புதன், 24 டிசம்பர், 2008

அங்கீகாரம் இல்லாத மனைகள்: அரசு புது முடிவு?

சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் உருவாகும் மனைப் பிரிவுகளின் (லே-அவுட்) எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதுசென்னையில் நாளுக்குநாள் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து குடிபெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் புறநகர் பகுதிகளில் குடியேற மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவர்களின் தேவைகளைப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைத்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் புறநகர்பகுதிகளில் விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மனைப் பிரிவுகளாக மாற்றி தனித்தனி மனைக ளாக விற்று வருகிறார்கள்.

"சி.எம்.ஏ.' பகுதி என அழைக்கப்படும் சென்னை பெருநகர் பகுதியில் இவ்வாறு உருவாகும் புதிய மனைப் பிரிவுகள் அனைத்தும் இதற்காக சி.எம்.டி.ஏ. வகுத்துள்ள விதி முறைகளின்படியே இருக்க வேண்டும்.

சி.எம்.ஏ. பகுதிக்கு வெளியே புதிய மனைப் பிரிவு களை உருவாக்க நகர மற்றும் ஊரமைப்பு துறை அனுமதியைப் பெற வேண்டும்.

விதிகள் அவசியம்:

சி.எம்.டி.ஏ. விதிகளின்படி விளை யாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பொதுப் பயன்களுக்கு தேவையான நிலத்தை ஒதுக்க வேண்டும்வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலைகளுக்கு இடம் விடவேண்டும்.

இவை உள்ளிட்ட விதிகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகளுக்கு மட்டுமே சி.எம்.டி.ஏ. அங்கீ காரம் வழங்கும்.

பட்டா உள்ள விவசாய நிலத்தில் அங்கீகாரம் இன்றி உருவாகும் மனைப் பிரிவுகள் தொடர்பான பிரச்னைக ளைவிட நத்தம் புறம்போக்கு நிலத்தில் உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதில் பல்வேறு பிரச் னைகள் ஏற்படுகின்றன.

சி.எம்.டி.ஏ. நிலை என்ன?

சென்னைப் பெருநகர் பகுதியில் 1976-க்கு பின்னர் உருவான அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளை ஒழுங்குபடுத்த சி.எம்.டி.ஏ. 1990 ஏப்ரலில் நடவடிக்கை எடுத்தது.

1989-க்கு முன்னர் உருவான வீட்டுமனைகளை சில நிபந்தனைகளுடன் ஒழுங்குபடுத்த சில நடவடிக்கை களை சி.எம்.டி.ஏ. 1992-ல் அறிவித்தது இதையடுத்து, அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்த இவற்றுக்கான வரன்முறைத் திட்டத்தை சி.எம்.டி.ஏ. 1999-ல் அறிவித்தது.

இவ்வாறு வரன்முறைப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டம் 2000, 2001, 2002-ம் ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டதுஇத்திட்டங்கள் மூலம் அங்கீகாரம் பெறாமல் உருவாக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளுக்கு வரன்முறைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

அரசு புதிய முடிவு?

1999-ம் ஆண்டு வரன்முறைத் திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட் டது. விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவாக இந்த நடவ டிக்கை இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக இந்த திட்டம் தடைப்பட்டது.

அங்கீகாரம் இன்றி உருவாக்கப்பட்டதால் இந்த மனைகளில் வீடு கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டனவிதிகளை மீறி உருவான மனைப் பிரிவுகளை உருவாக்கியவர்கள் எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்வ தில்லை.

மாறாக, இவற்றை வாங்கியவர்களே பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்இந்த மனைகளை வரன்முறைப்படுத்த அரசு தனி யான கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

ஆனால், பல ஆண்டுகளாக அரசு இதில் மெüனமாகவே இருந்து வந் ததுஇந்த நிலையில் 2-வது மாஸ்டர் பிளான் நடைமு றைக்கு வந்துள்ள நிலையில் அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உரு வாகியுள்ளது.

இதையடுத்து 2000-ம் ஆண்டு முதல் 2005- ம் ஆண்டு வரை சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுக்க அரசு முன்வந்துள்ளது.

இதற்காக, அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகள் குறித்த பட்டியல் அடங்கிய கோப்பு சி.எம்.டி.ஏ.விடம் இருந்து வீட்டுவசதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கோப்பு தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய வீட்டுவசதித் துறை 2007-ம் ஆண்டு வரையிலான பட்டியலுடன் சேர்த்து புதிய பட்டியலை அளிக் குமாறு கேட்டுள்ளது.

இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை
வரன்முறைப்படுத்துவது குறித்து அரசின் முடிவு விரைவில் வெளியாகும் என பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.