செவ்வாய், 29 டிசம்பர், 2009

கம்பி விலை:​ டன்​னுக்கு ரூ.​ 10 ஆயி​ரம் உயர்வு

   மி​ழ​கத்​தில் கட்​டு​மா​னப் பணி​க​ளுக்கு பயன்​ப​டுத்​தப்​ப​டும் இரும்பு கம்​பி​க​ளின் விலை ஒரே வாரத்​தில் டன்​னுக்கு ரூ.​ 10 ஆயி​ரம் வரை உயர்ந்​துள்​ளது.​திடீ​ரென ஏற்​பட்ட இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிப்​ப​தாக விற்​ப​னை​யா​ளர்​கள் மற்​றும் கட்​டு​மா​னத் துறை​யி​னர் தெரி​வித்​த​னர்.​
 
செயில் ​(எஸ்.ஏ.ஐ.எல்.)​,​​ விசாக்,​​ டாடா உள்​ளிட்ட நிறு​வ​னங்​கள் மூலம் நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளுக்கு இரும்பு கம்​பி​கள் வார்க்​கப்​பட்டு கட்​டு​மா​னப் பணி​க​ளுக்கு அனுப்​பப்​ப​டு​கின்​றன.​ அண்​மைக்​கா​ல​மாக சிறிய வார்ப்​பா​லை​க​ளின் எண்​ணிக்​கை​யும் அதி​க​ரித்​துள்​ளது.​​
 
 
விலை உயர்வு:​​ 
 
 
கடந்த 2007}ம் ஆண்​டின் இறு​தி​யில் ஒரு டன் ரூ.​ 25 ஆயி​ர​மாக இருந்த கம்​பி​க​ளின் விலை 2008}ம் ஆண்​டின் தொடக்​கத்​தில் ஒரு டன் ரூ.​ 40 ஆயி​ரம் வரை அதி​க​ரித்​தது.​ இத​னால்,​​ நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளில் கட்​டு​மா​னப்​ப​ணி​கள் முடங்​கும் நிலை ஏற்​பட்​டது.
 
 
​2008}ம் ஆண்​டின் மத்​தி​யில் அதி​க​பட்​ச​மாக ஒரு டன் ரூ.​ 48 ஆயி​ரம் வரை உயர்ந்​தது.​ பல்​வேறு தரப்​பி​ன​ரின் வற்​பு​றுத்​தலை ஏற்று இரும்பு இறக்​கு​ம​திக்​கான வரி விகி​தங்​க​ளில் மத்​திய அரசு சில மாற்​றங்​களை செய்​தது.​ இருப்​பி​னும் இந்த முயற்​சி​கள் உரிய பலனை அளிக்​க​வில்லை.​ஏற் ​று​மதி தொடர்​பா​க​வும் மத்​திய அரசு சில கட்​டுப்​பா​டு​களை விதித்​தது.
 
 
​ இத​னை​ய​டுத்து கம்பி விலை படிப்​ப​டி​யாக குறை​யத் தொடங்​கி​யது.​படிப்​ப​டி​யாக குறைந்த கம்பி விலை கடந்த வாரம் டன்​னுக்கு ரூ.​ 25 ஆயி​ரம் முதல் ரூ.​ 28 ஆயி​ரம் வரை இருந்​தது.​இந்த நிலை​யில்,​​ தற்​போது ஒரு டன் கம்பி விலை ரூ.​ 38 ஆயி​ர​மாக அதி​க​ரித்​தது.​ 
 
 
பெரிய நிறு​வ​னங்​கள் தங்​க​ளது கம்​பி​க​ளின் விலை​யில் ரூ.​ 2 ஆயி​ரம் முதல் ரூ.​ 3 ஆயி​ரம் வரை அதி​க​ரித்​துள்​ளன.​
 
 
கார​ ணம் என்ன?​​ 
 
தமி​ழ​கத்​தில் தற்​போ​தைய நிலை​யில் சுமார் 80 தனி​யார் வார்ப்​பா​லை​கள் செயல்​ப​டு​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் கம்பி தேவை​யில் 70 சத​வீ​தம் இந்த ஆலை​கள் மூலம் பூர்த்தி செய்​யப்​ப​டு​கின்​றன.​
 
கச்சா இரும்பு தாதுவை நிலக்​க​ரி​யு​டன் சேர்த்து உருக்கி கம்​பி​க​ளாக வார்க்​கும் வசதி பெரிய ஆலை​க​ளில் மட்​டும் உள்​ளது.​ இத்​த​கைய வசதி இல்​லாத சிறிய ஆலை​கள் கச்சா இரும்பை நிலக்​க​ரி​யு​டன் சேர்த்து உருக்​கும் பணியை எளி​தாக்க "ஸ்பான்ச் அயன்' என்ற பொருளை பயன்​ப​டுத்த வேண்​டும்.​
 
 
ஆந்​தி​ரம்}​ கர்​நா​டக எல்​லை​யில் உள்ள ரெய்ச்​சூர்,​​ சத்​தீஸ்​கர் ஆகிய இடங்​க​ளில் மட்​டுமே ஸ்பான்ச் அயன் கிடைக்​கி​றது.​தெலங் ​கானா பிரச்னை கார​ண​மாக ஸ்பான்ச் அயன் வரத்​தில் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால்,​​ விலை உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக சிறிய வார்ப்​பா​லை​கள் தரப்​பில் கூறப்​ப​டு​கி​றது.​
 
 
அரசு தலை​யி​டுமா?​​ 
 
 
""கம்பி விலை​யேற்​றத்​துக்கு ஆலை​கள் தரப்​பில் உறு​தி​யான கார​ணங்​கள் எது​வும் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை என்​ப​தால் நுகர்​வோ​ரி​டம் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது'' என திருச்சி டிரே​டிங் நிறு​வ​னத்​தின் நிர்​வாகி வி.​ முரு​கன் தெரி​வித்​தார்.​
 
 
பெரிய ஆலை​க​ளின் விலை உயர்வை கார​ணம் காட்டி சிறிய ஆலை​கள் செய்​தி​ருக்​கும் இந்த திடீர் விலை உயர்வு செயற்​கை​யா​ன​தாக உள்​ளது.​ இந்த விவ​கா​ரத்​தில் அரசு தலை​யிட்டு விலை உயர்வை கட்​டுப்​ப​டுத்த வேண்​டும் என கட்​டு​மா​னத் துறை​யி​னர் வலி​யு​றுத்​தி​யுள்​ள​னர்.

புதன், 9 டிசம்பர், 2009

தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்​குத் தடை!

    தமிழ்​நாடு மாநில தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.​ 2005}ம் ஆண்டு நிறை​வேற்​றப்​பட்ட சட்​டத்​தின் அம​லாக்​கத்​துக்​காக மத்​திய தக​வல் ஆணை​ய​மும்,​ மாநில அள​வி​லான தக​வல் ஆணை​யங்​க​ளும் அமைக்​கப்​பட்​டன.
 

      
இந்​தச் சட்​டத்​தின் அடிப்​ப​டை​யில் பொது மக்​கள் எழுத்து மூல​மாக கோரும் தக​வல்​களை சம்​பந்​தப்​பட்ட துறை​யின் பொது தக​வல் அதி​காரி அளிக்​கா​விட்​டால்,​ அந்​தந்​தத் துறை​யின் தலைமை பொது தக​வல் அதி​கா​ரி​யி​டம் முத​லா​வது மேல்​மு​றை​யீட்டு மனுவை தாக்​கல் செய்ய வேண்​டும்.​

இதி​லும் தக​வல் கிடைக்​கப்​பெ​றா​த​வர்​கள் மாநில தக​வல் ஆணை​யத்​தி​லும்,​ மத்​திய தக​வல் ஆணை​யத்​தி​லும் 2}வது மேல்​மு​றை​யீடு செய்​ய​லாம்.இவ் ​வாறு பெறப்​ப​டும் 2}வது மேல்​மு​றை​யீட்டு மனுக்​களை விசா​ரித்து பதில் அளிக்க மறுத்த பொது தக​வல் அதி​கா​ரிக்கு ரூ. 25 ஆயி​ரம் வரை அப​ரா​த​மும்,​ துறை ரீதி​யான நட​வ​டிக்கை எடுக்க பரிந்​து​ரைக்​க​வும்,​ சம்​பந்​தப்​பட்ட மனு​தா​ர​ருக்கு உரிய பதில் கிடைக்க உத்​த​ர​வி​ட​வும் மாநில தக​வல் ஆணை​யத்​துக்கு அதி​கா​ரம் உள்​ளது.

தமி​ழ​கத்​தில்...:

தமி​ழ​கத்​தில் மாநில தக​வல் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு முதல் மூன்று ஆண்​டு​க​ளில் சுமார் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மேல்​மு​றை​யீட்டு மனுக்​கள் வந்​தன.இதில் சுமார் 40 மனுக்​க​ளின் மீதான விசா​ர​ணை​யில் பதில் அளிக்க மறுத்த பொது தக​வல் அதி​கா​ரி​க​ளுக்கு அப​ரா​தம் விதித்து மாநில ஆணை​யம் உத்​த​ர​விட்​டது. 


மேலும் பல வழக்​கு​க​ளில் உண்மை நிலை குறித்து விசா​ரித்து அறிக்கை அளிக்​க​வும்,​ மனு​தா​ரர்​கள் கோரிய தக​வல்​கள் அளிக்​க​வும் மாநில தக​வல் ஆணை​யம் உத்​த​ர​விட்​டது.


ஆனால்,​ இது​வரை ஒரு சில நபர்​க​ளி​டம் இருந்து மட்​டுமே அப​ரா​தம் வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது.நீதி ​மன்​றத் தடை:​ சட்​டப்​படி பதில் அளிக்​கா​த​தால் அப​ரா​தம் விதிக்​கப்​பட்ட பொது தக​வல் அதி​கா​ரி​க​ளில் பெரும்​பா​லா​னோர் நீதி​மன்​றத்தை அணுகி ஆணை​யத்​தின் உத்​த​ர​வுக்கு தடை ஆணை பெற்​றுள்​ள​னர்.​


இப்​போ​தைய நில​வ​ரப்​படி மாநில தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்கு,​ நீதி​மன்​றத்​தால் தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக ஆணைய அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​ சென்னை உயர் நீதி​மன்​றத்​தி​லும்,​ உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யி​லும் இந்த தடை உத்​த​ர​வு​கள் பெறப்​பட்​டுள்​ளன.

இவை தொடர்​பான வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளன.​ இதன் கார​ண​மாக தக​வல் பெறும் உரி​மைச் சட்​டத்​தின் அம​லாக்​கம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது என சமூக ஆர்​வ​லர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ள​னர்.

அர​சின் சட்ட உதவி ஏன்?​ மாநில தக​வல் ஆணை​யத்​தின் உத்​த​ர​வு​களை அம​லாக்க மறுக்​கும்​போது ​ தக​வல் அதி​கா​ரி​க​ளில் பெரும்​பா​லா​னோர் அந்​தந்​தத் துறை மூலம் நீதி​மன்​றத்​தில் மனு செய்து தடை ஆணை பெற்​றுள்​ள​னர்.​

இவர்​கள் தங்​கள் மனுக்​களை அரசு வழக்​க​றி​ஞர்​கள் மூலமே நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்து அர​சின் சட்ட உத​வியை பயன்​ப​டுத்​தி​யுள்​ள​னர். இந்த மனுக்​கள் தொடர்​பான வழக்​கு​க​ளில் ஆணை​யம் சார்​பில் அர​சின் பணி​யா​ளர் மற்​றும் நிர்​வாக சீர்​தி​ருத்​தத் துறைக்​கான அரசு வழக்​க​றி​ஞரே ஆஜ​ராகி வரு​கி​றார்.


இதன் மூலம் மனு​தா​ரர் ​(பொது தக​வல் அதி​காரி)​ சார்​பில் ஒரு அரசு வழக்​க​றி​ஞ​ரும்,​ எதிர் தரப்பு ​(ஆணை​யம்)​ சார்​பில் வேறு ஒரு அரசு வழக்​க​றி​ஞ​ரும் ஆஜ​ரா​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.சட்​டப்​படி செயல்​ப​டாத பொது தக​வல் அதி​கா​ரி​க​ளுக்கு அர​சின் சட்ட உதவி அளிக்​கப்​ப​டு​வது தக​வல் பெறும் உரி​மைச் சட்ட அம​லாக்​கத்தை அரசே தடுப்​ப​தற்கு வழி​வ​குக்​கும் என பல்​வேறு தரப்​பி​ன​ரும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ள​னர்.

சி.எம்.டி.ஏ. தெரி​விக்​கும் மதிப்பை ஏற்க பதி​வுத்​துறை முடிவு!

  சென்​னைப் பெரு​ந​கர் வளர்ச்​சிக் குழு​மம் ​(சி.எம்.டி.ஏ.) சார்​பில் எழு​திக் கொடுக்​கப்​ப​டும் ஆவ​ணங்​க​ளில் குறிப்​பிட்ட மதிப்பை ஏற்று அதன்​படி முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்க பதி​வுத்​துறை முடிவு செய்​துள்​ளது.
 
இது குறித்த சுற்​ற​றிக்கை அண்​மை​யில் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.​ சென்​னை​யி​லும்,​ புற​ந​கர்ப் பகு​தி​க​ளில் குறிப்​பிட்ட சில இடங்​க​ளில் வீட்டு மனை​கள்,​ வணிக மனை​கள் உள்​ளிட்​ட​வற்றை சி.எம்.டிஏ. தனி​யாக உரு​வாக்கி விற்​பனை செய்து வரு​கி​றது. 
 
மறை​மலை நகர்,​ மணலி புது நகர்,​ கோயம்​பேடு,​ சாத்​தாங்​காடு உள்​ளிட்ட இடங்​க​ளில் இவ்​வாறு மனை​களை உரு​வாக்கி உரி​ய​வர்​க​ளுக்கு சி.எம்.டி.ஏ. விற்​பனை செய்து வரு​கி​றது.​ இவ்​வாறு சொத்​துக்​களை உரு​வாக்கி விற்​பனை செய்​யும் போது இதற்​கான விற்​ப​னையை பதிவு செய்​தல் வேண்​டும்.
 
அதற்​கான நடை​மு​றை​க​ளில் சொத்​தின் மதிப்பை நிர்​ண​யிப்​ப​தில் பல்​வேறு குழப்​பங்​கள் இருந்து வந்​தன. இதன் கார​ண​மாக சி.எம். டி.ஏ. விடம் மனை​களை வாங்​கிய பலர் அதனை பதிவு செய்ய முடி​யாத நிலை தொடர்​கி​றது.
 
ஏரா​ள​மான மனை உரி​மை​யா​ளர்​க​ளுக்கு முழுத் தொகையை செலுத்​திய பிற​கும் விற்​பனை பத்​தி​ரத்தை பெற முடி​யாத சூழல் நில​வு​கி​றது.​ குறிப்​பாக மணலி புது நக​ரில் சி.எம்.டி.ஏ. உரு​வாக்​கிய மனை​க​ளின் விற்​ப​னை​யில் அதன் மதிப்பை நிர்​ண​யிப்​ப​தில் சி.எம்.டி.ஏ., வீட்​டு​வ​சதி வாரி​யம்,​ பதி​வுத்​துறை ஆகி​ய​வற்​றுக்​கி​டையே குழப்​பம் ஏற்​பட்​டது. 
 
 
இது தொடர்​பாக மனை ஒதுக்​கீடு பெற்​ற​வர்​கள் சார்​பில் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொட​ரப்​பட்​டது. இதில் மனை​க​ளின் மதிப்பை மாற்றி நிர்​ண​யித்​த​தில் சி.எம்.டி.ஏ.வுக்கு ஏற்​பட்ட இழப்​பு​கள் குறித்து தணிக்​கைத் துறை ஆட்​சே​பம் தெரி​வித்​துள்​ளது.
 
இத்​த​கைய குழப்​பங்​களை தீர்க்​கும் வகை​யில்,​ நீதி​மன்ற உத்​த​ர​வுக்கு இணங்​கும் வித​மாக பதி​வுத்​துறை தலை​வர் இரா. சிவ​கு​மார் புதிய சுற்​ற​றிக்கை ஒன்றை ​(எண்:​ 47/2009/பி2. நாள்:​ 17}11}2009) பிறப்​பித்​துள்​ளார்.
 
அதன் விவ​ரம்:​ 
 
சென்​னைப் பெரு​ந​கர் வளர்ச்​சிக் குழு​மத்​தால் எழு​திக் கொடுக்​கப்​ப​டும் ஆவ​ணங்​க​ளைப் பொறுத்து அந்த குழு​மம் நிர்​ண​யிக்​கும் மதிப்​பினை ஏற்று முத்​திரை தீர்வை வசூ​லிக்​கப்​பட வேண்​டும் என நீதி​மன்ற உத்​த​ர​வு​க​ளின் அடிப்​ப​டை​யில் ஆணை​யி​டப்​ப​டு​கி​றது. 
 
இது தொடர்​பாக நீதி​மன்ற தீர்ப்பை பதி​வுத்​து​றை​யி​னர் செயல்​ப​டுத்த வேண்​டும். எனவே,​ இனி வருங்​கா​லங்​க​ளில் சி.எம். டி.ஏ. நிர்​ண​யிக்​கும் மதிப்​பினை ஏற்று முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்​கப்​பட வேண்​டும் என இதன் மூலம் அறி​விக்​கப்​ப​டு​கி​றது என அந்த சுற்​ற​றிக்​கை​யில் குறிப்​பி​டப்​பட்​டுள்​ளது. 
 
வழி​காட்டி மதிப்பு என்ன ஆனது?​ ​
 
பதி​வுத்​துறை தலை​வ​ரின் இந்த சுற்​ற​றிக்கை பல்​வேறு குழப்​பங்​க​ளுக்கு தீர்​வாக அமை​யும் என கரு​தப்​ப​டு​கி​றது. ஆனால்,​ இந்த சுற்​ற​ரிக்கை அரசு அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​வித்த வழி​காட்டி மதிப்​பின் நிலையை கேள்​விக்​கு​றி​யாக்​கி​யுள்​ளது. 
 
இத​னால் ஒரு பகு​தி​யில் சி.எம்.டி.ஏ. விற்​பனை செய்​யும் சொத்​துக்கு ஒரு மதிப்​பும்,​ அதே பகு​தி​யில் தனி​யார் ஒரு​வர் விற்​பனை செய்​யும் சொத்​திற்கு வழி​காட்டி மதிப்​பின் அடிப்​ப​டை​யி​லும் இரு​வேறு வித​மாக முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்​கப்​ப​டும் சூழல் உரு​வா​கி​யுள்​ளது.

புதன், 2 டிசம்பர், 2009

திருவண்ணாமலை கோயில் நிலத்தை அபகரிக்க முயற்சி


தகவல் ஆணையப் பதிவாளர் நியமனத்தில் குளறுபடி



செயின்ட் ஹெலினா வானொலியில் ஒலித்த தமிழ்!

""தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்...' என்றர் மகாகவி பாரதி. இந்த வரிகளை நனவாக்கும் வகையில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவின் சிற்றலை வானொலியில் முதன் முறையாக தமிழில் அறிவிப்புகள் ஒலிபரப்பாகின. 


இப்படி ஒரு தீவு இருப்பதே நம்மில் பலருக்கும் தெரியாத நிலையில் நமது தாய்மொழியில் அங்கு அறிவிப்புகள் ஒலிபரப்பான விதத்தை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்...

உலக வரைபடத்தில் ஆப்பிரிக்காவுக்கும் - தென் அமெரிக்காவுக்கும் நடுவில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் புள்ளிகளில் ஒன்றாக செயின்ட் ஹெலினா தீவு அடையாளம் காணப்படுகிறது. பூகோள ரீதியாக பார்த்தால் நிலநடு கோட்டுக்கு 15 டிகிரி தெற்கில் ஆப்பிரிக்க நாடானஅங்கோலாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது இந்தத்தீவு.


தெற்கு அட்லாண்டிக் கடலில் இருந்த எரிமலை ஒன்றில் இருந்து வெளியான லாவா உள்ளிட்டபொருள்களால் உருவான தீவுகளில் ஒன்றாக பூர்வீகத்தைக் கொண்டது செயின்ட் ஹெலினா தீவு.ஐரோப்பிய நாடுகளின் நிலபரப்பில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் நீண்ட தூர கப்பல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், இளைப்பாறும் இடமாகவும் இத்தீவு முக்கியத்துவம் பெற்றது.


இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷார் கி.பி. 1,500-ம் ஆண்டுகளிலேயே இதனை தங்களது காலனி நாடாக்கிக் கொண்டனர். ஆனால் மற்ற காலனி நாடுகளைவிட இது இங்கிலாந்து அரசுக்கு செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்தது. 

சில ஆயிரம் மக்களே வசிக்கும் இந்தத் தீவு உலகின் இப்போதைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சுமார் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்றால் அது மிகையல்ல. வெளிஉலகத் தொடர்புக்கு கப்பல் போக்குவரத்தை மட்டுமே இத்தீவு மக்கள் நம்பியுள்ளனர். 

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டால் அது இந்தத் தீவை சென்றடைய 6 மாதம் ஆகும் என்பதே இவர்களின் தகவல் தொடர்பின் தற்போதைய நிலை.வளர்ந்த பல நாடுகள் விண்வெளிக்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான பூர்வாங்கப்  பணிகளே இப்போதுதான் செயின்ட் ஹெலினா தீவில் தொடங்கியுள்ளது என்பதன் மூலம் இதன் வளர்ச்சி வேகத்தை நாம் உணர முடியும். 


உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஆட்சியாளர்களில் ஒருவரான நெப்போலியன் போனபார்ட் இங்கிலாந்து அரசால் 1815-ம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, அவர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டார். 1821 மே மாதம் 5-ம் தேதி இந்தத் தீவிலேயே அவர் உயிரிழந்தார்.இதனை குறிக்கும் விதத்தில் அவரது நினைவிடமும் இங்கு அமைந்துள்ளது. இதன் காரணமாக உலக வரலாற்றில் தன க்குறிய முக்கியத்துவத்தை பெறுகிறது செயின்ட் ஹெலினா தீவு. 


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடந்து 1967-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் இங்கு வானொலி லிபரப்பு தொடங்கப்பட்டது. 1548 கிலோஹெட்ஸ், 194 மீட்டர் மத்திய அலை ஒலிபரப்பாக இந்த வானொலி நிலையம் தொடக்கம்முதல் செயல்படுகிறது. 


இருப்பினும், 11092.5 கிலோஹெட்ஸில் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிற்றலை ஒலிபரப்பும் செயின் ஹெலினா வானொலியில் தொடங்கப்பட்-டது.இங்கிலாந்து அரசு மத்திய அலை ஒலிபரப்புக்கு மட்டுமே நிதி உதவி அளித்ததால், எப்போதாவது சில சமயங்களில் மட்டுமே நடைபெற்று வந்த சிற்றலை வானொலி ஒலிபரப்பு 80-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. 


இருப்பினும், இங்கு ஒலிபரப்பு பணியில் இருந்த சிலர் உலகின் மற்ற பகுதிகளை சேர்ந்த சிற்றலை வானொலி நேயர்களின் உதவியுடன் ஒலிபரப்பை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். 

1993-ம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த முயற்சிகளின் பலனாக, 2000-ம் ஆண்டு முதல் செயின்ட் ஹெலினா வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு மீண்டும் தொடங்கியது. சிற்றலை வானொலி நேயர் குழுக்களின் நிதி உதவியை பெற்று மிகக்குறைந்த அளவான ஒரு கிலோவாட் திறனில் இதன் ஒலிபரப்பு தொடங்கியது. 


இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக ஆண்டு ஒரு நாள் அதாவது நவம்பர் 14 அல்லது 15-ம் தேதியில் மட்டும் கண்டத்துக்கு ஒரு மணி நேரம்  தம் 4 மணி நேரம் இதில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.


இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஒரு மணி நேரம், ஜப்பான் மற்றும் எஞ்சிய ஆசிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், அமெரிக்கா, கரிபியன் நாடுகளுக்கு ஒரு மணி நேரம் என இதன் ஒலிபரப்பு அமைந்துள்ளது. 

இந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி 15-ம் தேதி அதிகாலை 1.30மணிக்கு) இந்த ஒலிபரப்பு நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அந்தந்த பிராந்தியத்தில்உள்ள முக்கியமான 2 மொழிகளில் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு ஒலிபரப்பாகும்.

இந்த முறை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கானஒலிபரப்பில் அறிவிப்புகள் தமிழில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னையை சேர்ந்த, சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் தங்க. ஜெயசக்திவேல் குரலில் தமிழ் அறிவிப்புகள் ஒலிபரப்பானது. 

""இது செயின்ட் ஹெலினா வானொலி. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் இருந்து நாங்கள் ஒலிபரப்பு கிறோம்...'' என அந்த அறிவிப்பை நினைவுக் கூர்கிறார் தங்க. ஜெயசக்திவேல்.

இந்த வானொலியில் முதன்முதலாக ஒலிபரப்பான தமிழ் அறிவிப்புக்கு குரல் கொடுத்த பெருமை அவருக்கு இருந்தாலும், தமிழர்கள் அனை வருக்குமே  இது பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழின் அருமை பெருமைகளை கெüரவப்படுத்தும் விதத்தில் தமிழ் அறிவிப்பு வழி வகுத்ததில் செயின்ட் ஹெலினா வானொலி நிலையத்தின் மேலாளர் கேரிவால்டர்ஸ் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாராட்டுக்குரியவராகிற ôர். 

ஜப்பானில் உள்ள சிற்றலை வானொலி நேயர் குழுவின் நிதி உதவியின் பேரில் இந்த ஆண்டு ஒலிபரப்பு நடைபெற்றது.சிற்றலை வானொலி ஒலிபரப்பு மட்டுமல்லாது செயின்ட் ஹெலினா தீவின் அஞ்சல் தலையை பெறுவது என்பதும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்களிடம் பிரபலமானதாகும்.

பல்வேறு காரணங்களால் சிற்றலை வானொலி ஒலிபரப்பின் வீச்சு குறைந்து வரும் வேளையில் சிற்ற லை நேயர்களை ஊக்குவித்து ஒருங்கிணைக்கும்வகையில் அமைந்ததால் இதன் ஒலிபரப்பு உலகம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகிறது. 


உலக வரைப்படத்தில் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும் தனது சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் உலகின் பார்வையை செயின் ஹெலினா தீவு தன்பக்கம் திருப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 27 நவம்பர், 2009

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் மத்திய அமைச்சர்

  மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பிரபுஃல் படேல் மாத ஊதியமாக ஒரு ரூபாய்  மட்டும்  பெற்று வருகிறார்.   
 
மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு ரூ. 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அடிப்படை ஊதியமும், தினசரி படியாக நாளொன்றுக்கு ரூ. 1000, தொகுதிப் படியாக மாதம்தோறும் ரூ. 20 ஆயிரமும் இதர படிகளாக மாதத்துக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. 
 
  இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான ஊதிய விவரங்கள் குறித்து பொள்ளாச்சியில் இயங்கிவரும் "தாயகம்' தன்னார்வ அமைப்பின் நா. பாஸ்கரன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில மாதங்கள் முன்னர் கேட்டிருந்தார். 
 
  இதற்கு நாடாளுமன்ற செயலகம் உள்பட பல்வேறு துறைகள் தனித்தனியாக பதில் அளித்துள்ளன.   உள்துறை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரி எஸ். கெüரிசங்கர் அளித்துள்ள பதில் விவரம்:  
 
இணை அமைச்சர் பிரபுஃல் படேல் தனிபட்ட முறையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டபடி அவருக்கான மாத ஊதிய ரூ. 501-ஆக கணக்கிடப்படுகிறது.   ஆனால், இதில் ரூ. 500 மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தில் அவரது பங்களிப்பாக வரவு வைக்கப்பட்டு எஞ்சிய ரூ. 1 மட்டும் அவருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. 
 
தினப்படியில் குழப்பம்: 
 
மத்திய அமைச்சர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் தினப் படியாக ரூ. 1000 அளிக்கப்படுகிறது. இது மாத ஊதியத்துடன் சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 31 நாள்களுக்கான படியாக ரூ. 31,000 வழங்கப்பட்டுள்ளது. 
 
வழக்கமாக ஏப்ரல் மாதத்துக்கு 30 நாள்கள் மட்டுமே என்பதால் 31 நாள்களுக்கான தினபடி வழங்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக பொள்ளாச்சி நா. பாஸ்கரன் அந்தந்த அமைச்சகத்தின் மேல் முறையீட்டு அதிகாரிகளுக்கு தனித்தனியாக மனு செய்தார்.  
 
இதற்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தனித்தனியாக பதில் அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு துறையின் துணைச் செயலரும், தலைமை பொதுத் தகவல் அதிகாரியுமான எஸ்.டி. பிள்ளை கடந்த 6-ம் தேதி அளித்த பதில் விவரம்:  
 
இந்தத் துறையில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர், இணை அமைச்சர்களுக்கு 30 நாள்கள் கொண்ட மாதத்தில் 31 நாள்களுக்கான தினபடி வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தத் தவறு வருத்தத்திற்குறியது. இருப்பினும், அமைச்சர்களிடம் இருந்து கூடுதல் தொகை திரும்ப பெற இயலாது.
 
வருங்காலங்களில் இத்தகைய தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.  
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியதன் விளைவாக இந்தத் தவறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

அட்டைப் பள்ளத்தாக்கின் அதிசயம்!



"அந்நியன்' திரைப்படத்தில் பேராசைக்காரனை அட்டையைவிட்டு  ரத்தம் உறிய வைத்துக் கொலை செய்வார் கதாநாயகன். ஆனால், ஒரு பாவமும் அறியாமல் அடர் காட்டில் அட்டைகளோடு பயணம் செய்துவிட்டுத் திரும்பினோம். எங்கே? ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு அடுத்தடுத்த பாராவில் விடை.
 
 
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு நகரில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா. சிங்கவால் குரங்குகளின் பிரதான வாழிடம், யானைகளின் வழித்தடத்தின் இறுதி பகுதி ஆகிய சிறப்பம்சங்கள் இதற்கு உண்டு.
 
22 வகை விலங் கினங்கள், 211 வகை பறவையினங்கள், அட்டைப் பூச்சியினங்கள், ஏராளமான தாவர வகைகள் உள்பட 1000-க்கும் மேற் பட்ட உயிரினங்களின் வாழிடமாக இந்த அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. 
 
நீர்மின் நிலையம் அமைக்க அணை கட்டும் திட்டத்துக்காக அழிக்கப்பட இருந்த நிலையில் மக்களின் போராட்டம் மற்றும் மத்திய அரசு வற்புறுத்தல் காரணமாக அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக புதுவாழ்வு பெற்றுள்ளது. 
 
இதன் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரள வனத்துறையினர் அனுமதியுடன், பயணம் செய்தபோதுதான் இந்த அட்டை உலா. மன்னார்காடு நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்காலி பகுதியில் இருந்து நமது பயணம் தொடங்குகிறது. 
 
சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை மினி வேனில் பயணித்துவிட்டு, பந்தன்தோடு ஓடையை கடக் கிறோம். அதன் பிறகு சில கிலோமீட்டர் தூரத்தில் பவானியின் கிளை ஆறு ஒன்று குறுக்கிடுகிறது. 
 
ஆற்றைக் கடக்கும் முன்னர் ஓரிருவரின் காலை மட்டுமே பதம்பார்த்த அட்டைகள் இப்போது அனைவரது கால்களிலும் சடசடவென ஏறத் தொடங்கின. மரங்களில் இருந்து உதிரும் இலைகள், அட்டை பூச்சிகளால் அங்கேயே இருக்க வைக்கப்படுகின்றன. இதனால் இலைகளும், தழைகளும் உரமாகி செடிகளும் மரங்களும் செழித்து வளர்கின்றன.
 
விவசாய நிலத்தில் மண் புழுக்கள் ஆற்றும் அரும்பணிக்கு நிகராக மழைக்காடுகளில் மரங்களும், புதர்களும் நிறைந்த பகுதிகளில் தரைபரப்பில் ஈரப்பதத்தை அப்படியே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வதே அட்டைப் பூச்சிகளின் தலையாயப் பணி என நம்முடன் பயணித்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சதீஷ் சந்திரன் நாயர் குறிப்பிட்டார். 
 
அமைதி பள்ளத்தாக்கின் மற்றொரு சிறப்பு, இங்கு ஆண்டுக்கு 4,500 மி.மீ. முதல் அதிகபட்சமாக 7,500 மி.மீ. வரை மழை பெய்கிறது. இந்தியாவில் வேறு எந்த வனப்பகுதிக்கும் இல்லாத சிறப்பு இது. நடைபயணத்தின் நடுநடுவே சதீஷ் சந்திரன் நாயரின் ஆராய்ச்சி கருத்து பரிமாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அட்டைகள் அசராமல் ரத்தம் உறிஞ்சும் பணியில் கர்மசிரத்தையாக ஈடுபட்டிருந்தன. 
 
இந்த இடத்தில் அட்டைகள் குறித்து சில விஷயங்களை சொல்லியாக வேண்டும், மனிதர்களிடம் இருந்து ரத்தம் உறிஞ்சுபவை என்ற அளவில் மட்டுமே அட்டைகள் குறித்த பரிச்சயம் நமக்கு இருக்கும். 
 
ஆனால், அதைத் தாண்டி அட்டைகள் ஆற்றும் அரும்பணி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் லீச்சஸ் என அழைக்கப்படும் இந்த அட்டை பூச்சிகள் சராசரியாக ஒரு அங்குலம் நீளத்தில் கறுப்பும் காப்பி கலரும் கலந்த வண்ணத்தில் காட்சியளிக்கும். 
 
பொதுவாக இவை மனிதர்களைக் கடிக்கும் முன் ஹருடின் என்ற சுரப்பை முதலில் செலுத்தும். அதன் பின்னர் அது ரத்தத்தை உறிஞ்சும்போது, நமக்கு எந்த வலியும் ஏற்படாது. தனது உடலில் இடம் உள்ள அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சிய பிறகு அட்டைகள் தானாக விழுந்துவிடும்.
 
ஆனால், அது உறிஞ்சிய இடத்தில் ரத்தம் வடிவது நிற்க 5, 10 நிமிடங்கள் ஆகும். இந்தக் கருத்து பரிமாற்றங்களுடன் நடந்ததில் 4 கிலோ மீட்டர் தொலைவை கடந்ததே தெரியவில்லை. 
 
வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்த நாம் அங்கிருந்து, சைரேந்திரி வனம் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதியை அடைந்தோம். 
 
அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து, அமைதி பள்ளத்தாக்கில் உள்ள குந்திபுழாவில் அணை கட்ட உத்தேசிக்கப்பட்ட இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சாரை சாரையாக அட்டைகள் அதன் மீது ஊர்ந்து கொண்டு, இலைகளைக் காய்ந்து போகவிடாமல் ஈரப்பதத்துடன் அங்கேயே இருக்கச் செய்வதால் மழைக்காடுகளின் பாதுகாப்பில் அட்டைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 
 
வனத்துக்கு உதவும் அட்டைகள் மனிதர்களுக்கும் உதவுவது ஆச்சர்யமளிக்கும். மனிதர்களுக்கும் ரத்தம் கட்டிவிட்டால் அதைச் சரி செய்வதில் அட்டைகள் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் இதனை பயன்படுத்தியிருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 
 
 
பிளாஸ்டிக் சர்ஜரி என்று கூறப்படும் குறிப்பிட்ட சில அறுவைச் சிகிச்சைகளிலும், குற்ற வழக்கு புலனாய்வில் ரத்த அடையாளங்கள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கும் அட்டைகளே பயன்படுகின்றன. மேலும், பல நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் அட்டைகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
 
 
இந்தப் பகுதி இன்னமும் மழைக்காடு வகை வனமாக இருப்பதற்கு காவலாக அட்டைப் பூச்சிகள் செயல்படுகின்றன என்றால் அது மிகையல்ல.
 
 
சிலரைச் சாடும்போது அட்டை போல உறிஞ்சுகிறான் என்பார்கள்... அட்டைபோல அவன் இவ்வளவு சேவைகள் செய்திருப்பானா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். 
 
                                                                                                                   வி. கிருஷ்ணமூர்த்தி

சனி, 14 நவம்பர், 2009

சிக்கலில் "சிங்காரா' காடுகள்!


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் முக்கியப் பகுதியான சிங்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிப்புறப் பகுதியாகவும் இந்தப் பகுதி அமைந்துள்ளது.

  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான யானைகள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகச் செல்லும் வழித்தடத்தில் முக்கியப் பகுதியாக சிங்காரா அமைந்துள்ளது.


  676 அரிய வகைத் தாவரங்கள், பூச்சிகள் முதல் யானைகள் வரையிலான 173 அரிய வகை உயிரினங்கள் தங்களது வாழ்வாதாரமாக சிங்காரா வனப்பகுதியை நம்பியுள்ளன.


  உயிரியல் மற்றும் சூழலியல் அடிப்படையில் மிகமுக்கியமான பகுதியாகக் கருதப்படும் சிங்காரா பகுதியில், அணுத்துகள்கள் குறித்த உயர் ஆய்வுகளை மேற்கொள்ள "நியூட்ரினோ' ஆய்வுக்கூடத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


  நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அணுசக்தி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 20 நிறுவனங்கள் சார்பாக அணுசக்தித் துறை மூலம் இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.



  சிங்காரா வனப்பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ. 917 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள, இந்தத் திட்டத்துக்காக அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு 35 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்படும். இதன் வழியாக சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடப் பணிகளுக்காகப் பல ஆயிரம் டன் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்.


  மேலும், இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் அதற்கு நாளொன்றுக்கு 3.42 லட்சம் லிட்டர் தண்ணீரும், 3 மெகாவாட் மின்சாரமும் தேவைப்படும் என திட்டத்தை உருவாக்கியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


  இவை எல்லாம் நிகழ்ந்தால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் பேராபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


  நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


  நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டத்தை எவ்விதச் சிக்கலும் இன்றி நிறைவேற்ற ஒத்துழைப்புக் கோரி தமிழக முதல்வரை அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்தார். ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு வலுவாக உள்ள நிலையில் தமிழக அரசு இதில் எந்த முடிவையும் எடுக்க இயலாது என முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாயின.


  வனப்பகுதி நிலங்களை இந்தத் திட்டத்துக்காக அளிக்க வேண்டும் என அணுசக்தித் துறையின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி கடந்த செப்டம்பரில் தெரிவித்தார்.


  ஆனால், "நியூட்ரினோ' ஆய்வுக்கூடம் அமைக்க சிங்காராவே சிறந்த இடம் என மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் கருத்தை மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
  இது தமிழக அரசு மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  இதேபோல, கால் நூற்றாண்டுக்கு முன்னால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் குந்திப்புழா பகுதியில் நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அணை கட்டுவது உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. பறவைகள் ஆய்வாளர் சலிம் அலி, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் உள்ளிட்ட வல்லுநர்கள் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியை ஆய்வு செய்து, இந்தப் பகுதியில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், இதனை தேசியப் பூங்காவாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அறிக்கை அளித்தனர்.


  இதன் பின்னர் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசு கேரள மாநில அரசை வற்புறுத்தியது. இதையடுத்து, அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.


  கால் நூற்றாண்டுக்கு முன்னால், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டத்தை தடுத்த மத்திய அரசு, இன்று தமிழக அரசின் கருத்தையும், மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது ஏன்?


  1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அமைதிப் பள்ளத்தாக்கின் சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறை இன்று சிங்காராவை பாதுகாப்பதில் காணாமல் போனது எப்படி?



  இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணுசக்தித்துறை வளர்ச்சி தேவைதான் என்றாலும், அதற்காக அடிப்படை வாழ்வாதாரமான சுற்றுச்சூழலை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்பதே உண்மை.



  ஆட்சியாளர்களால் அழிக்கப்பட இருந்த அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போதாவது ஆட்சியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து திருந்துவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

திங்கள், 9 நவம்பர், 2009

"விலக்கு ஆணை' இருந்தாலும் தகவல் தர வேண்டும்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு

   கவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் ஊழல் அதிகாரிகள் குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத் துறை தர வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

  2005-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசு நிர்வாகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பெறுவது எளிதானது.  

ஆனால், இந்த சட்டத்தின்படி கோரப்படும் தகவல்களை அளிப்பதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு 2008 ஆகஸ்ட் 26-ம் தேதி உத்தரவிட்டது.   பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் இதற்கான அரசாணை (எண்: 158) பிறப்பிக்கப்பட்டது. 

  நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை பணிகளுடன் தொடர்புடைய துறைகளுக்கு மட்டுமே அளிக்க வேண்டிய விலக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

  இது தொடர்பாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள், ஆர்வலர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

  இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் பணிகள் குறித்து சில தகவல்களை கேட்டு போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவ், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார். 

  தங்கள் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பதில் அளிக்க இயலாது என்று கூறி மனுவை லஞ்ச ஒழிப்புத் துறை நிராகரித்தது.  

இது தொடர்பாக மாதவ், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த 2-வது மேல்முறையீட்டு மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. 

  தகவல் ஆணையம் உத்தரவு: 


மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் "தகவல் பெறும் உரிமைச் சட்டம் 8 (1) (எச்) பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட தகவல்களைத் தவிர்த்து, மற்ற தகவல்களை தர மறுக்கக் கூடாது' என்றனர். 

  எனவே, லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரி மனுதாரர் கோரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

செப்டம்பர் 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பதில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது செல்லாததாகிவிட்டது என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

  மேலும் ஒரு வழக்கு:

இதேபோல, லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பான மனுவை தகவல் ஆணையர் ஆர்.பெருமாள்சாமி அண்மையில் விசாரித்தார். 

  இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், தகவல் அளிக்க மறுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.   இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து தகவல் ஆணையர் பெருமாள்சாமி உத்தரவிட்டார்.

புதன், 4 நவம்பர், 2009

ஒதுக்கீடு ஆணை வழங்காமல் கிரையத் தொகை வசூல்!

  சென்னை வியாசர்பாடியில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய திட்டத்தில் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை வழங்காமல், அந்த மனைக்கான கிரையத் தொகை வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.  

மனை ஒதுக்கீடு ஆணை இல்லாதவரிடம் இருந்து கிரையத்தொகை வசூலிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக மனைகளை உருவாக்கியும், குடியிருப்புகளை கட்டியும் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்து வருகிறது.  

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு வியாசர்பாடி சிவகாமி அம்மையார் காலனி திட்டப்பகுதியில் மனை (எண்:453ஏ) 1990-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. ஆனால், இதற்கான ஒதுக்கீட்டு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை. 

  எனினும், இந்த மனைக்கான கிரையத்தொகை உள்ளிட்ட பல்வேறு தொகைகளை குடிசைப்பகுதி மாற்று வாரியம் வசூலித்துள்ளது.   பல முறை விண்ணப்பித்தும் இதுநாள் வரை தங்களுக்கு மனை ஒதுக்கீட்டுக்கான ஆணை வழங்கப்படவில்லை என ஏழுமலை தரப்பில் கூறப்படுகிறது. 

  இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலர் தெரிவித்த விவரங்கள்:   ஏழுமலையிடம் முன்வைப்புத் தொகையாக ரூ. 89 பெற்றுக் கொண்டு மனை (எண்: 453ஏ) ஒதுக்கப்பட்டது. இந்த மனைக்கு கிரயத்தொகை ரூ. 700 என நிர்ணயிக்கப்பட்டது. 


  இந்த மனைக்கு கிரையத் தொகை, அபிவிருத்தி கட்டணம், அபராத வட்டி உள்ளிட்ட வகைகளில் மொத்தம் ரூ. 2,664 வசூலிக்கப்பட்டது.   மனை ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏழுமலையிடம் இருந்து 25-08-1990-ல் ரூ. 75-ம் (ரசீது எண்: 161709), 1991 செப்டம்பர் 4-ம் தேதி (ரசீது எண்கள்: 165803, 165804, 145808) ரூ. 2,566-ம் வசூலிக்கப்பட்டது.  

எனினும், அதிகாரப் பூர்வ ஆவணமான ஒதுக்கீட்டு ஆணை ஏழுமலைக்கு வழங்கப்படவில்லை என குடிசைப் பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

  மனை ஒதுக்கீடு பெற்றதற்கான அனைத்து தொகைகளையும் செலுத்தி இருந்தாலும், ஒதுக்கீட்டு ஆணை இல்லாததால் மனையை பெற்றவர் அதற்கான விற்பனை பத்திரத்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

  மனை பெற்றவர் பல முறை கோரியும் குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருவதாக ஏழுமலை தரப்பில் புகார் கூறப்படுகிறது. 

குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் மனை ஒதுக்கீடு பெற்றவர்களும், அந்த மனைகளை வாங்கியவர்களும் வாரிய அதிகாரிகளிடம் இருந்து விற்பனை பத்திரங்களை எளிதில் பெற முடியாத நிலை உள்ளதாக ஏற்கெனவே பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில் மனை ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை வழங்காமல் கிரயத் தொகை வசூலிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கோப்புகள் மாயமான விவகாரம்: சி.எம்.டி.ஏ.வுக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ்

நில வகைபாடு மாற்றம் குறித்த கோப்புகள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகவும், தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு சி.எம். டி.ஏ. உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூரில் குறிப்பிட்ட சில மனைப்பிரிவுகள் அமைந்துள்ள நிலங்களின் வகைப்பாடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றம் செய்யப்பட்டது.

இது தொடர்பான 6 கோப்புகளின் பிரதிகளையும், கோப்புகளை நேரில் பார்வையிட அனுமதி கோரியும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஏ. சேது, 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரியிடம் மனு செய்தார்.

ஆனால், இதில் 2 கோப்புகள் மட்டுமே தங்களிடம் உள்ளதாகக் கூறி சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரி 14-02-2008-ல் பதில் அளித்தார்.

இது குறித்து சேது, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் 5-3-2008-ல் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை மாநில தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அண்மையில் விசாரித்தனர்.

தகவல் ஆணையம் உத்தரவு: விசாரணைக்கு பின்னர் இது தொடர்பாக அக்டோபர் 16-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விவரம்:

""மனுதாரர் கோரியுள்ள 6 கோப்புகளில் 4 கோப்புகள் காணாமல் போனது குறித்து சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரி தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதில் ஒரு கோப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ. தரப்பில் கூறப்பட்டாலும் இது குறித்து ஆணையத்துக்கோ, மனுதாரருக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே, குறிப்பிட்ட சில கோப்புகள் காணாமல் போனது குறித்து உயரதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை மேற்கொண்டு, கோப்புகள் காணாமல் போனதற்கு பொறுப்பானவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 6 வாரங்களுக்குள் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இதற்கு சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலரும், வீட்டுவசதி மற்றும் நகரமைப்புத் துறை செயலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல் போன கோப்புகளைக் கண்டுபிடித்து அதில் உள்ள தகவல்களை மனுதாரருக்கு அளிப்பதுடன், அது குறித்து ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

சி.எம்.டி.ஏ.வுக்கு நோட்டீஸ்: இதே விஷயம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கில் (எண்: 20656/07) 2007-ம் ஆண்டு ஆணையம் பிறப்பித்த நோட்டீஸýக்கும் பதில் அளிக்க வேண்டும்.

மேலும், தங்கள் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் குறித்த முழுமையான விளக்கத்தை சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆணையத்தில் தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

வெள்ளிவிழா காணும் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா


மன்னார்காடு (கேரளம்), அக். 29: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் வெள்ளிவிழா நவம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது.






மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரிக்கு தென்மேற்கு ஓரத்தில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு. இந்த வனப்பகுதிக்கும் மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்களுக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் இப்பகுதியை சைரேந்திரி வனம் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.






பூச்சி இனத்தில் மிக மெல்லிய ஒலி எழுப்பும் சிக்காடா வகை பூச்சிகளின் ஒலியை கேட்கும் அளவுக்கு இந்தப் பகுதி அமைதியாக இருப்பதாலும் இந்தப் அமைதி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.






கண்டுபிடிப்பு:


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு நகருக்கு 42 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமைதி பள்ளத்தாக்கு அரிய வனப்பகுதியாக 1847-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.






சிங்கவால் குரங்குகளின் பிரதான வாழிடமான இந்த பள்ளத்தாக்கு யானைகளின் வழித்தடத்தின் இறுதி பகுதியாகும். 22 வகை விலங்கினங்கள், அழிவின் விளிம்பில் உள்ள 15 வகைகள் உள்பட 211 வகை பறவையினங்கள், 75 வகை அட்டைப் பூச்சியினங்கள் உள்பட 1,000 வகை உயிரினங்களின் வாழிடமாக இந்த அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






இங்குள்ள 89.52 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பை 1914-ம் ஆண்டு காப்புக்காடாக வனத்துறை அறிவித்தது.






சைரேந்திரி வனத்தில் உள்ள குந்திபுழா பகுதியில், நீர் மின் நிலையம் அமைக்க அணை கட்டுவதற்கான திட்டம் கேரள மாநில மின் வாரியம் மூலம் உருவாக்கப்பட்டது. 1973-ம் ஆண்டு ரூ. 24.88 கோடியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டக்குழு அனுமதியை கேரள அரசு பெற்றது.






மக்கள் எதிர்ப்பு:


இந்த நிலையில், அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் அணை கட்டும் திட்டத்துக்கு பொது மக்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்பு வலுத்தது.






இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, கேரள மாநில மின் வாரியம், அமைதி பள்ளத்தாக்கில் அணை கட்டும் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ததே தவிர கைவிட முன்வரவில்லை.






அடுத்தடுத்து அமைக்கப்பட்ட பல்வேறு ஆய்வுக் குழுக்களும் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றே பரிந்துரைத்தது. மேலும் இந்த பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.






இந்த சமயத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அமைதி பள்ளத்தாக்கில் அணை கட்டுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள தடை விதித்து 1980-ம் ஆண்டு உத்தரவிட்டது.






மேலும், அணை கட்டுவதால் இங்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் தலைமையிலான உயர் நிலைக் குழு தனது விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் 1983-ம் ஆண்டு சமர்பித்தது.






இத்தகைய சூழலில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலையிட்டு அமைதி பள்ளத்தாக்கில் நீர் மின் நிலையத்துக்காக அணை கட்டும் திட்டத்தை கைவிடுமாறு கேரள அரசை வலியுறுத்தினார். இதனை கேரள அரசு ஏற்றுக் கொண்டது.






இதன் பின் அமைதி பள்ளத்தாக்கை தேசிய பூங்காவாக அறிவிக்க மத்திய அரசு 1984-ம் ஆண்டு முடிவு செய்தது. அதன்படி, 1984-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.






1986-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அமைதி பள்ளத்தாக்கு நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முக்கிய பகுதி மநற்றும் சார்பு வனப்பகுதிகள் சேர்த்து அமைதி பள்ளத்தாக்கின் மொத்தப் பரப்பு 237.52 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்தது.






வெள்ளி விழா:


அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.






இதன் பின்னரே மத்திய அரசிலும், பல மாநில அரசுகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உருவாயின என்பதும், பெரிய அளவிலான திட்டங்கள் குறித்து சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை கட்டாயமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






வெள்ளி விழா நிகழ்ச்சிகள் குறித்து கேரள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் டி.என். மனோகரன் மன்னார்காடு பகுதியை அடுத்த முக்காலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியது:







வெள்ளி விழாவின் தொடக்கமாக நவம்பர் 15-ம் தேதி பாலக்காடில் தேசிய கருத்தரங்கு நடைபெறும். மேலும், வெள்ளி விழா கொண்டாட்டங்களை குறிப்பிடும் வகையில் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்படும்.






அமைதி பள்ளத்தாக்கு வெள்ளி விழாவை முன்னிட்டு, முக்காலி பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து போரடியவர்கள் கெüரவிக்கப்பட உள்ளனர் என்றார் மனோகரன்.

சனி, 24 அக்டோபர், 2009

சிமென்ட் விலை குறைகிறது; ஒரு மூட்டை ரூ. 245

 கடந்த மாதம் முன்பு வரை ஒரு மூட்டை ரூ. 260-ஆக இருந்த சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 245-ஆக குறைந்துள்ளது.



தேவை குறைந்த நிலையில் உற்பத்தி அதிகரித்ததால் சிமென்ட் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.




2006-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது. இதன் காரணமாக கட்டுமானத் துறையின் வளர்ச்சியும் வெகுவாகவும் வேகமாகவும் அதிகரித்தது. இதனால், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிமென்ட் தேவையும் அபரிமிதமாக அதிகரித்தது.






ஆனால், இந்தத் தேவையை பற்றாக்குறை இன்றி பூர்த்தி செய்யும் அளவுக்கு நாட்டில் சிமென்ட் உற்பத்தி இருந்தபோதும், உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை முன்பு எப்போதும் இல்லாத வகையில் உயர்த்தினர்.



விலை உயர்வு:


இதனால், 2007-ம் ஆண்டு ஜனவரியில் ஒரு மூட்டை ரூ. 190-ஆக இருந்த சிமென்ட் விலை அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ. 200 ஆகவும் உயர்ந்தது. இது படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாதவகையில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 290-ஆக அதிகரித்தது.


இத்தகைய சூழலில் கட்டுமானத் துறையினர் உள்பட அனைத்துத் தரப்பினரின் வற்புறுத்தலை அடுத்து மத்திய அரசு இதில் தலையிட்டு வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியது.



இதனால் கடந்த ஆண்டு மத்தியில் சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 240 வரை குறைந்தது.

இதே சமயத்தில் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக சிமென்ட் விலை மேலும் உயராமல் தொடர்ந்து ஒரு மூட்டை ரூ. 240- ஆகவே இருந்து வந்தது.



தேக்க நிலை: இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கட்டுமானத் துறையில் தேக்க நிலை மறைந்து புதிய குடியிருப்புத் திட்டங்களுக்கான பணிகள் தொடங்கிய நிலையில் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை மீண்டும் உயர்த்தினர். இதனால், ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 240-ல் இருந்து ரூ. 260-ஆக அதிகரித்தது.



உற்பத்தி அதிகரிப்பு: இத்தகைய சூழலில், ஆந்திரம், குஜராத் மாநிலங்களில் புதிதாக சில பெரிய சிமென்ட் ஆலைகள் தங்கள் உற்பத்தியை அண்மையில் தொடங்கின.


இது தவிர ஏற்கெனவே இருந்த சிமென்ட் ஆலைகள் தங்கள் உற்பத்தித் திறனை பல மடங்கு அதிகரித்தன. இதே வேளையில் தமிழகத்தில் உள்ள சில சிமென்ட் ஆலைகளும் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளன.



ஆலை நிர்வாகங்களின் இந்த நடவடிக்கைகளால் சந்தைக்கு வரும் சிமென்ட்டின் அளவு கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்தது. இவ்வாறு உற்பத்தி அதிகரித்த அளவுக்கு தேவை அதிகரிக்காததால், சந்தையில் சிமென்ட் விலையை குறைத்துக் கொள்ள உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர்.



ஆந்திரம், குஜராத் மாநில உற்பத்தியாளர்கள் கடந்த மாதமே இதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர். ஆனால், தமிழகத்தை சேர்ந்த சில நிறுவனங்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இறுதியில் தவிர்க்க முடியாத சூழலில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்களும் சிமென்ட் விலையை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளன.



வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பது, கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காதது, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சிமென்ட் அளவு அதிகரித்தது, உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை ஆகிய காரணங்களால் சிமென்ட் விலையை குறைக்க வேண்டிய கட்டாய சூழலால் உற்பத்தியாளர்கள் விலை குறைப்புக்கு முன்வந்துள்ளனர்.



விலை சரிவு:


இதனால், கடந்த மாதம் முன்பு ஒரு மூட்டை ரூ. 260-ஆக உயர்ந்த சிமென்ட் விலை இப்போது ரூ. 245-ஆக குறைந்துள்ளது. ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மூட்டை விலை ரூ. 170-ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள விலை சரிவு மேலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு கட்டுமானத் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.



இப்போதைய சூழலில் அடுத்த நிதி ஆண்டு தொடக்கம் வரை சிமென்ட் விலை உயர்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அடுத்த சில மாதங்களில் சிமென்ட் விலை மேலும் குறையும் என கட்டுமானத் துறையினரும், விற்பனையாளர்களும் கருத்து தெரிவித்தனர்

தமிழகம்லஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் அதிகாரிகளுக்குள் பணி ஒதுக்கீடு முடிவு

சென்னை, அக். 21: அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்கள் மீது முடிவு செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் அதிகாரிகளுக்குள் பணிகள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.




லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஜிபி பதவி உருவாக்கப்பட்டதை அடுத்து உயர் அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்கும் விதமாக கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டது.



டிஜிபி போலாநாத் இயக்குநர் பதவியையும், ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநர் பதவியையும், சுனில்குமார் இணை இயக்குநர் பதவியையும் வகிப்பார்கள் என அரசு விளக்கம் அளித்தது குழப்பத்தைத் தீர்த்தது.


அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பல்வேறு நிலையில் உள்ளவர்கள் மீதான லஞ்சப் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இதுவரை இயக்குநரே முடிவெடுத்து வந்தார்.



இப்போது கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு முடிவெடுக்கும் அதிகாரத்தை நிர்வாக வசதிக்காகவும், பணிகளை விரைந்து முடிக்கவும் வசதியாகப் பகிர்ந்து கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்தனர். அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பணிகள் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டன.



இணை இயக்குநர்:

இதன்படி, "டி', "சி' பிரிவுகளுக்கு உட்பட்ட கடை நிலை ஊழியர்கள், காவலாளிகள் நிலையில் உள்ளவர்கள், அலுவலக இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், எழுத்தர்கள் நிலையில் உள்ளவர்கள் மீதான லஞ்சப் புகார்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து இணை இயக்குநர் முடிவெடுப்பார்.



கூடுதல் இயக்குநர்:

"பி' பிரிவுக்கு உட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள், தாசில்தார்கள், துறை கண்காணிப்பாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மீதான லஞ்சப் புகார்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து கூடுதல் இயக்குநர் முடிவெடுப்பார்.



இயக்குநர்:
 
 "ஏ' பிரிவுக்கு உட்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், துறை தலைவர்கள் மீதான லஞ்சப் புகார்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து இயக்குநர் முடிவெடுப்பார்.
 
 
 ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்கள் குறித்து உயர் நிலைக் குழுவின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் முடிவெடுப்பார்.
 
 
லஞ்ச ஒழிப்புத் துறையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இப்போது அதிகாரிகளின் நிலைகளுக்கு ஏற்ப பணி ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

லஞ்ச ஒழிப்புத் துறையில் மீண்டும் கூடுதல் இயக்குநர் பதவி

டிஜிபி போலாநாத் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து இத் துறையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.


லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக ஐஜி மற்றும் ஏடிஜிபி நிலையிலான அதிகாரிகளே கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தனர்.


இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புதிதாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி போலாநாத் கடந்த 6-ம் தேதி நியமிக்கப்பட்டார்.


லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை பதவி, இயக்குநர் பதவியாகும். ஏடிஜிபி ராமானுஜம் இயக்குநராக உள்ள நிலையில், டிஜிபி போலாநாத் நிர்வாக ரீதியாக எந்த பதவி வகிப்பார் என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவியது.

இந்தத் துறையில் இப்போது ஒரு இயக்குநர், 2 இணை இயக்குநர்கள் பதவிகள் உள்ளன.


இதையடுத்து டிஜிபி போலாநாத் இயக்குநர் பதவியையும், ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநர் பதவியையும் வகிப்பார்கள் என அரசு துறைரீதியான விளக்கம் அளித்துள்ளது.


இது தொடர்பான கடிதம் உள்துறையிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


8 ஆண்டுகளுக்கு பிறகு...:

கடந்த 2001-ம் ஆண்டு இறுதியில் டிஜிபி வி.கே. ராஜகோபாலன் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அப்போது இயக்குநராக இருந்த ஏடிஜிபி மாத்தூர், கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டார்.


8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் டிஜிபி போலாநாத் வருகையை அடுத்து ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற்பனைக்கு காத்திருக்கும் 5,500 வீட்டுமனைகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட மனைகளில் சுமார் 5,500 வீட்டு மனைகளும், சுமார் 1,100 வீடுகளும் விற்பனைக்குக் காத்திருக்கின்றன.


பொது மக்களுக்கு நியாயமான விலையில் குடியிருப்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பல்வேறு மாவட்டங்களில் வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது.


இவ்வாறு உருவாக்கப்படும் மனைகள் மற்றும் கட்டப்படும் வீடுகளில் திட்டம் ஒன்றில் 15 சதவீதம் அரசின் விருப்புரிமையின் கீழும், 85 சதவீதம் பொது ஏலம் மூலமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


சந்தை விலையைவிடக் குறைவாக இருப்பதாலும், அரசுத்துறையிடம் வாங்குவதால் வில்லங்கம் இருக்காது என்ற நம்பிக்கையாலும் வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகளைப் பெறுவதில் மக்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.


ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியவர்கள் அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகப் புகார் கூறுகின்றனர். தவணைகள் கணக்கீட்டிலும் பத்திரங்களைப் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.


இத்தகைய புகார்கள் உள்ள போதும், வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகளை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் குறையாமல் உள்ளது.


சென்னையில் அண்ணா நகர், முகப்பேர், கே.கே. நகர், பெசன்ட் நகர் ஆகிய கோட்டங்களிலும், பிற மாவட்டங்களில் மதுரை, நெல்லை, ராமநாதபுரம், சேலம், ஈரோடு, கோவை, வேலூர், ஓசூர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய ஊர்களிலும் வீட்டுவசதி வாரியப் பிரிவுகள் செயல்படுகின்றன.


இந்தப் பிரிவுகளின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு வருகின்றன.


இதில் ஏராளமான மனைகள், வீடுகள், குடியிருப்புகள் விற்பனையாகாமல் உள்ளதாக கூறப்படுகிறது.


மனைகள்...


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 5,500 வீட்டு மனைகள் விற்பனைக்குக் காத்திருப்பது தெரியவந்துள்ளது.


இதில் 2,500 மனைகள் அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டிலும், 3 ஆயிரம் வீட்டுமனைகள் வாரியத்தின் ஒதுக்கீட்டிலும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 112.70 கோடி.


சென்னையில் அண்ணா நகர் கோட்டத்தில் 34 மனைகளும், முகப்பேர் கோட்டத்தில் 2 மனைகளும், கே.கே. நகர் கோட்டத்தில் 52 மனைகளும், பெசன்ட் நகர் கோட்டத்தில் ஒரு மனையும் உள்ளன.


தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரைப் பிரிவில் 1,400 வீட்டுமனைகள் விற்பனையாகாமல் உள்ளன.


வீடுகள்...


தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட 1,119 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 33.70 கோடி.


அதிகபட்சமாக கோவையில் 359 வீடுகளும், சேலத்தில் 213 வீடுகளும், மதுரையில் 152 வீடுகளும் விற்பனையாகாமல் உள்ளன.


அடுக்குமாடி குடியிருப்புகள்...


சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 734 அடுக்குமாடி குடியிருப்புகள் உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன.


இவை அனைத்தும் அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் வருவதால் இது விஷயத்தில் அரசுதான், யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


விற்பனை எப்போது?


இவ்வாறு விற்பனையாகாமல் உள்ள மனைகளை ஒதுக்க விலை நிர்ணயம் செய்து பொது ஏலம் அறிவிக்கப்பட்டு அதன் மூலம் உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


நிர்வாக ரீதியாக இதற்கான பணிகள் அந்தந்த கோட்ட மற்றும் பிரிவு அலுவலகங்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளன என்று வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.