செவ்வாய், 29 டிசம்பர், 2009

கம்பி விலை:​ டன்​னுக்கு ரூ.​ 10 ஆயி​ரம் உயர்வு

   மி​ழ​கத்​தில் கட்​டு​மா​னப் பணி​க​ளுக்கு பயன்​ப​டுத்​தப்​ப​டும் இரும்பு கம்​பி​க​ளின் விலை ஒரே வாரத்​தில் டன்​னுக்கு ரூ.​ 10 ஆயி​ரம் வரை உயர்ந்​துள்​ளது.​திடீ​ரென ஏற்​பட்ட இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிப்​ப​தாக விற்​ப​னை​யா​ளர்​கள் மற்​றும் கட்​டு​மா​னத் துறை​யி​னர் தெரி​வித்​த​னர்.​
 
செயில் ​(எஸ்.ஏ.ஐ.எல்.)​,​​ விசாக்,​​ டாடா உள்​ளிட்ட நிறு​வ​னங்​கள் மூலம் நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளுக்கு இரும்பு கம்​பி​கள் வார்க்​கப்​பட்டு கட்​டு​மா​னப் பணி​க​ளுக்கு அனுப்​பப்​ப​டு​கின்​றன.​ அண்​மைக்​கா​ல​மாக சிறிய வார்ப்​பா​லை​க​ளின் எண்​ணிக்​கை​யும் அதி​க​ரித்​துள்​ளது.​​
 
 
விலை உயர்வு:​​ 
 
 
கடந்த 2007}ம் ஆண்​டின் இறு​தி​யில் ஒரு டன் ரூ.​ 25 ஆயி​ர​மாக இருந்த கம்​பி​க​ளின் விலை 2008}ம் ஆண்​டின் தொடக்​கத்​தில் ஒரு டன் ரூ.​ 40 ஆயி​ரம் வரை அதி​க​ரித்​தது.​ இத​னால்,​​ நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளில் கட்​டு​மா​னப்​ப​ணி​கள் முடங்​கும் நிலை ஏற்​பட்​டது.
 
 
​2008}ம் ஆண்​டின் மத்​தி​யில் அதி​க​பட்​ச​மாக ஒரு டன் ரூ.​ 48 ஆயி​ரம் வரை உயர்ந்​தது.​ பல்​வேறு தரப்​பி​ன​ரின் வற்​பு​றுத்​தலை ஏற்று இரும்பு இறக்​கு​ம​திக்​கான வரி விகி​தங்​க​ளில் மத்​திய அரசு சில மாற்​றங்​களை செய்​தது.​ இருப்​பி​னும் இந்த முயற்​சி​கள் உரிய பலனை அளிக்​க​வில்லை.​ஏற் ​று​மதி தொடர்​பா​க​வும் மத்​திய அரசு சில கட்​டுப்​பா​டு​களை விதித்​தது.
 
 
​ இத​னை​ய​டுத்து கம்பி விலை படிப்​ப​டி​யாக குறை​யத் தொடங்​கி​யது.​படிப்​ப​டி​யாக குறைந்த கம்பி விலை கடந்த வாரம் டன்​னுக்கு ரூ.​ 25 ஆயி​ரம் முதல் ரூ.​ 28 ஆயி​ரம் வரை இருந்​தது.​இந்த நிலை​யில்,​​ தற்​போது ஒரு டன் கம்பி விலை ரூ.​ 38 ஆயி​ர​மாக அதி​க​ரித்​தது.​ 
 
 
பெரிய நிறு​வ​னங்​கள் தங்​க​ளது கம்​பி​க​ளின் விலை​யில் ரூ.​ 2 ஆயி​ரம் முதல் ரூ.​ 3 ஆயி​ரம் வரை அதி​க​ரித்​துள்​ளன.​
 
 
கார​ ணம் என்ன?​​ 
 
தமி​ழ​கத்​தில் தற்​போ​தைய நிலை​யில் சுமார் 80 தனி​யார் வார்ப்​பா​லை​கள் செயல்​ப​டு​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் கம்பி தேவை​யில் 70 சத​வீ​தம் இந்த ஆலை​கள் மூலம் பூர்த்தி செய்​யப்​ப​டு​கின்​றன.​
 
கச்சா இரும்பு தாதுவை நிலக்​க​ரி​யு​டன் சேர்த்து உருக்கி கம்​பி​க​ளாக வார்க்​கும் வசதி பெரிய ஆலை​க​ளில் மட்​டும் உள்​ளது.​ இத்​த​கைய வசதி இல்​லாத சிறிய ஆலை​கள் கச்சா இரும்பை நிலக்​க​ரி​யு​டன் சேர்த்து உருக்​கும் பணியை எளி​தாக்க "ஸ்பான்ச் அயன்' என்ற பொருளை பயன்​ப​டுத்த வேண்​டும்.​
 
 
ஆந்​தி​ரம்}​ கர்​நா​டக எல்​லை​யில் உள்ள ரெய்ச்​சூர்,​​ சத்​தீஸ்​கர் ஆகிய இடங்​க​ளில் மட்​டுமே ஸ்பான்ச் அயன் கிடைக்​கி​றது.​தெலங் ​கானா பிரச்னை கார​ண​மாக ஸ்பான்ச் அயன் வரத்​தில் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால்,​​ விலை உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக சிறிய வார்ப்​பா​லை​கள் தரப்​பில் கூறப்​ப​டு​கி​றது.​
 
 
அரசு தலை​யி​டுமா?​​ 
 
 
""கம்பி விலை​யேற்​றத்​துக்கு ஆலை​கள் தரப்​பில் உறு​தி​யான கார​ணங்​கள் எது​வும் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை என்​ப​தால் நுகர்​வோ​ரி​டம் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது'' என திருச்சி டிரே​டிங் நிறு​வ​னத்​தின் நிர்​வாகி வி.​ முரு​கன் தெரி​வித்​தார்.​
 
 
பெரிய ஆலை​க​ளின் விலை உயர்வை கார​ணம் காட்டி சிறிய ஆலை​கள் செய்​தி​ருக்​கும் இந்த திடீர் விலை உயர்வு செயற்​கை​யா​ன​தாக உள்​ளது.​ இந்த விவ​கா​ரத்​தில் அரசு தலை​யிட்டு விலை உயர்வை கட்​டுப்​ப​டுத்த வேண்​டும் என கட்​டு​மா​னத் துறை​யி​னர் வலி​யு​றுத்​தி​யுள்​ள​னர்.

புதன், 9 டிசம்பர், 2009

தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்​குத் தடை!

    தமிழ்​நாடு மாநில தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.​ 2005}ம் ஆண்டு நிறை​வேற்​றப்​பட்ட சட்​டத்​தின் அம​லாக்​கத்​துக்​காக மத்​திய தக​வல் ஆணை​ய​மும்,​ மாநில அள​வி​லான தக​வல் ஆணை​யங்​க​ளும் அமைக்​கப்​பட்​டன.
 

      
இந்​தச் சட்​டத்​தின் அடிப்​ப​டை​யில் பொது மக்​கள் எழுத்து மூல​மாக கோரும் தக​வல்​களை சம்​பந்​தப்​பட்ட துறை​யின் பொது தக​வல் அதி​காரி அளிக்​கா​விட்​டால்,​ அந்​தந்​தத் துறை​யின் தலைமை பொது தக​வல் அதி​கா​ரி​யி​டம் முத​லா​வது மேல்​மு​றை​யீட்டு மனுவை தாக்​கல் செய்ய வேண்​டும்.​

இதி​லும் தக​வல் கிடைக்​கப்​பெ​றா​த​வர்​கள் மாநில தக​வல் ஆணை​யத்​தி​லும்,​ மத்​திய தக​வல் ஆணை​யத்​தி​லும் 2}வது மேல்​மு​றை​யீடு செய்​ய​லாம்.இவ் ​வாறு பெறப்​ப​டும் 2}வது மேல்​மு​றை​யீட்டு மனுக்​களை விசா​ரித்து பதில் அளிக்க மறுத்த பொது தக​வல் அதி​கா​ரிக்கு ரூ. 25 ஆயி​ரம் வரை அப​ரா​த​மும்,​ துறை ரீதி​யான நட​வ​டிக்கை எடுக்க பரிந்​து​ரைக்​க​வும்,​ சம்​பந்​தப்​பட்ட மனு​தா​ர​ருக்கு உரிய பதில் கிடைக்க உத்​த​ர​வி​ட​வும் மாநில தக​வல் ஆணை​யத்​துக்கு அதி​கா​ரம் உள்​ளது.

தமி​ழ​கத்​தில்...:

தமி​ழ​கத்​தில் மாநில தக​வல் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு முதல் மூன்று ஆண்​டு​க​ளில் சுமார் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மேல்​மு​றை​யீட்டு மனுக்​கள் வந்​தன.இதில் சுமார் 40 மனுக்​க​ளின் மீதான விசா​ர​ணை​யில் பதில் அளிக்க மறுத்த பொது தக​வல் அதி​கா​ரி​க​ளுக்கு அப​ரா​தம் விதித்து மாநில ஆணை​யம் உத்​த​ர​விட்​டது. 


மேலும் பல வழக்​கு​க​ளில் உண்மை நிலை குறித்து விசா​ரித்து அறிக்கை அளிக்​க​வும்,​ மனு​தா​ரர்​கள் கோரிய தக​வல்​கள் அளிக்​க​வும் மாநில தக​வல் ஆணை​யம் உத்​த​ர​விட்​டது.


ஆனால்,​ இது​வரை ஒரு சில நபர்​க​ளி​டம் இருந்து மட்​டுமே அப​ரா​தம் வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது.நீதி ​மன்​றத் தடை:​ சட்​டப்​படி பதில் அளிக்​கா​த​தால் அப​ரா​தம் விதிக்​கப்​பட்ட பொது தக​வல் அதி​கா​ரி​க​ளில் பெரும்​பா​லா​னோர் நீதி​மன்​றத்தை அணுகி ஆணை​யத்​தின் உத்​த​ர​வுக்கு தடை ஆணை பெற்​றுள்​ள​னர்.​


இப்​போ​தைய நில​வ​ரப்​படி மாநில தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்கு,​ நீதி​மன்​றத்​தால் தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக ஆணைய அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​ சென்னை உயர் நீதி​மன்​றத்​தி​லும்,​ உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யி​லும் இந்த தடை உத்​த​ர​வு​கள் பெறப்​பட்​டுள்​ளன.

இவை தொடர்​பான வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளன.​ இதன் கார​ண​மாக தக​வல் பெறும் உரி​மைச் சட்​டத்​தின் அம​லாக்​கம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது என சமூக ஆர்​வ​லர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ள​னர்.

அர​சின் சட்ட உதவி ஏன்?​ மாநில தக​வல் ஆணை​யத்​தின் உத்​த​ர​வு​களை அம​லாக்க மறுக்​கும்​போது ​ தக​வல் அதி​கா​ரி​க​ளில் பெரும்​பா​லா​னோர் அந்​தந்​தத் துறை மூலம் நீதி​மன்​றத்​தில் மனு செய்து தடை ஆணை பெற்​றுள்​ள​னர்.​

இவர்​கள் தங்​கள் மனுக்​களை அரசு வழக்​க​றி​ஞர்​கள் மூலமே நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்து அர​சின் சட்ட உத​வியை பயன்​ப​டுத்​தி​யுள்​ள​னர். இந்த மனுக்​கள் தொடர்​பான வழக்​கு​க​ளில் ஆணை​யம் சார்​பில் அர​சின் பணி​யா​ளர் மற்​றும் நிர்​வாக சீர்​தி​ருத்​தத் துறைக்​கான அரசு வழக்​க​றி​ஞரே ஆஜ​ராகி வரு​கி​றார்.


இதன் மூலம் மனு​தா​ரர் ​(பொது தக​வல் அதி​காரி)​ சார்​பில் ஒரு அரசு வழக்​க​றி​ஞ​ரும்,​ எதிர் தரப்பு ​(ஆணை​யம்)​ சார்​பில் வேறு ஒரு அரசு வழக்​க​றி​ஞ​ரும் ஆஜ​ரா​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.சட்​டப்​படி செயல்​ப​டாத பொது தக​வல் அதி​கா​ரி​க​ளுக்கு அர​சின் சட்ட உதவி அளிக்​கப்​ப​டு​வது தக​வல் பெறும் உரி​மைச் சட்ட அம​லாக்​கத்தை அரசே தடுப்​ப​தற்கு வழி​வ​குக்​கும் என பல்​வேறு தரப்​பி​ன​ரும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ள​னர்.

சி.எம்.டி.ஏ. தெரி​விக்​கும் மதிப்பை ஏற்க பதி​வுத்​துறை முடிவு!

  சென்​னைப் பெரு​ந​கர் வளர்ச்​சிக் குழு​மம் ​(சி.எம்.டி.ஏ.) சார்​பில் எழு​திக் கொடுக்​கப்​ப​டும் ஆவ​ணங்​க​ளில் குறிப்​பிட்ட மதிப்பை ஏற்று அதன்​படி முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்க பதி​வுத்​துறை முடிவு செய்​துள்​ளது.
 
இது குறித்த சுற்​ற​றிக்கை அண்​மை​யில் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.​ சென்​னை​யி​லும்,​ புற​ந​கர்ப் பகு​தி​க​ளில் குறிப்​பிட்ட சில இடங்​க​ளில் வீட்டு மனை​கள்,​ வணிக மனை​கள் உள்​ளிட்​ட​வற்றை சி.எம்.டிஏ. தனி​யாக உரு​வாக்கி விற்​பனை செய்து வரு​கி​றது. 
 
மறை​மலை நகர்,​ மணலி புது நகர்,​ கோயம்​பேடு,​ சாத்​தாங்​காடு உள்​ளிட்ட இடங்​க​ளில் இவ்​வாறு மனை​களை உரு​வாக்கி உரி​ய​வர்​க​ளுக்கு சி.எம்.டி.ஏ. விற்​பனை செய்து வரு​கி​றது.​ இவ்​வாறு சொத்​துக்​களை உரு​வாக்கி விற்​பனை செய்​யும் போது இதற்​கான விற்​ப​னையை பதிவு செய்​தல் வேண்​டும்.
 
அதற்​கான நடை​மு​றை​க​ளில் சொத்​தின் மதிப்பை நிர்​ண​யிப்​ப​தில் பல்​வேறு குழப்​பங்​கள் இருந்து வந்​தன. இதன் கார​ண​மாக சி.எம். டி.ஏ. விடம் மனை​களை வாங்​கிய பலர் அதனை பதிவு செய்ய முடி​யாத நிலை தொடர்​கி​றது.
 
ஏரா​ள​மான மனை உரி​மை​யா​ளர்​க​ளுக்கு முழுத் தொகையை செலுத்​திய பிற​கும் விற்​பனை பத்​தி​ரத்தை பெற முடி​யாத சூழல் நில​வு​கி​றது.​ குறிப்​பாக மணலி புது நக​ரில் சி.எம்.டி.ஏ. உரு​வாக்​கிய மனை​க​ளின் விற்​ப​னை​யில் அதன் மதிப்பை நிர்​ண​யிப்​ப​தில் சி.எம்.டி.ஏ., வீட்​டு​வ​சதி வாரி​யம்,​ பதி​வுத்​துறை ஆகி​ய​வற்​றுக்​கி​டையே குழப்​பம் ஏற்​பட்​டது. 
 
 
இது தொடர்​பாக மனை ஒதுக்​கீடு பெற்​ற​வர்​கள் சார்​பில் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொட​ரப்​பட்​டது. இதில் மனை​க​ளின் மதிப்பை மாற்றி நிர்​ண​யித்​த​தில் சி.எம்.டி.ஏ.வுக்கு ஏற்​பட்ட இழப்​பு​கள் குறித்து தணிக்​கைத் துறை ஆட்​சே​பம் தெரி​வித்​துள்​ளது.
 
இத்​த​கைய குழப்​பங்​களை தீர்க்​கும் வகை​யில்,​ நீதி​மன்ற உத்​த​ர​வுக்கு இணங்​கும் வித​மாக பதி​வுத்​துறை தலை​வர் இரா. சிவ​கு​மார் புதிய சுற்​ற​றிக்கை ஒன்றை ​(எண்:​ 47/2009/பி2. நாள்:​ 17}11}2009) பிறப்​பித்​துள்​ளார்.
 
அதன் விவ​ரம்:​ 
 
சென்​னைப் பெரு​ந​கர் வளர்ச்​சிக் குழு​மத்​தால் எழு​திக் கொடுக்​கப்​ப​டும் ஆவ​ணங்​க​ளைப் பொறுத்து அந்த குழு​மம் நிர்​ண​யிக்​கும் மதிப்​பினை ஏற்று முத்​திரை தீர்வை வசூ​லிக்​கப்​பட வேண்​டும் என நீதி​மன்ற உத்​த​ர​வு​க​ளின் அடிப்​ப​டை​யில் ஆணை​யி​டப்​ப​டு​கி​றது. 
 
இது தொடர்​பாக நீதி​மன்ற தீர்ப்பை பதி​வுத்​து​றை​யி​னர் செயல்​ப​டுத்த வேண்​டும். எனவே,​ இனி வருங்​கா​லங்​க​ளில் சி.எம். டி.ஏ. நிர்​ண​யிக்​கும் மதிப்​பினை ஏற்று முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்​கப்​பட வேண்​டும் என இதன் மூலம் அறி​விக்​கப்​ப​டு​கி​றது என அந்த சுற்​ற​றிக்​கை​யில் குறிப்​பி​டப்​பட்​டுள்​ளது. 
 
வழி​காட்டி மதிப்பு என்ன ஆனது?​ ​
 
பதி​வுத்​துறை தலை​வ​ரின் இந்த சுற்​ற​றிக்கை பல்​வேறு குழப்​பங்​க​ளுக்கு தீர்​வாக அமை​யும் என கரு​தப்​ப​டு​கி​றது. ஆனால்,​ இந்த சுற்​ற​ரிக்கை அரசு அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​வித்த வழி​காட்டி மதிப்​பின் நிலையை கேள்​விக்​கு​றி​யாக்​கி​யுள்​ளது. 
 
இத​னால் ஒரு பகு​தி​யில் சி.எம்.டி.ஏ. விற்​பனை செய்​யும் சொத்​துக்கு ஒரு மதிப்​பும்,​ அதே பகு​தி​யில் தனி​யார் ஒரு​வர் விற்​பனை செய்​யும் சொத்​திற்கு வழி​காட்டி மதிப்​பின் அடிப்​ப​டை​யி​லும் இரு​வேறு வித​மாக முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்​கப்​ப​டும் சூழல் உரு​வா​கி​யுள்​ளது.

புதன், 2 டிசம்பர், 2009

திருவண்ணாமலை கோயில் நிலத்தை அபகரிக்க முயற்சி


தகவல் ஆணையப் பதிவாளர் நியமனத்தில் குளறுபடி



செயின்ட் ஹெலினா வானொலியில் ஒலித்த தமிழ்!

""தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்...' என்றர் மகாகவி பாரதி. இந்த வரிகளை நனவாக்கும் வகையில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவின் சிற்றலை வானொலியில் முதன் முறையாக தமிழில் அறிவிப்புகள் ஒலிபரப்பாகின. 


இப்படி ஒரு தீவு இருப்பதே நம்மில் பலருக்கும் தெரியாத நிலையில் நமது தாய்மொழியில் அங்கு அறிவிப்புகள் ஒலிபரப்பான விதத்தை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்...

உலக வரைபடத்தில் ஆப்பிரிக்காவுக்கும் - தென் அமெரிக்காவுக்கும் நடுவில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் புள்ளிகளில் ஒன்றாக செயின்ட் ஹெலினா தீவு அடையாளம் காணப்படுகிறது. பூகோள ரீதியாக பார்த்தால் நிலநடு கோட்டுக்கு 15 டிகிரி தெற்கில் ஆப்பிரிக்க நாடானஅங்கோலாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது இந்தத்தீவு.


தெற்கு அட்லாண்டிக் கடலில் இருந்த எரிமலை ஒன்றில் இருந்து வெளியான லாவா உள்ளிட்டபொருள்களால் உருவான தீவுகளில் ஒன்றாக பூர்வீகத்தைக் கொண்டது செயின்ட் ஹெலினா தீவு.ஐரோப்பிய நாடுகளின் நிலபரப்பில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் நீண்ட தூர கப்பல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், இளைப்பாறும் இடமாகவும் இத்தீவு முக்கியத்துவம் பெற்றது.


இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷார் கி.பி. 1,500-ம் ஆண்டுகளிலேயே இதனை தங்களது காலனி நாடாக்கிக் கொண்டனர். ஆனால் மற்ற காலனி நாடுகளைவிட இது இங்கிலாந்து அரசுக்கு செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்தது. 

சில ஆயிரம் மக்களே வசிக்கும் இந்தத் தீவு உலகின் இப்போதைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சுமார் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்றால் அது மிகையல்ல. வெளிஉலகத் தொடர்புக்கு கப்பல் போக்குவரத்தை மட்டுமே இத்தீவு மக்கள் நம்பியுள்ளனர். 

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டால் அது இந்தத் தீவை சென்றடைய 6 மாதம் ஆகும் என்பதே இவர்களின் தகவல் தொடர்பின் தற்போதைய நிலை.வளர்ந்த பல நாடுகள் விண்வெளிக்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான பூர்வாங்கப்  பணிகளே இப்போதுதான் செயின்ட் ஹெலினா தீவில் தொடங்கியுள்ளது என்பதன் மூலம் இதன் வளர்ச்சி வேகத்தை நாம் உணர முடியும். 


உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஆட்சியாளர்களில் ஒருவரான நெப்போலியன் போனபார்ட் இங்கிலாந்து அரசால் 1815-ம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, அவர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டார். 1821 மே மாதம் 5-ம் தேதி இந்தத் தீவிலேயே அவர் உயிரிழந்தார்.இதனை குறிக்கும் விதத்தில் அவரது நினைவிடமும் இங்கு அமைந்துள்ளது. இதன் காரணமாக உலக வரலாற்றில் தன க்குறிய முக்கியத்துவத்தை பெறுகிறது செயின்ட் ஹெலினா தீவு. 


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடந்து 1967-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் இங்கு வானொலி லிபரப்பு தொடங்கப்பட்டது. 1548 கிலோஹெட்ஸ், 194 மீட்டர் மத்திய அலை ஒலிபரப்பாக இந்த வானொலி நிலையம் தொடக்கம்முதல் செயல்படுகிறது. 


இருப்பினும், 11092.5 கிலோஹெட்ஸில் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிற்றலை ஒலிபரப்பும் செயின் ஹெலினா வானொலியில் தொடங்கப்பட்-டது.இங்கிலாந்து அரசு மத்திய அலை ஒலிபரப்புக்கு மட்டுமே நிதி உதவி அளித்ததால், எப்போதாவது சில சமயங்களில் மட்டுமே நடைபெற்று வந்த சிற்றலை வானொலி ஒலிபரப்பு 80-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. 


இருப்பினும், இங்கு ஒலிபரப்பு பணியில் இருந்த சிலர் உலகின் மற்ற பகுதிகளை சேர்ந்த சிற்றலை வானொலி நேயர்களின் உதவியுடன் ஒலிபரப்பை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். 

1993-ம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த முயற்சிகளின் பலனாக, 2000-ம் ஆண்டு முதல் செயின்ட் ஹெலினா வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு மீண்டும் தொடங்கியது. சிற்றலை வானொலி நேயர் குழுக்களின் நிதி உதவியை பெற்று மிகக்குறைந்த அளவான ஒரு கிலோவாட் திறனில் இதன் ஒலிபரப்பு தொடங்கியது. 


இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக ஆண்டு ஒரு நாள் அதாவது நவம்பர் 14 அல்லது 15-ம் தேதியில் மட்டும் கண்டத்துக்கு ஒரு மணி நேரம்  தம் 4 மணி நேரம் இதில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.


இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஒரு மணி நேரம், ஜப்பான் மற்றும் எஞ்சிய ஆசிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், அமெரிக்கா, கரிபியன் நாடுகளுக்கு ஒரு மணி நேரம் என இதன் ஒலிபரப்பு அமைந்துள்ளது. 

இந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி 15-ம் தேதி அதிகாலை 1.30மணிக்கு) இந்த ஒலிபரப்பு நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அந்தந்த பிராந்தியத்தில்உள்ள முக்கியமான 2 மொழிகளில் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு ஒலிபரப்பாகும்.

இந்த முறை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கானஒலிபரப்பில் அறிவிப்புகள் தமிழில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னையை சேர்ந்த, சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் தங்க. ஜெயசக்திவேல் குரலில் தமிழ் அறிவிப்புகள் ஒலிபரப்பானது. 

""இது செயின்ட் ஹெலினா வானொலி. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் இருந்து நாங்கள் ஒலிபரப்பு கிறோம்...'' என அந்த அறிவிப்பை நினைவுக் கூர்கிறார் தங்க. ஜெயசக்திவேல்.

இந்த வானொலியில் முதன்முதலாக ஒலிபரப்பான தமிழ் அறிவிப்புக்கு குரல் கொடுத்த பெருமை அவருக்கு இருந்தாலும், தமிழர்கள் அனை வருக்குமே  இது பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழின் அருமை பெருமைகளை கெüரவப்படுத்தும் விதத்தில் தமிழ் அறிவிப்பு வழி வகுத்ததில் செயின்ட் ஹெலினா வானொலி நிலையத்தின் மேலாளர் கேரிவால்டர்ஸ் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாராட்டுக்குரியவராகிற ôர். 

ஜப்பானில் உள்ள சிற்றலை வானொலி நேயர் குழுவின் நிதி உதவியின் பேரில் இந்த ஆண்டு ஒலிபரப்பு நடைபெற்றது.சிற்றலை வானொலி ஒலிபரப்பு மட்டுமல்லாது செயின்ட் ஹெலினா தீவின் அஞ்சல் தலையை பெறுவது என்பதும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்களிடம் பிரபலமானதாகும்.

பல்வேறு காரணங்களால் சிற்றலை வானொலி ஒலிபரப்பின் வீச்சு குறைந்து வரும் வேளையில் சிற்ற லை நேயர்களை ஊக்குவித்து ஒருங்கிணைக்கும்வகையில் அமைந்ததால் இதன் ஒலிபரப்பு உலகம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகிறது. 


உலக வரைப்படத்தில் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும் தனது சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் உலகின் பார்வையை செயின் ஹெலினா தீவு தன்பக்கம் திருப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.