட்ட வற்றின் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளதாக உருட்டாலை நிர்வா கங்கள் தரப்பில் தெரிவிக்கப்ப டுகிறது.

இரும்பு மற்றும் இரும்பு அடிப்படையிலான பொருள் கள் மீதா வரி விகிதங்களை மத் திய அரசு மாற்றியது ஒரு தாற் காலிக நடவடிக்கையாகவே உள் ளது.

மூலப் பொருள்கள் ஏற்றும தியை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்னைக்கு நிரந் தரத் தீர்வு ஏற்படும் என திருச்சி டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி. முருகன் தெரிவித் தார்.

எனவே, ஏற்றுமதியின் போது ஒரு டன்னுக்கு ரூ. 50 என உள்ள இரும்பு தாது மீதான வரியை, பொருளின் மதிப்பு அடிப்படை யில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி னார்.

கம்ப்யூட்டரில் நிஜமாகும் "நிழல்'

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கட்டுமானத் திட்டங்களில் மட் டுமே "எலிவேஷன்ஸ்' எனப்படும் கட் டட மாதிரி வடிவமைப்புகள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது இந்த முறை தனி வீடுகள் கட்டுவதிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

கட்டடங்களுக்கான வரைபடங்களை உரு வாக்கிய பின்னர், இதன் அடிப்படையில் கட்ட டத்தின் வடிவமைப்பை கணினி துணையுடன் உருவாக்கலாம். நீங்கள் விரும்பிய விதத்தில், உங்கள் வீட்டின் வடிவமைப்பை உருவாக்க லாம்.

என்ன பயன்?
இவ்வாறு வடிவமைப்பை உருவாக்கும் பணிகளை அஸ்திவாரம் போடும் முன்னரே மேற்கொள்வது நல்லது.இவ்வாறு செய்வதால் அஸ்திவாரம் முதல் தளம் வரை அனைத்துப் பணிகளையும் திட்ட மிட்டபடி மேற்கொள்ள முடியும்.

வரைபடத் தில் உள்ள அம்சங்களை வடிவமைப்பில் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.உங்கள் வீட்டின் வெளிப்புற வடிவ மைப்பு, தேவையான இடங்க ளில் கூடுதல் ஜன்னல், தாழ்வா ரங்கள் அமைப்பது போன்ற பணி களை முன்கூட்டியே திட்ட மிட்டு மேற்கொள்ள இந்த வடிவமைப்பு உதவும்.

மேலும், உங்கள் கனவு இல்லத் துக்கான பெயின்டை தேர்வு செய்வது, கதவு கள் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும், மேல் தளத்துக்கான படிக்கட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு அம்சங்களை முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கலாம்.

குறைந்தபட்சம் ரூ. 2,500 முதல் அதிகபட் சம் ரூ. 50 ஆயிரம் வரை பல்வேறு தொகை களில் அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப வடி வமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

புகைப்படமாகவும், சி.டி. வடிவத்திலும் இந்த வடிவமைப்புகளை பெற்றுக் கொள்ள லாம்.இவ்வாறு வடிவமைப்புகளை உரு வாக்கும் போது கட்டுமான பொறி யியல் படித்தவர்களை வைத்தே கட்டடத்தை முடிக்க முடியும் என கட் டுமான வல்லுநர்கள் தெரிவித்தனர்.

வி. கிருஷ்ணமூர்த்தி