புதன், 20 ஆகஸ்ட், 2008

குடிசை மாற்று வாரியத்தில் அதிகரிக்கும் குளறுபடிகள்

சென்னை, ஆக. 18: மனை ஒதுக் கீடு செய்யப்பட்ட நாளுக்கு முன்தே தியிட்டு தவணை நிர்ணயம், கூடுதல் தொகையை வசூலிப்பது என தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்தில் நிர் வாகக் குளறுபடிகள் அதிகரித்துள் ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரி யம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான நிலங்களை தேர்வு செய்து அதில் குடியிருப்புகளை கட்டி ஏழை எளிய மக்களுக்கு அளித்து வருகிறது.

வாரிய நிர்வாகத்தில் உள்ள சிலர் தங்கள் விருப்பம் போல் செயல்படுவ தால் தற்போது குளறுபடிகள் அதிக ரித்துள்ளன என பல்வேறு தரப்பின ரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

உதாரணமாக, சென்னை எம்.ஜி.ஆர். நகர் திட்டப்பகுதியில் பி. அழகிரி என்பவருக்கு 0.77 சதுர மீட்டர் பரப்பளவுள்ள மனை (எண்: 1309) 1986-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

கிரையத்தொகை ரூ. 2,980 என்ற விலையில் இந்த மனை ஒதுக் கீடு செய்யப்பட்டது.தவணை முறையில் இந்த கிரையத் தொகையை அழகிரி 1988-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதிக்குள் செலுத்தி அதற்கான ரசீதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து தவணைத் தொகைகளையும் செலுத்தி முடித் ததை அடுத்து நிலுவை ஏதும் இல்லை என்பதால் மாநகராட்சியி டம் கட்டட அனுமதி பெறுவதற் கும், வங்கியில் கடன் பெறுவதற்கும் தடையின்மைச் சான்றிதழ் ஆகி யவை 1988-ம் ஆண்டிலேயே வழங் கப்பட்டது.

கூடுதல் கட்டணம்:

1988-ம் ஆண்டிலேயே அனைத்து தவணை களும் செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ. 14,782 செலுத்துமாறு 8-6-2007-ல் குடிசை மாற்று வாரிய நிர்வாகம் அழகி ரியை அறிவுறுத்தியுள்ளது.

தான் ஏற்கெனவே தவணைகள் செலுத்தியதற்கான ரசீதுகள் உள் ளிட்ட ஆவணங்கள் குறித்து அழ கிரி தெரிவித்த விவரங்களை வாரிய நிர்வாகம் ஏற்காததால், கூடுதல் தொகையை 2007 ஜூலை மாதம் 27- ம் தேதி அவர் செலுத்தியுள்ளார் (ரசீது எண்: 36477/78/79).

கைகொடுத்த தகவல் பெறும் உரிமை சட்டம்: இவ்வாறு விதிக ளுக்கு புறம்பாகக் கூடுதல் தொகை வசூலித்தது தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சதீஷ், கோபால கிருஷ்ணன் ஆகியோர் மூலம் குடிசை மாற்று வாரியத்துக்கு மனு செய்யப்பட்டது.

அதிகாரி பதில்:

இதையடுத்து, இந்த பிரச்னை குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் டி.கே. ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். நகர் அழகிரிக்கு கடந்த ஜூலை 15-ம் தேதியிட்ட ஒரு கடி தத்தை அனுப்பினார்.

""உங்கள் கணக்கு தணிக்கை செய் யப்பட்டதில் கூடுதல் தொகை வசூ லிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.எனவே, தாங்கள் கடைசியாகச் செலுத்திய கூடுதல் தொகைக்கான அசல் ரசீதை அளித்து ரூ. 10,156-ஐ திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

தவணை நாள் மாற்றம்:

ரூ. 14,782 கூடுதலாக வசூலித்தக் குடிசை மாற்று வாரியம் ரூ. 10,156 திரும்ப அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.இந்த வேறுபாடு தொடர்பாக குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் அளித்துள்ள பதில்:

எம்.ஜி.ஆர். நகர் திட்டத்தில் அழ கிரி என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட மனையின் அளவை ஆய்வு செய்ததில் 0.77 சதுர மீட்டர் மனை ஒதுக்கப்பட்டதில், அவரிடம் 0.75 சதுர மீட்டர் பரப்பு மட்டுமே உள் ளது தெரிய வந்துள்ளது.இதையடுத்து அவரது ஒதுக்கீட்டு ஆணையில் மனையின் பரப்பளவு 0.75 சதுர மீட்டர் என திருத்தம் செய் யப்பட்டுள்ளது.

மேலும், எம்.ஜி.ஆர். நகர் திட்ட பகுதியில் மற்ற பய னாளிகளுக்கு 1-10-1981 தேதியிட்டு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட் டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு அழகிரியின் மனை ஒதுக் கீட்டுக்கான தவணை காலமும் 1-9- 1986 என்று இருப்பது 1-10-1981 என திருத்தம் செய்யப்படுவதாக டி.கே.ராமச்சந்திரன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒதுக்கீட்டு நாளுக்கு முன்தேதி யிட்டு தவணையை கணக்கிட்டு, தவ றுதலாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையில் ஒரு பகுதியை அதற்கு ஈடாக கணக்கு காட்டி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குளறு படி செய்துள்ளது உறுதியாகிறது.

இவர் மட்டுமல்ல குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான ஒதுக்கீட் டுதாரர்கள் தங்கள் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துக் கொள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு வருவது தொடர்கதையாக மாறி வருகிறது.

சரியா?

ஒதுக்கீட்டு தேதியை மாற் றுவதற்கு விதிகளில் இடம் இருப்ப தாக வாரிய அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். ஆனால், 1986-ம் ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பத்துக்கு தவணை 1981-ம் ஆண்டு தொடங் கும் என குறிப்பிடுவதை எப்படி ஏற்க முடியும் என்பதே அனைத்து தரப்பினரிடமும் தற்போது எழுந் துள்ள கேள்வி.

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

செராமிக் டைல்ஸ் வாங்கும்போது...

தனியார் கட்டுமான நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில் தாங்கள் கட்டும் வீடுகளை வாங்க நடுத்தர வருவாய்ப் பிரிவினரை ஈர்ப்பதில் போட்டி ஏற்பட் டது.இதன் விளைவாக, பங்களாக்களில் மட்டும் இருந்து வந்த டைல்ஸ், பளிச்சென வண்ணங்களை பூசுவது, மாடு லர் சமையல் அறை கட்டமைப்புகளை அமைப்பது உள் ளிட்ட வசதிகள் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீடு களிலும் கிடைக்கும் சூழல் உருவானது.

உங்கள் வீட்டை கட்டும் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப் படைத்திருந்தாலும், வீட்டிற்கு போடப்படும் டைல்ஸ்களை தேர்வு செய்ய வேண்டியது நீங்கள் தான்.எனவே, இவ்வாறு செராமிக் டைல்ஸ்களை தேர்வு செய் யும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் விவரம்:

(1) ஒரு அடிக்கு ஒரு அடி முதல் 2 அடிக்கு 2 அடி நீள அகலத்தில் உள்பட பல்வேறு அளவுகளில் டைல்ஸ்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

(2) உங்கள் வீட்டு அறையின் பரப்பளவை பொறுத்து அங்கு போடுவதற்கான டைல்ஸின் அளவை முடிவு செய்ய வேண்டும்.

(3) பெரும்பாலும் நிறுவன தயாரிப்புகளாக வரும் டைல்ஸ்களை வாங்குவது நல்லது.

(4) இணைப்புகள் தெரியக் கூடியது, இணைப்புகள் தெரியாதது என இரு வகையில் டைல்ஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அழகாக இருக்கும் வகையை தேர்வு செய்வது நல்லது.

(5) மார்பிள் போன்ற வடிவங்களிலும் டைல்ஸ்கள் விற் பனைக்கு வந்துள்ளன. உங்கள் பட்ஜெட் மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ற வகையை தேர்வு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.

(6) பொதுவாக மொசைக் போடுவதை விட டைல்ஸ்கள் போடுவதற்கும், பராமரிப்பதிலும் செலவு குறைவானது என கூறப்படுகிறது. ஒரு முறை போடப்படும் டைல்ஸ்கள் முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை பயன்பாட் டில் இருக்கும்.

(7) மேலும், ஒப்பந்ததாரர் கூறும் நிதி நிலைமைக்குள் தேர்வு செய்வது என்று இல்லாமல் சற்று கூடுதல் செலவா னாலும் உங்கள் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகை டைல்ஸ்களை தேர்வு செய்வது திருப்திகரமாக இருக்கும்.

(8) வீட்டுக்கு பளிச்சென இருக்கும் என்பதற்காக அதிக வெண்மை நிற டைல்ஸ்களை தேர்வு செய்வதை விட வெண்மை குறைவான வகையை தேர்வு செய்வது பராம ரிப்புக்கு எளிதானதாக இருக்கும்.

(9) நீங்கள் தேர்வு செய்யும் வடிவமைப்பு அடுத்த சில ஆண்டுகளில் மார்க்கெட்டில் இல்லாமல் போக வாய்ப்புள் ளது. எனவே, வீட்டில் ஏதாவது பொருள் விழுந்து டைல்ஸ் உடைந்தால் அதற்கு மாற்றாக வேறு வடிவமைப்பு டைல்ûஸ அங்கு பயன்படுத்தும் நிலையைத் தவிர்க்க, தேர்வு செய்யும் போதே முன்யோசனையுடன் கூடுதலாக 10- டைல்ஸ்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

(10) நிறுவன தயாரிப்புகள் பெரும்பாலும் சதுர அடி ரூ.20 முதல் வகைக்கு ஏற்ப பல்வேறு விலைகளில் கிடைக் கின்றன. எனினும், விலை குறைவு என்பதற்காக நிறுவன தயாரிப்புகள் அல்லாத வகைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கழுத்தை நெரிக்கும் கட்டுமானச் செலவு

பெ ட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு கட்டுமானத்துறையையும் விட்டு வைக்கவில்லை.

சிமென்ட், கம்பி, மணல், ஜல்லி போன்ற அத்தியாவசிய கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவில் ஏற்படும் சிறு மாற்றங்களும் கட்டுமானத் துறையை பாதிக்கும் சூழல் தற்போது உருவாகியுள் ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்த பட்ச கட்டுமானச் செலவு ஒரு சதுர அடிக்கு ரூ. 900-ஆக இருந்தது.சிமென்ட், கம்பி போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டு இறுதி யில் இது ரூ. 1,100-ஆக அதிகரித்தது.இது தற்போதைய விலை உயர்வு கார ணமாக ரூ. 1,500 வரை அதிகரித்துள்ளது.

சிமென்ட்:

கடந்த ஆண்டு தொடக்கத் தில் ஒரு மூட்டை ரூ. 200-ஆக இருந்த சிமென்ட் விலை ஆண்டு இறுதியில் ஒரு மூட்டை ரூ. 280 -ஆக அதிகரித்தது.இதனால் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மலிவு விலையில் சிமென்ட் விற்பனை, வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்வது உள்ளிட்ட தமிழக அரசின் சில நடவடிக் கைகள் காரணமாக சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 235- ஆக குறைந்தது.

ஓரிரு மாதங்களில் சிமென்ட் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இதைய டுத்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங் களில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரித்து ஒரு மூட்டை விலை ரூ. 300 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.டி.எம்.டி. கம்பி விலை கடந்த 6 மாதங் களில் டன்னுக்கு ரூ. 10 ஆயிரம் அதிக ரித்துள்ளது.

மணல் விலை கடந்த 6 மாதங்களில் ஒரு லோடுக்கு ரூ. 2 ஆயிரம் வரை அதி கரித்துள்ளது.இதேபோல ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.அதிக ஆடம்பரம் இல்லாமல் அடிப்ப டைத் தேவைகளுடன் கட்டுவது என் றால் ஒரு சதுர அடிக்கு குறைந்த பட்ச செலவு ரூ. 1,500 ஆகிறது என இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மையத் தலைவர் எம்.கே. சுந்தரம் கூறுகிறார்.

கட்டடத்தின் வரைபடத்துக்கு அனுமதி வாங்குவது, குடிநீர்- கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட விவகாரங்களை வீட்டின் உரி மையாளரே பார்த்துக் கொண்டால் மட் டுமே இந்தத் தொகையில் வீடு கட்ட முடி யும்.

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு மட்டுமல்லாது தொழிலாளர்க ளின் ஊதியம், அரசின் அபிவிருத்திக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர் வும் கட்டுமானச் செலவுகள் அதிகரிக்க காரணம் என்றார் சுந்தரம்.

இப்படியும் முடியும்:

கட்டுமானப் பணி யின் போது மரம் வாங்குவது, தரை போடுவது, வண்ணம் பூசுவது ஆகியவற் றில் சில சிக்கன வழிமுறைகளை கடைபி டித்தால் தற்போதைய நிலையில் ஒரு சதுர அடிக்கு 1,200க்குள் வீடு கட்ட முடியும் என்றார் கட்டுமான வல்லுநர் குமணன்.

முறையான திட்டமிடலுடன், தரத்தில் எவ்வித சமாதானமும் செய்து கொள் ளாமல் சிக்கன நடவடிக்கைகளை கடை பிடித்தால் குறைந்த செலவில் வீடுகட்ட முடியும் என்றார் அவர்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது கட்டுமானச் செலவுகள் அதிக ரித்திருப்பது சென்னையில் புதிய வீடுகள் கட்டும் பணிகளை பெருமளவில் பாதித் துள்ளது.ஒப்பந்ததாரரிடம் பணியை ஒப்படைக்காமல் நிலத்தின் உரிமையா ளரே அனைத்து பணிகளையும் கண்காணித்து கட்டுமானப் பணியை மேற்கொண்டால் சதுரஅடி ரூ.900த்தில் வீடு கட்ட முடியும். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதே தற்போதைய கேள்வி?

வி. கிருஷ்ணமூர்த்தி

இனிப்பான ஆபத்து!

"சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப் பான செய்தி!' என்பது போன்ற கவர்ச்சியான விளம்பரங்களோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டாத இனிப்புகளையும், சர்க்க ரைக் கட்டிகளையும் நிறைய நிறுவனங்கள் விற்பனை செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.

உண்மையில் குளுக்கோஸ் உள்ள சர்க்கரை யைப் பயன்படுத்துவதை விட, வேறு வகை யான ரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக் கப்படும் "சுகர் ஃப்ரீ' தயாரிப்புகளால் உடலின் பல பாகங்களுக்கு மருத்துவ ரீதியாகப் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு கள் இருக்கின்றது, என்கின்றனர் இதைத் தீவி ரமாக ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கும் வல்லு நர்கள்.

சர்க்கரை என்பது "குளுக்கோஸ்', "ப்ரக் டோஸ்' ஆகிய இரண்டும் கலந்த கலவையா கும். வெளிப்படையாக பார்த்தால் இவை இரண்டுக்கும் இடையே உருவத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியாது.

இதில் குளுக்கோஸ் தன்மீது விழும் ஒளி யின் கதிர்களை வலது பக்கமாகக் கடத்தும் தன்மையுள்ளது என்பதால் "டெக்ஸ்ட்ரோஸ்' என்றும், ஒளிக் கதிர்களை இடது பக்கமாக கடத்தும் "ப்ரக்டோஸ்', "லெவுலோஸ்' என் றும் குறிப்பிடப்படுகிறது.

பழங்களில் பெருமளவில் காணப்படும் ப்ரக்டோஸ் தனித்திருக்கும் போது இனிப்புத் தன்மை அதிகம் உள்ள பொருளாகும்.ஆனால், குளுக்கோசுடன் சேர்ந்து சர்க்கரை யாக உருப்பெறும்போது இதன் இனிப்புத் தன்மை குறைவாகவே இருக்கும்.

இவ்வாறு உருவாகும் சாதாரண சர்க்கரை உடலில் கலக்க இன்சுலின் தேவைப்படுகிறது.ஆனால், தற்போது லெவுலோஸ் என்ற பெய ரில் உள்ள ப்ரக்டோஸ் உட லில் கலக்க இன்சுலின் தேவை யில்லை என மாற்று இனிப்புப் பண்ட தயா ரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்சுலின் தேவை இல்லை என்பதையும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்னும் வியாபாரிகளின் கூற்றுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.

சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் எனப்படும் டெக்ஸ்ட்ரோஸ் உடலில் உள்ள எல்லா பாகங்களிலும் எளிதாக கலக்கும் தன்மையு டையது. ஆனால், ப்ரக்டோஸ் பெரும்பா லும் கல்லீரலில் தான் கலக்கிறது.

இதன் கார ணமாக கல்லீரலின் அனைத்து செயல்பாடுக ளும் பாதிக்கப்படும். குறிப்பாக கல்லீரலில் "லெப்டின்', "இன்சுலின்' உள்ளிட்ட ஹார் மோன்கள் வெளியேறுவது பாதிக்கப்படுகி றது.

இதனால், பசியைத் தூண்டும் செல்கள் பாதிக்கப்படுவதோடு, குறைவாகச் சாப்பிட் டாலே வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.கல்லீரலில் ப்ரக்டோஸ் கலப்பதால் வழக்க மான ஹார்மோன்கள் வெளியேறுவது பாதிக்கப்படுவதோடு, வேறு சில தேவையற்ற சுரப்பிகள் சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இத னால், மாற்று இனிப்புப் பண்ட தயாரிப்பா ளர்கள் கூறுவது போல இன்சுலின் தேவை இல்லை என கூறுவது சரியல்ல என்ற கருத்து வலுவடைந்து வருகிறது.

ப்ரக்டோûஸ அடிப்படையாகக் கொண்டு இனிப்புப் பண்டங்களைத் தயாரிப் பவர்கள் இது "லோ கிளைசமிக் இன்டெக்ஸ்' (கர்ஜ் ஞ்ப்ஹ்ஸ்ரீங்ம்ண்ஸ்ரீ ண்ய்க்ங்ஷ்) உடையது என்றும். இத னால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக ரிக்க வாய்ப்பில்லை என்றும் கூறுவதை ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.

இதனால் வேறு சில கெடுதல்களும் உட லுக்கு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது."பிளாஸ்மா லிபிட்ஸ்', "யூரிக் ஆசிட்' அளவு அதிகரிக்கும். எனவே, குறைந்த அளவு மாதிரி களைக் கொண்டு ப்ரக்டோûஸ நல்லது என நம்புவது மனிதர்களின் உடல் நலத்துக்கு நல் லதல்ல என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதிக அளவில் ப்ரக்டோஸ் சேர்வதால் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிக ரிக்கும், உடல் பருமன் அதிகரிக்கும், "லோ டென்சிட்டி லிபிட்ஸ்' (கர்ஜ் க்ங்ய்ள்ண்ற்ஹ் ப்ண்ல்ண்க்ள்), "டிரைகிளைசரைட்ஸ்' (பழ்ண்ஞ்ப்ஹ்ஸ்ரீங்ழ்ண்க்ங்ள்) போன் றவை அதிகரிக்கும். இதன் காரணமாக உட லில் கொழுப்புச் சத்து அதிகரித்து இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின் றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு புரதச்சத்து இழப்பை ஏற்படுத்தி உடல் நல பாதிப்பை உண்டாக்குவதில் குளுக்கோûஸவிட ப்ரக் டோஸ் ஒரு விதத்திலும் குறைந்தது அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிறு வர்களுக்கு ப்ரக்டோஸ் அதிகமாகக் கொடுத் தால் பல் சிதைவு ஏற்படும்.ப்ரக்டோஸ் எனப்படும் லெவுலோஸ் அடிப்படையில் தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் குறித்த பரிசோதனைகள் முன்பே திட்டமிடப்பட்ட ஒரு முடிவை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டுள் ளன.


ஆனால், மனிதர்களின் உடல் நலத்து டன் தொடர்புடைய இத்தகைய ஆய்வுகள் உண்மையைத் தேடும் முறையில் நடைபெற்றி ருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்திய அர சின் மருந்து கட்டுப்பாட்டு அதிகார அமைப் பும் இதனை கடுமையாக நடைமுறைப்படுத்த வில்லை என்பதே வேதனை அளிக்கக் கூடிய தாக உள்ளது.

குறிப்பிட்ட சிலரின் லாபத்துக்காக அப் பாவி மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத் தகைய இனிப்புப் பண்டங்களை அரசு எப் படி அனுமதித்தது என்பதே தற்போது எழுந் துள்ள கேள்வி?

நகராட்சி நிலத்தை பயன்படுத்துவதில் குளறுபடி?

சென்னை, ஜூலை 30: சென்னை பல்லாவரத்தை அடுத்த கீழ்க் கட்டளையில் நகராட்சி நிலத்தை பொதுத் தேவைக்கு பயன்படுத்துவதில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள் ளது.பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான கீழ்க்கட்டளை யில் பொது தேவைக்கு பயன்ப டுத்துவதற்காக சுமார் ஒரு ஏக்க ருக்கும் குறைவான நிலம் ஒதுக் கப்பட்டுள்ளது.


கீழ்க்கட்டளையில் உள்ள திரெüபதி அம்மன் கோயி லுக்கு சொந்தமான இந்த நிலம் கீழ்க்கட்டளை பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பல்லா வரம் நகராட்சி உருவாக்கத் தின் போது கீழ்க்கட்டளை பஞ்சாயத்தும் அதற்கு ஒதுக்கப் பட்ட நிலமும் பல்லாவரம் நக ராட்சியிடம் சென்றது.

நிலத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் மட்டும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நிலத்தில் காலியாக இருக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்காக ரூ. 7 லட்சத்தில் கட்ட டம் கட்டப்பட்டது.கட்டுமானப் பணிகள் முடிவ டைந்த நிலையில் ஆரம்ப சுகா தார நிலையம் அமைக்கும் திட் டம் வேறு இடத்துக்கு மாற்றப் பட்டதை அடுத்து இதனை நக ராட்சி பள்ளியின் கூடுதல் கட் டடமாக மாற்ற முடிவு செய் யப்பட்டது.

கீழ்க்கட்டளை நகராட்சி பள்ளிக்கு வேறு கட்டடம் கிடைத்ததை அடுத்து இந்த திட்டமும் கைவிடப்பட்டது.இந்த நிலையில் நகராட்சி நிதி யில் கட்டப்பட்ட இந்த கட்ட டத்தில் ஆரம்ப சுகாதார நிலை யம் அமைப்பது அல்லது மின் வாரிய அலுவலகம் அல்லது தபால் அலுவலகம் உள்ளிட்ட தேவைகளுக்கு அளிக்க வேண் டும் என இப் பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டு களாக காலியாக இருந்த இந்த கட்டடத்தில், ஆதரவற்றோர் இல்லம் என்றுக் கூறி சிலர் திடீ ரென தங்க வைக்கப்பட்டுள்ள னர். இவ்வாறு நகராட்சி நிலத்தை தனியார் நடத்தும் இல்லத்துக்கு பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக நக ராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர் வமாக எவ்வித முடிவும் எடுக் காத நிலையில் இவ்வாறு சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளது இப் பகுதியைச் சேர்ந்த பலருக்கும் புதிராக உள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைக ளில் இங்கு குறிப்பிட்ட ஒரு மதத்தினர் கூடி பிரார்த்தனை நடத்தி வருவதை அடுத்து நக ராட்சிக்கு சொந்தமான நிலம் மதவழிபாட்டுத் தலமாக மாற் றப்பட்டுள்ளதோ என்ற சந்தே கம் ஏற்ப்பட்டுள்ளதாக கீழ்க் கட்டளை பகுதி மக்கள் தெரி வித்தனர்.

நகராட்சி பதில்:

இந்த நிலம் நகராட்சிக்கு சொந்தமானது தான் என்றும் இங்கு எந்த தவ றும் நடைபெறவில்லை என வும் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி தெரிவித்தார்.இந்த நிலத்தில் மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஒரு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி யும், கீழ்நிலைக் குடிநீர் தொட் டியும் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மின் வாரியம்:

கீழ்க்கட்ட ளையில் மின் வாரிய அலுவல கம் இடம் இன்றி தவித்து வருகி றது. தற்போது செயல்படும் இடம் போதுமானதாக இல்லை என்பதால், நகராட் சிக்கு சொந்தமான இந்த இடம் மின் வாரிய அலுவலகத்துக்கு அளிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மின்வா ரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி நிலத்தை பயன்படுத்துவதில் குளறுபடி?

சென்னை, ஜூலை 30: சென்னை பல்லாவரத்தை அடுத்த கீழ்க் கட்டளையில் நகராட்சி நிலத்தை பொதுத் தேவைக்கு பயன்படுத்துவதில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள் ளது.பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான கீழ்க்கட்டளை யில் பொது தேவைக்கு பயன்ப டுத்துவதற்காக சுமார் ஒரு ஏக்க ருக்கும் குறைவான நிலம் ஒதுக் கப்பட்டுள்ளது.

கீழ்க்கட்டளையில் உள்ள திரெüபதி அம்மன் கோயி லுக்கு சொந்தமான இந்த நிலம் கீழ்க்கட்டளை பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பல்லா வரம் நகராட்சி உருவாக்கத் தின் போது கீழ்க்கட்டளை பஞ்சாயத்தும் அதற்கு ஒதுக்கப் பட்ட நிலமும் பல்லாவரம் நக ராட்சியிடம் சென்றது.

நிலத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் மட்டும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நிலத்தில் காலியாக இருக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்காக ரூ. 7 லட்சத்தில் கட்ட டம் கட்டப்பட்டது.

கட்டுமானப் பணிகள் முடிவ டைந்த நிலையில் ஆரம்ப சுகா தார நிலையம் அமைக்கும் திட் டம் வேறு இடத்துக்கு மாற்றப் பட்டதை அடுத்து இதனை நக ராட்சி பள்ளியின் கூடுதல் கட் டடமாக மாற்ற முடிவு செய் யப்பட்டது.கீழ்க்கட்டளை நகராட்சி பள்ளிக்கு வேறு கட்டடம் கிடைத்ததை அடுத்து இந்த திட்டமும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நகராட்சி நிதி யில் கட்டப்பட்ட இந்த கட்ட டத்தில் ஆரம்ப சுகாதார நிலை யம் அமைப்பது அல்லது மின் வாரிய அலுவலகம் அல்லது தபால் அலுவலகம் உள்ளிட்ட தேவைகளுக்கு அளிக்க வேண் டும் என இப் பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டு களாக காலியாக இருந்த இந்த கட்டடத்தில், ஆதரவற்றோர் இல்லம் என்றுக் கூறி சிலர் திடீ ரென தங்க வைக்கப்பட்டுள்ள னர்.

இவ்வாறு நகராட்சி நிலத்தை தனியார் நடத்தும் இல்லத்துக்கு பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக நக ராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர் வமாக எவ்வித முடிவும் எடுக் காத நிலையில் இவ்வாறு சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளது இப் பகுதியைச் சேர்ந்த பலருக்கும் புதிராக உள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைக ளில் இங்கு குறிப்பிட்ட ஒரு மதத்தினர் கூடி பிரார்த்தனை நடத்தி வருவதை அடுத்து நக ராட்சிக்கு சொந்தமான நிலம் மதவழிபாட்டுத் தலமாக மாற் றப்பட்டுள்ளதோ என்ற சந்தே கம் ஏற்ப்பட்டுள்ளதாக கீழ்க் கட்டளை பகுதி மக்கள் தெரி வித்தனர்.

நகராட்சி பதில்:

இந்த நிலம் நகராட்சிக்கு சொந்தமானது தான் என்றும் இங்கு எந்த தவ றும் நடைபெறவில்லை என வும் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி தெரிவித்தார்.இந்த நிலத்தில் மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஒரு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி யும், கீழ்நிலைக் குடிநீர் தொட் டியும் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மின் வாரியம்:

கீழ்க்கட்ட ளையில் மின் வாரிய அலுவல கம் இடம் இன்றி தவித்து வருகி றது. தற்போது செயல்படும் இடம் போதுமானதாக இல்லை என்பதால், நகராட் சிக்கு சொந்தமான இந்த இடம் மின் வாரிய அலுவலகத்துக்கு அளிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மின்வா ரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறையும் நீர்மட்டம்; தவிப்பில் விவசாயிகள்

சென்னை, ஜூலை 28: பருவமழை பாதிப்பு, நீர் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத் தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பிரச் னைகளுக்கிடையில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மழைப் பொழிவு பற்றாக்குறையாகவே உள்ளது. தமிழ கத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் கேரளம், கர் நாடகத்தில் இருந்து வரும் தண்ணீரையே நம்பியுள் ளன.

இந்த நிலையில் நடப்பாண்டில் கேரளத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், கர்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பருவமழை இயல் பைவிட வெகுவாக குறைந்துள்ளது.ஏற்கெனவே, இந்த மாநிலங்கள் தமிழகத்துக்கு திறந் துவிடும் தண்ணீரின் அளவை குறைப்பதற்கான பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பருவமழை பற்றாக்குறை தமிழ கத்தை நேரடியாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கு தண்ணீர் வழங்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் இருந்து கடந்த இரு மாதங்களில் 30 டி.எம்.சி. தண்ணீர் வர வேண்டிய நிலையில் 9.5 டி.எம்.சி. தண்ணீர் மட் டுமே வந்துள்ளது.

அணையில் தற்போது உள்ள தண் ணீரில் 22 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே பாசனத்துக்கு திறந்து விட முடியும். அதுவும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மட்டுமே இவற்றை பாசனத்துக்கு பயன்ப டுத்த முடியும். இதனால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப் பட்டுள்ள குறுவை பயிர்களின் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அறுவடைக் காலமான செப்டம்பர் முதல் வாரம் வரை இந்த பயிர்க ளுக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போதைய சூழல் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவி லாறு, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை, சோத்துப் பாறை, மஞ்சளாறு, பரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலை யாறு, ஆழியாறு, திருமூர்த்தி, தூணக்கடவு, பெருவா ரிப்பள்ளம், நீராறு, மேல்ஆழியாறு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி, நெல்லை மாவட்டத் தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள் ளிட்ட முக்கிய அணைகளில் அவற்றின் முழு கொள் ளளவைவிட சுமார் 20 முதல் 40 சதவீதம் குறைவான அளவிலேயே தற்போதைய நீர்மட்டம் உள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், விழுப்புரம் உள் ளிட்ட மாவட்டங்களில் முக்கிய பாசன ஆதாரங்க ளான ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றின் நீர்மட்ட மும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

மின் வெட்டு காரணமாக பம்ப்செட்களை இயக்க முடியாததால், கிடைக்கும் குறைந்த அளவு நிலத்தடி நீரையும் பாசனத்துக்கு முறையாக பயன்படுத்த முடி யாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அரசு மின் வெட்டை கிராமங்களில் அதிக அளவில் அமல் படுத்துவது அவர்களின் பாதிப்பை மேலும் அதிகரிக்கும் வகையி லேயே அமைந்துள்ளது.

பருவமழை பாதிப்பு மட்டுமல்லாது, பெரும்பாலான நீர்த்தேக்கங்களும், கண்மாய்களும், பாசன கால்வாய்க ளும் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளில் பெய்த மழை நீரையும் சேமிக்க முடி யாமல் போயுள்ளது.

அதிக மழை பெய்த காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைத்த உபரி நீரை யும் தேக்கிவைக்கும் பணிகளில் நிர்வாகத்தின் அலட்சி யமும் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.பல மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அணைகளில் இருந்து கிடைக்கும் குறைந்தபட்ச நீரை யும் கடைமடை பகுதி விவசாயிகள் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

""தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு பருவமழை பொய்த்து போவதை மட்டும் காரணமாக கூறிக்கொண்டு இருக்காமல் குறைந்த அளவு நீரும் விவசாயிகளுக்கு உரிய முறையில் கிடைக்க தேவை யான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மேலும், மின் வெட்டு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்தும் விவசாயிகளை பாதுகாப்ப தன் மூலமே ஏற்கெனவே, வீழ்ச்சிப்பாதையில் உள்ள விவசாய உற்பத்தியை மீட்டெடுக்க முடியும்'' என்று டெல்டா விவசாயிகள் குரலெழுப்புகிறார்கள்.