புதன், 11 மார்ச், 2009

வெளிப்படைத் தன்மை எங்கே?

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப் பட்டு மூன்றôண்டுகள் ஆகும் நிலையில் ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படவி ல்லை.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு
அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- ஐ நிறை வேற்றியது.

இந்தச் சட்டத்தின் கீழ் அரசு நிர்வாக நடை முறை தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் பெறுகின்றனர்.


இந்தச் சட்டத்தின் அமலாக்க மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ள து.

தொடக்கம்:

இதன்படி தமிழக அரசால் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் 2006
ஜனவரி 12- ம் தேதி தொடங்கப் பட்டு 28- 1- 2006- முதல் செயல்பட்டு
வருகிறது. 3 ஆணையர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆணையத்தில்
பின்னர் மேலும் 4 ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.


மூன்ற ôண்டுகளில்...:

கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 1.50 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இவற்றின் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில் மக்களுக்கு தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.

உரிய தகவல்களை மனுதாரர்களுக்கு அளிக்க மறுத்தது தொடர்பாக
விளக்கம் கேட்டு 300 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என மாநிலத் தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி அண்மையில் தெரிவித்தார்.


தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக் கப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு சிலரைத்தவிர
மற்றவர்கள் யாரும் அபராதத்தைச் செலுத்தவில்லை.

அந்தந்த துறை உயர் அதிகாரிகள் மற்றும் தகவல் ஆணையத்தின்
அலட்சியப் போக்கு காரணமாக ஏராளமான அதிகாரிகள் அபராதம் செலுத்தாமல் தப்பித்து வருவதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


ஆண்டறிக்கை:

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 25 ( 4) பிரிவின்படி மாநிலத் தகவல் ஆணையம் தனது பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டின்
இறுதியிலும் ஆண்டறிக்கையாக தொகுத்து சட்டப்பேரவையில் அளிக்க வேண்டும்.


ஆனôல், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு
மூன்றôண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட
ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது என பொள்ளôச்சியில் இருந்து செயல்படும் தாயகம் அமைப்பின் நா. பாஸ்கரன் தெரிவித்தார்.


இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு, " ஆண்டறிக்கை இது வரை சமர்பிக்கப்படவில்லை' என
சட்டப்பேரவை செயலக துணைச் செயலர் 10- 10- 2007- லும், பணியாளர்
நிர்வாகச் சீர்திருத்தத் துறை இணைச் செயலர் 19- 10- 2007- லும் பதில்
அளித்துள்ளனர்.


கடைசியாக சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலர் 29- 01- 2009- ல்
அளித்த ( எண்: 1822/ 2009- 1) கடிதத்திலும், தகவல் ஆணையத்தின்
ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை எங்கே?

இந்தநிலையில், 2006- ம் ஆண்டு முதல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவை செயலகம் உள்பட ஒவ்வொருத்துறையும் அளித்த தகவல்கள் குறித்த விவரங்கள் ஆண்டறிக்கைக்காக பெறப்பட்டு வருகிறது என மாநிலத் தகவல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

" அரசுத் துறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை அமலாக்க வேண்டிய ஆணையமே, தனது பணிகளில்
வெளிப்படைத் தன்மையை பராமரிக்காமல் உள்ளதற்கு உதாரணமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது' என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏன் இந்த முரண்பாடு?

சென்னை, மார்ச் 7: லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு அத் துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.


அரசாணை எண் 158- ன் படி தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிவந்த லஞ்சஒழிப்புத்துறை அதி காரிகள், தற்போது பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- ன் கீழ் அரசுத் துறைகளின் நடவடி க்கைகள் தொடர்பான விவரங்களை மக்களுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டது.

நாட்டின்பாதுகாப்பு , உளவு, விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்த
விவரங்களைத்தவிர மற்ற அனைத்து தகவல்களையும் இந்த சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.


ஆன ôல், கடந்த ஆகஸ்ட் 26- ம் தேதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்தி ருத்தத்துறை வெளியிட்ட அரசாணை எண் 158- ன் படி லஞ்ச ஒழிப்புத் துறை க்கும், மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள நபர்கள் மீது லஞ்சப்பு கார்கள் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்களுக்கு தகவல் அளிப்பதை
தவிர்ப்பதற்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இதனை மறுக்கும் வகையில், விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான தகவல்களை வழக்கில் தொடர்புள்ளவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், விசாரணைக்குத் தொடர்பில்லாத மற்ற தகவல்களை பெறுவதை இது தடுக்காது என அரசு தரப்பில்பதில் கூறப்பட்டது.

ஆன ôல், இதற்கு மாற ôக வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத வகையி ல் லஞ்ச ஒழிப்புத்துறையின் இரு வாகனங்களின் ( டி என் 22 ஜி 5000, டி என் 22 ஜி 2000) பயன்பாடு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள் விகள் ஓரிரு மாதங்கள் முன்னர் கேட்கப்பட்டது.

பொது தகவல் அதிகாரி ஏன்?

அரசாணை எண் 158- ன் படி தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளி க்க இயலாது என லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரியான மத்தியசரக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


இது இந்த விவகாரத்தில் அரசு தெரிவிதத விளக்கத்துக்கு முரண்பட்ட வகை யில் இருப்பதாக " தினமணியில்' செய்தி வெளியானது.

மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்று கூறும் அலுவலகத்தில் பொதுதகவல் அதிகாரிபதவி இருப்பது குறித்தும் அந்த செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டது.

ரகசிய உத்தரவு:

இதன் எதிரொலியாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு வரும்கடிதங்களுக்கு பதில் ( பதில் அளிக்க இயலாது என்று குறிப்பி ட்டு) கடிதம் அனுப்பும் போது அதில் பொது தகவல் அதிகாரி என குறிப்பி டக்கூடாது என அதிகாரி களுக்கு ரகசிய உத்தர விட்டு கடந்த ஜனவரி 21- ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

பதில் கிடைத்தது:

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் சட்ட ஆலோசகராகப்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வி. வி. சோமசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்
சில கேள்விகள் கேட்டு கடந்த ஜனவரி 12- ம் தேதி கடிதம் அனுப்பியுள்ள ôர்.


இதற்கு உரிய பதில்களை, பொது தகவல் அதிகாரியான மத்தியசரக காவல் கண்காணிப்பாளர் பிப்ரவரி 20- ம் தேதியிட்ட தனது கடிதத்தின் ( கழ். தஸ்ரீ. சர். எ1/ 21446/ 07) மூலம் அளித்துள்ள ôர்.


முரண்பாடு ஏன்?

இதுவரை தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக அரசாணை எண் 158- ஐ சுட்டிக்காட்டி பதில் அளிக்க இயலாது என்றுக் கூறி வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இப்போது
பதில் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

எனினும், வழக்கு விசாரணையில் தொடர்பில்லாத தகவல்களை கேட்டு வரும் குறிப்பிட்ட ஒருவரின் கடிதத்துக்கு பதில் அளிப்பதும், மற்றெ ôருவரி ன் கடிதத்துக்கு பதில் அளிக்க மறுப்பதும் என்ன நியாயம் என்பதே தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் கேள்வி.